-
பண்ணையில் ஒரு மிருகம்
– நோயல்.நடேசனின் நாவல் குறித்த பார்வை – – யசோதா.பத்மநாதன் – 84 – 86 க்கிடைப்பட்ட தமிழகக் கிராமம் ஒன்று பற்றிய அந் நாடல்லாத ஒருவரின் வரிகளில் விரிந்த ஒரு பார்வைப் புலம் இந்த நாவல். இலங்கையரான அவுஸ்திரேலியாவில் வாழும் மிருகவைத்தியராகத் தொழில் புரியும் சிறுகதைகள், நாவல்கள், பயண இலக்கியம், தொழில் அனுபவங்களை தமிழுக்குத் தந்திருக்கும் நோயல் நடேசனின் ஐந்தாவது நாவல் இது. காலச்சுவடு பதிப்பாக 2022 மேயில் இந் நாவல் வெளிவந்திருக்கிறது.சுமார் அறிமுகம்,…
-
நைல் நதிக் கரையோரத்தில்.
கவிஞர் சல்மா. சமீபத்தில் ஒரு வார காலப்பயணமாக எகிப்து சென்று வந்த அனுபவங்களை சிறு கட்டுரையாக எழுதினேன். தற்செயலாக இந்த புத்தகம் பற்றி அறிந்து வாங்கி வாசித்த பிறகு என் பயணத்திற்கு முன்பாக இந்த புத்தகத்தை வாசித்து விட்டு செல்லவில்லையே என்கிற வருத்தம் மேலிட்டது. எகிப்தின் வரலாறு, நிலம், வளம், வாழ்க்கை என சகலத்தையும் கவனமாக வும் சுவராஸ்யமாகவும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் நோயல் நடேசன். யாரேனும் இனி எகிப்து பயணத்திற்கு திட்டமிடுவீர்கள் எனில் இந்த புத்தகத்தை…
-
டாக்டர் சியாமளா நடேசன் புற்றுநோய் உதவி நிறுவனம்
புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி வழங்கும் மருத்துவர் சியாமளா நடேசன் தன்னார்வத் தொண்டு நிறுவனம் கண்டியில் அங்குரார்ப்பணம் இலங்கையில் புற்றுநோய்ச் சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளை ஏழை மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன், அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் மருத்துவர் சியாமளா நடேசன், தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 26 ஆம் திகதி கண்டி, ரீஜன்னர் விடுதியில் நடைபெற்றது. குறிப்பிட்ட புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி வழங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இணையத்தளத்தை, மகப்பேற்று மருத்துவ…
-
Cancer Welfare Foundation launched.
http://www.cancerwelfarelanka.com My name is Noel Nadesan, living in Melbourne, a retired veterinarian and also a husband of a cancer survivor. It was a sudden realisation similar to someone hitting me on the head on a dark night, that my wife and partner over 45 years turned out to be a cancer patient and her life…
-
தாத்தாவின் வீடு. நாவல்.
கருணாகரன் முன்னுரை அனுபவங்களையும் அறிந்த தகவல்களையும் வைத்து எழுதுவது ஒரு வகை. இது எளிதானது. அனுபவங்களை எவ்வளவுதான் சிறப்பாக எழுதினாலும் அவை வெறும் பதிவுகளாகச் சுருங்கி விடக்கூடிய வாய்ப்புகளே அதிகமுண்டு. அனுபவங்களையும் நுண்ணிய அவதானிப்புகளையும் சரியாகக் கலந்து புதிய சிந்தனையோடு எழுதும்போது சிறந்த படைப்புகள் உருவாகின்றன. இதற்கொரு கலைப் பயிற்சி வேண்டும். அப்படித்தான் தகவல்களைத் திரட்டி அதையே மையப்படுத்தி எழுதினால் அது தகவற் திரட்டாகி விடக் கூடிய நிலையே அதிகம். இந்த மாதிரி எழுத்துகள் தினம் தினம்…
-
இலங்கையில் நடத்தும் பரிசளிப்பு நிகழ்வு
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்கு பரிசளிப்பு இடம்: கிளிநொச்சி பழைய ஆஸ்பத்திரி வளாகம் சமூக மண்டபம் காலம் : 25-02-2023 சனிக்கிழமை – காலை 9-30 மணி தலைமை: நடேசன் ( செயலாளர் – அ. த. இ.க. சங்கம் ) வரவேற்புரை: எஸ். கிருஷ்ணமூர்த்தி பரிசுபெறும் எழுத்தாளர்கள்: விவேகானந்தனூர் சதீஸ் அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் சிவராசா கருணாகரன்
-
பாலியின் தொன்மங்கள்.
இயற்கையை மனிதன் தெய்வமாக உலகத்தின் பல பாகங்களிலும் வழிபட்டான் என்ற செய்தி நமது இந்து மதத்தில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் உள்ளது. கிரேக்கர்களின் தெய்வங்கள் எல்லாம் ஒலிம்பஸ் மலையில் வாழுகின்றன. அதுபோல் யப்பானில் ஃபியுஜி மலை புனிதமானது. நமது சிவனொளிபாதமலை மற்றும் ஒரு உதாரணம். இவ்வாறு மலைகள் தெய்வமானதற்கு உலகெங்கும் பல உதாரணங்கள் உள்ளன. பாலித்தீவில், மலைகள், ஆறுகள், கடல், அருவிகள் எல்லாம் கடவுள் மயப்படுத்தப்பட்டுள்ளன எனச் சொன்னேன் அல்லவா? எனினும் இது புதுமையல்ல. ஆனால், வியப்பாக…
-
பிறந்தநாளில் பாலித்தீவு
இம்முறை எனது பிறந்ததினம் பாலித் தீவில் கழிந்தது. அந்த நாளில் நடந்த சம்பவத்துடன் தொடங்குவது நல்லது என நினைக்கிறேன். அழகான கடற்கரையோரத்திலுள்ள பாறையில் செதுக்கப்பட்ட பாலியின் பிரசித்தி பெற்ற, ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த உலுவத்து கோவிலின் (Uluwatu Temple) படிகள் மீது அந்தி சாயும் நேரத்தில், மெதுவாகச் சுற்று வட்டாரத்தையும் அங்குவரும் மக்களையும் பார்த்து ரசித்தபடி என்னை மறந்து ஏறிக்கொண்டிருந்தேன். எதிர்பாராமல் எனது தோளில் எனது ஆறு வயதுப் பேரன் பாய்ந்தது போன்ற உணர்வோடு குனிந்து…
-
பச்சை குத்திய பாசக்காரத் தந்தை
நோயல் நடேசன் உடலில் பச்சை குத்தியிருப்பவர்களை பார்த்ததும் எனக்கு பல வருடகாலத்தின் முன்பு படித்த மருத்துவ புத்தகத்தில் எழுதியிருந்தது நினைவுக்கு வரும். ஹெப்பரைற்றிஸ் நோய், பச்சை குத்தியபோது அவர்களிடத்தில் ஊசி மூலம் தொற்றி இருக்கலாம் என எழுதியிருந்தார்கள் . அந்தக் காலத்தில் பச்சை குத்தும் ஒரே ஊசிகள் சுத்தமாக்கப்படாது பலர் மீது மீண்டும் மீண்டும் பாவிக்கப்படுவதே இதற்குக் காரணம். பலர் வெளிநாடுகளிற்கு பயணம் செல்லும்போது இப்படி பச்சை குத்திக்கொள்வது மரபாக இருந்தது. ஒரு காலத்தில் கடலோடிகளும் மற்றும்…
-
சிறுகதைத் தொகுப்பு: ஒப்பாரிக்கோச்சி.
எழுத்தாளர் மு.சிவலிங்கம் பல வருடங்களுக்கு முன்பு தனது ஒப்பாரிக்கோச்சி சிறுகதைத் தொகுப்பினை எனக்குத் தந்திருந்தார். ஏதோ காரணத்தால் இந்தப் புத்தகம், சிறுவயதில் தொலைத்த சில்லறைக் காசாக நழுவிவிட்டது . புதிய வீடு மாறியபோது மீண்டும் கையில் கிடைத்தது, இம்முறை வெளிநாட்டுப் பயணத்தின்போது எடுத்துச் சென்றேன். முழுக்கதைகளைப் படித்ததும், இதுவரையில் ஏற்கனவே படித்த பல கதைகளில் நான் காணாத, அல்லது காணத் தவறிய மலையக மக்களின் வாழ்வின் குறுக்கு வெட்டு முகத்தை எழுத்தாளர் சிவலிங்கத்தின் கதைகளில் என்னால் காணமுடிந்தது.…