கருணாகரன்

1. உங்களுக்கு இலக்கிய ஆர்வம், எழுத்து மீதான ஈடுபாடு எப்படி ஏற்பட்டது?

எனது ஊரான எழுவதீவில் எங்கள் வீட்டுக்கு மாத்திரம் வீரகேசரியும் கல்கியும் வரவழைக்கப்படும்.தமிழ் வாசிக்கத் தெரிந்த காலத்தில் இருந்து பார்வை மங்கிய எனது பாட்னாருக்கு வீரகேசரி செய்திகளையும் கல்கியில் வரும் தொடர்கதைகளையும் சத்தமாக வாசிப்பேன் இதற்காக தலைமை ஆசிரிராக இருந்து இளைப்பாறிய எனது பாட்டன் காசு தருவார். இந்தக்காலம் எட்டுவயதிற்கும் பத்து வயதிற்கும் இடைப்பட்டகாலம். எனது அம்மவும் கல்கியின் தீவிர வாசகி எனது தம்பிக்கு சபேசன் என பெயர் வைத்த போது அக்காலத்தில் வந்த கல்கியில் வந்த ஒரு தொடர்கதையின கதாபாத்திரத்தின் பெயர் என நினைக்கிறேன். இதன் பின்பு நயினாதீவிற்கு படிக்க சென்றபோது அங்கு எனது மச்சாள் ஜெயகாந்தனின் இரசிகை. இப்படியானவர்களால் விதைக்கப்பட்டு முளையாகியது எனது வாசிப்பு ஆர்வம்

யாழ்பாணம் இந்துக்கல்லுரி லைபிரரி அதன்பின் யாழ் பொது நூல்நிலயம் என்பன வாசிப்பு ஆர்வம் செடியாக வளர உரமிட்டன.. யாழ்நூல் நிலயத்தில தமிழில் உள்ள கதைப்புத்தகங்கள் பெரும்பாலானவற்றையும் அந்த நூல்நிலயம் எரிய முன்பு வாசித்து முடிந்துவிட்டு ஆங்கிலத்தை வாசித்துகொண்டிருந்த காலத்தில் அந்த துன்பகரமான நிகழ்சி நடந்தது. நான் விளையாட்டுகளில் பங்கு பற்றாத ஒரு நோஞ்சனான உடம்பை கொண்டு இருந்ததால் வாசிப்பு எனது முக்கிய பொழுதுபோக்கு. அதன் பின்பு இரண்டாவதாக சினிமா வந்து சேர்ந்தது. சிறுவயதில் நடந்தபடி வாசிக்கும் பழக்கம் கொண்டவன். இரவு தொடங்கி தூங்காமல் விடியும்வரை வாசித்த நாட்களும் உண்டு. நான் வாசிக்காத காலம் பேராதனையில் படித்தகாலம் மட்டுமே. இலக்கிய ஆர்வம் என்று புதுப்பெயர் பெற்றாலும் என்னைப் பொறுத்தவரையில் மனமகிழ்வை தந்த விடயம் இந்த வாசிப்பு.அத்துடன் இந்த வாசிப்பால் எனக்கு பிடித்தமான கற்பனை உலகத்தை சிறுவயதில் இருந்தே என்னால் சிருஸ்டிக்க முடிந்தது. இந்த கற்பனை உலகம் சிறுவயதிலே எனக்கு பித்தியேகமானது. கண்டிப்பாகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் தந்தையோ மற்ற நணபர்களோ ஊடுருவ முடியாத உலகம் .சிறுவயதில் கதைப்பாத்திரங்கள் மட்டும் இருந்தகாலம் போய் பின் பாலியல் பருவத்தில் அழகிய பெண்கள் நிரம்பிய உலகமாக மாறியது. இந்த உலகத்தை மேன்மைபடுத்தி உருவாக்க எனது வாசிப்பு உதவியது.

2. நீங்கள் எழுதத் தொடங்கிய சூழல், எழுதவேண்டிய சந்தர்ப்பம் என்ன அல்லது எவ்வாறிருந்தது?

எந்தக்காலத்திலும் எழுதவேண்டும் என்ற ஆசை இருந்ததில்லை அதை ஒரு சுமையாக கூட நினைத்தேன். யாழ் இந்துக்கல்லுரியில படிக்க்கும்போது ஹாஸடலில் இருந்து கடிதம் எழுதுவதில்லை ஆனால் தபால் அதிபராகிய அமமா ஒரு தபால் அட்டையில் ‘நலமாக வந்து சேர்நதேன்’ என எழுதி விவாசம் இட்டு தரும் போது அதை இந்துகல்லுரி உள்ளே உள்ள தபால்பெட்டில் போடுவதுதான் எனது வேலை. அப்படி கடிதம் எழுதுவதை சுமையாக நினைத்தனான் பின்பு எனது காதலிக்கு கடிதம் எழுதினேன். இதற்கப்பால் எனக்கு எழுத விருப்மில்லை. பிற்காலத்தில் எழுத முயலாததற்கு வேலையும் காரணம். மிருக வைத்தியம் .உடலும் மூளையும் சம்பந்தப்பட்டது. எனக்கு மிக குறைந்த அளவுதான் எழுத வேண்டியிருந்தது

விஞ்ஞானம் படித்து நல்ல தமிழ் எழுதும் ஆற்றலை இழந்தேன். தமிழ்மொழில் விஞ்ஞானம் படித்ததால் நல்ல ஆங்கில அறிவைப்பெறவும் தவறினேன். இது எமது காலத்து பலருக்கு உரிதான பிரச்சனை. அவுஸ்திரேலியாவுக்கு வந்தபோது இந்தியாவில் இருந்து விடுதலைப்புலி எதிர்பாளராக வந்து சேர்ந்தேன். இங்கு வந்ததும் மெல்பேனில் நண்பர் முருகபூபதியும் மற்றவர்களும் மக்கள் குரல் என்ற அரசியல் கையெழுத்து பத்திரிகையை நடத்தினார்கள். ஆரம்பத்தில் நான் இதில் பங்கு பற்றினாலும் சிட்னிக்கு சென்றுவிட்டதால் அங்கிருந்து மலையகத்தமிழ் பற்றியதும் இந்திய அரசின் தன்மை பற்றிய இரண்டு கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினேன். இவையே எனது முதல் பத்திரிகையில் வெளிவந்த எழுத்துகள்

3 அவுஸ்ரேலியாவில் உதயத்தின் ஆரம்பம், அதனோடு இணைந்து செயற்பட்டவர்கள், அதை நீங்கள் வெளியிட்ட அனுபவம், சவால்கள் எல்லாம் எப்படி?

ஆரம்பத்தில் இந்தச் சுமையைத் தூக்கப் பலர் வந்தார்கள். இவர்களிற் பெரும்பாலனவர்கள் இடதுசாரிப் போக்கையும்,  விடுதலைப்புலிகள் சாராத இயக்கத்தை ஆதரிப்பவர்களாகவும் இருந்தர்கள். மெல்பேன் மட்டுமல்ல சிட்னி, பேர்த், கான்பெரா என்று இருந்தார்கள். இவர்களில் முருகபூபதி, மாவை நித்தியனந்தன், சிவநாதன், ரவீந்திரன், முருகையா சிட்னியில் கேதாரநாதன், பேர்த்தில் இராம்குமார் என்பவர்களோடு பெயரைச் சொல்ல விருப்பமில்லாதவர்களும் இருந்தார்கள். சிலரது உழைப்பு இராமர் அணையில் அனுமான் போலவும் மற்றவர்கள் அணிலாகவும் இருந்தார்கள். இங்கே முக்கியம் அணைகட்டி முடித்தது போல் பன்னிரண்டு வருடத்துக்கு மேலாக பத்திரிகையை நடத்தினோம்.

இதில் உள்ளவர்களோடு ஏற்பட்ட அனுபவத்தை கூறாது புற அனுபவத்தை மட்டும் கூறவிரும்புகிறேன். ஒரு பத்திரிகை நடத்துவதற்கு முதல் பிரச்சனை பணப்பிரச்சனையே. அது எங்களுக்கும் இருந்தது. 8000 – 10000 இடையான பத்திரிகையை அடித்து இலவசமாக முழு அவுஸ்திரேலிய தமிழர்களுக்கும் கொடுப்பதற்கு மாதம் 2500 டாலர் தேவை. போட்ட முதலே 4000 மட்டும் தான். இதன் பின் துவங்கியது நமது நண்பர்கள் பிரச்சனை. பத்திரிகைக்கு விளம்பரம் கொடுக்கும் வியாபாரிகளை பயமுறுத்துவது, அவர்கள் கடைகளில் இருந்து பத்திரிகைகளை தூக்கி எறிவது, இவை ஒவ்வொரு மாதமும் நடந்தது. அதை நடத்தும் போது வன்னியில் இருந்து கட்டளை வந்ததாகச் சொல்லி நடத்துவார்கள். இதைச் செய்தவர்கள் சாதாரணமான படியாதவர்கள் அல்ல. இங்கிலாந்தில் பொறியில் படித்துவிட்டு பொறியலாளரக வேலை செய்த ஒருவர் சிட்னியில் செய்தார். இதை ஒரு அக்கவுண்டன்ட் நியாயப்படுத்துவார். விடுதலைப்புலி ஆதரவாளரான புழுக்களில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவரிடம் கேட்டேன். ‘இதுமாதிரி உங்கள் ஆட்கள் செய்கிறார்களே சரியா?’ என்றபோது அவர் சொன்ன பதில் என்னை திடுக்கிடவைத்தது.

‘இப்படி எழுதினால் அப்படித்தான செய்வார்கள்’

மெல்பேன், லண்டன் அளவு விஸ்தாரமான நகரம். மற்ற மாதிரிச் சொன்னால் மத்தியில் இருந்து மூன்று திசைகளில் 35 – 40 கிலோமீட்டர் விரிந்த பிரதேசம். இந்தப் பகுதிகளில் இந்தியர்களின் கடைகள் அந்தகாலத்தில் 77 இருக்கும். பத்திரிகை தூக்கும் கள்ளர்களில் இருந்து பாதுகாக்க இந்தியர்கள், சிங்களவர்களின் கடைகளைத் தேடி நான் மட்டும் 50 கடைகளுக்கும் முருகபூபதி 25 கடைகளுக்கும் வினியோகிப்போம். இதைச் செய்ய 2 – 3 நாட்களாகும். விடுதலைப்புலிப் பொறுப்பாளரை இந்த திருட்டை நிறுத்தாவிடில் அவுஸ்திரேலியப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் 225 பேருக்கும் இதைக் கடித மூலம் தெருவிப்பேன் என கடித மூலம் பயமுறுத்தினேன். தனிப்பட்ட முறையில் என்மேல் அவதூறு எழுதியவர்களுக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்பினேன். இப்படி இயக்கம் சார்ந்தவர்கள் செய்யும் அநியாயத்தோடு மட்டுமல்ல சில தனிப்பட்டவர்களும் பத்திரிகையைத் துக்கி வீசுவார்கள்.

இதில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது. ‘டண்டினோங்கில் சன் அன்ட் வீனஸ்’ எனப்படும் ஒரு கடையில் பத்திரிகையை வைத்துவிட்டு எனது காரில் சிறிது நேரம் இருந்து பார்த்தேன். ஒரு அறுபது வயதான மனிதர் ஒரு பத்திரிகைய எடுத்து வெளியே கொண்டு வந்து கடையின் முன்னே உள்ள குப்பைக் கூடையில் போட்டார். அதைக் கண்டதும் நான் இறங்கி அவரிடம் நெருங்கிப் போய் ‘ஏன் ஏறிந்தீர்?’ என்றேன்;.

‘பழைய பத்திகை’ என்றார்.

நான் ‘இப்பத்திரிகையை இப்பொழுதுதான் வைத்துவிட்டு வந்தனான். என்ன பேக்கதை கதைக்கிறீர்?’ என நெருங்கியபோது மனிதர் நடுங்கிவிட்டார்.

மனைவி வந்து ‘என்ன?’ என்று கேட்போது நான் திரும்பி விட்டேன்.

மொத்தத்தில் புலிவாலைப் பிடித்திருந்த கோழைகளால் பத்து வருடங்கள் மிகவும் கஸ்டமாக இருந்தது. கடைசி இரண்டு வருடங்கள் விடுதலைப்புலிகளில் முக்கியமாக பத்திரிகை தூக்கியவர்கள் பணம் சேகரித்தது விடயத்தில் கைது செய்யப்பட்டதாலும் இலங்கையில் போர் துவங்கியதாலும் பத்திரிகை சுமுகமாகவும் கையை கடிக்காதும் நடந்தது. தமிழ் பத்திரிகை நடத்துவதில் இப்படி ஒரு முரண்நகை.

4 உதயத்தின் பங்கு, விளைவு, வாசகர்கள், ஆதரவாளர்கள் என்ற வகையில் ஒரு மதிப்பீட்டை இப்பொழுது செய்யும்போது உங்களுடைய உணர்வு எப்படியிருக்கிறது?

‘உதயம்’ அரசியல் பத்திரிகை மாத்திரமல்ல, இலக்கியம் மற்றும் சமூக விடயங்களைப் பேசியது. சிறுவியாபாரிகளை ஆதரித்தது. முக்கியமாக அவுஸ்திரேலியாவில் தென்னாசிய சமூகத்தின் பத்திரிகையாகவும் சமூக கண்ணாடியாகவும் இருந்தது மட்டுமல்ல. சமூகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் சிந்தித்தது.

‘உதயம்’ அவுஸ்திரேலிய மைய நீரோட்டத்திற்கும் தென்னாசிய மக்களுக்கும் ஒரு பாலமாக இருந்தது. அவுஸ்திரேலியாவின் பல முக்கிய நூல்நிலையங்களுக்கு செல்லும் போது தென்னாசிய மக்களின் பிரதிநிதியாகச் உதயன்சென்றது. எந்த ஒரு அடக்குமுறைக்கோ அல்லது அதிகாரத்திற்கோ கட்டுப்படாமல் இருந்ததன் மூலம் பலர் தங்கள் பிரச்சனைக்கு உதவியாக உதயத்தைத் தேடினார்கள். உலகம் முழுவதும் பயங்கரவாத சூழல் இருந்த காலத்தில் மிதவாதப்பத்திரிகையாகவும் பலரால் பார்க்கப்பட்டது. சமூகத்தில் பலமுறை பலவீனமானவர்களுக்கு ஆதரவாக நின்றது. இந்தியாவில் இருந்து சிற்பாச்சாரியார்களுக்கு அவுஸ்திரேலிய வேதன வசதிகளை சிட்னி கோயிலை நடத்தியவர்கள் செய்யாத போது,  அதை எடுத்து விவாதித்து, அவுஸ்திரேலிய தொழிற்சங்கத்தைத் தலையிடவைத்தது. பிள்ளையார் கோவில் அர்ச்சகரான பிராமணர் ஒருவரை பொய்க் கேசில் மாட்டியபோது, அவரது விடயத்தை வெளிகொண்டுவந்து கடைசியில் பலர் அவருக்கு உதவ முன்வந்தது. இலக்கியரீதியல் தமிழநாட்டு முக்கிய இலக்கிய கர்ததாக்களான ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, பாவண்ணன் போன்றவர்களை சாதாரண தமிழர்களுக்கு பத்தி எழுத்து மூலம் அறிமுகப்படுத்தியது. 12 ஆவது வருட உதயத்தின் வெளியீட்டையிட்டு ஜெயமோகனை அவஸ்திரேலியாவுக்கு அழைத்தது. அவர் ‘புல்வெளிதேசம்’ என அவுஸ்திரேலியப் பயணத்தை எழுதியதற்கும் உதயத்திற்குப் பங்குண்டு.

தற்பொழுது உதயம் வெளிவராது விட்டாலும் அதனது அளவு கோல் அவுஸ்திரேலியாவில் வெளிவரும் எந்த தென்னாசிய பத்திரிகையும் தொடாத நிலையே இன்னமும் உள்ளது.விடுதலைப் புலிகளின் யுத்தம் மற்றும் தமிழ் இனவாதத்திற்காக எதிராக பலகாலமாக குரல் கொடுத்தது மட்டுமல்ல அதற்கு மாற்று செயல்பாடுகளாக சிங்கள இஸ்லாமிய அறிவாளிகளை மேடையேற்றியது. டாக்டர் அமிர் அலி, லயனல் போபகே போன்றவர்களை வருடாந்த நிகழ்ச்சிகளில் பேசவைத்து இன நல்லெண்ணம், ஒற்றுமையாக வாழ்வதே சிறந்தது என செயலில் காட்டினோம்.

உதயம் பல வாசகர்களைக் கொண்டிருந்த போதும், ஆதரவாளர்களைச் சேர்க்க எத்தனிக்கவில்லை. ஊடகமும் ஊடகவியலாளர்களும் சமூகத்திற்கு பிடிக்காவிட்டாலும் கசந்தாலும் உண்மையை சொல்வோம் என்ற கர்வத்தோடு இந்தப் பத்திரிகையை நடத்தியதால் ஆதரவாளர்களையோ அபிமானிகளையோ சேர்க்கவில்லை.உதயத்தின் மதிப்பை நான் சந்திப்பவர்களெல்லம் மீண்டும் நடத்தும்படி கேட்பதின் மூலம் புரிந்து கொள்ளமுடியும். நான் உட்பட சில எழுத்தாளர்களை உதயம் அவுஸ்திரேலியாவில் உருவாக்கியது.

என்னைப்பொறுத்தவரை இணையம் இல்லாத அல்லது குறைந்தவர்களே இணையத்தைப் பார்க்கும் வசதியுள்ள காலத்தில் முக்கியமாக இலங்கைத்தமிழர்கள் சிந்திக்க மறுத்து பயங்கரவாதத்தையும் வன்செயலையும் உணர்சிகளின் அடிப்படையில்தங்களது இலட்சியத்தை பெறும் வழிமுறைகள் என நினைத்திருந்த காலத்தில் உதயம் தேர்ந்த வழிகாட்டியாக நிற்க முனைந்தது.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பலவிடயத்தில் நல்ல போக்கு இருந்தது. நாங்கள் விடுதலைப்புலிகளை எதிர்த்த போதும் முற்றும் ஜனநாயகமாகவும் தனிப்பட்ட குரோத உணர்வில்லாமல் நாகரீகமாகவும் பழகினோம். தொடர்ச்சியாக பேசிப் பல விடயங்களைத் தீர்த்தோம். இப்படியான விடயங்கள் கனடாவிலோ ஐரோப்பாவிலோ நடந்தாகத் தெரியவில்லை.

இதற்கும் ‘உதயம்’ காரணமென்பேன். வன்முறையை ஆதரித்தும் அதை புலம் பெயர்ந்த சமூகத்தில் பிரயோகிக்கவும் விரும்பிய தமிழர்களை எழுத்தால் எதிர்த்து நின்று எம்மை மட்டுமல்ல முழு சமூகத்தையும் காப்பாற்ற முனைந்தோம். அதே நேரத்தில் தற்போது உதயத்தின் தேவை பெரிய அளவில் இல்லை என்பதால் அதை விட்டு முன்னகர்ந்தோம்.

5 பெரும்பாலானவர்கள் எதிர்த்திசையில் நிற்கும்போது நீங்கள் அதற்கு எதிரான திசையில் நின்று செயற்படுவதையிட்டு உங்களுக்கு ஏற்பட்ட மனநிலை எப்படியானது? இன்றைய மனநிலை என்ன?

இதில் இரண்டு விடயங்கள் உண்டு. நம்மை சுற்றி நடக்கும் விடயங்களை புரிந்து கொள்ளும் அறிவு மற்றது அதையிட்டு ஒரு செயல்பாட்டாளராக நின்று செய்வது.

முதலாவது எனது பேராதனை பல்கலைப்படிப்பு. பின்பு நாலுவருடம் சிங்கள மக்களுடன் வேலை செய்தது. பின்பு இந்தியாவில் சகல விடுதலை இயக்கத்தலைவர்கள், தொண்டர்கள் என பழகியது எல்லாம் என் அறிவை விருத்தி செய்ய உதவியது. என்னைவிட எமது சமூகத்தில புரிதல் உள்ளவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் நான் பழகி இருக்கிறேன். ஆனால் அவர்களில் பாதிப்பேர் ஏன் பிரச்சனை என மவுனமாக இருந்து விட்டார்கள். அடுத்த பாதிப் பேர் சுயலாபம் தேடி தங்கள் புரிதலை ஒதுக்கி வைத்துவிட்டு அநியாயத்தின் சேவகனாகி விட்டார்கள். மற்றச் சமுகத்தில அரசியல்வாதிகள் மட்டும்தான் சந்தர்ப்பங்களைப் பார்த்து செயல்படுவது வழக்கம். ஆனால் நமது தமிழ்ச்சமூகத்தில் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், பேராசியர்கள், பத்திரிகையாளர் எல்லோரும் அரசியல்வாதிகளாகிவிட்டார்கள். இதனாலே சாதாரண மக்களுக்கு கஸ்டம் வந்தது.

யோசித்துப் பாருங்கள். சண்டியன் ஒருவனுக்கு எயிட்ஸ் நோய் வந்தது. ஆனால் வைத்தியர் அவனுக்கு பயந்து நோயை மறைத்து பொய் சொன்னால் எப்படி இருக்கும்? ஊருக்கே நோய் வந்து விடாதா?

இரண்டாவது விடயம், நான் பெரிய அளவில் செயற்பாட்டாளராக வேண்டுமென்று நினைத்தவன் அல்ல. எனது கல்வி, உத்தியோகம், சமுக அந்தஸ்த்து என்பவை மிக எளிதாகக் கிடைத்தவை. வாழ்க்கையில் ஒரு நாளாவது நான் பசியை அனுபவித்தவனல்ல. சகல விடயங்களும் அதிக கஸ்டப்படாமல் கிடைத்தது. சிறுவயதில் எங்கள் ஊரில் நாங்கள் வசதியாக இருந்ததால் பலருக்கு பல உதவிகளை செய்வது என்பது என்னோடு வந்த பழக்கம். இதனாலே இந்தியாவில் அகதிகளுக்கும் ,பின்பு அவுஸ்திரேலியவிலும் உதவுவதில் ஈடுபட்டேன். இந்தியாவில் ஐந்து இயக்கங்களையும் ஒருங்கிணத்து உருவாக்கிய அமைப்புக்கு செயலாளராக இருந்து தமிழர் நல மருத்துவ நிலயத்தை நடத்தும்போது இயக்க வன்முறைகள், குத்துவெட்டுகள், கொலைகள் என்பவற்றைப் புரிந்து கொண்டேன்.

இலங்கையில் மட்டுமல்ல, இந்திய மண்ணிலும் தமது இயக்கம், சகோதர இயக்கம் என்று கொலைகள் நடந்தது. இப்படிப் பட்ட இயக்கத்தினர் மக்களுக்காக போராடுவார்கள் என நம்புவற்கு என்னால் முடியவில்லை. அடிப்படையில் வன்முறையாளர்களை கொண்டு எல்லா இயக்கங்களும் இருந்தன. அதே நேரத்தில் மிகச் சிறந்த சிந்தனையாளர்கள், மேன்மையான குணவான்களையும் இயக்கங்களில் சந்தித்தேன்.

மற்ற இயக்கங்கள் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டபோது இவர்கள் ஊர் போய் சேராதவர்கள் என்பதை உணர்ந்ததாலும்,  இலங்கை அரசாங்கத்தின் வன்முறையால் இவர்களை வெளிப்படையாக எதிர்க்க முடியாத பலரில் நானும் ஒருவன் ஆனேன். அவுஸ்திரேலியாவில் வந்தும் அகதிக் கழகமும் மற்றைய தாய் தந்தை இழந்த குழந்தைகளின் உதவி திட்டத்தோடும் இருந்த என்னை எதிர்ப்பு நிலைக்கு தள்ளியது இங்குள்ள தமிழ் ஒருங்கிணைப்பு குழுவை சேர்நதவர்களே. மேலும் இவர்களோடு போராட நான் தேடிய ஆயுதம் இவர்களால் கையாள முடியாதது. மட்டுமல்ல பாரிய வீச்சுக்கொண்டது. இந்தப் போராட்டத்தால் தனிப்பட்ட ரீதியல் பாதிப்பு அதிகம். புத்திரிகையைத் தொடங்கிய அடுத்த மாதம் எனது சொந்த ‘கிளினிக்’கையும் தொடங்கினேன். ஆனால் எனது கவனம் பத்திரிகையில் இருந்ததால் தொழில் முறையில் முன்னேற்றம் பலமடங்காக தடைப்பட்டது. இதை பணத்தில் கணக்கு பண்ணினால் பன்னிரண்டு வருடத்தில் மில்லியன் டாலருக்கு மேல் இருக்கும். பாடசாலை நண்பர்கள் உறவினர்களோடு பிரிவு ஏற்பட்டது. என்னை, எனது மனைவியை, எனது தொழிலை இழிவாகப் பேசுவதில் இன்னும் சிலர் இன்பமடைகிறார்கள். ஒரு வைத்தியரே சிலரிடம் மருத்துவரான எனது மனைவியிடம் வைத்தியத்திற்கு போகவேண்டாம் என கூறியதை அவர்களே வந்து கூறினார்கள். பொதுவான சமூகவிடயங்கள் பலவற்றில் புறக்கணிக்கப்படுவது ஆரம்பத்தில் கஸ்டமாக இருந்தாலும் பின்பு பழகிவிட்டது.நானும் எனது அரசியல் அறிவு என்ற கர்வத்தால் எனக்கு பாதுகாப்புப் தேடிக்கொண்டேன்.

6   பொதுவாகத் தமிழ் ஊடகங்களின் பொதுப்போக்குப் பற்றிய உங்களுடைய அவதானம்?

தமிழ் ஊடகங்கள் என்று சொல்லும் போது அது பாரிய வெளி. இலங்கை வானொலியில் இருந்து தற்போதைய இணையங்கள்வரை அடங்கும். பொதுவாகப் பேசினால் தமிழ் ஊடகங்கள் இந்த நாட்டுக்கோ இந்த மண்ணில் உள்ள மக்களுக்கோ விசுவாசமாக இருந்தவர்களில்லை. பிரதேசம் மொழி என்று வித்தியாசமாக இருந்தாலும் ஊடகத்தின் உண்மையான விசுவாசம் மக்களின் மேல் இருக்க வேண்டும். இலங்கையில் தமிழ் ஊடகங்களுக்குக் காலம் காலமாக இந்தச் சிந்தனை இருக்கவில்லை. வெவ்வேறு சக்திகளுக்கே விசுவாசமாக இருந்தார்கள். கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரை தலையில் தூக்கி வைக்காத ஊடகம் உள்ளதா? இந்த நிலைமை இலங்கையில் சிங்கள ஆங்கில ஊடகங்களுக்கு இல்லை. இப்பொழுது வெளிநாட்டு தமிழருக்கு விசுவாசமாக இருக்க முயற்சி நடக்கிறது. இதற்கு மேல் இவ்வளவு காலத்தில் இலங்கையில் ஆளுமையான பத்திரிகை ஆசிரியர் என பேரசிரியர் கைவாசபதிக்கு பின்பு யாராவது உருவாகியதாக தெரியவில்லை. இதைவிட முக்கிய குறைபாடு தமிழ் பேசும் மக்களை இலங்கைத் தமிழர், மலயகத்தமிழர், இஸ்லாமியர் என பிரித்து பத்திரிகையில் போடுவது. அரசியல்வாதிகள் செய்த அதே பிழையை செய்து சிறுபான்மை இனங்கள் மத்தியில் ஒருவர் மீது ஒருவரின் கசப்புணர்வை வளர்த்ததும் இந்த ஊடகங்களே.
இலங்கையில் நிலவும் பிரச்சனைகளுக்கு இந்த ஊடகங்கள் பொறுப்பு எனக் கூறவில்லை. ஆனால் அந்தப் பிரச்சனைகளில் இவர்கள் சீவிக்கிறார்கள். அரசியல்வாதிகள் தெருவில் மலங்கழித்தால் இவர்கள் அதைக்கிழறி உண்ணும் கோழிகளாக அறுபது வருடங்கள் சீவித்திருக்கிறார்கள். ஒரு நாட்டில் போர் மற்றும் பகைமை இருந்தால் அதைத்தூண்டுவது சரியானதா என்ற கேள்வியை இந்த ஊடகங்கள் இனியாவது கேட்க வேண்டும்.

வெளிநாட்டிலோ அல்லது இலங்கையின் ஆங்கில பத்திரிகைகளோ செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து பல பக்கங்களிலும் பிரசுரித்தபின் ஆசிரியர் கருத்துடன் முக்கியமாகச் சிலரது கருத்தை இரண்டு பக்கத்துக்கு பிரசுரிப்பார்கள். கருத்துகளை எழுதும் போது வித்தயாசமான கருத்துள்ளவர்களை அழைத்து எழுதச் சொல்வார்கள். ஆனால் தமிழில் இது இல்லை. முதல் பக்கத்திலே கருத்துகளை போடுவதும் பிறகு பல பக்கத்தில் அதேபோல ஒரேவிதமான கருத்துகளைப் போட்டு நிரப்பி அந்தகாலத்துச் ‘சுதந்திரன்’போல் இந்தக் காலத்து தினசரிகள் செயல்படும்போது மக்களுக்கு வித்தியாசமான சிந்தனை ஏற்படாது.
சில பத்திரிகைகளில் வார இறுதியில் நாலு வெளிநாட்டவர் அரசியல் கருத்து எழுதுவார்கள். இதன்மூலம் பத்திரிகை யார் மீது விசுவாசம் காட்டுகிறது என்பது தெரியும். அரசாங்கத்தால் நடத்தப்படும் ‘லேக்கவுஸ்’ பத்திரிகைகளை முன்னுதாரணமாக கொண்டால் இதற்கு மேல் போகமுடியாது.பத்திகை சுதந்திரம் என்பது பத்திரிகையாளர் நினைத்ததை எழுதுவது மட்டும் என்பது தவறு. பல விதமான கருத்துக்கள் சிந்தனைகள் மக்களை சென்று அடைவதும் ஊடக சுதந்திரமே. அதைத் தடைசெய்வது எப்படிச் சரியாகும்? இதற்கு மேலாக மக்கள், நாடு, உயிர் என்பன கருத்தில் கொண்டு பத்திரிகைகள் செயல்பட வேண்டும்.

7  மாற்று ஊடகங்கள், மாற்று எழுத்துகள், மறுகருத்தாளர்கள் தொடர்பாக?

மாற்று ஊடகங்கள் தமிழ்நாட்டில் சிறிய குழுவாகவாவது இயங்க முடியும். ஆனால் நமது சமூகத்தில் இவ்வளவு காலமும் அது கடினமானதாக இருந்தது. ஆனால் தற்போது இணையங்கள் இருப்பதால் அதற்கான வாய்ப்பு உள்ளது. இத்துடன் சமூக ஊடகங்கள் வந்ததால் முகநூல், வலைப்பூ, யூரியுப் என்பதன் மூலம் கருத்துகளை வெளி கொணர முடிகிறது. ‘டீஜிரல் ரெக்னோலஜி’ மூலம் சமூக ரேடியோக்கள் மேல் நாடுகளில் உள்ளன. இவையும் கருத்துகளை மக்கள் மத்தியில் சேர்ப்பதற்கு துணைபுரியும்.

8 உங்களுடைய எழுத்துகளில் பெரும்பாலும் சொந்த அனுபவங்களையும் அரசியல் வரலாற்றையும் சாராம்சப்படுத்தி எழுதும் உத்தியைக் காணலாம். இதை இலக்கியமாகவும் பதிவாகவும் பார்க்கக்கூடிய நிலையே தெரிகிறது. இத்தகைய ஒரு வகை அல்லது போக்கு இயல்பாகவே உருவானதா அல்லது இதை நீங்கள் தீர்மானித்தே உருவாக்கினீங்களா?

இலக்கியம் என்பது தனிமனிதனின் அனுபவவத்தை, கற்பனையை பொதுவாக்குவது தானே. எனது எழுத்து, சிந்தனை, நான் கடந்துவந்த பாதை என்பன நான் நிற்கும் தளத்தில் நிற்கும். இலங்கை அரசியல், மிருகவைத்தியம் இரண்டும் நான் அறிந்த துறைகள். இதைப்பற்றி பேச எழுத முடிகிறது. இதில் இலங்கை அரசியலில் பலதரப்பில் நிற்கும் பலபேரை சந்தித்து அவர்களுடன் பேசக்கூடிய வாய்ப்பு இந்தியாவில், இலங்கையில், அவுஸ்திரேலியாவில் கிடைத்தது. ‘உதயம்’ இதற்கு மிகவும் உதவியது. சாதாரண சிங்கள விவசாயி, இந்திய முகாம் அகதி, சிறிசபாரட்னம், பத்மநாபா, ராஜபக்ச சகோதர்கள் இதை விட அவுஸ்திரேலிய தொழிற் கட்சியில் பதினைந்து வருடம் இருந்த பலரை சந்தித்தேன். இப்படியான சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைக்காது.

இதே போல் மிருக வைத்தியம் சாதாரணமானதல்ல. மிருகங்களுடனான மனித உறவு 15000 வருடங்களானது. மனிதர்கள் இறைவன் என்ற பொருளைத்தேடி 5000 வருடங்களே ஆகின்றன. ஆனால் தனக்கு தோழமை உதவிக்காக நாய்களை 15000 ஆண்டுகளாகத் தேடியுள்ளான்.இந்த மிருக – மனித உறவுகள் மனிதர்களின் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்தவை. அவர்களது காலச்சாரத் தன்மையை உணராமல் நான் வைத்தியம் செய்யமுடியாது. 1980 ஆம் வருடத்தில் இருந்து இந்த மிருக வைத்திய பயணம் மிகவும் நீண்டது. நாடுகள், பிதேசங்கள், நகரங்கள் என கடந்து வந்துள்ளேன். என்னை பதவியாவில் வசிக்கும் சிங்கள விவசாயி, செங்கல்பட்டில் மாடு வளர்க்கும் கோனார்கள், தென்அவுஸ்திரேலியாவின் இறைச்சி மாடு வளர்க்கும் விவசாயி, மெல்பேனில் நாய் பூனை வைத்திருக்கும் சகல மட்டத்தவர்களுடன் எல்லாம் பேசும் போது அவர்களது நிலையைப் புரியவேண்டும்.

இலங்கையில் றாகலையில் மலைநாட்டு தொழிலாளியிடம் ஒரு கறவை மாடு அவனது சீவனத்திற்கு மட்டும் போதுமானதாக இருக்கும். அதே வேளையில் தென் அவுஸ்திரேலியாவில் ஆயிரம் மாடுகள் உள்ள பண்ணை விவசாயியையும் பார்த்துள்ளேன். பலவகையான சமூக கலாச்சார தனிமனித உறவுகளை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள இந்த வைத்தியத்துறை உதவுகிறது. நான் எழுதிய ‘வாழும்சுவடுகள்’ என்ற இரண்டு புத்தகமும் பல புத்தகமாகாத கதைகளும் நான் கண்ட தனிமனிதர்கள், தங்களது மிருகங்களுடன் வைத்துள்ள உறவுகளின் குறுக்கு வெட்டுப்பரிமாணமாகும்.

அரசியலிலும் மிருகவைத்தியத்திலும் நான் அறிந்தவை, புரிந்தவையை எழுதவே எனக்கு வாழ்நாள் காணாது. இவைகளுக்கு தமிழ் இலக்கியத்தில் எந்த இடம் உள்ளது என்பது எனக்குத் தெரியாது. தமிழ் இலக்கியத்திலும் ஒரு விடயத்தைச் சொல்லவேண்டும். கவிதை சார்ந்துதான் எமது ஆரம்ப இலக்கியம். அதனால் இங்கே சொல்லப்படும் மொழிக்கு கொடுக்கப்படும் மரியாதையில் பத்திலொன்று கூட உட்பொருளுக்கு கொடுப்பதில்லை. இதனால்தான் தமிழ் இலக்கியங்கள் பல மொழிமாற்றம் செய்தால் யானை உண்ட விளாம்பழங்களாகி விடுகின்றன.

தமிழ்நாட்டில் சமூக உறவுகள் சாதி என்ற வட்டத்திற்குள்ளும் இலங்கையில் பிரதேச வட்டத்திலும் நின்று விடுவதாலும் இலக்கிய வெளிப்பாடுகள் நில அமைப்பு கலாச்சாரத்திற்கு அப்பால் போகவில்லை. அத்துடன் காதல், காமம் என்பன புனிதமாகத் தொட்டுப் பார்க்கும் தன்மைதான் இலக்கியப் பரப்பில் இன்னமும் இருக்கிறது. கலாச்சார அதிர்வுகளை உருவாக்கும் படைப்புகள் வருவதை தமிழ் சமுகம் வரவேற்காதது மடடுமல்ல அவற்றை புறக்கணித்து விடவும் முயலும்.

* பெரும்போக்கொன்றிலிருந்து விலகியிருக்கும்போது குடும்பம், உறவினர், சூழல் என்ற வளையங்களுடனான உறவில் பாதிப்பும் தாக்கமும் ஏற்படுமே. இதை எவ்வாறு எதிர்கொண்டு வருகிறீங்கள்?

அவுஸ்திரேயாவில் ஒரு லூசுப்பயல் நடத்தும் வானெலியில் என்னையும் எனது குடும்பத்தையும் இனங்கண்டு பகிஸ்கரிக்க சொல்லி ஒரு அறிவழகன் பிரகிருதி வெள்ளிக்கிழமையும் சொல்லி வந்தான். இப்பொழுது கொஞ்சம் ஓய்ந்து விட்டார்கள். நான் இந்த நாட்டில் இவர்களிடம் வாக்கு கேட்பதில்லை.அவுஸ்திரேலியாவில் தொழில் இல்லாமல் அரசாங்க உதவிப்பணத்தில் வாழ்பவனும் மற்றவர் தயவின்றி வாழலாம். என்னிடம் வைத்தியத்திற்காக நாய், பூனையை கொண்டு வருபவர்கள் சாதாரண அவுஸ்திரேலிய மக்கள். அந்தப்பணத்தில்தான் எனது ஜீவிதம் ஓடுகிறது. இதைவிட எனது நண்பர்கள், உறவினர்கள் என்று பலரும் இருக்கிறார்கள். பொது விடயத்தில் கருத்தை வைக்கும் போது தேவையற்ற வசை மொழி… அதுவும் அடிப்படையில் அறிவோ அல்லது திறமையோ இல்லாத இரண்டும் கெட்டான்கள் கேட்கும் போது சில நேரம் கஸ்டமாக இருந்தாலும் அவர்களைப் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகிக் கொண்டேன்.

8 ‘வண்ணாத்திகுளம்’ நாவலை எழுதிய நோக்கம்?

‘வண்ணாத்திக்குளம்’ நாவல் 80 – 83 காலப்பகுதில் நடந்தவைகளையும் நினைவிலும் குறித்தும் வைத்திருந்ததைக் கொண்டு எழுதியது. இந்தப் போராட்டத்திற்கான ஆரம்பகாலம் அது. அந்தக் காலத்தில் சாதரண சிங்கள மக்களிடம் தமிழர்கள் மேல் எந்த இன வெறுப்பும் அற்ற மனநிலையை பார்த்தேன். அதே நேரத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் இளைஞர்கள் வன்செயலுடன் யாழ்ப்பாணம் மற்றும் தமிழ்ப் பிரதேசங்களில் இனத் துவேசத்துடன் கொலைகள் கொள்ளைகளில் ஈடுபட்டார்கள்.

அதேகாலத்தில் சிங்கள அரசியல் தலைவர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் குட்டையை ஒருவருக்கொருவர் போட்டியாக குழப்பினாலும் அதன் பிரதிபலிப்பாக பின்னால் வரும் பயங்கரமான போரை எதிர்பார்க்கவில்லை. குடித்துவிட்டு தெருவில் வாய்த்தர்க்கம் செய்யும் சாதாரண குடிகாரனின் நிலையில் இருந்தார்கள். இந்தக்காலத்தில் நடந்தது எல்லாவற்றிற்கும் சிகரமாக 83 இல் கலவர நிகழ்ச்சி. இந்தக் குடிகாரர்களிடம் இருந்த அரசியல் வன்முறைச் சண்டித்தனம் செய்த இளைஞர்கள் கைகளில் கொண்டுவந்தது. இந்த விடயங்கள் வண்ணாத்திக்குளத்தில் வந்துள்ளன.

83 கவவரத்தின் பின்பு தமிழர்கள் சிங்களவர்கள் ஒன்றாக இருப்பது என்பது வெளிநாட்டில்தான் முடியும் என்பதே எனது சிந்தனையாக இருந்தது. இதேவேளையில இரண்டு இனங்களிலும் பரஸ்பரமான நல்லுறவு வளர்வதற்கு சாத்தியம் உண்டு என்பதை உணர்த்துவதற்காக வீட்டில் பாதுகாப்பாக அடைக்கலத்தோடு துப்பாக்கியை கொடுத்தது உண்மை என்ற சம்பவத்தை எழுதினேன். இது கலவரநாட்களின் மத்தியில் எனக்கு நடந்தது. அதே போல் வவுனியா சந்தையை விமானப்படையினர் எரித்து மக்களை துன்புறுத்தும்போது சிங்களப் பெண்ணான சித்திரா தமிழனை காப்பாற்றியது கற்பனையான சம்பவம். ஆனால் இதேபோல் பல சம்பவங்கள் பலருக்கு நடந்திருக்கிறது. பேசும் மொழி மதத்துக்கு என்ற வேற்றுமையின் வெளியே வந்து அந்த நாட்டையும் மக்களையும் நேசிக்கும் என்னால் சகவாழ்வு சாத்தியம் என்பதற்காக என்னால் முடிந்தவரை எழுதியது இந்த நாவல். இந்த நாவலை ஆங்கிலத்தில் படித்தவர்கள் பலராலும் பாராட்டைப் பெற்றது. மட்டுமல்ல ‘தெற்காசிய இலக்கியம்’ என்ற தலைப்பில் அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்களில் ‘வண்ணாத்திகுளம்’ வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியத்தில் எனது பங்கு எவ்வளவு என்று தெரியாத போதிலும் சமூக நல்லெண்ணத்தை உருவாக்குவதில் இந்த நாவலுக்குப் பங்கு உள்ளது என்பதை எனக்கு ஆயிரம் டாலரை தந்து நூறு பத்தகங்களை வாங்கி ஒரு விடுதலைப்புலிகளின் ஆதரவுப் பெண்மணி தனது நண்பர்களுக்கும் அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பினார். வண்ணாத்திக்குளம் சிங்களத்தில் தொடர்சியாக அவுஸ்திரேலிய சிங்கள பத்திரிகையான ‘பகன’வில் வருவதுடன் வெகுவிரைவில சிங்களத்திலும் நூல் வடிவாக வரவுள்ளது.

இன வெறுப்பாக பேசுவதோ இலக்கியம் படைப்பதோ இலகுவானது. மனித இயற்கையானது மட்டுமல்ல மிருகங்களுக்கு கூட அடிப்படையானது இந்த விரோத உணர்வு. என்னைப்போல் புலம் பெயர்ந்தவனால் நான் பிறந்த வளர்ந்து கல்விகற்று மனிதனாகிய நாட்டில்,  நிலவும் இனப்பகை எனது புத்தகத்தால் ஒரு சிலரையாவது மாற்றுமென்றால் அதைவிட எழுதியவனுக்கு என்ன பரிசு வேண்டி இருக்கிறது?

9)   இன்றைய நுண்ணாய்வு முறைகளில் பிராந்திய அடையாளங்கள் சமூக அடையாளங்கள் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றன. இதைக் குறித்த கல்வி கூட முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. தவிர உலகமயமாக்கலின் வழியாக அடையாள அழிப்புகள் தாராளமாக நடக்கின்றன. இந்த நிலையில் இலக்கியத்தில் மேற்கொள்ளப்படும் இந்த அடையாளப் பதிவுகளும் தனித்துவக் கவனமும் முக்கியமானது என்ற நிலைப்பாடு தவிர்க்க முடியாது. இதைத் தவிர்த்து நீங்கள் சொல்வது ஒரு வகையில் இன்னொரு அடையாளத் தவிர்ப்பாக அமையுமல்லவா?

பிராந்திய அடையாளங்கள் என்பது மாற்றமடைந்து வரும் சமூகத்தின் ஒரு காலகட்டத்தின் நிலையாகும். அதாவது சிறுகுழந்தையின் மழலைப்பருவம். நடக்கும் பருவத்தில் அந்த குழந்தைக்கு விளயாட தேவைiயான பொருட்களை கொடுப்பது, பிறகு பருவத்திற்கு ஏற்ற கல்விகளையும் ஊட்டுகிறோம். இதைப்போல, அந்தப்பிள்ளை சுவரில் கிறுக்குவதை அன்புடன் சிறந்த ஓவியக்கலையின் முதற்படி எனப் பெருமைப்படுகிறோம். விளையாட்டில் பங்கெடுத்து வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு கேடயங்கள் கொடுக்கிறோம். இவைகள் தேவையானது,அவசியமானது என்பதில் இரண்டாவது கருத்தில்லை.

ஆனால் இவைகளை நாம் உச்சமாக கருதுவதில்லைத்தானே? ஒலிம்பிக் வீரரையும் முத்தையா முரளீதரனையும் வான்ஹொக்கையும் நாம் கொண்டாடுகிறேம். காரணம் அவர்கள் உச்சங்களை தொட்டதால்.

இதற்கப்பால் மனிதர்கள் வாழ்வின் வசதிகளுக்காகவும், பொருளாதாரத்தின் விருத்திக்காகாகவும் உயிர் வாழ்வதை நீடிப்பதற்கும் பல விடயங்களை மற்ற சமூகங்களிடம் எடுத்து வருகிறார்கள். இது தேவையானது. ரோமர்களிடம் இருந்து சட்டங்களையும் சிவில் பொறியியல் முறைகளையும் பிரித்தானியர்கள் பெற்றார்கள். அதேபோல் இந்தியர்களிடம் இருந்து கணிதத்தையும் கிரீசில் இருந்து தத்துவத்தையும் பெற்றார்கள். இவ்வாறே சீனர்களிடம் இருந்து வெடிமருந்து, அச்சுக்கலை என்பன வந்தன. அரேபியர்களிடம் இருந்த மனித நாகரிகத்தை கடன் வாங்கினோம். இவைகள் உலகமயமாக்கலின் நன்மைகள் அல்லவா! கீழைத்தேசத்தவர் நோய்களைக் குணப்படுத்த மேற்கு நாட்டு வைத்தியத்தைத் தேடுவதும் பஞ்சத்தைப் போக்க வீரியமான விதைகளைத்த் தேடுவதும் இப்படியானதே.மெக்சிக்கோவில் இருந்து வந்த மிளகாயையும் சீனாவில் இருந்து வந்த அரிசியையும் நமது பொருட்களாக்கினோம்.

இலங்கையில் தமிழர்கள் சண்டை செய்ய ஆயுதங்களை எங்கே வேண்டினார்கள்? வெளிநாட்டு இறக்குமதிதானே? இந்திய மேற்கு மாகாணங்களில் ஆதிவாசிகள் தாங்கள் வாழும் வன உரிமைகளை பாதுகாக்க எடுத்த ஆயுதங்கள் வில்லம்புகளா? நவீன ரக துப்பாக்கிகள் தானே?

பொருள் சார்ந்த வர்த்தகம், பணம், மனித உரிமைகள் என்பனவற்றை தனது உரிமையாக்க நினைத்த மேற்கத்தைய அரசுகளின் கைகளில் இருந்து அவை இப்பொழுது வெளிப்பரவி விட்டன. அமெரிக்க, ஐரோப்பிய கம்பனிகள் 4000 பில்லியன் டொலர் பணத்தை வைத்துக்கொண்டு அமெரிக்காவிலோ ஐரோப்பவிலோ முதலிடாமல் சீனா, இந்தியா, லத்தீன் அமெரிக்காவில் முதலிட விரும்புகிறார்கள். காரணம் அங்குதான் லாபம் பெறமுடியும். இது எதைக்காட்டுகிறது? அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உருவாகிய பொருள் முதல் (Capital) இப்பொழுது ஆசியாவுக்கும் லத்தீன் அமரிக்காவுக்கும் சென்றுவிட்டதால் வேலை இல்லாத தொழிலாளர் மேற்கில் உள்ளனர். இதுதான் தற்போது அமெரிக்க, ஐரோப்பிய தலைவர்களின் பிரதான தலைபோகும் பிரச்சனையாகும்.

அதே போல் நாம் பேசும் மனித உரிமை, சட்டம் எல்லாம் எங்கிருந்து வந்தது? எமது புலம் பெயர்ந்தவர் பயனடைந்த அகதிகள் கருத்தியல் யாரால் உருவாக்கப்பட்டது? இவை எல்லாம் உலகளாவிய கருத்தியலின் வடிவங்களே.

முந்திய காலத்தின் பின்பு கத்தோலிக்க மதபீடத்தின் செல்வாக்கு ஐரோப்பாவில் உடைந்ததால் அங்கு சிந்தனையில் மறுமலர்ச்சி உருவாகியது. கைத்தொழில் புரட்சி நடந்தது. அக்காலத்தில் வலிமையான அரசுகள் உருவாக முடிந்தது. அதனால் பெரும்பாலான விடயங்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்து வருவதால் குண்டுச்சட்டியில் குதிரையோட்ட விரும்பும் சிலர் உலகமயமாக்கம் என்று எதிர்க்கிறார்கள். மேற்கு நாடுகளிலும் சிலர் இதற்கு ஒத்து ஊதுகிறார்கள்.

நாம் உலகமயமாக்கலுக்குப் பயப்படாமல் நல்லனவற்றை எம் வயப்படுத்தவேண்டும். எமது மேன்மையான விடயங்கள் காலத்தால் நிற்கும். சட்டங்கள், ஒழுங்குகள் இல்லாத காலத்தில், தனி மனித ஒழுக்கம் முக்கியமாக இருக்கவேண்டிய நிலையில், ஆசியாவில் மதங்கள் உருவாகி உலகெங்கும் சென்றன. புத்தரின் சிந்தனை உலக மக்களில் பெரிய தொகையினரை நாகரீகப்படுத்தியது. புத்த மதத்தின் சிந்தனைக்கு மேலாக சிறந்த தனி மனித,  சமூக,  ஒழுக்க கோட்பாடு உலகத்தில் உருவாகவில்லை என்பது எனது கருத்து. இதே போல் மாகாபாரதம் போன்ற இலக்கிய வடிவமும் திருக்குறள் போன்ற ஒழுக்க நூலும் காலத்தைக் கடந்து எக்காலத்திலும் நிலைத்து நிற்பவை. இப்படியான உச்சங்களை உருவாக்கிய சமூகத்தின் வழிவந்த நாங்கள் பிராந்திய அடையாளங்கள் என்ற காரணத்தால் மட்டும் அவை பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறுவதை ஏற்கமுடியாது. அதற்காகத்தான் தொல்பொருள் காப்பகங்களை வைத்திருக்கிறோம். நான் தென் கொரியாவில் ஜேஜு தீவுக்கு சென்றபோது அவர்களது குடிசைகள், மீன்பிடிப்படகுகள் எல்லாம் அருங்காட்சியகத்தில் மட்டும்தான் இருந்தன.

10) நீங்கள் குறிப்பிடுவதைப்போல அல்லது எதிர்பார்ப்பதைப்போல இனவாதத்தை அவ்வளவு எளிதாகக் கடந்து விடமுடியுமா? அதற்கான சாத்தியங்கள் ஏதேனும் உண்டா? அல்லது இந்தக் கருத்து நிலை எப்போதையும் போல சிறிய தரப்பொன்றின் அபிப்பிராயமும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்தானா?

பல்லினங்கள் மதங்கள் சாதிகள் செறிந்து வாழும் நாட்டில் இன முரண்பாடு இருப்பது இயற்கையானது. அதற்கு எந்த நாடுகளும் விதிவிலக்கு இல்லை. தமிழ்நாட்டில் சாதிகளுக்கிடையில் போராட்டம் வெடிக்கிறது. இது எதைக்காட்டுகிறது? இனத்துக்குள்ளும் மோதல் வரும் என்பதையே.

கற்கால மனிதன் வேட்டையாடுவதற்கு பத்து அல்லது பதினைந்திற்கு உட்பட்டவர்களை மட்டும்தான் அழைத்து செல்வான். காரணம் அவ்வளவு பேரில் மட்டும்தான் ஆழமான நம்பிக்கை வைக்கமுடியும். ஒரு மனிதன் பத்து அல்லது பதினைந்து மனிதரோடு மட்டுமே ஒன்றாக இருக்கலாம். அதற்கு மேற்பட்டவர்களிடம் ஒரு அன்னியத்தன்மை உருவாகிவிடும். இதற்கு இனம், மதம், ஊர், சாதி, வர்க்கம், நிறம் என காரணம் தேடுவது வழக்கம்.

இனவாதம் இலங்கையில் சிங்கள மக்களுக்கு மட்டும் தான் உள்ளது. மற்றவர்கள் இனவாதமற்றவர்கள் என எந்த முட்டாளும் வாதிட முடியாது. விடுதலைப்புலிகளின் இனவாதம் தெரிந்ததுதானே. இதில் வல்வெட்டித்துறையினருக்கும் யாழ்பாணத்தவர்கள் என்போருக்கும் பாகுபாடு விசேசமாக இருந்ததை நாம் அறிவோம்.

இதுபோல் நாங்கள் வாழும் மேல்நாடுகளிலும் இனவாதம் உள்ளது. சமத்துவம், சகோதரத்துவம் என புரட்சி செய்த பிரான்சில் இனவாதம், யூத எதிர்ப்பு எல்லாம் உள்ளதே?சகோதரத்துவம் பேசும் இஸ்லாமியர்கள் ஆட்சி புரியும் வளைகுடா நாடுகளில் மற்றைய நாட்டு முஸ்லீம்கள் மட்டுமல்ல சியா முஸ்லீம் மக்களை பிரிவினைப் படுத்துகிறார்களே?

மேற்குநாட்டு அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் இனத்திற்கு அப்பால் நின்று நாட்டையும் மக்களையும் பற்றிப் பேசுவார்கள். நாட்டில் சகலருக்கும் சட்டம் கல்வி வசதி வாய்புகள் வேண்டுமென வாதிடுவார்கள். இந்த மாதிரியான அரசியல்வாதிகைளை நாம் உருவாக்கும்போது இலங்கையில் பிரச்சினை சுமுகமாகும். அப்படி யாராவது ஒரு அரசியல்வாதியை நாம் உருவாக்கி இருக்கிறோமா என்பது கேள்விக்குறி.

தமிழர்கள் ஆரம்பகாலத்திலே இனவாதம் பேசியதன் விளைவாகத்தான் சாதாரண சிங்கள மக்களிடம் இனவாதம் ஏற்பட்டது என்பது எனது கருத்து.இலங்கையின் சரித்திரத்தைப் பார்த்தால் ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழ் மன்னர்கள் அரசாண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குச் சிங்களப் பிரதானிகள், மந்திரிகள் ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.

அதேவேளையில் தென் இந்திய அரசர்களால் இலங்கை ஐம்பது முறைக்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. இதை விட எட்டாம் நூற்றாண்டில் தென் இந்தியாவில் புத்துயிர் பெற்ற சைவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து புத்த சமயத்தையும் வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க அவர்கள் மிகவும் போராடி இருக்கிறார்கள்.இப்படியான சரித்திர நிகழ்சிகளால் சிங்கள மக்கள் தங்களது மொழி சமய கலாச்சாரத்தை பாதுகாக்க இன உணர்வை கூராக்க வேண்டியதாக உள்ளது. இந்தியா போன்ற பெரிய தேசத்தின் அருகில் இருந்து தனித்தன்மையாக வாழ்வது இலேசான விடயம் அல்ல.

இப்படியான கட்டாயம் உலகத்தில் வேறு எந்த நாட்டிற்கும் இத்தனை ஆயிரம் வருடங்கள் இருக்கவில்லை. இப்படியான கட்டாயத்தில் இருக்கும் சிங்கள மக்கள் 18ம் நூற்றாண்டில் அவர்களது இடத்தில், மலையகத்தில் அவர்களது காணிகளில் பலவந்தமாக ஆங்கிலேயரால் குடியேற்றப்பட்ட இலட்சக்கணக்கான இந்திய தமிழர்களை வரவேற்காது விட்டாலும் பெருமளவில் பொறுத்துக் கொள்ளகிறார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் போத்துக்கேயரால் துன்புறுத்தப்பட்ட இஸ்லாமியர்களை உள்நாட்டிலும் கிழக்கு கரையோரத்திலும் குடியேற வைத்தது போன்ற சம்பவங்கள் பெரும்பலான சிங்கள மக்கள் பெருந்தன்மையானவர்கள் என்பதை ஆதாரத்துடன் காட்டுகிறது. மேலும் பல சம்பவங்களை நான் எடுத்துக் கூற முடியும். குறைந்த பட்சம் எந்த இனத்திலும் பார்க்க சிங்களவர் அதிக இனவாதிகள் இல்லை.

அதேவேளையில் இனவாதம் என்பது எல்லா மனிதர்களுக்கும் இயல்பானது. அளவுகளில் வித்தியாசப்படலாம். அது கடலின் அலை போல் எப்போதும் அடித்துக்கொண்டுதான் இருக்கும். இரண்டு சிறுபான்மை இனங்கள் சிங்களவர்கள் மத்தியில் வாழும்போது வடகிழக்கில் வாழும் பத்துவீதத்திற்கும் குறைவான தமிழர்கள் வாழ முடியாது என்பது எமது தலைவர்களின் தராதரத்தைக்காட்டுகிறது. நாட்டை பிரிக்கவேண்டும் என்று கேட்டு அவர்களை நாம் கொலை செய்ய அவர்கள் எங்களை பயங்கரவாதிகள் என கொல்லுவதற்கு முப்பது வருடங்கள் நடத்திய வன்முறை முடிவுக்கு வந்தாலும் அந்த வன்முறையின் பக்கவிளைவுகள் முதலாலாவதாக தீர்க்கப்படவேண்டும். மக்கள் அமைதியாக வாழ்வதற்கு விடவேண்டும். இதன் பின்பே அரசியல் கோரிக்கைளுக்கு இடமளிக்கவேண்டும்.

அதாவது சாதாரணமாக வன்னியில் பாதிக்கப்பட்ட தமிழரின் தேவைகளைத்தான் இன்று அடிப்படையாக கொண்டு இயங்கவேண்டும். இதை உதாரணமாகப் புரிய வைக்கமுடியும். சமூகத்தில் கல்வியை ஆரம்ப பாடசாலையில் இருந்து தொடங்குதற்கு பதிலாக எமது அரசில்வாதிகள் பல்கலைக்கழகத்தில் தொடங்குகிறார்கள்.

இன முரண்பாடுகள் ஒவ்வொன்றாக களையப்படவேண்டும். மற்ற இனங்களையும் அவர்களது காலாச்சார வரலாற்று விடயங்களை புரிந்து கொண்டதாக நமது கோரிக்கைகளும் போராட்டங்களும் இருக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் இனவாதத்தை வளர்ப்பதாக இருக்கக் கூடாது. தருமர் பாஞ்சாலியை  பணயம் வைத்து பகடை விளையாடியது போல் அப்பாவி ஏழைமக்களின் உயிரை வைத்து அரசியல் சூதாட்டம் நடத்தக் கூடாது.

பேச்சுவார்த்தை என்ற மிகவும் பொருத்தமற்ற தமிழ்ச் சொல் தற்பொழுது நெகொசியேசன் ( Negotiation) என்பதற்கு ஈடாக பாவிக்கப்படுகிறது. இந்த நெகொசியேசன் இரண்டு பக்கமும் வெற்றி பெறும்படியாக நடத்தப்பட வேண்டும். இலங்கைச் சரித்திரத்திலே இந்த அர்த்தத்தில் பேச்சுகள் எக்காலத்திலும் நடந்ததில்லை. சில பாராளுமன்ற ஆசனங்களை வைத்திருப்பதற்காக இனவாதப் புகையை ஊதி நெருப்பாக்கும் நோக்கத்தில் அரசியல் நடத்தும், சொந்த நாட்டுக்கு எதிராக வெளிநாட்டில் குறை சொல்லியபடி திரியும் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை நமது பிரச்சனை தீராது. புதிய சிந்தனை உருவாகினால் நல்லெண்ணத்தோடு தமிழர் சரிசமமாக வாழ்வதற்கு முடியும்.

இலங்கையில் நல்லிணைப்பு ஆணைக்குழுவுக்கு நான் வைத்த பதிலின் தமிழாக்கம் வீரகேசரியில் வெளிவந்தது. அதன் ஒரு பகுதி

“எல்லா மக்களும் சமம் என்ற சம உரிமைப் பிரகடனம் (bill of Right)அது கீழ்வருவனவற்றை அடக்கி இருக்கவேண்டும்

1)இலங்கையின் சகலபகுதியிலும் உயிருக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம்;

2)கல்வி தொழில் சம்பந்தமானவற்றில் சம உரிமை

3)தமது மொழி(சிங்களம் தமிழ் ஆங்கிலம); மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்ப வாழும் உரிமை

4) சட்டத்தில் அரசியலில் அரசாங்க நிர்வாகத்தில் அனைவரும் சம பங்குபெற உரிமை

5)எந்த பாகுபாடற்ற படி மொழி மதம் நம்பிக்கை அரசியல் சார்பு மற்றும் குடி இருக்கும் இடத்தை தேர்ந்து எடுக்கும் உரிமை அவசியமாகிறது

6) தமக்குரிய அடையாளங்களை தேர்ந்தெடுக்க அவற்றோடு சேர்ந்திருக்கம் உரிமை

7) அரசாங்கத்துடன் தாம் விரும்பும் சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற ஏதாவது ஒரு மொழியில் தொடர்பு கொள்ள முடிதல்’.

11)ஆனால் திட்டமிடப்பட்ட வகையில் இலங்கை அரசும் ஆட்சியாளர்களும் சிறுபான்மையினச் சமூகங்களின் அடையாளங்களை அழிக்க முயற்சித்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. நில ஆக்கிரமிப்பு மற்றும், பௌத்த அடையாளங்களின் மேலாதிக்க நிறுவுகை, சிறுபான்மையினரின் அடையாள அழிப்பு போன்றவை இந்தச் சமூகங்களைப் பதற்றத்துக்குள்ளாக்கியுள்ளன. இந்த நிலையில் எளிதாக இணக்கத்துக்கும் அமைதிக்கும் எப்படிச் செல்ல முடியும்?

இது பெரும்பான்மை சிறுபான்மை சமூகங்களின் உளவியல் சார்ந்த கேள்வி. நிலம் சம்பந்தப்படட கேள்வியை உள்ளடக்கி நல்லிணைப்பு ஆணைக்குழுவுக்கு நான் வைத்த பதிலின் தமிழாக்கம் வீரகேசரியில் வெளிவந்தது. அதன் ஒரு பகுதி

‘எனக்குப் புரிந்தவரை தமிழர் பிரச்சனையை இரண்டாக வகுக்கலாம்

1)உண்மையான பிரச்சனை

2)மனத்தளவில் பரிந்து கொண்ட பிரச்சனை

1)உண்மையான பிரச்சனையாக நான் கருதுவது

1)1956ல் இலங்கையில் சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக கொண்டுவரப்பட்டது. பின்னர் தமிழர் எதிர்புகளை எதிர்கொண்டதின் விளைவாக தமிழ் பாவிப்பு மொழியாக திருத்தப்பட்டாலும் இதுவரையில் திருப்திகரமாக தமிழ்மொழி அமூல் நடத்தப்படவில்லை. இதனால் 24 வீதமான தமிழ் மொழிபேசும் மக்கள்(வடகிழக்கு தமிழர் மலையகத் தமிழர் இஸ்லாமியத்தமிழர்கள்) தங்கள் தாய் மொழியில் அரச கருமமாற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

2) மொழிவாரியான தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாகும்.

2.மனத்தளவில் புரிந்து கொண்ட பிரச்சனைகள்.

1)சிங்களக்குடியேற்றம்

இலங்கை போன்ற சிறிய நாட்டில் மருத்துவ வசதிகள் முன்னேறி மலேரியா போன்ற நோய்கள ஒழிக்கப்படும் போது மக்கள் தொகை பெருகியது.

இந்த நிலையில் எந்த அரசாங்கமும் அரசகாணிகளை மக்கள் குடியேற்றத்துக்கு கொடுப்பது தவிர்க்க முடியாது. வடமாகாணத்தில் பல காணிகள் நிலமற்ற யாழ்ப்பாண மக்களுக்கு கொடுக்கப்பட்டது. அதேபோல் கிழக்கு மகாணத்தில் அரச காணிகள் தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது.

2) 1958 1977 1983 என நடந்த கலவர நிகழ்வுகள்.

இந்த நிகழ்வுகள் தமிழ் சிங்கள மக்களுக்கிடையே நடக்கவில்லை. அரசாங்கங்கள் தனது குற்ற ஒழுங்கை தடுக்கும் கடமையை செய்யாத படியால் ஏற்பட்டவை. நான் நேரில் பார்த்த 1983கலவரநிகழ்வு அரசாங்கத்தாலும் ஆயுதப்படையினராலும் நடத்தப்பட்டது.1983ன் பின் கடந்த 27 வருடங்கள் இப்படி ஒரு கலவரம் நிகழாதது அரசாங்கத்தால் இப்படி ஒன்று நடக்க முடியாமல் தடுக்கமுடியும் என்பதை எடுத்து காட்டுகிறது.’

தற்போது நாம் பேசும் வட கிழக்கு மாகாணங்கள் பிரித்தானியரால் நிர்வாகத்துக்காக வரையப்பட்டது. இந்த எல்லைகள் பண்டைக்காலத்தில் இருக்கவில்லை. மக்கள் ஆறுகளையும் குளங்களையும் அண்டியும் கடல்களின் அருகிலும் குடியிருந்தார்கள். நாட்டின் மக்கள் பெருகும்போது காடுகளை அழித்து மக்களை குடியேற்றுவது எல்லா நாட்டிலும் வழமையானது. இதன்பொருட்டே கல்லோயா திட்டம் கிழக்கில் உருவானது. அப்போது கிழக்கு மாகாண மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஆறுமாதங்கள் மற்றவர்கள் வரவழைக்கபடவில்லை என அறிகிறேன். அதன்பின்புதான் மற்றைய மாவட்டங்களில் இருந்த சிங்கள மக்கள் வந்தார்கள். கிழக்கு மாகாண தமிழ் மற்றும் முஸ்லீமக்களுக்கு விவசாயத்திற் தேவையான நிலம் அங்கு இருந்ததே காரணமாகும். இதைப் போல் வடமாகாணத்தில் குடியேற்றங்கள் வந்தபோது தமிழ்மக்களுக்கு தேவையான நிலம் வவனியாவுக்கு வடக்கே இருந்தது. இப்பொழுதும் மாங்குளம் புளியங்குளம் பகுதியில் தேவைக்கு அதிகமான நிலம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் நிலம் சம்பந்தமாக பிரச்சனையை பெரிதாக்கியது தமிழ்கட்சிகள். இதற்கு சிங்கள இனத்துவேசமே ஒரே காரணம் என்பதே. தமிழனாக பலகாலமாக வெட்கப்படும் விடயம் மட்டுமல்ல இப்படிப்பட்ட இனத்துவேச கட்சிக்கு எனது குடும்பங்கள் ஆதரவளித்து வாக்களித்தார்கள் என்பது வருத்தத்தை அளிக்கிறது.

அதைவிட இதை ஒரு அரசியல் பிரச்சினையாக்கி மக்கள் மனங்களை மூளைச்சலவை செய்வதிலும் இந்தக் கட்சிகள் வெற்றியடைந்து விட்டன. இந்த ரீதியிலே போருக்குப் பின்னால் நில ஆக்கிரமிப்பு என்ற பதம் சுலோகமாகிறது. அரசாங்கம் சில விடங்களை தவறாக கையாளுகிறது. அவை போரால் ஏற்பட்டவை. அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரம் முப்பது வருடமாக செயலிழந்ததால் ஏற்பட்டவை. இவைகள் பற்றிக் கவனமாக நிர்வாகிகள் மற்றும் அரசியல்வாதிகள் தீர்வு காணவேண்டியது. தற்போது பல்கலைக்கழகங்கள் போன்றவைகளில் காணும் விடயம் போன்றது. இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாட்டில் உருவாகும் எல்லா விடயங்களுக்கும் இனவாத சாயம் பூசுவது மக்களுக்கு பலனைக் கொடுக்காது. வேண்டுமானால் பத்திரிகை எண்ணிக்கையைக் கூட்டவும் பாரளுமன்ற அங்கத்துவத்தை தக்கவைக்கவும் பயன்படலாம்.

இரண்டாவது மத அடையாளங்களின் திணிப்பு.

ஆதிமனிதன் இரண்டு காலை பாவிக்க தொடங்கியது அவன் மற்ற மிருகங்களில் இருந்து தப்பி வேகமாக ஓடுவதற்காக. அப்பொழுது அவனது உடலில் உள்ள மயிர்கள் குறைந்து வேர்வைச் சுரப்பிகள் அதிகமாகி அவனது உடலைக் குளிர வைத்தன. அந்தக்காலத்தில் அவனுக்கு எந்த மதமோ கடவுளோ இருக்கவில்லை. இறப்பை உணரத் தொடங்கிய மனிதன் தன்னை மீறியசக்திகளை கனவுகாணுவதால் ஆன்மா, மனசாட்சி என்ற சிந்தனைகள் உருவாகின்றன. அதனால் ஏற்படும் பிரதிபலிப்புகள் வளர்ந்து தற்காலத்து மதங்களாக பரிணாமிக்கிறது.

இந்த மதங்கள் மனிதர்களின் முக்கியமாக அரசாள்பவர்களின் ஈகோவோடு கலந்து விடுகிறது. இவைகளின் முரண்பாடுகள் போர்களின் சரித்திரம்.

மதத்தில் நம்பிக்கையற்ற நான் உங்கள் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாது கேள்விகள் கேட்கிறேன்

இலங்கையில் காலம் காலமாக மத அடையாளங்கள் மக்கள் மேல் திணிக்கப்படுவது சரித்திரம். ஆரம்பத்தில் புத்தசமயத்தை இலங்கை அரசன் தழுவியதும் அது மக்கள் மீது திணிக்கப்பட்டது. இதன்பின் அன்னிய சமயமாகிய கத்தோலிக்க சமயம் மட்டும் எப்படி இலங்கைக்கு வந்தது? இத்தனை தேவாலங்கள் இலங்கையடங்கிலும் வந்தது எப்படி? இதற்கு அப்பால் எங்கோ இருந்து இஸ்லாமிய மதத்தை இவ்வளவு மக்கள் பின்பற்றும்படி எப்படி சந்தர்ப்பம் உருவாகியது ?

தமிழ்நாட்டில் எப்படி புத்தசமயம் அழிக்கப்பட்டது? ஏன் வைணவர்கள் விரட்டப்பட்டார்கள்?

இலங்கையின் வட பகுதியில் புத்த அடையாளங்கள் முன்பு இருக்க வில்லையா?; இலங்கையில் தெற்கே இந்து மத அடையாள்கள் காலம்காலமாக உள்ளது தானே?

எனது தந்தையின் ஊரான நயினாதீவில் காலம்காலமாக புத்த கோயில்கள் இரண்டு உள்ளன. உங்களுக்கு அந்த ஊரில் புத்தர் வந்தது மட்டுமல்ல மணிமேகலை காப்பியத்தில் சொல்லப்படும் ஊராக கருதப்படுகிறது. இந்த ஊரில் ஒரு குடும்பமாவது புத்தசமயத்தை பின்பற்றவில்லை. இதேபோல் இஸ்லாமிய மசூதி தெற்கே உள்ளது. அந்தகாலத்தில் சங்கு குளிக்க வந்த பரம்பரையில் வந்த ஒருசில இஸ்லாமிய குடும்பங்கள் இருந்தார்கள். இதை விட ஒரு சிறிய சேச்சும் இருந்தது எனது ஞாபகம். இவை எல்லாவற்றையும் மத அடையாளங்களாகவே மதித்தோம். 99.9 வீதமானவர்கள் சைவர்களாக இன்னும் வாழ்கிறார்கள். வடமாணத்தில் தெருவோரம் வைக்கப்பட்ட புத்த சிலை உங்கள் மீது புதிதாக மதத்தை அரசு திணிப்பதாக கோசமெழுப்புவது அரசியலுக்கான விடயங்கள்.

12)ஒரு சிக்கலான உளவியற் பின்னலில் இலங்கைச் சமூகங்கள் சிக்குண்டுள்ளன. இன, மத அடையாளங்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட அரசியல் இந்த உளவியலைக் கட்டமைத்துள்ளன. இது பல நூற்றாண்டுகளின் தொடர்ச்சி. இன்றைய நவீனகாலத்தில் இது இன்னும் வலுவாகி ஊடகங்கள், கல்வி மற்றும் சமூக நிறுவனங்கள், இலக்கியம் எனச் சகல துறைகளினூடாகவும் வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்த நிலையில் அமைதியைக் குறித்தும் சமாதானத்தைக் குறித்தும் எப்படிச் சிந்திக்க முடியும்? இவற்றை எப்படிச் சாத்தியப்படுத்த முடியும்?

பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது சிங்கள நண்பர்களோடு அநுராதபுரம் சுற்றுலா சென்றோம். அங்குள்ள பல இடிந்த கட்டிடங்களைப் பார்த்ததும் எனது சிங்கள நண்பனது முகம் மாறி ஆத்திரத்தில் தமிழர்களைத் திட்டினான். எனக்குக் காரணம் புரியவில்லை. சிறிது நேரத்தில் அவன் வந்து ‘இலங்கையை அழித்தவர்களைத் திட்டினேன்’ என்றான். அதன் பின்னர் அவனிடம் விவரம் கேட்டபோது ‘நான் இலங்கைத் தமிழரைப்பற்றி சொல்லவில்லை. அந்தக்காலத்தில் தமிழகத்திலிருந்து வந்த படையெடுப்புகளால் அனுராதபுரம், பொலநறுவையில் இருந்த அரசுகளும் அடையாளங்களும் சோழரால் உடைக்கப்பட்டன. இதன் எச்சங்கள் இன்று பல இடங்கள் சிதிலமாக கிடக்கின்றன. அநுராதபரத்தில் உருவாகிய அரசு பின்பு இடம்மாறி பொலநறுவை போனது. அதுவும் சோழரால் மீண்டும் படையெடுப்பில் அழிக்கப்பட அங்கும் இருக்க முடியாது இராசதானி தென்னிலங்கைககு இடம் மாறியது’ என்றான்.

இலங்கையில் பெரும்பான்மையான சிங்கள சமுகம் தன்னை ஒரு சிறுபான்மை சமூகமாக பலகாலம் நினைத்தது. இதற்குக் காரணம் இலங்கைத் தமிழர்கள் தங்களைத் தமிழ்நாட்டுத் தமிழரோடு கலாச்சாரம், மதத்தில் மட்டுமல்லாது அரசியல் சிந்தனையிலும் இணைத்து செல்ல விழைந்ததே. இந்த நிலையில் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயல்கிற அவர்களது மனநிலையை நமது தலைவர்கள் வளர்த்து விட்டர்கள். இலங்கைத் தமிழர்கள் இந்தியாவோடு சேர்ந்து விடுவார்கள் என்ற பயத்தால் சமஷ்டியை ஏற்கச் சிங்களவர்கள் மறுத்தார்கள். அவர்கள் மறுத்த காரணத்தை நாம் பார்க்காமல் மேலே போய் தனி நாடு கேட்டோம். பலதடவை ஆக்கிரமித்து இலங்கையை சூறையாடிய சோழ அரசின் கொடியை எமது வருங்கால அரச கொடியாக வரித்தோம். இதெல்லாம் இறுக்கமான நிலைமையையே இலங்கையில் உருவாக்கியிருக்கிறது. இது அவர்களது மனநிலை.

நாம் தொடர்சியாக அரசாண்ட இனம் எனச் சொல்லிக் கொண்டு தனித்து வாழவேண்டும் என்பதற்காக கட்சி அரசியலால் போராடி பின்பு ஆயுதம் எடுத்துப் போராடினோம். கலாச்சாரத்தில், மதத்தில் நாம் தமிழ்நாட்டைப் பின்பற்றினோம். தமிழ்நாட்டில் திராவிட நாட்டு கோரிக்கை எழுந்த போது அதன் பிரதிபலப்பாக இலங்கையில் தமிழரசுக் கட்சி உருவாகியது. இருபக்கத்தினரிலும் இனவாதிகள் நடந்திய கைங்கரியங்களால் இரண்டு சமூகமும் மேலும் அன்னியமாக்கியது. இந்த வரலாற்றுக் காரணங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கைத்தமிழர் யாவரும் வெளிநாடு போக முடியாது என்ற நிதர்சனத்தையும் அறிந்துகொண்டு நல்ணெண்ணத்தோடு வாழ்வதுதான் ஒரே வழி. இதுதான் எம் முன்னால் உள்ளது.

எமது நடத்தைகளுக்கு நாமே பொறுப்பேற்கவும் எதிர்காலத்தில் இவற்றை தவிர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படவும் வேண்டும்.; இலங்கை அரசாங்கத்தையும் இதில் முழுப்பங்கேற்புக்குத் தூண்டவேண்டும்.

*இந்த மாதிரியான வரலாற்றுப் பிணக்கை பிற சமூகங்கள் எப்படிக் கடந்துள்ளன? நீங்கள் வாழ்கின்ற அவுஸ்ரேலியச் சமூகங்களின் நிலை அங்கே எப்படியுள்ளன? அங்குள்ளபூர்வகுடிகளின் நிலை, அவர்களுக்கான அங்கீகாரம், சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகள் எல்லாம் எவ்வாறுள்ளன?

இனம் மதம் சாதி என்பவற்றால் சமூகங்கள் உருவாகும் போது அங்கு அதைப்பாவித்து பிணக்குகளை உருவாக்குவது பலருக்கு சாதகமானது. உண்மையான, மக்கள் மீது நம்பிக்கையுள்ள அரசு இப்படியான குழுக்களை உடைத்து மொத்தமான தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைக்கவேண்டும். மத கலாச்சார உணர்வுகளுக்கு சட்ட உறுதி அளித்துவிட்டு அரசியல் குழுவாகாமல் தடுப்பதன் மூலம்தான் நாட்டில் அமைதி உருவாகும்.

அவுஸ்திரேலியாவில் பதினைந்து ஆண்டுகளின் முன்பு போலின் ஹான்சன் என்ற பெண்மணி ஆசிய எதிர்ப்புக் கட்சி தொடங்கியபோது பத்து வீதமான மக்கள் அதை ஆதரித்தார்கள். பெரிய இரண்டு கட்சிகளும் ஜனநாயக முறையில் இணைந்து அவரை எதிர்த்து அரசியலில் இருந்து அழித்து விட்டார்கள். காரணம் அந்தப் பெண்ணினால் ஆசிய நாடுளுடனான வியாபாரம் பாதிக்கப்படும் என்பதே. அதன் விளைவாக நாட்டில் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால்.

அவுஸ்திரேலிய பூர்வகுடிகள் சட்டரீதியாக சம உரிமை பெற்று இருந்தாலும் நூற்றாண்டுகளாக நீடிக்கும் புறக்கணிப்பு சாதாரணமானது அல்ல. அவர்கள் நிலைமை நான் வசித்த கால் நூற்றாண்டுகளில் பல மடங்கு முன்னேறியுள்ளது. அவர்களது நில உரிமைகளை கொடுப்பதற்கு பல அரசியல்வாதிகளும் அறிஞர்களும் முன்னிற்கிறார்கள். அவர்கள் அவுஸ்திரேலியா என்ற நாட்டுக்குள்தான் தங்கள் உரிமையை கேட்கிறார்கள்.

13) இந்த உளவியலைக் கடப்பதற்கான எழுத்தும் சிந்தனையும் எப்படி இருக்க வேண்டும்? அதை எப்படிச் சாத்தியமாக்குவது? ஏனெனில் நீண்டகாலமாக வளர்ச்சி பெற்று நிறுவனமயப்பட்ட கருத்துருவாக்கத்தை அத்தனை எளிதாக நீக்கி விடவோ, கடந்து விடவோ முடியாது. அதேவேளை இந்தப் பின்னோக்கிய சிந்தனைக்கு ஊடகம், அரசியல் மற்றும் பிற அமைப்புகளின் பலமும் உண்டு. எனவே இந்தநிலையில் எத்தகைய வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க முடியும்?

இரண்டு பக்கத்தினரதும் தவறுகள் ஏற்றுக்கொள்ளப்படுவது முக்கியம். இது அறிவாளிகளிலும் சிந்தனாவாதிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இருந்து உருவாகவேண்டும். காரணம் இவர்கள்தான் சமூகத்தின் மூளை போன்றவர்கள். இவர்களது மாற்றம் சமூகத்தின் பல பாகத்துக்கு எடுத்து செல்லவேண்டும். இதன்பின் சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்கும் வழிமுறைகள் பலரால் ஆராயப்பட்டு நாட்டின் கொள்கைப் பிரகடனமாக வேண்டும். அவுஸ்திரேலியா, கனடா நாடுகளின் பல்கலாச்சாரம் போல் இதை பாடசாலைகளில் குழந்தைப்பருவத்தில் இருந்து படிப்பிக்கவேண்டும். இதன்பின்பு சட்டம் அதற்கேற்ப திருத்தப்பட வேண்டும்.

சில விடயங்களை கோடு காட்டுகிறேன். சிலவற்றை உடனடியாகவும் பலவற்றை படிப்படியாகவும் செய்யலாம்.

கலாச்சாரரீதியான மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நேரத்தில் பாடசாலைகளிலும் வேலைத்தலங்களிலும் தேசிய ஒருமைப்பாட்டைத் தர்க்கரீதியாக எடுத்துச் செல்லவேண்டும்.

இலங்கையில் சிங்களம், தமிழ் என்ற இரண்டு மொழிகளையும் கட்டாயமாக இருபகுதியினரும் கற்க வேண்டும்.

இன மொழி மத ரீதியான அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டு பாகுபாடுகளைத் தூண்டுபவர்கள் மீதும் இனவாத ஊடகங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாடசாலைகள் மத இன வேறுபாடு இல்லாது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேணும்.

ஆரம்ப காலத்தில் சிங்கப்பூரின் சில சட்ட நடைமுறைகளைப்போல இலங்கையிலும் அமுல்படுத்துவது தவிர்க்க முடியாது.

14 )ஆனால் நீங்கள் இப்படிக் கூறினாலும் பொதுத்தளத்தின் உணர்கையும் அதனுடைய செயல்வழியும் வேறாகவே உள்ளது. அதனால் நீங்கள் கூறுவதைப்போல தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல் -சுயவிமர்சனம் செய்தல்- தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தல் போன்றனவற்றை எப்படிச் சாத்தியப்படுத்துவது? பல்கலைக்கழகங்களும் புத்திஜீவிகளும் சமூக அமைப்புகளும் இனவாத மயப்பட்டிருக்கும் ஒரு சூழலில் இதற்கெல்லாம் சாத்தியமுண்டா?

ஓவ்வொரு சமூகமும் வழக்கமான சிந்தனையோட்டத்தில் இருந்து நவீனமான சிந்தனைக்கு போவது இலகுவான காரியமல்ல. இதை முன்னெடுத்து செல்ல அறிவுஜீவிகள் தத்துவமேதைகளால்தான் முடியும். நமது மண்ணில் இனவாத நச்சு விதைகள் பலகாலமாக விதைக்கப்பட்டு அவை உயிர்களாகவும் ஊனங்களாகவும் அறுவடை செய்யப்பட்டுள்ளது. அந்த நச்சுச் சூழல் நம்மைச்சூழ்ந்து பல நாள் சுத்தப்படுத்தாத பொதுக் கழிப்பிடம் போல் நாறுகிறது. இலக்கியத்தமிழில் சொல்வதென்றால் புலி போனாலும் கவிச்சி வாடை போகாத மலைக் குகைபோல்… இந்த நிலையில் இலங்கைத் தமிழ் சமூகமாகிய நாங்கள் தற்போது விழுந்திருக்கும் குழியைச் சுற்றிக் கொண்டிருக்காமல் நாம் அதற்குள்ளிருந்து எழும்பி வெளியேறமுடியுமா எனப் பார்க்க வேண்டும். அந்தக் குழியை மேலும் ஆழமாக தோண்டக்கூடாது.

வரலாற்றில் பல சமூகங்கள் பல இடர்ப்பாடுகளை யுக்திகளால் கடந்து வந்திருக்கின்றன. இதில் ஆயுதப் போராட்டம் ஒரு பகுதி. அதற்கப்பால் பல வழிமுறைகள் உள்ளன. இவைகள் சாத்தியம் சாத்தியமில்லை என்பதை விட எமது இனத்தை தொடர்ச்சியாக வாழவைக்கக் கூடிய வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். புதிய சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைப்பதன் மூலம் மாற்று வழிகளின் சாத்தியத்தை சாதாரண மக்கள் சிந்திப்பதற்குத் தூண்டவேண்டும். இதன் பின்பு அரசியல்வாதிகளுக்கு சமூகத் தலைவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் அதைக் கையாள வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். அரசியல்வாதிகளில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இல்லை. பதவிக்காக எது இலகுவாக இருக்குமோ அதைச் செய்வது தான் அவர்களது வழக்கம். சிங்கள அரசியல்வாதிகளுக்கு உள்ள வசதி அவர்கள் பெரும்பான்மை மக்கள் மத்தில் இனவாதத்தைப் பேசி இலங்கையில் ஆட்சிக் கட்டிலில் ஏறமுடியும். அதே போல் தமிழ் அரசியல்வாதிகள் இலகுவாக சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதுவும் தரமாட்டார்கள் என ஒரு சூனியவாதத்தை சொல்லி வாக்குகளைப் பெறுகிறார்கள்.

எமக்கு இலங்கையில் வாழும் இஸ்லாமிய சகோதர்களின் வழி முறைகள் தற்போது பாடமாக இருக்கவேண்டும். அவர்கள் மொழியில் வேறுபட்டும் சமய ரீதியில் எங்களைவிட முரண்பாடுகள் அதிகம் கொண்ட போதும் ஆட்சியில் பங்கேற்கிறார்கள். அது எப்படி சாத்தியமாகிறது?

கிழக்கு மாகாணத்தில் அமைச்சராக சிலகாலம் மட்டும் இருந்து அஷ்ரப் சாதித்த விடயங்கள் தமிழ் அரசியல்வாதிகள் எல்லோரும் சேர்ந்து அரை நூற்றாண்டுகளாக சாதித்த விடயங்களை விட பலமடங்கு அதிகம். இது எப்படி என எமது தலைவர்களைத் தமிழ் மக்கள் கேட்டார்களா? இது வேண்டாம். மலையகத் தமிழர்கள் எவ்வளவு கீழ்நிலையில் இருந்தார்கள்? ஒரு காலம் அவர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டது. இப்பொழுது அவர்களின் நிலைமை எவ்வளவோ மேல். இதெல்லாம் இறந்த தலைவர் தொண்டமானால் உயர்த்தப்படவில்லையா?

இந்த விடயங்களை மற்றைய சமூகங்கள் சாதித்த போது அங்கு உயிர் இழப்பில்லை. இரத்தம் சிந்தவில்லை. சிறைகள் நிரப்பப்படவில்லை. குண்டுகள் தலையில் விழுந்து பெற்ற பிள்ளைகள் சாக வில்லைத்தானே?

ஒப்பீட்டளவில் இந்த இரு சமூகத்திலும் பார்க்க இலங்கைத்தமிழர் கல்வியில் மேம்பட்டவர்களாக அக்காலத்தில் இருந்தோமல்லவா? எங்கள் கல்வி அறிவு எங்கே கொண்டு போய்விட்டது? அகதி முகாம்களிலும் கடலின் அடியிலும் தானே? இங்கே தவறு யாரில் உள்ளது? நான் கேட்கும் கேள்வியை வெளிநாடுகளில் பாலர் பாடசாலை குழந்தை கூட கேட்கும்.

செம்மறிகள் கூட நல்லாயனை தங்கள் மேய்ப்பனாக இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு பெற்ற போது நமக்கு மட்டும் இருபதாம்; இருபத்தொராம் நூற்றண்டில் ஏன் இந்த தலைவிதி? என இனியாவது சிந்திக்க வேண்டாமா?

15)இலங்கையில் இன ரீதியான அரசியலின் எதிர்காலம் எப்படி அமையும்? இதற்கு முடிவு உண்டா? அல்லது தொடருமா? தொடருமாக இருந்தால் அதன் விளைவுகள் எப்படியாக இருக்கும்?

தமிழ்மக்களின் எதிர்காலம் அவர்களின் கைகளில் தங்கி இருக்கிறது. தலைமயிர் வெட்டுவதற்கு யோசித்து சிறப்பானவர்களிடம் தான் போவது எமது வழக்கம். அட மயிர் வெட்டுவதற்கே சரியான ஆளைத்தேடுகிறோம். ஆனால் எம்மைத் தலைமை தாங்கும் பொறுப்பை பொன்னம்பலம்- செல்வநாயகம்- அமிர்தலிங்கம் என சந்தர்ப்பவாத தலைவர்களின் கைகளில் கொடுத்தோம். அதற்குப் பிறகு நடந்தவை விமானத்தில் இருந்து விழுந்தது போன்று எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. அவற்றை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இந்த நிலை தொடருமானால் எமக்கு விமோசனமில்லை. அதன் விளைவுகள் இலங்கையில் தமிழினம் இருந்தது என தற்போதைய தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களான டாக்டர் பொ. இரகுபதி- பேராசிரியர் சிற்றம்பலம் போன்றவர்களின் எழுத்தில்தான் இருக்கும்.

இந்து சமயப் பழக்கங்கள் மற்றும் தமிழ்ப் பாரம்பரியத்தை சிங்களம் பேசும் மக்கள் பின்பற்றுவார்கள். நம் மக்களில் எஞ்சியவர்களைக் கொண்டு அமையும் தமிழ்ப் பிரதேசங்கள் நீர்கொழும்பு மாதிரியான தோற்றத்தை கொடுக்கும். இஸ்லாமிய சகோதரர்கள் மட்டுமே தமிழைத் தங்கள் வீட்டு மொழியாக பாவித்துப் பல இஸ்லாமிய சகோதர சகோதரிகளால் தமிழ் கவிதைகள் இணையங்களில் எழுதப்படும். வெளித்தொடர்பு மொழியாக சிங்களத்தை உபயோகிப்பார்கள். இப்படியான அனுமானிப்பை மீறி அதிசயமாக ஏதாவது நடக்கலாம். ஆனால் நிச்சயமாக இந்தத் தலைமுறையில் மாற்றங்கள் நடக்க தற்போதைய தமிழ்த் தலைவர்களும் பத்திரிகைகளும் இடம் கொடுக்காது.

16)இலங்கை அரசியல் முறைமை அல்லது ஆட்சிமுறை என்பது பல நெருக்கடிகளை இலங்கையர் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை விட்டு வெளியேறியோரையும் அது விட்டு வைக்கவில்லை. புறவயத்தில் இல்லையென்றாலும் அக நெருக்கடிகளுடன் வாழ்கின்ற இலங்கையர்களையே அது எங்கும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில் எதிர்கால இலங்கை -நிகழ்கால இலங்கை குறித்த உங்கள் சிந்தனை என்ன?

இலங்கை அரசியல் முறைமையின் நெருக்கடி என்பது எல்லோருக்கும் பொதுவானது. இது குறைபாடுகள் அற்றது என நான் சொல்லவில்லை. ஆனால் தென்னாசியாவில் உள்ள நாடுகளோடு ஒப்பிடம் போது சமூக பொருளாதாரம்- சுகாதாரம்- கல்வி போன்ற விடயங்களில் நாம் பல வருடங்கள் முன்னேறி இருக்கிறோம். இவற்றிற்கு எது காரணம்? ஒப்பீட்டளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிக குறைந்த நாடு எமது தாய் நாடு. பொருளாதாரத்தில்- கல்வியில் பெண்களின் பங்கு என பார்க்கும் போது ஐரோப்பிய நாடுகளுக்கு இணையானது. சாதி சமயம் என்பன எமது நாட்டில் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இல்லை என்ற விடயம் இந்தியாவில் வசித்தபோது புரிந்து கொண்டேன் ஒப்பீட்டளவில். “யன்னல் வழியே பார்த்தால் மனைவியும் அழகியே “என்ற ஒரு கூற்றைப்போல் வெளிநாட்டில் இருந்து பார்க்கும்போது இது எனக்குத் தெளிவாகிறது..

இதற்கு அப்பால் தற்போதைய அரசியல் அமைப்பு விகிதாசாரத்தில் பிரதிநிதிகளை தெரிவு செய்வதால் சிறுபான்மை மக்களை அரசு அணைத்துப் போக வேண்டிய கட்டாயத்திலே வைத்திருக்கிறது. தற்போது 21 அரசியல் கட்சிகளை சேர்த்துதான் இலங்கை அரசு அமைந்துள்ளது. இதன் மூலம் பலரது சம்மதத்துடன்தான் அமைச்சரவை முடிவுகள் ஏற்கப்படுகிறது. தமிழராக நாம் 77ம் ஆண்டின் பின்பு வந்த நிலைமையை பயன்படுத்தாதது மிகவும் சோம்பேறித்தனமானது.

மலையகத் தமிழர்களுக்கு தொண்டமானும் இஸ்லாமியர்களுக்கு அஷ்ரப்பும் பின்னால் வந்த தலைவர்களும் இதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஜனநாயகம் என வாய்கிழிய கத்துவதை விட அதில் உள்ள நுட்பங்களை மக்கள் நன்மைக்காகப் பாவிக்கத் தெரிய வேண்டும். எங்கும் அரசியல் அமைப்புகள் கருங்கல்லை- பாறையைப் போன்றவை அல்ல. ஆங்கங்கே பல இடங்களில் மக்களுக்கு பலனளிப்பதை பிரயோசனப்படுத்த வேண்டும். வரிச்சலுகையில் வரும் காரை வாங்கி லாபம் எடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் விடயம் என்று வரும்போது ‘இனவாத அரசு’ என்பார்கள்.

இது எப்படி இருக்கென்றால் இந்துக்கல்லூரியில் நான் படித்த காலத்தில் அங்கே ஒரு நகைச்சுவைக் கதை பேசுவோம். ஒரு சோம்பேறி ராணித் தியேட்ருக்கு படம் பார்க்க கலரி எனப்படும் பென்ஞ்சுகளைக் கொண்ட பகுதிக்கு லுங்கி அணிந்தபடி இரண்டாம் ஆட்டத்தை பார்க்க நண்பர்களுடன் சென்றான். அந்தப்படம் சிவாஜி கணேசன் நடித்த பாசமலர். சோகப்படம். ஆரம்பத்தில் இருந்தே அந்த சோம்பேறி அழுவதைப் பார்த்த நண்பர்கள் இவன் சிவாஜி கணேசனின் சோக நடிப்பில் அழுகிறான் என நினைத்துக் கொண்டிருந்தார்கள். படம் முடிந்தும் கூட அவன் அழுதபடிதான் இருந்தான்.

‘ஏண்டா இப்ப அழுகிறாய் அதுதான் படம்; முடிந்து விட்டதே’ என்றான் அவனது நண்பன்.

‘இல்லே என்ரை விதை நீங்கள் இருந்த இரண்டு பென்ஞ்சுகளுக்கு இடையில் சிக்கிவிட்டது. எழுப்ப முடியவில்லை. அந்த நோவில்தான் அழுதேன்’ என்றான் சோம்பேறி.

‘எங்களைத் தட்டி எழுப்பி இருக்கலாமே? மடையா’ என நண்பர்கள் கடிந்து கொண்டார்கள்.

அந்த சோம்பேறியின் படிமத்தை எமது தலைவர்களிடம் பார்க்க முடியும்.

17)அரசியல் ரீதியாக ஒரு வரையறுக்கப்பட்ட அளவில் இலங்கை அரசாங்கத்தை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டுக்கு நீங்கள் வரவேண்டிய காரணமென்ன? இந்த அபிப்பிராயத்துக்கு எதிராகவே பெரும்பான்மையான தமிழர்கள் நிற்கிறார்களே அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அவர்களுடைய நிலைப்பாட்டின் நியாயத்தன்மைகளை நீங்கள் பரிசீலிக்கவில்லையா? ஏனென்றால் அவர்கள் தமிழர்களில் பெரும்பான்மைத் தரப்பினர்களாக உள்ளனர்?

இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும் கொள்கை ரீதியில் எனக்குப் பிரச்சினை இல்லை. காரணம் அரசாங்கம் இலங்கையில் வாழும் மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதில் எப்படிக் குறைகாணமுடியும்? எனது பிறந்த பூமி. அத்துடன் எனது கல்வி- நான் இன்று இருக்கும்; நிலை எல்லாவற்றிற்கும் அந்த நாடே பொறுப்பானது. மேலும் அங்குள்ள மக்கள் அரசாங்கத்தைத் தமது விருப்பத்தின் படியாகத் தெரிவு செய்கிறார்கள். அதுவும் ஜனநாயமுறையில். அந்த உரிமையை நான் மதிக்கிறேன். இன்றைய அரசாங்கம் மாறி நாளை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வந்தாலும் எனது நிலை மாறாது.

சில விடயத்தை இங்கே குறிப்பிடவிரும்புகிறேன். இலங்கையில் எது செய்தாலும் அரசியலமைப்பை மாற்றுவதற்கு இந்த மூன்றில் இரண்டு பாராளுமன்ற வலிமை அவசியம். அந்த வலிமை ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் பின்பு தற்போதய அரசாங்கத்திடம் உள்ளது. இதன்பின் இலங்கையில் சம்பந்தன் ஜனாதிபதியாக வந்தாலும் அரசியலமைப்பை மீறிச் செய்ய முடியாது.

கடைசியான ஒரு காரணம் அது மனரீதியானது. தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் ராஜபக்ஷவிற்கு சிங்கள மக்களிடம் செல்வாக்கு உள்ளது. அந்தச் செல்வாக்கு இன்னும் பலவருடங்கள் நீடிக்கும். இந்த நிலையை அவர் உணர்ந்து உள்ளார். அதனால்தான் எந்த வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் போர்க்காலத்தில் இருந்து அவர் தலைபணியவில்லை. இவ்வளவு கால இலங்கைப் பிரச்சினைகள்- குவித்து விட்ட கடந்த கால குப்பைகள் என அவரிடம் தள்ளப்பட்டிருக்கிறது. மெதுவாக சுத்தப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. குறைந்த பட்சம் தமிழர்கள் நிம்மதியாக குழந்தைகளுடன் குடும்பத்துடன் உறங்குவதற்கு யார் காரணம்? ஆனால் ஒரு கை தட்டினால் ஒலி கேட்காது.

18)என்றாலும் உங்கள் கருத்தும் நிலைப்பாடும் தமிழ் மக்களின் புரிதலில் ஏற்படுவதற்கு சாத்தியக் குறைபாடுகள் உண்டே?

இங்கே இது எனக்கு மட்டுமான பிரச்சினையில்லை. காலம் காலமாக வித்தியாசமான விடயத்தை எடுத்துக் கூறும் போது அதை ஏற்காத தன்மை மக்களிடம் உள்ளது. உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோவில் இருந்து இன்று புவி உஷ்ணமாகிறது எனக் கூறுபவர்கள் வரையில் இந்த விதியுள்ளது. தமிழ்ச்சமூகம் வீண் பெருமையும் பழமையும் மட்டும் பேசும் சமூகமாகி இருந்தது. தற்பொழுது மற்ற சமூகங்கள் அறிந்த- செய்யாத விடயங்களில் தான் ஒரு ஒட்டுண்ணியாக வாழ்ந்து வருகிறது. அதாவது கல்வி- சுகாதாரம்- மருத்துவம் போன்ற விடயங்கள் மேற்கத்தையரின் கல்வி கற்றவர்களால் சுமக்கப்பட்டு எமது சமூகம் அனுபவிக்கிறது. உதாரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் வேலைசெய்யும் வைத்தியர்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

துரதிருஷ்ட்டவசமாக சமூக அறிஞர்கள்- கல்விமான்கள்- மனவியலாளர்கள் போன்றோரை எமது சமூகம் அதிக அளவில் உருவாக்கவில்லை. அறுபதில் காத்திகேசு மாஸ்டர் போன்றவர்களின் பின்பு இலங்கைத் தமிழ்ச் சமூகம் மீண்டும் சூல் கொள்ளவில்லை. அப்படி ஓர்- இருவர் வரும் சாத்தியத்தையும் விடுதலைப்புலிகள் இயக்கம் கருக்கலைப்பு செய்து சமூகத்தை கடந்த முப்பது வருடமாக மலடாக்கி விட்டது. இப்படியான பாலைவனச் சூழ்நிலையில் நான் மட்டுமல்ல யார் எது சொன்னாலும் புரிவது கஸ்டமாக இருக்கும். அதுவும் நம்வர்கள் புரியாத விடயத்தை பலமாக எதிர்ப்பார்கள். அல்லது அதற்குப் புது விளக்கம் கொடுப்பார்கள்.

இங்கும் ஒரு கதை சொல்கிறேன். நான் பேராதனையில் இரண்டாம் வருடம் படித்தபோது அங்கு நடந்த விஞ்ஞானப் பொருட்காட்சியில் என்னை இரத்தம் சம்பந்தமான மாடல்களை மக்களுக்குப் புரியவைக்க பொறுப்பாக விட்டிருந்தார்கள். பெரும்பாலான மக்கள் கண்டியில் இருந்து வந்த சிங்கள மக்களே.அவர்கள் என்னுடைய விளக்கத்தை உடைந்த சிங்களத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது என்னோடு இந்துக்கல்லூரியில் ஒன்றாகப் படித்த யாழ்ப்பாணத்து நண்பர்கள் வந்தார்கள். அவர்கள் ஒரு இரட்டையர்கள். பரீட்சையில் மூன்று முறை தோல்வியடைந்து பல்கலைக்கழகம் செல்ல முடியாமல் அப்பொழுது கணக்கியலில் கொழும்பில் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் உயிரியல் மற்றும் விலங்கியல் பன்னிரண்டாம் வகுப்பில் படித்தவர்.

‘உனது இரத்தம் என்ற விளக்கத்தில் தவறு உள்ளது’ என்றார்.

‘இந்த விளக்கத்தைதான் பேராசிரியர் சொன்னார்’ என சிரித்தேன்.

அதற்குப் பின்னும் அவர் தவறு என்பதைச் சுட்டிக்காடுவதை நிறுத்தவில்லை. உள்ளுக்குள் நினைத்தேன். இவன் தவறு காணவென்று கொழும்பில் இருந்து வந்திருக்கிறான் என

19)நல்லிணக்கம் பற்றிப் பேசப்படுகிறது. ஆனால் அரச தரப்பிலிருந்து ஆட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்ற சிங்களத்தரப்பிலிருந்துதான் முதற் சமிக்ஞைகள் வரவேண்டும். அங்கிருந்தே நல்லூற்றுத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கான எந்த முயற்சியையும் காணவில்லையே?

ஆட்சியில் இருப்பவர்களிடம் இருந்துதான் முதல் சமிக்கை வரவேண்டும் என்பது கேட்பதற்குச் சரியாக இருந்தாலும் இலங்கை அரசின் மேல் போரைத் துவக்கியவர்கள் தமிழர்கள். 70 ஆரம்பத்தில் தமிழ் அரசியல்வாதிகள் ‘துரோகிகளுக்கு இயற்கையான இறப்பில்லை’ என கர்ச்சித்து அரசோடு சேர்ந்த தமிழர்களையும் அரச ஊழியர்களையும் கொலை செய்வதில் இருந்து தொடங்கிய போராட்டமல்லவா?

அது மட்டுமா? போர்நிறுத்தங்களை முறித்து போரை தொடக்கியது அத்துடன் போரை அப்பாவிமக்கள் மேல் திணித்தது நாமல்லவா?.

ராஜபக்ஷாவா இல்லை பொன்சேகாவா மக்களை முள்ளிவாய்க்காலுக்கு கட்டாயமாக அழைத்துச் சென்றது?

இதற்கு உண்மையாக எத்தனை பேர் மன்னிப்பு கேட்டோம். இலங்கை அரசாங்கத்தை விடுங்கள். எந்த முக்கியமான தமிழ் அரசியல்வாதி இஸ்லாமிய மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனந்த சங்கரி மட்டும் தமிழ் அரசியலில் தவறுகளை ஒப்புக்கொண்ட ஒரே மனிதர். ஆனால் அவருக்கு எத்தனை தமிழர்கள் வாக்களித்தனர்? இப்படியான நிலையில் அரசாங்கத்திடம் இருந்து முயற்சியை எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம். நல்லிணக்கம் எல்லோருக்கும் அவசியம். ஆனால் தமிழர்கள் இதயசுத்தியோடு சாதாரண சிங்கள -இஸ்லாமிய மக்களோடு இணையும் போது அரசாங்கம் அந்த விருந்திற்கு வந்தே தீரவேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்களில் வானவில் என்ற அமைப்பை உருவாக்கி நண்பர்களின் பங்களிப்புடன் பங்களித்து வருகிறீர்கள். இது வரவேற்கப்பட வேண்டிய அவசியப்பணியே. இந்த மாதிரிச் செயற்பட வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

என்னைப் பொறுத்தவரை நான் இலங்கையை விட்டு விலகிய காலத்தில் இருந்து அரசியல் பேச்சோடு அல்லது எழுத்தோடு மட்டும் இருந்து விடாது கடந்த கால்நூற்றாண்டுகளாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். தமிழ் நாட்டில் மூன்றுவருடங்கள் மருத்துவ நிலையத்தை தமிழ் அகதிகளுக்காகவும் பின்பு ஏழு வருடங்கள் இலங்கைத்தமிழ் அகதிகள் கழகம் என்ற அகதிகள் அமைப்பிலும் மெல்பேனிலும்; பின்பு 12 வருடங்கள் ‘உதயம்’ பத்திரிகை எனவும் தொடர்ச்சியாக வேலை செய்தேன். அதன்பின் ‘எழுவைதீவு வைத்தியசாலை’ எனது சொந்த முயற்சியினால் உருவாக்கப்பட்டது. அதனது முடிவில்தான் இந்த விதவைகளுக்கு உதவும் திட்டம் ஆரம்பமானது. இவற்றில் உள்ள பொதுவான இயல்பு நான் செய்தவைகளின் பலன்களை கண்ணால் காணமுடிந்தது. இவைகள் சிறிதாக இருந்த போதிலும் மனச்சாந்தி தருபவை. மிருக வைத்தியரான என்னால் நான் செய்த வைத்தியத்தின் விளைவுகளை உடனே பார்ப்பது எனக்கு சந்தோசத்தை கொடுப்பதாகும். அதுபோன்ற விடயம்தான் இவைகளும்.

இலங்கையில் மனித உரிமையை நிலை நாட்டுதல்- அரசாங்கத்தை மாற்றுதல் அல்லது பாட்டாளி சர்வாதிகாரத்தை நிலை நிறுத்துதல் போன்ற பெரிய விடயங்களில் ஈடுபட்டு பயனில்லாமல் இருப்பதை விட முடிந்த விடயங்களில் மாற்றத்தை ஏற்றுபடுத்துவது எனக்குப் பிடித்தது. அதாவது புதரில் இருக்கும் பல பறவைகளைவிட கையில் இருக்கும் ஒரு பறவை மேலானது.

20)போரின் முடிவுக்குப் பிறகு இலங்கைக்குப் பல தடவைகள் பயணித்துள்ளீர்கள். போர் நடந்த வன்னி மற்றும் பிற பகுதிகளுக்கும் போய் வந்துள்ளீர்கள். இங்கெல்லாம் ஒவ்வொருவரின் மனநிலை- வாழ்நிலை,-எதிர்காலம் பற்றிய எண்ணம்- கடந்த கால அனுபவங்களைப் பற்றிய மதிப்பீடு எல்லாம் எப்படியுள்ளன?

மனிதர்களை நான் ஒரு கூட்டமாகவோ இலக்கமாகவோ பார்ப்பது எனது வழக்கமில்லை. ஒவ்வொரு மனிதனும் எதிர்காலத்தைக் கனவு காணும் போது தன்னை மட்டும் அல்லது தனது குடும்பத்தை மட்டுமே கனவு காணுகிறான். அவனது கனவுகள் இந்த பிறவியில் நிறைவேற வேண்டும். ஒரு தலைமுறையை அடுத்த தலைமுறைக்காக வித்தாக விதைப்பது எனக்கு உடன்பாடற்ற விடயம். இப்படியான பம்மாத்து வசனங்களே எனக்கு தூக்கத்தை கெடுப்பவை. அவை மற்ற மனிதனை முட்டாளாக்க நினைப்பவர்களது வாயில் இருந்து வருபவை.

மனிதன் அவனது வாழ்க்கை- வசதிகள் குழந்தைகளின் கல்வி- வாழ்வதற்கு வீடு என சாதாரணமான கனவுகள் மட்டுமே காண்கிறான். குண்டு விழும்போது இராணுவத்தை திட்டுகிறான். தனது குழந்தைகளை விடுதலைப்புலிகள் பிடித்து சென்றபோது அவர்களை வெறுக்கிறான். அவனது சிந்தனையில் ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்பதோ மாநில அதிகாரங்கள் என்ன என்பதோ அவனது சிந்தனையில் இடம் பெறுவது இல்லை. இந்திய அகதி முகாங்கள் தினமும் நான் சென்று வந்த இடங்கள். அதே போல் செட்டிகுளம் அகதிகள் முகாமிற்கு மூன்று தரம் சென்றபோது இதேதான் நான் புரிந்துகொண்ட பாடங்கள்;. அரசியல்வாதிகளைப் பாருங்கள். தங்களின் குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்திருக்கிறார்களா? இதே நேரத்தில் அரசியல்வாதிகள் தங்களது நலன்களுக்காக தமது சிந்தனைகளை- தேவைகளை மக்களது விருப்பங்களாகத் திணிக்கிறார்கள்;. இவர்களைவிட வேறு ஒருவரும் இல்லாதபடியால் மக்கள் இவர்களைத் தெரிவு செய்வதும் காலம் காலமாக நடக்கிறது.

அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து சென்று அங்கு கால் ஊன்றுவதற்கு எனக்கு மூன்று வருடங்கள் பிடித்தது. இவ்வளவிற்கும் அரசாங்கம் மற்றும் உறவினர்களின் உதவி எனக்கு இருந்தது. இருக்கும் இடம்- உயிர்கள்- உறவுகள் என சகலதையும் இழந்த மக்கள் மீண்டும் உயிர்ப்பது இலகுவான விடயமல்ல. சகல காயங்களும் ஆறுவதற்கு ஒரு தலைமுறை செல்லும். இந்தமாதிரியான விடயங்கள் ஜேர்மன்- வியட்னாம்- கம்போடியா என பல நாடுகளில் நடந்திருக்கிறது. கடந்த மூன்று வருடங்களில் மக்கள் பட்ட பெரும் இடர்களைக் கடந்து வந்து கொண்டிருப்பது தெரிகிறது. ஒவ்வொருவர் பாதிப்பும் வித்தியாசமானது.

நான் சண்டை நடந்த நாடுகளாகிய வியட்னாம்- கம்போடியா- கியூபா போன்றவற்றுக்குச் சென்றுள்ளேன். அங்கு சண்டையைத் தெரியாத புதிய தலைமுறை உருவாகி எதிர்காலத்தை மட்டும் சிந்திக்கிறது. அதே போல் நமது மக்களும் இடர்களை கடந்து செல்வார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்.

தமிழ்க் கவிதைகள் குறித்து குறிப்பாக இன்றைய ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் குறித்து நீங்கள் கூறுவது மாற்றுப் பார்வைக்குரிய ஒன்றுதான். ஆனால் ஈழத்து இலக்கியத்தில் கவிதைதான் மேல் நிலையில் உள்ளதாகப் பரவலான அபிப்பிராயம் உள்ளதே?

நவீன கவிதைகள் பற்றிய படிப்பு அறிவு குறைந்த என்னால் இதற்கு பெரிய விளக்கம் கூறமுடியாது. தமிழ் நாட்டில் உள்ளவர்களின் கருத்தைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள். கவிதைக்கு அப்பால் உள்ள சில விடயங்களைச் சொல்ல விரும்புகிறேன.

தமிழ்நாட்டு வாழ்வு மண்ணும் சாதிப்பிரிவுகளும் சீமெண்டும் கல்லும் சேர்ந்தது போன்ற இறுக்கமானது. அவர்கள் வாழ்வு. சமூக சிந்தனை, பெண்கள் உரிமைகள் ஏன் சாதி பற்றிய விடயங்களில் நாம் ஒரு கால் நூற்றாண்டுகள் முன்னால் இருக்கிறோம். இதற்கு காரணம் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயரது சிந்தனைகள் இலங்கை மக்களிடம் அதிகம் பரவியதே.

தென்னிலங்கையில் வெள்ளமாக பாய்ந்த ஐரோப்பிய சிந்தனை வரண்ட தமிழ்ப்பகுதிகளிலும் கசிந்தது. மிசனறிமார்களால் இலங்கையில் பெண்களுக்கான கல்வி மிகவும் சிறந்தது. எங்களது குடும்பம் ஒரு சிறுதீவில் வசித்தது. ஆனாலும் எனது பாட்டி உடுவிலில் படித்து ஆசிரியராகியவர். அக்காலத்திலே உடுவில் பெண்கள் பாடசாலை மாணவிகள் தலைக்கு எண்ணெய் வைப்பதில்லை என்று பாட்டி சொன்னது நினைவிருக்கிறது. இது 19 ஆம் நூற்றாண்டு விடயம். இதே போல் இலங்கைப் பெண்களின் உடை அலங்காரம் போர்த்துகீயரில் இருந்து வந்தது.

சாதிப்பாகுபாடு அறுபதாம் ஆண்டில் இருந்து உடைந்து வருகிறது. சாதியை மீறித் திருமணம் முடித்தவர்கள் உயிருடன் அந்தக் கிராமத்திலே வாழக்குடிய நிலை நமது ஊர்களில் இருந்தது. 17 வயதில் நான் விரும்பிய சக மணவியை காதலித்து திருமணம் செய்யாமல் என் மனைவி மருத்துவபீடத்தில் படிக்கும்போது குழந்தையை பெற்று யாழ்ப்பாணத்தில் 30 வருடத்திற்கு முன்பு வாழ்ந்தோம். எவரும் எங்களை வித்தியாசமானவர்களாக யாரும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் இதையெல்லாம் இப்பவும் நினைத்துப் பார்க்க முடியாது. அங்கு மாநிலம் விட்டு ஓடினால் உயிர் தப்ப வழியண்டு. காதல் காமம் தமிழ் பெருமண்ணில் வெங்காயம் போன்று பல தோல்களுடன் கண்ணை எரிக்கும் தன்மை கொண்டது. அங்குள்ள நிலவுடமை கலாச்சாரம் இளமையை ஒருவிதத்தில் வறுத்த பயறாக மாற்றிவிடுகிறது. ஆனால் இலங்கையில் உள்ளி போல் ஒரு தோல்தான் உள்ளது என்பது என்காலத்து அனுபவம். விடுதலைப்புலிகள் காலத்தின் பின் நிலமை எனக்குத் தெரியாது.

இதனால் எமது சிந்தனைகளால் பாரம்பரிய விடயங்களை எளிதில் மீறமுடிந்தது. மேலும் போரால் வேகமாக கலாச்சார விலங்குகள் உடைபட்டது. இப்படியான ஒரு காலம் இந்தியாவின் சுதந்திர போராட்டகாலத்தில் இருந்தது. பெண்கள் போராட சமூகத்தின் முன்னிலைக்கு வந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பின்பு வந்த திராவிட அரசியல் அலையால் மீண்டும் சமூகம் பழைய நிலைக்கு திரும்பிவிட்டது. இதில் முக்கியமாக சாதியமைப்பை தற்போதய அரசியலுக்கு ஆதாரசக்தியாக வளர்த்து வருகிறது. ஒரு விதத்தில் திராவிடம் வர்ணாச்சாரத்தை தத்தெடுத்து பங்கு போடுகிறது. இது சரி பிழை என நான் தீர்ப்பு சொல்லவில்லை.

எனவே அவர்களது பேசும் பொருள் அவர்கள் அனுபவம் வித்தியாசமானது. ஈழத்தவர்களது சிந்தனை மாற்றப்பட வேண்டிய சூழலில் இருந்தது. இதனால் கவிதைப் பொருள்கள் வித்தியாசமாக இரு

நேர்காணலில் விட்டுப்போன ஒரு கேள்வி -நடேசன்

தமிழ்க் கவிதைகள் குறித்து குறிப்பாக இன்றைய ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் குறித்து நீங்கள் கூறுவது மாற்றுப் பார்வைக்குரிய ஒன்றுதான். ஆனால் ஈழத்து இலக்கியத்தில் கவிதைதான் மேல் நிலையில் உள்ளதாகப் பரவலான அபிப்பிராயம் உள்ளதே?

நவீன கவிதைகள் பற்றிய படிப்பு அறிவு குறைந்த என்னால் இதற்கு பெரிய விளக்கம் கூறமுடியாது. தமிழ் நாட்டில் உள்ளவர்களின் கருத்தைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள். கவிதைக்கு அப்பால் உள்ள சில விடயங்களைச் சொல்ல விரும்புகிறேன.

தமிழ்நாட்டு வாழ்வு மண்ணும் சாதிப்பிரிவுகளும் சீமெண்டும் கல்லும் சேர்ந்தது போன்ற இறுக்கமானது. அவர்கள் வாழ்வு. சமூக சிந்தனை, பெண்கள் உரிமைகள் ஏன் சாதி பற்றிய விடயங்களில் நாம் ஒரு கால் நூற்றாண்டுகள் முன்னால் இருக்கிறோம். இதற்கு காரணம் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயரது சிந்தனைகள் இலங்கை மக்களிடம் அதிகம் பரவியதே.

தென்னிலங்கையில் வெள்ளமாக பாய்ந்த ஐரோப்பிய சிந்தனை வரண்ட தமிழ்ப்பகுதிகளிலும் கசிந்தது. மிசனறிமார்களால் இலங்கையில் பெண்களுக்கான கல்வி மிகவும் சிறந்தது. எங்களது குடும்பம் ஒரு சிறுதீவில் வசித்தது. ஆனாலும் எனது பாட்டி உடுவிலில் படித்து ஆசிரியராகியவர். அக்காலத்திலே உடுவில் பெண்கள் பாடசாலை மாணவிகள் தலைக்கு எண்ணெய் வைப்பதில்லை என்று பாட்டி சொன்னது நினைவிருக்கிறது. இது 19 ஆம் நூற்றாண்டு விடயம். இதே போல் இலங்கைப் பெண்களின் உடை அலங்காரம் போர்த்துகீயரில் இருந்து வந்தது.

சாதிப்பாகுபாடு அறுபதாம் ஆண்டில் இருந்து உடைந்து வருகிறது. சாதியை மீறித் திருமணம் முடித்தவர்கள் உயிருடன் அந்தக் கிராமத்திலே வாழக்குடிய நிலை நமது ஊர்களில் இருந்தது. 17 வயதில் நான் விரும்பிய சக மணவியை காதலித்து பதிவுவை மட்டும் செய்துவிட்டு   என் மனைவி மருத்துவபீடத்தில் படிக்கும்போது குழந்தையை பெற்று யாழ்ப்பாணத்தில் 30 வருடத்திற்கு முன்பு வாழ்ந்தோம். எவரும் எங்களை வித்தியாசமானவர்களாக யாரும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் இதையெல்லாம் இப்பவும் நினைத்துப் பார்க்க முடியாது. அங்கு மாநிலம் விட்டு ஓடினால் உயிர் தப்ப வழியண்டு. காதல் காமம் தமிழ் பெருமண்ணில் வெங்காயம் போன்று பல தோல்களுடன் கண்ணை எரிக்கும் தன்மை கொண்டது. அங்குள்ள நிலவுடமை கலாச்சாரம் இளமையை ஒருவிதத்தில் வறுத்த பயறாக மாற்றிவிடுகிறது. ஆனால் இலங்கையில் உள்ளி போல் ஒரு தோல்தான் உள்ளது என்பது என்காலத்து அனுபவம். விடுதலைப்புலிகள் காலத்தின் பின் நிலமை எனக்குத் தெரியாது.

இதனால் எமது சிந்தனைகளால் பாரம்பரிய விடயங்களை எளிதில் மீறமுடிந்தது. மேலும் போரால் வேகமாக கலாச்சார விலங்குகள் உடைபட்டது. இப்படியான ஒரு காலம் இந்தியாவின் சுதந்திர போராட்டகாலத்தில் இருந்தது. பெண்கள் போராட சமூகத்தின் முன்னிலைக்கு வந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பின்பு வந்த திராவிட அரசியல் அலையால் மீண்டும் சமூகம் பழைய நிலைக்கு திரும்பிவிட்டது. இதில் முக்கியமாக சாதியமைப்பை தற்போதய அரசியலுக்கு ஆதாரசக்தியாக வளர்த்து வருகிறது. ஒரு விதத்தில் திராவிடம் வர்ணாச்சாரத்தை தத்தெடுத்து பங்கு போடுகிறது. இது சரி பிழை என நான் தீர்ப்பு சொல்லவில்லை.

எனவே அவர்களது பேசும் பொருள் அவர்கள் அனுபவம் வித்தியாசமானது. ஈழத்தவர்களது சிந்தனை மாற்றப்பட வேண்டிய சூழலில் இருந்தது. இதனால் கவிதைப் பொருள்கள் வித்தியாசமாக இருப்பதாக தமிழ்நாட்டவர்கள் சொல்லலாம். எங்கள் கவிதை எங்களது சமூகத்தை பிரதிபலிக்கிறது. அவர்களது கவிதையின் பிரதிபலிப்பு அவர்களது நிலையைப் சொல்லுகிறது.
மீண்டும் சொல்கிறேன். எனது கவிதை அறிவு பாலபாடத்தை ஒத்தது. இது எனது அனுமானம்தான்.

ப்பதாக தமிழ்நாட்டவர்கள் சொல்லலாம். எங்கள் கவிதை எங்களது சமூகத்தை பிரதிபலிக்கிறது. அவர்களது கவிதையின் பிரதிபலிப்பு அவர்களது நிலையைப் சொல்லுகிறது.
மீண்டும் சொல்கிறேன். எனது கவிதை அறிவு பாலபாடத்தை ஒத்தது. இது எனது அனுமானம்தான்.

நடேசனின் நேர்காணல் –

கேள்விகள் அனோஜன் பாலகிருஸ்ணன்.

அனோஜன்

தாங்கள் பிறந்துவளர்ந்த சூழல், இளமைவாழ்க்கை,கல்விப்பின்புலம், இலக்கியத்தின் மீதான பிரியத்தை அதிகரிக்க எவ்வாறு ஒத்தாசை செய்தது? தங்கள் குடும்பத்திலும் எழுத்தாளர்கள்,கவிஞர்கள் உண்டா?

சிறு வயதில் கண் தெரியாத பாட்டாவிற்கு வீரகேசரி, கல்கி உரக்க வாசிப்பது எனது கடமையில் ஒன்று, அதற்கு வேதனமும் இருந்தது. இதன் பின்பு நானாக கதைப்புத்தகங்கள் வாசிப்பது அதிலும் யாழ்ப்பாண நூல்நிலையத்தில் உள்ள ஏராளமான கதைப் புத்தகங்களை வாசித்தேன். முக்கியமாக பல்கலைக்கழகப் பரீட்சை எடுத்துவிட்டு இறுதி முடிவிற்காக காத்திருந்து பின்பு பல்கலைக்கழகம் செல்ல என கிட்டத்தட்ட ஒரு வருடம் இருந்த காலத்தில் நேரத்தை கடத்த இந்துக்கல்லுரி நூலகம் மற்றும் யாழ்ப்பாணநூலகம் எனக்கு உதவியது. பல்கலைக்கழகம் சென்ற பின்பு நான் தமிழ் வாசித்தது இல்லை, பின்பு இந்தியா சென்றிருந்த காலத்தில் அங்குள்ள லெண்டிங் நூலகங்கள் அதன்பின்பு ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் அலுவலகத்தில் உள்ள பல முக்கியமான பொதுஉடைமை சம்பந்தமான புத்தகங்களை வாசித்தேன். இவையெல்லாம் துண்டு துண்டாக கிடைத்த வாசிப்பு அனுபவங்கள் அப்பொழுதெல்லாம் வாசிக்கும்போது பொழுதுபோக்கு என்ற நோக்கம் மட்டுமே இருந்தது.

இலக்கியம் என்று சொல்வது இந்துக்கல்லூரியில் மிகவும் கசப்பான பாடமாகியது. எட்டாம் வகுப்பில் இந்துக்கல்லூரியில் சேர்ந்ததும் கம்பராமாயண செய்யுள்களை மனனம் செய்ய வேண்டும். லம்பம் என நாங்கள் சொல்லும் பொன்னம்பலம் மாஸ்டரின் ஆய்கினைதான் நினைவு வரும் ‘கருமலை செம்மலை’ என இராமன் இலட்சுமணன் சம்பந்தமான செய்யுளை பாடமாக்குவதைத் தவிர்ப்பதற்காகவே விஞ்ஞானம் படிக்கச் சென்றேன். இதற்குமேல் என் அப்பா தமிழ் வாத்தியார் அவரது நினைப்பும் சேர்ந்து அந்தப் பக்கம் செல்லாமல் வெளித்தள்ளியது இவ்வளவிற்கும் நான் அதிக புள்ளிகள் எடுத்த பாடங்கள் தமிழ் சரித்திரம் போன்ற கலைப்பாடங்கள்தான்.

2. புலம்பெயர் வாழ்கையை தேர்வு செய்யவேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது? அவுஸ்திரேலிய வாழ்வு உங்களுக்கு உவகையாக இருகின்றதா?

புலம்பெயர்வு வாழ்வு நான் தேர்தெடுக்கவில்லை. எமது தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் இயக்கத்தவர்களின் கொடை. அதுவும் கடைசியில் விடுதலைப்புலிகளின் போராட்டம் கடைசித்தமிழனையும் குழல் புட்டாக வெளித்தள்ளியிருக்கும். நல்லவேளை மகிந்த இராஜபக்சவின் புண்ணியம்.

இலங்கையில் 1984ல் இறாகலையில் வேலை செய்தபோது அங்கு நடந்த சிறுசம்பவத்தால் நானும் விடுதலைபுலியாக ஆக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்பதால் இந்தியாவுக்கு தப்பிச்சென்றேன். அது ஒருவழிப்பாதை. மேலும் நான் அரசியல், அகதி வேலைகள் என தொடர்ந்ததால் வேறு வழியில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பின்பாக அக்காலத்தில் இலங்கையின் தெற்கே வடக்கே எங்கும் இருக்க முடியாது என்பதால் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டேன். எனது மனைவியின் சகோதரர் அவுஸ்திரேலியாவில் இருந்ததால் குடிவருவது இலகுவானது.

அவுஸ்திரேலியா வந்தபின்பு சிலவருடங்கள் சென்றது எனது கல்வித்தகமை இங்கு ஏற்றுக்கொள்வதற்கு. அதன்பின்பு இங்கு வாழ்வது இலகுவானது.

அவுஸ்திரேலியா குடியேற்றவாசிகளை வரவேற்று நடத்துகிறது. குடும்பம், வீடு, வாழ்வு என மத்தியதரவாழ்வு இங்கும் அமைந்துவிட்டது. ஒருவிதத்தில் நான் கால்நூற்றாண்டுகள் இங்கு வாழ்ந்து தொழில் செய்து பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகியதால் அவுஸ்திரேலியனாக எண்ணும் நிலையுள்ளது. இந்தநாட்டில் நான் அன்னியனாக எண்ணிய தருணங்கள் மிகக் குறைவு. இதே போல் இலங்கையில் கண்டி அனுராதபுரம் என எட்டு வருடங்கள் வாழ்ந்தபோது அங்கும் நான் ஒன்றி வாழ்ந்தேன் அதேபோல் இந்தியாவில் மூன்றுவருடங்கள் இருந்தபோது அங்கும் அந்த நாட்டவனாக வாழ்ந்தேன். நமது வாழ்வு, குடும்பம், நமது மனம், மற்றும் நண்பர்கள் அமைவதைப் பொறுத்தது. நான் எப்பொழுதும் சமூகத்தில் ஒட்டாது வாழ்ந்தது கிடையாது.

அவுஸ்ரேலியா குடியேற்றவாசிகளை வரவேற்கும் நாடு என்கிறீர்கள். ஆனால் அண்மையில் கூட ‘ரொஹிங்கியா’ முஸ்லீம்கள் நடுக்கடலில் தவித்த கண்டுகெள்ளவில்லையே ? இப்போதிருக்கும் டோனிஅபட் புகளிடக் கோரிக்கள்யாளர்களுக்கு எதிரானவர் என்றும் அவருடைய காலத்தில் பல புகலிடக்கோரிக்கையாளர்கள் மரணமடந்தும் உள்ளானர் என்ற குற்றச்சாட்டுக் குறித்து ?

அவுஸ்திரேலியா வருடத்திற்கு இரண்டு இலட்சம் வெளிநாட்டவர்களை உள்ளேற்கிறார்கள். இதில் 12 ஆயிரம் அகதிகளாகவும் வருகிறார்கள் . தற்போது உலகத்தில் 500 இலட்சம் பேர் அகதிகளாக வர இருக்கிறார்கள். எந்த ஒரு நாட்டாலும் சமாளிக்க முடியாத அளவில் இந்த பிரச்சனை உள்ளது. மேலும் அகதிகள் பிரச்சனையில் மேலதிகமாக, ஆட்கடத்தல் பெரிய உலக வியாபாரமாக உள்ளது. சிறிய படகுகளில் அதிகமானவர்கள ஏறும்போது கடலில் மூழ்குவது எப்பொழுதும் நடக்கும். ஒவ்வொரு நாடுகளிலும் அரசியல், இன, மதப் பிரச்சனை மக்களை வெளித்தள்ளுகிறது. குறைந்த பட்டசம் மேற்கு நாடுகள் ஏற்றுக்கொள்வதும், பின்பு ஏற்றுக்கொண்டவர்களை சமமாக நடத்துவதும் பாராட்டக்கூடியவிடயம். ஆசியாவில் இருந்து மக்கள் அவுஸ்திரேலியாவை நோக்கி வருவது வெளிநாட்வர்களுக்கு அவுஸ்திரேலியா சொர்க்மாக தெரிகிறது. ஆனால் இந்த அகதிகள் விடயம் தற்பொழுது சர்வதேசப் பிரச்சனையாகும்.

3 “திடீரென நிகழ்ந்த விபத்தினால் பேச முடியாமற்போன சிறுவனைப் போன்று நானும் எனது வாழ்விடத்தில் நடந்த சம்பவங்களை வெற்றுத் தாள்களில் கிறுக்கி வைத்திருந்தேன். பதினைந்து வருடங்களுக்கு முன்” என்று வண்ணாத்திக்குளம் நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்கள் எழுத்துலக பிரவேசம் நாவல் வடிவில் ஆரம்பித்தது. நீங்கள் குறிப்பிட்டதுபோல் உங்கள் கிறுக்கல்களை நாவலின் வடிவத்தில் இருந்து ஆரம்பித்ததுக்கான காரணம் என்ன? நாவலில் படைப்பாக்க வடிவத்தில் ஆரம்பித்தே சிறுகதைகளுக்கு வந்திருந்தீர்கள், இவை தற்செயலாக நடந்த ஒன்றா?

80-83 காலத்தில் நான் மதவாச்சியில் மிருகவைத்தியராக வேலை செய்த நான்கு வருடகாலத்தில் சிங்கள மக்களுடன் பழகவும் மற்றும் பல அரசியல் பிரமுகர்களை சந்திக்க முடிந்தது. அதே வேளை யாழ்ப்பாணம் வார விடுமுறையில் செல்லும்போது பல வன்முறை சம்பவங்களை மற்றும் அரசியல் போக்கை தமிழர்கள் மத்தியில் அவதானிக்க முடிந்தது. நாட்டின் அரசியலில் பொருளாதாரம் மக்கள் நலன்கள் புறக்கணிக்கப்பபட்டு இனவாதம் மட்டுமே ஒரே தீர்வாக இரண்டு தரப்பினரும் இருந்தபோது இதைப் புரிந்துகொள்பவன் தனிமனிதனாக இருந்தால் ஊமையாவதுதானே இயல்பு?. அவுஸ்திரேலியா வந்த பின்பு உதயம் பத்திரிகையைப் பொறுப்பேற்று நடத்தியதால் பல எழுத்தாளரின் வாசனை என்னையடைந்தது. எனக்கும் தமிழ் எழுதக்கூடிய திறமை சிறிதளவு வந்தது. மேலும் எஸ்.பொவின் தூண்டுதலால் வண்ணாத்திக்குளம் எழுதி முடித்தேன். வாழ்க்கையில் நடந்த ஓரிரு விடயங்களுடன் கற்பனை கலந்தபோது அது நாவலாகியது.

4. உங்கள் சிறுகதைகளைவிட நாவல்களே அதிகம் பேசப்படுகின்றன. உங்களுடைய மூன்று நாவல்களும் ஏதோவொரு அதிர்வை,சலனத்தை வாசகனுக்கு ஏற்படுத்தும். ஆனால் உங்களுடைய நாவல்களுடன் ஒப்பிடும்போது சிறுகதைகள் அவ்வாறன பரவசத்தை தருவதில்லை, நாவலாசிரியனே இலக்கியத்தில் உங்களுடைய இடம் என்று சொல்லப்படுகின்றது. இதை நீங்கள் எவ்வாறு பாக்கின்றீர்கள்?

எனது சிறுகதைகள் 2015ல் புத்தகமாகின நாவல் வெளிவந்து பத்து வருடங்கள் மேலாகியதுடன் ஆங்கிலத்தில் சிங்களத்தில் மொழி பெயர்க்ப்பட்டதாலும் பலர் அவற்றைப்பற்றி எழுதியதாலும் வெளியே தெரியவந்தது. தமிழில் எனது முக்கிய ஆக்கம் மிருகங்கள் பற்றி எழுதியதே. தமிழ் இலக்கியத்திற்கு புதுவரவு. ஆனால் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் இதை இன்னமும் கண்டுகொள்வதில்லை காரணம் புரிந்துகொள்ள முடியாத தன்மையே.

இலக்கியத்தை தமிழில் அறிவுபூர்வமாக விமர்சனம் செய்யும் நடவடிக்கை இன்னமும் துவங்கவில்லை. நீங்கள் கேள்வியில் கூறியது போல் உணர்வுகளில் அதிர்வு ஏற்படுத்துவது என்பதே எமது வாசக பரப்பில் முக்கியமாகப்படுகிறது. பெரும்பாலான விமர்சகர்கள் உணர்வுகளின் அடிப்படையில் இலக்கியதை விமர்சிக்கிறார்கள். அதாவது மின்சாரத்தை மின்குமிழின் ஒளியை வைத்து பார்ப்பதுபோல். ஒளிக்கப்பால் மின்சாரம் பல பாவனைகளைக் கொண்டது. முக்கியமாக இலக்கியம் உணர்வை மட்டுமல்ல அறிவையும் கொடுக்கவேண்டும். அரிஸ்ரோட்டல் உண்மை(ethos) உணர்வு(Pathos) தர்க்கம்(Legos) இருக்க வேண்டுமென்கிறார். இலக்கியத்தை விபரித்து விளக்கமாக பிரித்து இலக்கியத்தின் உன்னதங்களுக்கு அமைய எந்த விமர்சகரும் விபரிப்பது கிடையாது. நம்மவர்கள் மத்தியில ஒருவரது இரசனை என்பது சிறிய ஓட்டைபோன்றது அந்த ஓட்டைக்குள் புகமுடிந்தால் நல்ல இலக்கியம். இதைத்தான் இலங்கையில் உள்ள சிவத்தம்பி கைலாசபதி போன்ற பேராசிரியர்கள் செய்து வழி நடத்தியிருக்கிறார்கள். தனது இரசனைக்கு உள்வாங்க முடியுமானால் அது இலக்கியம் அல்லது இல்லை என்பதே தமிழில் நடைமுறை. இதைத்தான் தமிழகத்து விமர்சகர்களும் ஈழத்து விமர்சகர்களும் செய்து வருகிறார்கள். இல்லையென்றால் நண்பராக முகம் தெரிந்தவராக அல்லது அவர்களது முகாமில் இருக்கவேண்டும். இதைவிட மிகவும் கொடுமையானது ஒரு முக்கியமானவர் ஒருவரை பற்றியோ அல்லது ஒருவரின் எழுத்தை பற்றியோ நன்றாக சொல்லிவிட்டால் அது பின்வருபவர்களால் வாசிக்கப்படாது. அப்படியே காபன் கொப்பியாக எடுத்து சொல்லப்படும். அது தலை முறையாக தொடரும். இதற்கு அப்பால் தமிழ்வாசகர்களில் மிக குறைந்தவர்களே அரசியல் சினிமாவுக்கு அப்பால் சிந்திப்பவர்கள். அதற்கு அப்பால் எழுதினால் தமிழில் புரிந்து கொள்ளவோ வாசிப்பதற்கோ ஆட்களில்லை. இது இவர்களின் தவறில்லை. பாடசாலை பாடநூல் பல்கலைக்கழகம் என முற்றுப்புள்ளியில்லாத சிக்கல்கள்.

தமிழில் சிறுகதைகளில் இரண்டு முக்கிய விடயங்கள் மட்டும் பார்க்கப்படுகிறது. முதலாவது மொழி, இரண்டாவது அவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவது. இதற்கு காரணம் தமிழில் பெரும்பாலான சிறுகதை எழுத்தாளர்கள் மனமுடைந்த கவிஞர்கள். இளம் வயதில் கருக்கப்பட்ட ஏக்கங்களையும் செய்யமுடியாத விடயங்களையும் வைத்து தமிழ்சினிமா படம் தயாரிப்பதுபோல் தோல்வியடைந்த கவிஞர்களின் அகங்கள் கவிதையாகின்றன. இது இலக்கியத்தின் ஒரு வெளிப்பாடு ஆனால் நல்ல சிறுகதையில் இதற்கப்பால் படிமம், முரண்ணகை, புதியவிடயத்தை சொல்லுதல், பொருள்மயக்கம், சர்வதேசத்தன்மை எனப் பல இருக்கின்றன. இவைகளை அடிப்படையாக யாராவது இலக்கிய விமர்சனம் செய்தால் எனக்கு சொல்லுங்கள். அப்பொழுது எமது இலக்கியவாதிகளும் புரிந்து கொள்ளமுடியும்.

எனது இடம் எங்கிருக்கிறது என்பதை நான் சொல்ல முடியாது. ஆனால் எனது சிறுகதைகளில் பல அரசியல் நகைச்சுவைத் தன்மை கொண்டது அதற்கப்பால் மனவியல், காமம் என பல விடயங்களில எழுத முயற்சித்திருக்கிறேன். ஆங்கிலத்தில் மினிமலிசம் என ஒன்று இருக்கிறது இதை ஏர்ணெஸ்ட் ஹெமிங்வே ரேய்மண் காவர் என்போர் பாவித்தார்கள். அதாவது அதிகமாக விவரித்து அலுப்புக் கொடுக்காமல் வசனங்கள் மிகக்குறைந்த அளவில் பாவித்து பொருள் மயக்கத்தை ஏற்படுத்துவது, அதாவது வாசிப்பவர் முடிவை ஊகிக்க வைப்பது. உதாரணமாக குருடனைப் பாத்திரமாக்கிவிட்டு அவனுக்கு இருட்டு எப்படி இருக்கும் என விபரிப்பது தேவையற்றது. இதைத்தான் நீரில் பனிகட்டி போல் என்பார்கள்.

5. இலக்கிய விமரிசனக் கருத்துக்கள், கொள்கைகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்வீர்களா? அவற்றை கருத்தில் கொள்வதில் பயனுண்டு என எண்ணுகிறீர்களா?

மேற்குலகத்தில் அரிஸ்ரோட்டல் எப்படி கவிதை இருக்கவேண்டுமென்று சொல்லியது பிரபலமானது. அதைத் தொடர்ந்து இலக்கியம் பற்றிய கருத்து வளர்ந்தது. அதேபோல் நாடகம் அதேகாலத்தில் அங்கிருந்து உருவாகியது. 18ம் நூற்றாண்டுகளில் இருந்து நாவல் பின்பு சிறுகதை என இலக்கியம் பல பரிமாணங்களில் வளர்ந்த போது இவைகள் பற்றிய கருத்துக்கள் வளர்ந்தன. இவைகள் திட்டமான உருவம் அல்லது கோட்பாட்டிற்கு அமைய இப்படித்தான் இருக்காவிடிலும், இதை மீறும்போது அவை விமர்சனப்படுத்தினார்கள். மேலும் ஐரோப்பாவில் பொருளாதாரத்திற்கேற்ப அவை வளர்ந்தன. வீரதீர இலக்கியம்(Romanticism) நில அமைப்புடன் முடிந்தது. பின் கைத்தொழிற் புரட்சியால் ஏற்பட்ட வியாபார முதலாளித்துவ காலத்தில் (Mercantile Capitalism) யதார்த்த இலக்கியம்(Realism) உருவாகியது. பின்பு 20 நூற்றண்டில் ஆரம்பத்தில் நவீன இலக்கியமாகி(Modernism) தற்போதய எல்லைகள் கடந்த முதலாளித்துவத்தில் பின்நவினத்துவமாகிறது(Post-Modernism).

நமது சூழ்நிலையில் தமிழ் நவீன இலக்கியத்தில் தெளிவான மாற்றங்கள் இல்லை. தமிழ் இலக்கியத்தில் கல்கியின் நாவல்கள் வீரதீரகாலத்தை சேர்ந்த ஐரோப்பிய படைப்புகளுக்கு ஒத்தவை. அவை யாதார்த்தமில்லை என்றுதான் தமிழ்நாட்டு இலக்கியவிமர்சகர் க.ந.சுப்பிரமணியம் வாதிட்டார்.

ஆனால் தமிழ் கல்வியாளர்கள் நமக்கென கோட்பாட்டையோ அல்லது தீர்க்கமான விமர்சன பாரம்பரியத்தையோ நமக்கு வைக்கவில்லை. சொல்லப்போனால், தமிழில் மட்டுமே வாசிப்பவன் இலக்கிய விதிமுறைகளை வாசித்தறிய முடியாத நிலை. தற்போது ஜெயமோகனது இணையம் மற்றும் அவரது தமிழிலக்கிய வரலாறு என்ற நூல் இலக்கிய விதிமுறைகளை தொட்டுக் கொள்ள உதவுகிறது. இந்த நிலையில் தமிழில் பாரம்பரியமான உள்ள கதை சொல்லி என்னும் முறையில் அதாவது அனுபவித்து இரசித்தல் (Enjoying with Empathy) என்பதில் எமது இலக்கியங்களைத் தொடர்கிறார்கள்.

சிறந்த கதைசொல்லியானவர்கள் மொழி, மற்றவர்களுக்கு தெரியாதவிடயம். உணர்வுகளை கொந்தளிக்கவைத்தல் இவற்றை மட்டும் கொண்டு கதை சொல்கிறார்கள். அவர்கள் நண்பர்கள் அல்லது அவர்களது கூட்டத்தை சேரந்தவர்கள். அவர்களை பாராட்ட அறிமுகப்படுத்துவார்கள். இதேவேளை அவர்களது முன்னாள் நண்பராக இருந்தவர்கள் அவர்களது படைப்பை இலக்கியமல்ல என்பார்கள்.

இதனால் தமிழில் நல்ல நாவல்கள் சிறுகதைகள் இல்லை என்பது பொருளல்ல. பல இருக்கின்றன அவைகள் பிரித்து உன்னதப்படுத்தப்படவில்லை. அக்காலத்து மளிகை வியாபாரத்தில் எல்லாவற்றையும் சாக்கில் இருந்தது எடுத்து பழய பத்திரிகையில் வைத்துக்கட்டி சரையாகக் கொடுக்கும் விடயம் நடக்கிறது. இன்னும் வகைவகையாக பிரித்துவைக்கும் சுப்பர் மார்க்கட் முறை இன்னமும் நம்மிடம் வரவில்லை. இந்த நிலையில் இதற்குமேல் எப்படி பதில் சொல்வது எனத் தெரியவில்லை.

ஆனால் நம் காலத்திலேதானே ஜெமோ, எஸ்.ரா போன்றவர்கள் திறனாய்வளர்களின் பட்டியல் என்று தமிழிலக்கியத்தை பட்டியலிட்டு இருக்கிறார்களே. இவை அந்த ‘சுப்பர் மார்க்கட்’ முறையினுள் வராதா?

இது அவர்களைக் கேட்கவேண்டிய கேள்வி ஆனாலும் எனது கேள்வி ஆங்கில மொழிக் குடும்பமற்ற மொழிகளான சீனா ஜப்பான் மற்றும் அரேபிய மொழிகளில் எழுதப்பட்ட நூல்கள் புகழ் பெறுகின்றன. ஏன் இந்திய இதிகாசங்களான மகாபாரதம் இராமாயணம் பிரசித்தியாகின. மிருகங்களை வைத்து உலகத்தில் கதை எழுதியது இந்தியர்களே. அதுவே ஜாதகக் கதைகளாகின . இவற்றின் ஆதாரத்தில் இருந்து ஈசாப் கதைகள் மிக்கிமவுஸ் என்பன தோன்றின. இப்படியான முன்னுதாரணங்கள் நவீனகாலத்தில் இல்லை என்பது எனது கருத்து.

.

6. உனையே மையல் கொண்டு நாவல் பாலியலின்பத்தின் அகச்சிக்கல்களைப் பேசும் சிறந்த நாவலாகக் கருதப்படுகின்றது. அவற்றை எழுதுவதற்கான கருவினை எங்கிருந்து பெற்றுக்கொண்டீர்கள்?

காம உணர்வுகள் உயர்ந்த உயிரினங்களுக்கு ஒரு உற்ற தோழன், வலி நிவாரணி. காமமற்று வாழ்வது இறப்பிற்கு சமமானது. குறைந்த பட்சம் சுய இன்பமாவது செய்யவேண்டும். தனித்து இருக்கும்போது ஆண் என்ன செய்கிறான்.? இவற்றை மிருகங்களில் அவதானிக்க முடியும். காமத்திற்கு மூலம் மூளையாகிறது. இந்த நிலையில் மனிதமனதில் மனப்பிறள்வு (Schizophrenia) , மனத்தாக்கம்,(Depression) மனச்சேர்வு(Melancholy) ஏற்பட்டால் அது காம உணர்வில் பாதிப்பை ஏற்படுத்தும். எந்த நாட்டிலும் வன்முறைகள் எற்படுத்தும் தாக்கங்கள் உடலளவில் பேசப்பட்டாலும், உளப்பாதிப்பைப் பற்றி பேசுவது குறைவு. குறிப்பாக பெண்களின் காமம் எமது சமூகத்தில் பேசாப்பொருள். ஆனால், பெருமளவில் பிறள்வு நிலையில் இருக்கிறது. அதை வெளிக்கொணர விரும்பியதால் உனையே மயல்கொண்டு எழுதினேன். அரசியல், வரலாறு போல் மனதத்துவம் எனக்கு விரும்பமான பகுதியாகும்.

7. உங்கள் எழுத்து நடை நேரடியாகவும் எளிமையாகவும் இருக்கின்றது. அதேநேரம் சிக்கலான அகப் பிரச்சினைகளயும் பேசுகின்றது. அப்படி எழுதவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது அது உங்கள் இயல்பா?

நான் விஞ்ஞானம் படித்ததுடன் வாழ்க்கையில் ஏராளமான காலங்களை மற்ற மொழியினரோடு கழித்தவன். இந்த நிலையில் மொழியில் சரளமான தன்மையில்லை. யோசித்து யோசித்து வார்த்தைகளை எழுதுபவன். மற்றவர்களிலும் வித்தியாசமாக எழுத எனது மருத்துவ படிப்பு எனக்கு கைகொடுக்கிறது.

பல சூழல் காரணிகள் மனிதர்களது புறவிடயங்கள் கட்டுப்படுத்தப்படுபவை. முக்கியமாக நமது சமூகம் முகம் பார்த்து பேசுவதும், சமூகத்துக்கு பணிந்தும் நடப்பவர்ககள். இவர்களில் புற நடவடிக்கைகளில் பெரிதாக வித்தியாசமில்லை. ஆனால் மனிதர்கள் அகத்தில் கைரேகை மற்றும் பாரம்பரிய அலகு போன்று ஒருவருக்கொருவர் வேற்றுமையுடன் இருப்பது மட்டுமல்ல கணத்துக்கு கணம் மாறுவார்கள். அதாவது வீட்டில் ஒருவர் வெளியில் ஒருவர், ஏன் இரவில் ஒருவர் ஆனால் பகலில் வித்தியாசம். எனவே அகம் பல வர்ணங்களாலான கம்பளம்போல் மிகவும் அழகானது. மிகவும் பெரிய எழுத்தாளர்களின் கைகளில் அது விளையாட்டு பொருளாகிறது.

8. உதயம் பத்திரிகையை நடத்திய அனுபவங்களில் இருந்து சிற்றிதழ்களின் போக்கு புலம்பெயர் தேசத்தில் எவ்வாறான தாக்கத்தைச் செலுத்துவதாக உணருகின்றீர்கள்? வாசிப்பவர்களும், எழுதுபவர்களும் ஆரோக்கியமான வகையில் அதிகரிகின்றார்களா? அடுத்த தலைமுறையில் இவற்றின்போக்கு எப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கருதுகின்றீர்கள்?

உதயம் நடத்தியபோது எமக்கு தெளிவான நோக்கம் இருந்தது. அதாவது விடுதலைப் புலிசார்ந்த ஊடகங்கள், புலம் பெயர்ந்தவர்களை பிரச்சாரத்தால் மூச்சைத் திணற வைத்த காலத்தில் மாற்று ஊடகமாக உதயத்தை ஆரம்பித்தோம். விடுதலைப்புலி ஆதரவாளர்கள் எமக்கு கொடுத்த பல சோதனைகள், போராட்டங்கள் மீது நடந்து நடத்தினோம். 13 வருடமுடிவில் அது தேவையற்றதாகியது. இணைய ஊடகங்கள் பெருமளவில் வந்து விட்டன. மேலும் விடுதலைப்புலிகள் சார்பான ஊடகங்கள் உதிர்ந்து விட்டன. கைக்காசை போட்டு தேவையற்று எங்களது ஈகோவிற்காக நடத்துவதிலும் அந்த பணத்தை பிரயோசனமாக வேறு நல்லவகையில் செலவு செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. சிற்றிதழ்கள் நடத்திவது மரத்தை எரித்து கரியாக்குவதுபோல் பணத்தை கரியாக்கும் ஒரு தொழில். இதை நமது தமிழர்கள் பலர் செய்திருக்கிறார்கள். நான் உதயத்தை நடத்தினதால் நேரடியாக நட்டம் மட்டுமல்ல ஏராளமான எதிர்ப்புகளை சமாளிக்க எனது முழு நேரத்தையும் செலவிட்டிருக்கிறேன். இதனால் ஏற்பட்ட நேரடியானதிலும் விட நூறுமடங்கு மறைமுக நட்டம் ஏற்பட்டுள்ளது. இதைவிட சமூகத்தில் புறக்கணிப்பு. நானும் மனைவியும் சொந்தமாக தொழில் செய்தபோது பகிஸ்கரிப்பு என்பது தொழில்முறையில் பாதிப்பு என இருந்தது. மொத்தத்தில உதயம் மிகப் பெரிய பாரமாக இருந்தது. இதற்கு அப்பால் சமூகத்தில் உதயத்தால் முன்னேற்றமான பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. ஒரே ஒரு நன்மை பத்திரிகையில் பாதிக்குமேல் ஆங்கிலத்தில் இருந்ததால் மற்றய சமூகத்தினர் எம்மை பத்திரிகையூடாக பார்த்தார்கள். உதயமில்லாவிடில், ஈழமுரசு என்ற புலிகளின் பிரச்சார ஏடு தமிழ் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்தால் எவ்வளவு கொடுமையாக இருந்திருக்கும்?

அடுத்த தலைமுறை என்ன மொழியில் இலக்கியம் படிப்பார்கள் என்பது திட்டமாக சொல்ல முடியாதுவிடினும் நிச்சயமாக தமிழாக இராது. ஐரோப்பிய மொழிகள் மிகப்பெரிய கடல் போன்றது.. அவற்றோடு ஓப்பிடும்போது தமிழில் நவீன இலக்கியம் விருத்தியடையவில்லை. அதற்கு காரணம் எமது சமூகத்தின் கல்விமுறை, தாழ்வுச்சிக்கல் என்பனவாகும். முக்கியமாக வயதானவர்கள் கடந்தகாலங்களில் நடந்த விடயத்தை நினைவு கூர்வதுபோல் பழம்பெருமை பேசுவதில் காலம் கடத்துவது தலைமுறையாக பரவும் நோயாக உள்ளது. வரலாறு ஒரு சுமை அதை தங்கிவருபவன் எதிர்காலத்தில் அதிக தூரம் போகமுடியாது.

புலம்பெயர்ந்த எமது தலைமுறையில் தாய்மொழி தமிழானதால் நாங்கள் தமிழில் வாசிக்கிறோம் சிந்திக்கிறோம் எழுதுகிறோம் ஆனால் எனது மகன் ஆங்கிலத்திலே சிந்திக்கிறான். அவனை அவனது வழியில் விடுவது நல்லது. சிங்களத் திணிப்பு, இந்தி திணிப்பிலும் தமிழ்த் திணிப்பு பாரதூரமான மன உளைச்சல்களை இளமனங்களில் ஏற்படுத்தும்.

அவுஸ்ரேலியாவில் வாழும் உங்கள் மகன் ஆங்கிலத்தில் சிந்திப்பதில், எழுதுவதில் ஞாயமிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ, இலங்கையிலோ தமிழ் தெரியாமல் உருவாகிவரும் தலைமுறையினரை எப்படிப் பார்க்கிறீர்கள்? அது அவசியமான மாற்றம் தானா?

சமூகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தமிழர்கள் மத்தியில் உளள தாழ்வுசிக்களைப்போக்கி குறைந்த பட்சம் கேரளத்தவர்கள் நிலைக்கு வரவேணடும். பழய புராணத்தில் இருந்து விடுபட்டு முன்நோக்கி செல்லவேண்டும். வரலாறு எமக்கு சுமையாக உளளது. இதன்பின்பு விஞ்ஞான, தொழிழ்நுட்ப நூல்களை தமிழில் உருவாக்கி தமிழ்மூலம் வேலைவாய்பு பெறமுடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவேண்டும். ஆனால் இதற்கான அறிகுறி தமிழ்நாட்டிலோ, இலங்கைத் தமிழ்பரப்பிலோ தெரியவில்லை.முக்கியமாக ஏராளமான வருடங்களை வெற்றுக்கோசங்களில் வீணடித்துவிட்டார்கள்.

9. புலம்பெயர் எழுத்தாளர்கள் பெரும்பாலும் தாயக மண்ணில் தாம் வாழ்ந்த காலப்பகுதியில் இருந்த நினைவுகளையும் ஏக்கங்களையும், போர்கால சம்பவங்களையும் மட்டுமே எழுதுகின்றார்கள், அந்நிய மண்ணில் எதிர்கொள்ளும் உளவியல், பாலியல், சமூக யதார்த்தப் பிரச்சனைகளை எழுதுவதில் முனைப்புக்காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக வருகின்றன, இக்குற்றச்சாட்டுக்களை தகர்த்தெறியும் வகையில் உனையே மையல் கொண்டு, அசோகனின் வைத்தியசாலை போன்ற நாவல்களையும் பல்வேறு சிறுகதைகளையும் எழுதியுள்ளீர்கள். இவற்றுக்கான வரவேற்பு வாசகர்களிடையே எவ்வாறு இருந்தன?

புலம் பெயர்ந்தவர்கள் தங்களது சிந்தனையில் சிறு வயதில் பிறந்து வாழ்ந்த நாட்டை வைத்தும் தங்களது அனுபவத்தை வைத்தும் எழுதுகிறார்கள். முக்கியமாக இயக்கத்தில் இருந்தவர்கள் தங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். அது பிழையில்லை. ஆனால் தாய்நாட்டு போர் அல்லது தமிழக சினிமாவுக்கு அப்பால் மற்ற விடயங்கள் எழுதினால் புரிந்துகொள்ள முடியாத வாசகர்களைக் கொண்டது நமதுசமூகம் என்பது நினைக்கும்போது துன்பமாக இருக்கிறது.

நான் கடந்த கால் நூற்றாண்டுகளாக அவுஸ்திரேலியர்களுடன் வேலை செய்கிறேன் பல அவுஸ்திரேலியர்கள் மத்தியில் தொழில்புரிவதால் அவர்களை புரிவது மட்டுமல்ல அவர்களது கலாச்சாரத்தை உள்வாங்க வேண்டும். இதனால் என்னால் அவர்களை பற்றி எழுதமுடியும். எனது வண்ணாத்திகுளத்தை மொழிபெயர்த்த மடுள்கிரிய விஜயரத்தினா என்னிடம் எப்படி சிங்களவர்களை அச்சொட்டாக எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்டபோது, எனக்கு பெருமையாக இருந்தது.

பல்கலைக்கழகத்திலும் மதவாச்சி, இறாகல என மொத்தமாக எட்டு வருடங்கள் அவர்களிடையே வாழ்ந்திருக்கும்போது நான் அவர்களாக வாழ்ந்திருக்கிறேன். இதேபோல் இந்தியாவில் பண்ணையில் வேலை செய்தபோது மூன்று வருடம் அப்படியே வாழ்திருக்கிறேன். இதற்கு ஒரு காரணம் நான் பத்துவயதின் பின்பு ஒரு இடத்தில் இருக்கவில்லை; தொடர்ந்து பல இடங்களில் வாழும்போது இந்த தன்மை ஏற்பட்டது என நினைக்கிறேன்.

10. புலம்பெயர்ந்தவர்களின் சந்ததிகள் பல்வேறு இனத்தவருடன் கலந்துவிட்டார்கள், இவர்களிடம் இருந்து ஆங்கிலத்திலோ,அல்லது வேறு மொழிகளிலோ இலக்கியங்கள் உருவாக வாய்ப்புள்ளதா? அவ்வாறு இலக்கியங்கள் படைக்கப்பட்டால் அவை பல்வேறு கலாச்சார இடைவெளிகளுடன் பல்வேறு புதிய அனுபவங்களைத் தரக்கூடிய இலக்கியங்களாக பிறக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா?

இரண்டாவது தலைமுறையினர் எப்படி வாழ்வார்கள் என அவர்களது பெற்றோராலே எதிர்வு சொல்ல முடியாத காலத்தில் வாழ்கிறோம். எனது மருமகன் நாடக நடிகனாக அவுஸ்திரேலியா ஐரோப்பா என சென்று வருகிறான். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த சிங்கள மக்கள் மத்தியிலும் இளம் தலைமுறை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். தமிழர்கள் புலம்பெயர்ந்ததும் தங்கள் வாழ்க்கை போராட்டத்தில் தங்களைப் பறிகொடுப்பதால்; கலை இலக்கியம் இரண்டாம் பட்சம்தான்.

11. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை பிரபல இந்திய பதிப்பகங்கள் பணத்தைப்பெற்றுக்கொண்டு வெளியிடுவதாகவும், எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதையைத் தருவதில்லையென்றும் குற்றம் சாட்டப்படுகின்றது. இதனை எவ்வாறன கண்ணோட்டத்தில் பாக்கின்றீர்கள்?

நான் இந்தியாவில் ஆறு புத்தகங்களை பதிப்பித்தேன். அவைகளை பணம் கொடுத்தே பதிப்பித்தேன். நான் பிரபலமான எழுத்தாளன் இல்லாதபடியால் எனது புத்தகத்தை வலிய வந்து பதிப்பிக்கமாட்டார்கள் என்பது உண்மை. இதில் நான்கு எஸ்.போவிடம் பதிப்பித்தபோது அவர் எனது நண்பனின் தந்தை அவரிடம் பதிப்பித்ததை நான் பண ரீதியாக எண்ணவில்லை. மற்றவர்கள் ஒரு தொகை புத்தகத்தை எனக்கு தந்தார்கள். எதுவிதமான பிரச்சனையும் இல்லை. குறை சொல்லமாட்டேன். ஆனால் இலங்கையில் எனது இரண்டு நாவல்கள் ஆங்கிலமாக விஜித யாப்பா பிரசுரித்ததால் ஒவ்வொரு புத்தகத்திலும் எனக்கு பணம் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும். இன்னமும் கணக்கு வைத்திருப்பார்கள் நான் இலங்கைக்கு செல்லும்போது அந்தப் பணத்தில் செலவு செய்வது சந்தோசமனது. இதைவிட முக்கியமான உலகப் பல்கலைக்கழக நூலகங்களுக்கு சென்றுவிட்டது. எனது ஆங்கில பதிப்பான வண்ணாத்திக்குளம் அமரிக்க யேல் பல்கலைக்கழகத்தில் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பதிப்பித்த புத்தங்களில் சென்னையில் கூட ஒழுங்காக வினியோகிக்கவில்லை என்பது கசப்பான உண்மை. இந்த மாதிரியான பதிப்பித்தலை ஒழுங்கான தொழிலாக செய்யும் தன்மை இந்திய, தமிழ் பதிப்பகங்களுக்கு மட்டுமல்ல இலங்கையிலும் இல்லை என்பதுதான் உண்மை. எழுத்தாளர்களுக்கு அனுப்பிய ஆக்கங்களுக்கு ஈ மெயில் பதில்தராத பத்திரிகை ஆசிரியர்களை கொண்ட பத்திரிகை உலகம். எழுத்துக்கு மரியாதை கொடுக்காத குறுகிய மனம் கொண்ட பத்திரிகை ஆசிரியர்கள். பத்திரிகைகள் நிறுவனங்கள் கொண்ட சமூகத்தில் வாழும் நாம் எப்படி பதிப்பகத்தவரை மட்டும் குற்றம் சாட்டலாம்?

ஸ்.பொ கடைசிக்காலம் வரையிலும் தீவிர புலியாதரவாளர் நீங்கள் அவர்களைக் கடுமையாகச் சாடிக் கொண்டிருந்தவர் எப்படி உங்களால் மித்ரா பதிபகத்தினூடே நூல்களைப் பதிப்பிக்க முடிந்தது?

தமிழ்களில் மிகவும் சொற்பமானவர்களே அரசியலை, இலக்கியத்தை, சொந்த உறவுகளை வேறாக பிரித்து வைக்கக்கூடியர்கள். நாங்கள் இருவரும் அரசியலில் இருவரது நிலைகளையும் மதிக்கும்வேளையில் எனது அரசியலை அவரில் திணிக்கவோ அவர் என்னில் திணிக்கவோ முனைவதில்லை. முரணான விடயங்களில் புன்சிரிபோடு விலகுவோம்.

“தமிழ்க் குறுந்தேசியவாதத்தையும் அதன் குறைகளையும் எதிர்க்கின்றேனே தவிர, புலிகளை எதிர்ப்பதோ ஆதரிப்பதிலோ இல்லை என் கவனம்” என்று நீங்கள் பலமுறை குறிப்பிட்டிருந்தும், பொதுவாக உங்களுடைய எழுத்துகள் புலி எதிர்ப்பு எழுத்துகள் என்றும், நீங்கள் புலி எதிர்ப்பாளர் என்றும் உங்கள் மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இதை நீங்கள் எவ்வாறு பார்கின்றீர்கள்?

எளிமையாக சிந்திப்பவர்கள் ஒற்றைப்படையாக பார்ப்பார்கள். அதற்கு அதிக அறிவு அல்லது சிந்தனை முதிர்வு தேவையில்லை உதாரணமாக அடித்த தபால் முத்திரையில் எந்த நாடு எனத் தெரிந்துவிடும் என்பதுபோல். இவர்களை பற்றி இதற்கு மேல் சொல்ல வேண்டியதில்லை. மேலும் கால்நூற்றாண்டுகளாக புலி எதிர்ப்பாளர் என்பது எனக்குப் பல்கலைகழகத்தில் பெற்ற பட்டங்களை விட பெருமை சேர்க்கிறது. எனது மிருக வைத்திய அறிவு பல குருக்களிடமும் இருந்து பெற்றது. இலக்கிய அறிவு அதுபோல் பலரது சிந்தனைகளை நோண்டி இரவல் வாங்கியது. ஆனால் அரசியல் அறிவு அப்படியல்ல. அதாவது எனது அரசியல் அறிவை எந்த குருவின் துணையின்றி பெற்றேன். என்னை விடுதலைப்புலி எதிர்ப்பாளன் என அவர்கள் சொல்வதையிட்டு. பிரித்தானியாவில் சேர் என்றால் ஓர் கனவான் எப்படி நினைப்பானோ அப்படி சந்தோசமடைகிறேன். வேறு சமூகமாக இருந்தால் என்னைப்போல் அதிகம் இருந்திப்பார்கள். ஆனால் எனது சமூகத்தில் உள்ள மிக சிலரில் நான் ஒருவன் என்பது எனக்கு பெருமையானது.

நீங்கள் புலிகளைச் சாடுவதில் ஞாயமிருக்கலாம், ஆனால் நீங்கள் ரஜபக்சாவை மூர்க்கமாக ஆதரிப்பதன் பின்னாலுள்ள அறம் என்ன ? அவர் ஒரு இனவெறியர் கூடவே யுத்தக் குற்றவாளியும்தானே ?

உங்களது கேள்வியில் இராஜபக்ச பற்றிய உங்களது பதில் உள்ளது.

எனது பதில்வேறு. என்னைப்பொறுத்தவரை 87 ஆண்டில் இருந்து புலிகள் நாசகார சக்தி என்பதை பேசியும், எழுதியும் வந்தேன். இந்திய அரசாங்கமோ மற்றய தமிழ்த்தரப்புகளோ புலிகளை ஏற்கனவே அழித்திருந்தால் மக்கள் காப்பாறறப்பட்டிருப்பார்கள் ? முப்பதுகால போராட்டத்தில் விளைவுகள் எதுவும் இல்லைத்தானே ?

யுத்தம் என்பது வெறியுடனே செய்யப்படுவது. யார் முதல் எதிரியை கொலை செய்கிறார்களே அவர்களே வெல்வது இது சாதாரணமானவர்களுக்கும் தெரியும். போரை மாவிலாற்றில் தொடக்கியபோது இது தெரியாத முட்டாள்களா விடுதலைப்புலிகள். ?

இலங்கையில் 2005 முன்பு அரசாங்கத்தில் இருந்தவர்கள் எப்படி யுத்தம் செய்தார்கள் ? விடுதலைப்புலிகள் எப்படி யுத்தம் செய்தார்கள் ?

இனவெறி இராஜாபக்ச கு டும்பத்திற்கு மட்டும் தனிப்பட்ட சொத்தல்ல என்பதை சிங்கள மக்களும் முஸ்லீம் மக்களும் சொல்வார்களே !

முல்லைத்தீவில் 95ல் சரணடைந்த 300 மேற்பட்ட இராணுவத்தின் குடுமபத்தினரிடம் கேட்டாலோ இல்லை இறுதி யுத்தத்தில் புலிகளின் பாதுகாப்பில் இருந்த இராணுவ குடும்பங்கள் என்ன சொல்வலுவார்கள் ?

இலங்கையில் 90 ல் யாழ்பாணப் பிரதேசம் புலிகளிடம் இருந்து கைப்பற்றியபோது மக்கள் வெளியற்றப்பட்டார்கள். பொது மக்கள் பாதிக்கப்படவில்லை. 2007ல் கிழக்குமாகாணம் கைப்பற்ப்பட்டபோது அங்குள்ள புலிகள் மக்களை வெளியேற அனுமதித்தபடியால் உயிர்ச் சேதம் குறைந்தது. இந்த போரையும் இலங்கை இரணுவம் இராஜபக்ச தலைமையில் செய்தார்கள். ஆனால் வடமாகாணப்புலிகள், மாறாக மக்களை யுத்தமுனைக்கு பணயக்கைதிகளாக அழைத்துக் கொண்டபோது அதற்கு எதிராக எத்தனைபேர் குரல் கொடுத்தார்கள் ? தமிழ்மக்கள் உயிர்களைக் கொடுத்து புலிகளை காப்பாறற பலரும் நினைத்தார்கள்..

என்னைப் பொறுத்தவரை இலங்கையில் மூன்றுவிதமாக யுத்தம் முடிவுக்குவரும் : நான்விரும்பியது புலிகள் சமாதானமான யுத்தத்தை நிறுத்தி உடன்படிக்கைகளில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ்வது. அதனது சாத்தியத்தை 87ல் இந்தியாவுடனும் 94 ல் சந்திரிகாவுடனும் பின்பு ரனில் தலைமையிலான யுத்த நிறுத்தத்தை முறியடித்து புலிகளே

இரண்டாவது புலிகள் வென்று யுத்தம் முடிவுக்கு வருவது – வியட்னாம் போல் -அது சாத்தியமில்லை.

மூன்றாவது இலங்கை அரசாங்கம் வென்று யுத்தம் முடிவுக்கு வருவது- அதுவே சாத்தியமானது

என்பதால் அரசாங்கத்தை ஆதரித்தேன். அந்த இடத்தில் யார் இருந்தாலும் எனது ஆதரவு கிடைக்கும். எனது ஆதரவிற்கு நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை. ஒருவிதத்தில் ஆன்மீகமான ஆதரவு. புலிகளின் எதிர்பாளனாக இருந்ததால் அவர்கள் சிலரை சந்திக்க முடிந்தது.

இந்த யுத்தம் முடிவுக்கு வந்ததால் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் ஜனநாயக நீரோட்டத்தில் வந்துள்ளார்கள். இளம்வயதினர் கல்விகற்றகவும் தங்களது முன்னேற்றத்தை நோக்கி மட்டுமல்ல பாலியல் கனவு கூட காண முடியாத சூழ்நிலை இருந்தது. பச்சத்தண்ணில் பலகாரம் செய்யமுடியாதுபோல்.

அநியாயம் செய்யும் சிலரை அழிக்க மீண்டும் கிருண்ணரை எதிர்பார்க்க முடியாது.

“என்போன்றவர்கள் தமிழர்களுக்கு அதிகாரம் கொடுப்பதை எதிர்பதற்கு காரணம் உண்மையில் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்களிலும் மேல்மட்டத்தமிழர் கொடுமைப்படுத்துவார்கள் என்பது. சாதி ரீதியில், வர்க்க ரீதியில், பாலியல் பழிவாங்கள் என்பன எல்லாம் கடந்து இவர்கள் முதிர்சியடையும்போது அதிக அதிகாரத்தை பற்றி சிந்திக்கலாம்.” என்ற குறிப்பை முகநூலில் எழுதியிருந்தீர்கள், மாற்று இனத்தவர்களைவிட தமிழர்கள் இன்னும் முதிர்ச்சியடையாமல் இருகின்றார்கள் எனின் அதற்கான காரணங்கள் என்ன என்று கருதுகின்றீர்கள்?. இப்போதைய சூழ்நிலையில் தமிழர்களுக்கு காணி,பொலிஸ் அதிகாரம் கொடுப்பதுகூட பொருத்தமாக இருக்காது என்று கருதுகின்றீர்களா?

இது மிகவும் உன்னதமான கேள்வி. அதிகாரத்தை ஒருவன் பெற்று கொள்ளும்போது மற்றவர்களிடம் இருந்து அவனுக்கு அதிகாரம் செல்லுகிறது அதாவது மற்றவர்களின் சொத்தை ஒருவன் காப்பாளனாக வைத்திருப்பதற்கு ஒத்தவிடயம். மேற்கு நாடுகளில் ஜனநாயகத்தில் மற்றவர்கள் தங்களில் ஒருவனைத் தேர்தெடுத்து பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். ஆனால் அப்படியான சமச் சீரான தன்மை அல்லது மற்றவனை நேசிக்கும் தன்மை எல்லாவற்றிற்கும் மேலாக பொருளாதாரத்திலே வசதியிலோ தாழ்ந்த ஒருவனைப் பாராமரிப்பது அதிகாரத்தில் உள்ளவனது தார்மீக கடமை என்ற எண்ணம் தென்கிழக்காசியாவில் இல்லை. ஆனால் இந்திய மற்றும் தென்னிலங்கை சிங்கள மக்களிடம் தொடர்ச்சியான நிலஉடமை கலாச்சாரத்தால் தனக்கு கீழானவனை குறைந்த பட்சமாகவாவது அவன் ஜீவனைத் தக்கவைத்தால்தான் தான் அதிகாரத்தில் நிலைக்கமுடியும் என் நினைக்கும் தன்மையுளளது. இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்கினாலும் அழிக்கமாட்டார்கள். அது கருணையால் அல்ல. அவனது தேவை அவர்களுக்குத் தேவை. அது சிங்கள வளவுகளாலும் இந்திய பண்ணைத்தன்மையினாலும் தலைமுறையாக அங்கு தலைவர்கள் உருவாக்கப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள பொருளாதார கலாச்சாரத்தால் அந்த பெருந்தன்மை உருவாகவில்லை அதே நேரத்தில் மேற்குலக்தில் உள்ள ஜனநாயகமும் எமது மனதில் குடியேறவில்லை. இதை நான் பழகிய விடுதலை இயக்கங்களிடம் பார்க்க முடிந்தது. பிரபாகரன் மட்டுமல்ல உமா, சிறி போன்றவர்கள் மற்றவர்களை நம்பாத, ஆனால் அதிகாரத்தின் மூலம் தலைவர்களாக இருந்தனர். இதற்கு விதிவிலக்கு பத்மநாபா மட்டுமே. ஏன் அமிர்தலிங்கம்கூட பெருந்தன்மையான தலைவர் இல்லை என்பதை நேரடியாக பார்த்த ஒரு சம்பவத்தில் அறிந்தேன். இவர்களிடம் தலைமைக்கான மற்றய குணங்கள் நிரம்ப இருந்தன என்பதை நான் ஏற்கிறேன். மேலும் இதற்கு இவர்கள் பொறுப்பனவர்கள் அல்ல. யாழ்ப்பாணம் ஒருவிதத்தில் இலங்கையில் அமைந்த தார்ப் பாலை நிலம் போன்றது. மிகவும் சிறிதளவே வளத்தைக் கொண்டது. நான் ஒரு முறை எழுதினேன் ‘பன்னிரண்டு எலிகள் ஒரு கூண்டில் வைத்து பன்னிரண்டு சிறிய கருவாட்டுத் துண்டுகள் போட்டால் அவற்றிற்கு அது போதாது. ஓவ்வொரு எலியும் யாராவது ஒரு எலி அந்த இரவில் இறக்கவேண்டும் என சிந்தித்தபடியே நித்திரை கொள்ளாது’.

மக்களிடம் அதிகாரம் செல்லுவது மிகவும் சிறந்த விடயம் அதை எவரும் எதிர்க்க முடியாது. ஆனால் அதிகாரத்தை கொடுப்பதற்கு முதல் கொழும்பில் உள்ள அதிகாரத்தை முக்கியமாக இலங்கை முழுவதும் பரப்பவேண்டும் கொழும்பில் உள்ள பெரும்பாலான காரியங்களை சகல மாகாணங்களுக்கும் கொண்டு சென்று மக்களை முன்னேற்றி செல்வத்தை பெருக்கிய பின்பு மெதுவாக அதிகாரங்களைக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அதிகாரம் தமிழர்களுக்கு செல்வதாக சிங்களமக்கள் எண்ணமாட்டார்கள் மாகாணங்களுக்கு கொடுக்கப்படுவதாகவே சொல்லுவார்கள். மேலும் இனவிரோதத்தை வைத்த மூன்று தலைமுறையான கும்பல்கள், மூன்று இனங்களிலும் மறைந்து, நல்ல நிலமை இலங்கையில் இருக்கும் இந்த முறையில் இன விரோதத்தை தடுக்கலாம். பதவி துஷ்பிரயோகத்தை குறைக்கமுடியும். தற்போதய மாகாண முறை கொழும்பில் அதிகாரத்தை எடுத்து அதனிலும குறைந்த அறவுணர்வும் அதிக அடங்காப் பதவிப்பசியும் கொண்டவர்களிடம் கொடுப்பதற்கு ஒப்பானது. இதன் நன்மைகள் மக்களிடம் போகாது. மிகவும் வீணானது. விரயமானது. மக்கள் விரோதமானது.

ஆனால் சிங்களவர்களிடமும் அதிகாரம் ஒரு குறிப்பிட்டவர்களிடையேதானே கைமாறுகிறது. அதுகுமில்லாமல் அவர்களும் இனவெறியர்களாகத்தானே இருக்கிறார்கள். அவர்கள் எப்படி அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பார்கள் என்று நம்புகிறீர்கள் ?

அதிகாரத்துக்குக்கு ஆசைப்படுவது அரசியல்வாதிகள். சிங்களவாக இருந்தாலும் தமிழராக இல்லை முஸ்லீம்களாக இருந்தாலும் அந்த சமூகத்தின் அரசியல்வாதிகளிடம் செல்கிறது. சாதாரணமக்கள் எதிர்பார்பது இருப்பதற்கு வீடு, குழந்தைகளுக்கு கல்வி ,மற்றும் வேலை என்பன. சாதாரணமக்கள் இவைகளுக்காகவே காலம் காலமாக போராடுவார்கள். உதாரணமாக மேற்கூறியதை எனக்கு தருவது அவுஸதிரேலியாவில் உளள வெள்ளையர்கள். அதுபோல் தமிழர்கள் தங்கள் தேவைகளை நோக்கிபோராடவேண்டியதும் அதை தமிழ்தலைவர்கள் கொடுப்பதுமே அவர்கள் கடமை.

உதாரணமாக இலங்கையில் முன்னுதாரணங்களாக சிறுபான்மைத்தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அதற்கு முதல்த் தேவை சிறுபான்மை இனத்தவர் புத்திசாலித்தனமாக நடக்கவேண்டும். அப்படியான புத்திசாலிகளை தலைவர்களாக்கினால் எம்மிடமும் அதிகாரம் வரும்.

தமிழர்கள் இனவெறியர் இல்லையா ? முஸ்லீம்களில் மதவெறியர்கள் இல்லையா ? அலையோயும் வரை குளிக்க காத்திருப்பவனை என்னன்று அழைப்பது ? எனது மதிப்பிற்கு உரிய மலையகத் தலைவர் தொண்டமான், முஸ்லீம் தலைவர் அஸ்ரப் போன்றவர்கள் தமது சமுகத்திற்கு உதவுவதற்கு அதிகாரத்தை யாரிடம் இருந்து பெறறார்கள் ?

எழுத்தாளனாக இருப்பதினை சௌகரியமாக உணருகின்றீர்களா? தொடர்ந்தும் எழுத்தாளனாக இருப்பதனால் வாழ்வில் எதனையும் கண்டடைந்ததாக கருதுகின்றீர்களா?

எழுத்தாளனாக வேண்டும் என நான் நினைத்து வரவில்லை. அவுஸ்திரேலிய தமிழ்ச்சூழல் என்னை ஒரு பத்திரிகைக்கு ஆசிரியாராக்கியது. ஒருவிதத்தில் என்மேல் சுமத்தப்பட்டது என தத்துவரீதியில் சொல்லமுடியும். எழுதத் தொடங்கிய பின்பு வாசிக்கவேண்டிய கட்டாயம் உருவாகிறது. மேலும் என் எழுத்துக்களை யாரோ கொஞ்சப்பேர் படிக்கிறார்கள் என்று தெரிகிறது. இது தொடரும்போது மேலும் படிக்க தூண்டுகிறது. நான் மதிக்கும் நல்ல எழுத்தாளர்கள் நண்பர்களானார்கள்.

எத்தனையோபேர் என்னைப்போல் எகிப்திற்கு போய்வந்தார்கள். ஆனால் அதைப்பற்றி எழுதுவோமா என நான் நினைத்தால் அதற்கு பல மாதங்கள் எகிப்தின் சரித்திரத்தை அறியவேண்டியிருந்தது. இதில் ஒரு சந்தோசம் கிடைக்கிறது. மேலும் தற்பொழுது பகுதி நேரவேலையில் இருப்பதால் நினைப்பதை செய்ய கொஞ்சம் அதிக நேரமுள்ளது. எனது சந்தோசத்திற்காக எழுதுகிறேன். அதுதானே மனிதவாழ்வின் இரண்டு புள்ளிகளுக்கு இடையில் தேவையானது.

அடுத்த படைப்பாக உங்களால் எழுதப்பட்டுக் கொண்டிருப்பது என்ன? எப்போது வெளியாகும்?

.

தற்பொழுது எகிப்து மற்று தென்னாபிரிக்க பயண அனுபவங்களை எழுதிவிட்டு சில சிறுகதைகள் எழுதினேன். உண்மையில் இலங்கைபோரைபற்றி எழுத முயற்சிக்கிறேன். ஆனால் முடியவில்லை முக்கியமாக இலங்கை இராணுவம் மற்றும் போரில் உள்நாட்டில், வெளிநாட்டில நடந்த பல விடயங்கள் பற்றிய விடயங்களை சேகரித்து வருகிறேன். இதுவரை எழுதியவர்கள் எல்லோரும் தமிழ்தரப்பை மட்டுமே எழுதியுள்ளார்கள். முழுமையான நாவலாக இருந்தால் இரண்டு தரப்பையும் கொண்டு வரவேண்டும். பிரான்சுப் படையினரையும் நெப்போலியனையும் விட்டுவிட்டு டால்டாய் போரும் சமாதானமும் எழுதியிருந்தால் அது சாதாரண நாவலாகவேகூட வந்திராது. என்னால் இரண்டு பக்கத்தையும ஒருங்கிணைத்து எழுத இயலுமோ தெரியாது . ஆனால் அப்படி ஒரு கனவு உள்ளது.

வாழ்க்கையின் கனவுகள் அதிகம்தானே?

இப்போது யுத்தம் முடிவடைந்து, புலிகளும் அழிக்கப்பட்டு விட்டார்கள். அரசியல் தஞ்சம் கோரிய நீங்கள் இன்னும் இலங்கை திரும்பாதிருப்பதன் காரணம் என்ன?

நான் அரசியல் தஞ்சம்கோரி செல்லவில்லை. குடும்பமாக புலம்பெயர்ந்தேன் ஆனாலும் 28 வருடங்கள் ஒரு இடத்தில் தங்கி தொழில், குடும்பம், பிள்ளை வந்ததுடன் இந்த நாடு வாழ்க்கை முறை கலாச்சாரத்தில் ஒன்றாகிவிடும்போது சொந்த நாடாகிறது. ஆனால் முடிந்தவரை இலங்கையில் எனது வாழ்க்கையில் சில காலங்களையும் செலவழிக்கவிருக்கிறேன்.

நன்றி ஆட்காட்டி