-
கனடா – ரொறன்ரோவில் அநுரகுமார திசநாயக்கா நிகழ்த்திய உரை .பகுதி 1
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசநாயக்கா, கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி, கனடா – ரொறன்ரோவில் மண்டபம் நிறைந்த தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில், உரையாற்றியபோது, இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் தோழர் மனோரஞ்சன், சிங்களத்தில் அவரிடம் கேட்ட கேள்விக்கு , அநுரகுமார சிங்களத்தில் அளித்த பதிலின் தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது. இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் பேரம் பேசும் ஓர் ஏற்பாடாக பயன்படுத்த வேண்டும்…
-
ATLAS- வாசிப்பு அனுபவப்பகிர்வு
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டியில் பரிசு பெற்ற நூல்கள் கடிகாரப் பறவைகள் – கவிதை – திருக்கோவில் கார்த்திகேசு வல்லமை தாராயோ – சிறுகதை – மாத்தளை வடிவேலன் வேராகிப்போன மனிதர்கள் – நாவல் – ஏ.எஸ். உபைத்துல்லா உரைகள் : மருத்துவர் ( திருமதி ) வாசுகி சித்திரசேனன் எழுத்தாளர் “ யோகன் “ யோகானந்தன் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா…
-
நம் காலத்து நாவல்கள் :10. கோவேறு கழுதைகள்.
மனிதர்கள் வாழ்வதற்கு இந்தப்பிறவியிலே மட்டுமே காரணங்கள் உள்ளன. இந்த உலகத்தைவிட வேறு உலகம் நமக்கு கிடையாது. அதனால் ஆவலோடு மனநிறைவாக ( Passion) வாழ்ந்து விடவேண்டும். வாழ்விற்கான காரணங்கள், வாழும் சூழ்நிலை, வயது, மற்றும் எமது நோக்கத்திற்கு ஏற்ப வேறுபடலாம். ஆனால், வாழ்வதற்கான தூண்டல்களைப் பற்றிக்கொண்டு முழுமனதோடு வாழவேண்டும் என்ற இருத்தலியலின் தத்துவத்தை இந்த நாவல் சொல்கிறது. நாவல், ஒரு கிறிஸ்துவ வண்ணாரக் குடும்பத்தில், முனைப்பான ஆளுமைகொண்ட பெண் பாத்திரமாக ஆரோக்கியத்தை உருவாக்கி, அவள் எப்படி மருமகள்,…
-
சிறுகதை: மனக்கோலம்
பல வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில், அகதி முகாங்களில் வேலை செய்த காலத்தில் கண்ட உண்மை சம்பவத்தை வைத்து எழுதியது நடேசன் பஸ் வந்து சேர்ந்த போது உச்சி வெயில் அடித்தது. நாங்கள் இருவரும் மட்டும் தான் பிரயாணிகள். தங்களது வேலை செய்து முடித்த திருப்தியுடன் டிரைவரும் கண்டக்டரும் பஸ்ஸை விட்டிறங்கி பெயர் தெரியாத இரு மரங்களின் பின்னே சென்றார்கள். இயற்கையில் பசளை இல்லாத கடற்கரை சார்ந்த மண்ணில் இவர்களின் உரங்களை நம்பி வளரும் மரங்கள். கண்டக்டரிடமோ…
-
செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள்.
மிருக வைத்தியராக எனது அனுபவங்களை அபுனைவாக “வாழும் சுவடுகள்” “ புத்தகத்திலும் புனைவாக “ அசோகனின் வைத்தியசாலை , மற்றும் “பண்ணையில் ஒரு மிருகம் “நாவலிலும் எழுதியுள்ளேன். நாற்பது வருட மிருக வைத்திய தொழிலில் இருந்து இளைப்பாறிய பின்னர் நான் ஏதாவது எழுதத் தவறிவிட்டேனா என நினைத்துப் பார்த்தபோது நெருடிய விடயம் ஒன்றுண்டு. செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பவர்கள் மனநிலைகளை எழுதத் தவறிவிட்டேனா என்ற நினைப்பு என்னுள்ளே வந்தது. எல்லோரையும் பற்றி எழுதாத போதிலும் குறிப்பிடத்தக்கதாக என்…
-
நம் காலத்து நாவல்கள்: 9
Toni Morrison – Beloved. பெண் இலக்கியம் என்றால் என்ன? பலகாலமாக என் மனதில் அரித்துக்கொண்டிருந்த கேள்வி. இலக்கியத்தில் ஆண்கள் சொல்லும் விடயங்கள் பெண்கள் சொல்வதாக இருந்தால் அது பெண் இலக்கியமாகுமா?. அதுக்கு மேல் அர்த்தம் உள்ளதா? பெண்கள் இலக்கியமாக எழுதும் கருத்து மொழியை, ஆண்களும் சொல்ல முடியும். பல பெண்கள் சொல்லும் கவிதைகள் கதைகளும் அப்படித்தான்.
-
அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழக நினைவுகள் :1
நடேசன் நன்றி அபத்தம் கனடா அவுஸ்திரேலியாவுக்கு 1987 இல் புலம் பெயரும் முன்பாக, தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்த அகதி முகாம்களில் மூன்று வருடங்கள் சுகாதார, மருத்துவ மற்றும் கல்விச் சேவைகளைச் செய்திருந்த அனுபவத்தால், எனது ஓய்வு நேரங்களில் இந்த நாட்டிலும் பிரயோசனமாக ஏதாவது எமது சமூகத்திற்குச் செய்யவேண்டும் என்ற விருப்பம் எனக்கிருந்தது. இலங்கையில் இப்படியான பொது வேலைகளில் ஈடுபட்டதால் அங்கே பல விதமான தொல்லைகளை எதிர்நோக்க நேரிட்டது. மதவாச்சியில் மிருக வைத்தியராக வேலை…
-
மாதொருபாகன் நாவல்: அனுபவப் பகிர்வு
பெருமாள்முருகனின் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீச்வர வடிவமே மாதொருபாகன். அக்கோயில் சார்ந்து நிலவும் பல்வேறு நம்பிக்கைகள் வாழ்வனுபவமாக இந்நாவலில் காட்சியாகின்றன.