பகுப்பு: Uncategorized
-
மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம்
சிறையிலிருந்த காந்தி சுத்திகரித்த கழிவறையும் சுத்தப்படுத்த முனைந்த தேசமும் முருகபூபதி இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் ஊரில் பிறந்த குழந்தை காந்தி எப்படி மகாத்மாவானார்…? எவ்வாறு ஒரு தேசத்தின் பிதாவானார் ….? என்பதற்கெல்லாம் வரலாறுகள் இருக்கின்றன. தற்காலக்குழந்தைகளுக்கும் இனிபிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் இப்படியும் ஒரு மனிதர் இந்தியாவில் பிறந்து – வாழ்ந்து – மறைந்தார் என்று சொல்லிக்காண்பிப்பதற்கு காந்தி பற்றிய திரைப்படங்களும் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய மொழிகளிலும் இருக்கின்றன. இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போர்களையும் மௌனத்துடன் […]
-
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த போட்டி முடிவுகள்
சிறந்த நூல்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள். அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கையில் வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்வுசெய்து, அவற்றை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கத் தீர்மானித்திருந்தது. இந்தத் தீர்மானத்திற்கு அமைவாக குறிப்பிட்ட ஆண்டில் இலங்கையில் […]
-
கொமடோ டிரகன் – இந்தோனேசியாவின் ஆதி விலங்கு
நோயல் நடேசன் இதுவரையில் பெத்தலகேம் யூதப் பெண்ணான மேரியால் மட்டுமே கன்னி நிலையில் தாயாக முடியும் என நினைத்திருந்தேன். உங்களில் பலரும் என்னைப்போல் அந்தத்தன்மைக்கு இறையருள் தேவை என நினைத்திருந்திருப்பீர்கள். ஆனால், மிருக வைத்தியரான எனக்கே அதிர்ச்சியாக இருந்த விடயம் ஒன்று உள்ளது. ஆதிகால விலங்காகிய கொமடோ டிரகனின் ( ஒரு வகையில் உடும்பு போன்றது ) முக்கிய விடயமாக நான் தெரிந்து கொண்டது இதுதான். அதற்கு ஆண் உயிரிகளின் தேவையில்லை . புணர்ச்சியற்று பெண் முட்டை […]
-
புத்தகம்: இந்திரனது தமிழ் அழகியல்
நோயல் நடேசன் கவிஞர் இந்திரனது ‘தமிழ் அழகியல்’ ‘புத்தகத்தைப் படிக்கும் வரை நான் தமிழில் அழகியலை முழுமையான ஒரு பகுதியாகச் சிந்திக்கவில்லை . ஆனால் , உலகத்தின் பல வசதியான நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்தாலும் துபாயில் உள்ள நட்சத்திர விடுதிகள்தான் என்னைக் கவர்ந்தன. அதற்கான காரணத்தை யோசித்தேன். அரேபியா இஸ்லாமியர்களிடம் எப்பொழுதும் இன்ரீரியரர் டிசையின் ( interior design) நன்றாக இருந்தது. உருவங்கள் அற்று அவர்கள் சிந்திப்பதாலோ? தெரியவில்லை. அதேபோல் லண்டனில் உள்ள கட்டிடங்களுக்கும் பாரிசில் உள்ள […]
-
சாதனைகள் படைத்த திலகவதி ஐ. பி. எஸ்.
முதல் சந்திப்பு : சவால்களினூடே சாதனைகள் படைத்த திலகவதி ஐ. பி. எஸ். முருகபூபதி சென்னைக்கு 1990 ஆம் ஆண்டு சென்றிருந்தபோது, அச்சமயம் தாம்பரத்திலிருந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனை சந்தித்தேன். அன்றைய தினம் மாலை சென்னையில் எழுத்தாளர் சிவகாமியின் பழையன கழிதல் நாவல் வெளியீடு நடந்தது.அந்த நிகழ்வில் தானும் பேசவிருப்பதாகச் சொன்ன ராஜம் கிருஷ்ணன், என்னையும் அங்கே வரச்சொன்னார். அவரது இல்லத்தில் மதியவிருந்தை முடித்துக்கொண்டு அவர் குறிப்பிட்ட மண்டபத்திற்கு அன்று மாலை சென்றேன். எழுத்தாளர் சிவகாமி அப்போது […]
-
காஃகாவின் உருமாற்றம். (Metamorphosis by Franz Kafka)
நடேசன் அக்காலத்தில் தீப்சில் வாழ்ந்த (ancient city of Thebes) புராண காலத்து மிருகம் ஸ்பிங்ஸ் (Sphinx). அதனது அனுமதியில்லாது நகரத்துள் எவரும் செல்லமுடியாது . அந்த வழியால் வரும் வழிப்போக்கர்களிடம் விடுகதை சொல்லி அதை அவிழ்க்கச் செய்யும். அவிழ்க்காதபோது அவர்களைக் கொன்றுவிடும். அந்த ஸ்பிங்ஸ், ஒரு விடுகதையை அந்த வழியால் வந்த எடிப்பஸ் (Oedipus) என்ற இளவரசனிடம் முன்வைக்கிறது. “காலையில் நான்கு கால்களிலும், நண்பகலில் இரு கால்களிலும் , மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும் […]
-
பஞ்சகல்யாணியின் அழகிய உலகம்
நூல் அறிமுகம்: குழந்தைகளுக்கான எளிய நடையில் முருகபூபதி இலக்கியப்படைப்புகளில், குழந்தைகளுக்கான பிரதிகளை எழுதுவதுதான் மிகவும் சிரமமானது எனச்சொல்வார்கள். அதற்கு குழந்தைகளின் உளவியல் தெரிந்திருக்கவேண்டும். பெரும்பாலும் குழந்தை இலக்கியம் படைப்பவர்கள் பெரியவர்களாகத்தான் இருக்கிறார்கள். பாரதி முதல் அழ. வள்ளியப்பா வரையில் மாத்திரமின்றி, அதன் பிறகும் குழந்தை இலக்கியங்களை , குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் பெரியவர்கள்தான். இவர்கள் தமது வயதையொத்தவர்களுக்கு ஏதேனும் எழுதினாலும், குழந்தைகளுக்காக எழுத முன்வரும்போது, குழந்தைகளாகவே மாறிவிடவேண்டும். அவ்வாறுதான் ஒரு குழந்தை இலக்கியம்படைத்திருக்கும் பஞ்சகல்யாணி என்ற மருத்துவரை […]
-
நினைவற்று வாழ்தல்
நடேசன் மெல்பனில் பரவிய கொவிட் பெருந் தொற்றின் காரணமாக நடைமுறைக்கு வந்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் தளர்ந்து சில மாதங்களின் பின்பாக எனக்கு அறிமுகமான தந்த நாராயண என்பவர் எனது மிருக வைத்திய நிலயத்திற்கு வந்தார். உள்ளே வந்தவர் என்னை அடையாளம் கண்டதாகக் தெரியவில்லை. வாயில் வார்த்தையில்லை . உதட்டில் சிரிப்பில்லை. வந்தவுடன் அங்கிருந்த வரவேற்பறையின் கதிரையில் அமர்ந்தார். ஆனால், அவர் சாவகாசமாக அமரவில்லை. கதிரையின் விளிம்பில் – ஒரு பறவை, கிளையில் இருப்பதுபோல் அமர்ந்து, கிளினிக்கின் […]
-
கரும்புலி பெண்ணின் கடிதம் : கானல்தேசம்
“அன்பின் கார்த்திகா, இந்தக்கடிதம் உனக்குக் கிடைக்குமோ அல்லது கடிதம் கிடைக்கும் காலத்தில் நீ உயிரோடு இருப்பாயோ தெரியாது. எனக்கு அடுத்து தற்கொடைப் போராளியாக உன்னைப் பாவிப்பார்கள் என்பதால் உன்னையாவது தப்பவைக்கும் நோக்கத்தில் எழுதுகிறேன். அந்த முயற்சியில் இருந்து நீ தப்பாவிட்டாலும் உனது அப்பாவுக்கு இந்தக் கடிதம் கிடைத்தால் அவர் மூலம் யாரிடமாவது இது சென்று சேரும். அநியாயத்தை பற்றி ஒரு பதிவாக மாறும் என்பது எனது கடைசி ஆசை என்பதால் உனக்கு இதை எழுதி உனது வீட்டிற்கு […]
-
பண்ணையில் ஒரு மிருகம்
சாந்தி சிவகுமார் பண்ணையில் ஒரு மிருகம் எனும் இந்த நாவலின் களம் சென்னையின் புறநகரான செங்கல்பட்டில் இருக்கும் ஒரு மாட்டுப்பண்ணை. 1980-களில் இருந்த சூழலை பிரதிபலிக்கும் கதை. 1984 ல் பண்ணையை மேற்பார்வை செய்யும் மாடுகளை கவனிக்கவும் ஒரு மிருக வைத்தியராக செல்கிறார் நடேசன். அந்த காலகட்டத்தில் இருந்த சமூக சூழலை, முற்றிலும் புதிதாக இல்லாத சூழல் என்றாலும் அதே சமயம் அவருக்கு அதிர்ச்சி தரக்கூடியதாகவும் அந்த சூழல் அமைகிறது. பண்ணையில் வேலை செய்யும் ஆட்களிடம் மேலாளர்கள் […]