Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • பயணியின் பார்வையில் — 08

    இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை தேசாந்தரியின் இல்லத்தில் சில மணிநேரங்கள் முருகபூபதி தமிழகப்பயணம் பற்றிய இந்த எட்டாவது அங்கத்தை ஒரு கதைசொல்லி சொன்ன ஒரு கதையின் ஊடாகவே தொடரவிருக்கிறேன். ஒரு ஊரில் ஒருதேநீர் தயாரித்துவிற்பவன் இருந்தான். ஒருநாள் அந்த ஊரில் பிரபலமான ஒரு மல்யுத்தவீரன் அவன் கடைக்குவந்து தேநீர்கேட்டிருக்கிறான். அந்தத்தேநீர் தயாரிப்பவன் அன்று அந்த மல்யுத்தவீரனுக்கு தேநீர் தயாரிக்க சற்று காலதாமதமாகிவிட்டது. அதனால் கோபமுற்ற அந்த மல்யுத்த வீரன், “எனக்கு உனது தேநீர் வேண்டாம். என்னை…

    noelnadesan

    24/03/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை -7

    சுந்தரம்பிள்ளையின் மூன்றாவது நாளில் வேலை ஐந்து மணிக்கு ஆரம்பமாகி நடுநிசியில் முடிவது எனக் கூறப்பட்டது. இரவு வேலை தனித்து ஒரு வைத்தியராக செய்ய வேண்டும். அதைவிட அவசர சிகீச்சைகள் செய்ய வேண்டி இருக்கும் என்பது மனத்தில் அச்சத்தை கொடுத்தது. அன்று முழுவதும் அதே நினைவால் நிம்மதியாக வீட்டில் இருக்க முடியவில்லை. புதிதாக வேலையில் சேர்ந்த என்னை தனியாக இரவில் வேலை செய்ய சொன்னது சரியா என சிந்தனை ஓடியது. சமுத்திரத்தில் வீழ்ந்த பின்பு எப்படியும் சமாளிக்கவேண்டியதுதானே? பதற்றமும்…

    noelnadesan

    23/03/2013
    Uncategorized
  • ஆனந்தவிகடனின் சிறுமை

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாவிரர் நாள் அனுஷ்டிக்கப்படும் வேளையில் தமிழக வணிக இதழ் ஆனந்தவிகடனில் திட்டமிட்டு புனையப்பட்ட ஒரு விடயம் பதிவாகியிருந்தது. ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண்போராளி தற்பொழுது விபசாரம் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றவேண்டிய சூழலுக்கு ஆளாகியிருப்பதாக அந்த புனைவு கதைபண்ணியிருந்தது. கதை படைப்பதுவேறு கதைபண்ணுவது வேறு. ஆனந்தவிகடனின் வணிகநோக்குடனான அந்தப்புனைவில் உண்மை ஏதும் இல்லை என்று நிருவாகம் அறிந்ததும் அதனை எழுதியவர் அங்கிருந்து நிருவாகத்தினால் வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஏற்கனவே அங்கு நீண்ட காலம் பணியிலிருந்த…

    noelnadesan

    20/03/2013
    Uncategorized
  • எகிப்தில் சில நாட்கள்: 2

    “அந்த ஜக் டானியல் போத்தல் உள்ள பெட்டியை கையில் எடு” என நண்பன் கூறினான். நானும் அதேபோன்ற சிங்கிள் மோல்ட் விஸ்கி இரண்டு போத்தல் வைத்திருந்தேன். ஏனைய பெட்டிகளை அகமட் விமான நிலய பெல்டில் இருந்து தூக்கினார். குதிரையையும் வாளையும் துருக்கியர்கள் மற்றவர்களிடம் கொடுக்கமாட்டார்கள். அது போலத்தான் எங்களது விஸ்கி போத்தல்களை மற்றவர் கைகளில் கொடுக்க நாங்கள் தயாரில்லை. இரண்டு பேருமே குடிகாரர்கள் என நினைக்க வேண்டாம். அந்தப் போத்தில்கள் தனியாக கதை சொல்லும். கம்பன் வீட்டு…

    noelnadesan

    19/03/2013
    Uncategorized
    Travel (2)
  • பயணியின் பார்வையில் –07

    Melbourne city in night முருகபூபதி கிராமத்திலிருந்து நகரத்துக்குப்பெயர்ந்த வனப்பேச்சி தமிழச்சி இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை கடந்த எட்டு ஆண்டுகளுக்குள் (2005 -2013) நான் மூன்றுதடவைகள் சந்தித்த தமிழச்சியின் ஆற்றலும் ஆளுமையும் தோழமையும் அவரின் வளர்ச்சியினூடே எனக்குத் தென்பட்டவை. கட்டிடக்காட்டினுள் வாழத்தலைப்பட்டபோதிலும் உள்ளார்ந்தமாக நேசித்த கரிசல்காட்டின் நினைவுகளுடன் அந்த மண்ணின் மக்களை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் அவர் தற்கால தமிழக இலக்கிய சூழலில் நிரம்பவும் பேசப்படுபவர். 2005 இல் சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய…

    noelnadesan

    18/03/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை -6

    புறஸ்ரேட் விடயத்தில் அந்த மனிதர் கோபமடைந்து வெளியேறிய சிறிது நேரத்தில் பல பூனைகளை சாம், சிறு பூனைக் கூடுகளில் தொடர்ச்சியாக பரிசோதனை அறைக்குள் கொண்டு வந்து நிலத்தில் வரிசையாக வைத்துக் கொண்டிருந்தான்.கிட்டத்தட்ட அறையின் அரைவாசியிடம் அந்தக் கூடுகளால் நிரப்பப்பட்டிருந்தது ‘ஏன் இவையெல்லாம் என்னிடம் வருகின்றன’ ? என ஏதோ பெரிய வேலையை எதிர்பார்த்து மனக் கிலேசத்துடன் சுந்தரம்பிள்ளை அவனிடம் கேட்டபோது ‘இன்று ஆண் பூனைகளை நலமெடுப்பது உங்கள் வேலை. இன்று இந்த நாள் உங்களுக்கானது.’ என்றான். புத்தரின்…

    noelnadesan

    16/03/2013
    Uncategorized
  • Sri Lankan Tamils can no longer remain silent – They must now defend the nation

    Shenali Waduge Now is a good time for the Sri Lankan Tamils to finally break their silence. For far too long they have either been silenced or chosen to be silent. Silence has played a pivotal role in the lives of the Tamils throughout the conflict. Now they have the opportunity to start afresh with…

    noelnadesan

    16/03/2013
    Uncategorized
  • பயணியின் பார்வையில் –06

    இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை முரண்படுதலுக்கான காரணத்தைவிட ஒன்றுபடுதலுக்கான காரணம் வலிமையானது முருகபூபதி திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்திற்கு என்னைத்தேடி வந்த இருவரையும் எனக்குத்தெரியாது. ஆனால் வந்தவர்கள் இலக்கியவாதிகள்தான் என்பதை புரிந்துகொள்ள முடியாவிட்டால் நான் இலக்கியவாதி அல்ல. ஒருவர் தளம் இதழின் ஆசிரியர் பா.ரவிக்குமார் என்ற பாரவி. இவர் மறைந்த பிரபல எழுத்தாளர் அகிலனின் மகள் கற்பகவல்லியின் கணவர். நீட்சி என்ற சிறுகதைத்தொகுப்பை வெளியிட்டவர். அர்த்தம் இயங்கும் தளம் என்ற தொகுப்புநூலில் பாரவியும் தேவகோட்டை வா.மூர்தியும் எஸ்.சுவாமிநாதனும்…

    noelnadesan

    10/03/2013
    Uncategorized
    tamil writers
  • அசோகனின் வைத்தியசாலை – 5

    அந்த தீவிர சிகிச்சைப்பகுதியில் இருந்த வேலையை முடித்துக்கொண்டு வெளியேறி, பொதுவான நோய்களைக் கொண்ட நாய்கள் பகுதிக்கு சென்ற போது, உப்பலான குழந்தை முகத்துடன் ஆறரை அடி உயரமும் அதற்கேற்ற அகலமான விரிந்த தோள்களுடனும் ஒரு இளைஞன் வந்தான்.வயது இருபதுக்கு மேல் இராது. அவனுடன் ஒரு குண்டான சந்தனக்கலர் லாபிரடோர் இன நாய் தொடர்ந்து வந்தது. நடப்பதை வேண்டா வெறுப்பாக செய்வது போல் அதனது நடை இருந்தது. ‘மிகவும் அமோகமாக விளைந்திருக்கிறாய்‘ எனக் அதன் தலையை குனிந்து தடவும்போது…

    noelnadesan

    09/03/2013
    Uncategorized
    நாவல்
  • பயணியின் பார்வையில் — 05

    இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை மகாகவி பாரதிக்கு ஒரு மடல் முருகபூபதி மகாகவி பாரதி…அவர்களே…. நீங்கள் எமக்கெல்லாம் ஆதர்சமான சிந்தனையாளன் கவிஞன், படைப்பாளி. பத்திரிகையாளன். நான் உங்களை எனது பால்யகாலம் முதல் படிக்கின்றேன். இன்னும் முற்றுப்பெறவில்லை. உங்களைப்பற்றி பேசுகிறேன். எழுதுகிறேன். எனது தாய்நாட்டில் உங்களுக்காக எங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய நூற்றாண்டு விழாக்களில் பங்கேற்றேன். தென்னிலங்கை, வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் விழாவும் ஆய்வரங்கும் நடத்தினோம். உங்களை உங்கள் எழுத்துக்கள் ஊடாக மாத்திரம் தெரிந்துகொண்டதுடன்…

    noelnadesan

    06/03/2013
    Uncategorized
    Features
முந்தையப் பக்கம்
1 … 137 138 139 140 141 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar