பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • அவுஸ்திரேலியாவில் புதுமையாக நடந்த புத்தக அறிமுக விழா.

    Few years ago in Melbourne இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இன்றைக்கு,முப்பந்தைந்து வருடங்களுக்கு முன்னர் யாழ் நகரில்; படித்துக் கொண்டிருந்த காலத்தில், தன்னுடன் படித்துக் கொண்டிருந்த சக மாணவியின் அழகு, அறிவு. பண்பு. பவித்திரமான குணங்களிலாற்; கவரப்பட்ட ஒரு மாணவன், எதிர் காலத்தில் ஒரு தமிழ் எழுத்தானாக வரப்போகிறேன் என்ற எள்ளளவு பிரக்ஜையுமற்ற நிலையில் தனது காதலைத் தன் அன்பைக் கவர்ந்தவளிடம் சொல்ல அவள் வழக்கம் போல’ அப்பா அம்மாவிடம் வந்து பேசுங்கள்’ என்று சொல்லிவிட்டாள். வழக்கம்போல்,எதிர் கால…

    noelnadesan

    02/04/2013
    Uncategorized
    Reviews
  • பயணியின் பார்வையில் 09

    இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடரும் பணிகள் முருகபூபதி எந்தவொரு தேசத்திலும் நீடிக்கும் உள்நாட்டுப்போர்களிலும் அல்லது தேசத்திற்கு தேசம் தொடரும் ஆக்கிரமிப்புப்போர்களிலும் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான். போரிலே கணவன்மாரை இழக்கும் பெண்கள் விதவைகளாக்கப்படுகிறார்கள். தந்தையரை இழக்கும் குழந்தைகள் சரியான பராமரிப்பின்றி அநாதரவாகிறார்கள். இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தபோரிலும் இதுதான் நடந்தது. இலங்கையில் ஈழவிடுதலை இயக்கங்களுக்கும் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசுகளின் ஆயுதப்படைகளுக்கும் இடையில் மூண்ட போர்களிலும் இயக்கமோதல்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான். இத்தகைய போர்களில்…

    noelnadesan

    02/04/2013
    Uncategorized
    Features
  • அசோகனின் வைத்தியசாலை 8

    இன்று இரவு வைத்தியசாலையில் அதிகம் வேலையில்லை என நினைத்த இளைப்பாற நினைத்த கொரிடோரில் நடந்த சுந்தரம்பிள்ளைக்கு ஒரு வேலை அறுபது கிலோவில் வந்து கொண்டிருந்தது. ரொட்வீலர் நாயை வைத்தியசாலையில் உள்ள தள்ளுவண்டியில் வைத்து அதை தகப்பனும் மகனுமாக தோற்றமளித்த இருவர் தள்ளிக் கொண்டு வந்தார்கள். மயக்கமாகிய அல்லது இறந்த நாயை மட்டும்தான் வண்டியில் வைத்து தள்ளமுடியும். மனித நோயாளர்கள்போல் அவை ஒத்துளைப்பு கொடுப்பன அல்ல. இந்த நாய் மயக்கத்திற்கு அல்லது இறப்புக்கு அருகாமையில் இருப்பதாலே இவர்களால் அமைதியாக…

    noelnadesan

    28/03/2013
    Uncategorized
  • மீண்டும் கொம்பு சீவாதீர்கள்- நடேசன்

    தற்போது இலங்கைத் தமிழ் அரசியலை எழுதுவது மிகவும் சலிப்பான விடயமாகிறது. உமலில் இருந்து வெளியேறிய நண்டு மாதிரி பக்கவாட்டிலே சென்று மீண்டும் அதே புள்ளியை சென்று அடைகிறது. எத்தனை வருடங்கள் கழிந்தாலும் தொடக்கப் புள்ளியை விட்டு முன்னேறாது. இதில் ஒரு வசதி. தமிழ் நாட்டு மெகா சீரியல்போல் ஒரு மாதம் விடுமுறை  பார்க்காது இருந்தாலும் மீண்டு வந்து கலந்து கொள்ளமுடியும். இரசித்துக் கொள்ள முடியும். சீரியலாக இருந்துவிடுவதால், ஆனால் பல இலட்சம் மக்களது வாழ்க்கை பிரச்சனையாக இருப்பதால்…

    noelnadesan

    26/03/2013
    Uncategorized
    Random Thoughts
  • ஆய்வாளர் சிவலிங்கம் அவர்களது கேள்விக்கு எனது பதில்கள்

    இலண்டனில் வதியும்அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்களது கேள்விக்கு எனது பதில்கள் நடேசன் அவர்களின் நேர்காணல் பல அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது. அதாவது இலங்கையில் ஏற்பட்டுள்ள இன நெருக்கடிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்த கேள்வியாகும். அவரது கேள்வி பதிலில் இவ்வாறான பதில் காணப்படுகிறது. 1. ‘ இலங்கைத் தமிழ்ச் சமூகமாகிய நாங்கள் தற்போது விழுந்திருக்கும் குழியைச் சுற்றிக் கொண்டிருக்காமல் நாம் அதற்குள்ளிருந்து எழும்பி வெளியேற முடியுமா? எனப் பார்க்க வேண்டும். அந்தக் குழியை ஆழமாக தோண்டக்…

    noelnadesan

    25/03/2013
    Uncategorized
  • தென்னையும் பனையும்

    . நோயல் நடேசன். அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு சத்தியனின் குடும்பத்திற்கு விசா கிடைத்து விட்டதால் முழுக்குடும்பத்தினருமே மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர். சத்தியனின் மனைவி சுமதியின் கால்கள் நிலத்தில் பாவவில்லை. விசா வந்த நாளில் இருந்து இரண்டு பிள்ளைகளின் வாயிலும் அவுஸ்திரேலியா பற்றிய விடயங்களே வந்தன. மெல்பேன், சிட்னி, அடிலைட்… என்ற சொற்கள் தெறித்து விழுந்தன. தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்ததன் மூலம் அவுஸ்திரேலிய பூகோள சாத்திரத்தை சத்தியனின் குடும்பத்தினர் நன்றாக அறிந்து வைத்திருந்தனர். சுமதியின் அண்ணன் சிட்னியில் இருந்து அடிக்கடி அனுப்பும்…

    noelnadesan

    25/03/2013
    Uncategorized
  • பயணியின் பார்வையில் — 08

    இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை தேசாந்தரியின் இல்லத்தில் சில மணிநேரங்கள் முருகபூபதி தமிழகப்பயணம் பற்றிய இந்த எட்டாவது அங்கத்தை ஒரு கதைசொல்லி சொன்ன ஒரு கதையின் ஊடாகவே தொடரவிருக்கிறேன். ஒரு ஊரில் ஒருதேநீர் தயாரித்துவிற்பவன் இருந்தான். ஒருநாள் அந்த ஊரில் பிரபலமான ஒரு மல்யுத்தவீரன் அவன் கடைக்குவந்து தேநீர்கேட்டிருக்கிறான். அந்தத்தேநீர் தயாரிப்பவன் அன்று அந்த மல்யுத்தவீரனுக்கு தேநீர் தயாரிக்க சற்று காலதாமதமாகிவிட்டது. அதனால் கோபமுற்ற அந்த மல்யுத்த வீரன், “எனக்கு உனது தேநீர் வேண்டாம். என்னை…

    noelnadesan

    24/03/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை -7

    சுந்தரம்பிள்ளையின் மூன்றாவது நாளில் வேலை ஐந்து மணிக்கு ஆரம்பமாகி நடுநிசியில் முடிவது எனக் கூறப்பட்டது. இரவு வேலை தனித்து ஒரு வைத்தியராக செய்ய வேண்டும். அதைவிட அவசர சிகீச்சைகள் செய்ய வேண்டி இருக்கும் என்பது மனத்தில் அச்சத்தை கொடுத்தது. அன்று முழுவதும் அதே நினைவால் நிம்மதியாக வீட்டில் இருக்க முடியவில்லை. புதிதாக வேலையில் சேர்ந்த என்னை தனியாக இரவில் வேலை செய்ய சொன்னது சரியா என சிந்தனை ஓடியது. சமுத்திரத்தில் வீழ்ந்த பின்பு எப்படியும் சமாளிக்கவேண்டியதுதானே? பதற்றமும்…

    noelnadesan

    23/03/2013
    Uncategorized
  • ஆனந்தவிகடனின் சிறுமை

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாவிரர் நாள் அனுஷ்டிக்கப்படும் வேளையில் தமிழக வணிக இதழ் ஆனந்தவிகடனில் திட்டமிட்டு புனையப்பட்ட ஒரு விடயம் பதிவாகியிருந்தது. ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண்போராளி தற்பொழுது விபசாரம் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றவேண்டிய சூழலுக்கு ஆளாகியிருப்பதாக அந்த புனைவு கதைபண்ணியிருந்தது. கதை படைப்பதுவேறு கதைபண்ணுவது வேறு. ஆனந்தவிகடனின் வணிகநோக்குடனான அந்தப்புனைவில் உண்மை ஏதும் இல்லை என்று நிருவாகம் அறிந்ததும் அதனை எழுதியவர் அங்கிருந்து நிருவாகத்தினால் வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஏற்கனவே அங்கு நீண்ட காலம் பணியிலிருந்த…

    noelnadesan

    20/03/2013
    Uncategorized
  • எகிப்தில் சில நாட்கள்: 2

    “அந்த ஜக் டானியல் போத்தல் உள்ள பெட்டியை கையில் எடு” என நண்பன் கூறினான். நானும் அதேபோன்ற சிங்கிள் மோல்ட் விஸ்கி இரண்டு போத்தல் வைத்திருந்தேன். ஏனைய பெட்டிகளை அகமட் விமான நிலய பெல்டில் இருந்து தூக்கினார். குதிரையையும் வாளையும் துருக்கியர்கள் மற்றவர்களிடம் கொடுக்கமாட்டார்கள். அது போலத்தான் எங்களது விஸ்கி போத்தல்களை மற்றவர் கைகளில் கொடுக்க நாங்கள் தயாரில்லை. இரண்டு பேருமே குடிகாரர்கள் என நினைக்க வேண்டாம். அந்தப் போத்தில்கள் தனியாக கதை சொல்லும். கம்பன் வீட்டு…

    noelnadesan

    19/03/2013
    Uncategorized
    Travel (2)
முந்தையப் பக்கம்
1 … 139 140 141 142 143 … 165
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 103 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar