-
Not talking caste is unrealistic, says Perumal Murugan
LITERARY TALK Perumal Murugan talks to South Asia Times (SAT) Editor in Melbourne. Photo- SAT/NN. MELBOURNE: Perumal Murugan,57, Tamil writer famous and controversial for his bold books on caste, has often been in the news for social subjects weaved in traditional day to day life. He is a widely translated Tamil writer with a pan-India…
-
அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழக நினைவுகள்: 2
நன்றி – அபத்தம்: கனடா நான் கழகத்தின் செயலாளராக இருந்த காலத்தில் மெல்பன் நகரின் மத்திய பகுதியில் உள்ள லோட் சிமித் மிருக வைத்தியசாலையில் , மிருக வைத்தியராக வேலை செய்து கொண்டிருந்தேன். அது ஒரு டசினுக்கு மேலான மிருக வைத்தியர்களைக் கொண்ட வைத்தியசாலை. அங்கு மிருக வைத்தியரைப் பார்க்க இரு மணிநேரத்திற்கும் அதிகமாக மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் காத்திருப்பார்கள். அந்த இடத்தையே பின்னணியாக வைத்து எனது நாவலான அசோகனின் வைத்தியசாலையை எழுதினேன். அங்கு வேலை…
-
இமாலயக்கடன்:சிறுகதை
நடேசன் நான் ஒரு கொலையை மறைத்தேனா ? இல்லை , தொடர்ந்து மனைவியைத் துன்புறுத்திய ஆணைக் கருணைக் கொலை செய்ய உதவினேனா ? என்ற கேள்விக்கான விடையை ஓய்வு பெற்ற பின்னரும் காணமுடியவில்லை. பல வருடங்களுக்கு முன்பு, அதாவது எனது ஐம்பது வயதான காலத்தில் நடந்த சம்பவம் இது. அந்தச் சந்தேகம் கைகளுக்குள் பிடிக்க முடியாத பட்டாம்பூச்சியாக அங்கும் இங்கும் பறந்தது. சம்பவம் நடந்த வருடம், மாதம், நாள், நேரம் என இன்னமும் என் மனதில் ஆழமாக…
-
ஒடிசாவில் பௌத்தம்.
ஒரு பயணம் என்பது நூறு புத்தகங்களைப் படிப்பதற்குச் சமமானது என்று யாரோ சொல்லியிருந்தாக கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அதை நாம் பொருட்படுத்துவதில்லை. அதில் உள்ள உண்மைத்தன்மையை எனது பயணங்களில் பல தடவைகள் உணரும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். தவுலி (Dhauli) கலிங்கப்போர் நடந்த இடம் இந்தியாவின் கிழக்கு மாநிலமாகிய ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வர் . ஒடிசா முன்னைய கலிங்கத்தில் பெரும்பகுதியாகும். இலங்கைக்குப் பௌத்தம் கலிங்கத்திலிருந்து வந்ததும், பின்பு அதே கலிங்கத்திலிருந்து கலிங்கமேகன் படையெடுத்து வந்து பொலநறுவையில் உள்ள பௌத்த மடாலயங்களை…
-
கனடா – ரொறன்ரோவில் அநுரகுமார திசநாயக்கா நிகழ்த்திய உரை:2 .மாகாண சபைகள்.
இப்பொழுது பேசப்படுகின்ற 13 ஆம் திருத்தச் சட்டம், 13 ப்ளஸ், மாகாண சபை போன்றவை தொடர்பாக எங்களுடைய நிலைப்பாடு. நாங்கள் பொதுவாக நம்புகின்ற விதத்தில் மாகாண சபைகள் இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு அல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால், இன்று அந்த மாகாண சபைகள் என்பது அந்த குடிமக்களின் உரிமையாகி இருக்கிறது. இன்று அந்த மாகாண சபைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. அது அவர்களின் உரிமையாக இருக்கிறது. அது அவர்களினால் வென்றெடுக்கப்பட்ட உரிமையாக கருதப்படுகிறது. அதை இப்போது இல்லாமல்…
-
கனடா – ரொறன்ரோவில் அநுரகுமார திசநாயக்கா நிகழ்த்திய உரை .பகுதி 1
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசநாயக்கா, கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி, கனடா – ரொறன்ரோவில் மண்டபம் நிறைந்த தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில், உரையாற்றியபோது, இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் தோழர் மனோரஞ்சன், சிங்களத்தில் அவரிடம் கேட்ட கேள்விக்கு , அநுரகுமார சிங்களத்தில் அளித்த பதிலின் தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது. இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் பேரம் பேசும் ஓர் ஏற்பாடாக பயன்படுத்த வேண்டும்…
-
ATLAS- வாசிப்பு அனுபவப்பகிர்வு
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டியில் பரிசு பெற்ற நூல்கள் கடிகாரப் பறவைகள் – கவிதை – திருக்கோவில் கார்த்திகேசு வல்லமை தாராயோ – சிறுகதை – மாத்தளை வடிவேலன் வேராகிப்போன மனிதர்கள் – நாவல் – ஏ.எஸ். உபைத்துல்லா உரைகள் : மருத்துவர் ( திருமதி ) வாசுகி சித்திரசேனன் எழுத்தாளர் “ யோகன் “ யோகானந்தன் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா…
-
நம் காலத்து நாவல்கள் :10. கோவேறு கழுதைகள்.
மனிதர்கள் வாழ்வதற்கு இந்தப்பிறவியிலே மட்டுமே காரணங்கள் உள்ளன. இந்த உலகத்தைவிட வேறு உலகம் நமக்கு கிடையாது. அதனால் ஆவலோடு மனநிறைவாக ( Passion) வாழ்ந்து விடவேண்டும். வாழ்விற்கான காரணங்கள், வாழும் சூழ்நிலை, வயது, மற்றும் எமது நோக்கத்திற்கு ஏற்ப வேறுபடலாம். ஆனால், வாழ்வதற்கான தூண்டல்களைப் பற்றிக்கொண்டு முழுமனதோடு வாழவேண்டும் என்ற இருத்தலியலின் தத்துவத்தை இந்த நாவல் சொல்கிறது. நாவல், ஒரு கிறிஸ்துவ வண்ணாரக் குடும்பத்தில், முனைப்பான ஆளுமைகொண்ட பெண் பாத்திரமாக ஆரோக்கியத்தை உருவாக்கி, அவள் எப்படி மருமகள்,…
-
சிறுகதை: மனக்கோலம்
பல வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில், அகதி முகாங்களில் வேலை செய்த காலத்தில் கண்ட உண்மை சம்பவத்தை வைத்து எழுதியது நடேசன் பஸ் வந்து சேர்ந்த போது உச்சி வெயில் அடித்தது. நாங்கள் இருவரும் மட்டும் தான் பிரயாணிகள். தங்களது வேலை செய்து முடித்த திருப்தியுடன் டிரைவரும் கண்டக்டரும் பஸ்ஸை விட்டிறங்கி பெயர் தெரியாத இரு மரங்களின் பின்னே சென்றார்கள். இயற்கையில் பசளை இல்லாத கடற்கரை சார்ந்த மண்ணில் இவர்களின் உரங்களை நம்பி வளரும் மரங்கள். கண்டக்டரிடமோ…