Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • விலங்குப் பண்ணை

    விலங்குப் பண்ணை ( ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்:கந்தையா குமாரசாமி பாகம் 1 இரவுப் பாதுகாப்புக்காகக் கோழிக்கூடுகளை மனோ பண்ணை அதிபர் ஜோன்ஸ் பூட்டியிருந்தார். எனினும்அக்கூட்டின் சிறிய நுழைவாயில்களையும் அடைத்துவிட்டுவந்தாரா என்பது அளவுக்கு மீறிய மதுபோதை காரணமாக அவருக்கு ஞாபகமில்லை. அவர் கையிலிருக்கும் அரிக்கன் விளக்குக்கூடு மெல்லிய ஒளிக்கீற்றுடன் இரு பக்கமும் ஆடிக்கொண்டிருந்தது. அவர் தடுமாறியவண்ணம் பின் கதவுப்பக்கம் தனது காலணிகளை உதறிவிட்டுச் சமையலறைப் பாத்திரங்கள் கழுவும் இடத்துக்குச் சென்றார். அங்கிருந்த மரக்கூஜாவிலிருந்து ஒரு கிளாஸ் பியர் அருந்தினார்.பின்பு…

    noelnadesan

    19/02/2014
    Uncategorized
  • காவலூர் ஜெகநாதன்

    திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி 1980 ஆம் ஆண்டு காலப்பகுதி. வீரகேசரி அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஒப்புநோக்காளர் – அறைக்குள் Proof திருத்திக் கொண்டிருக்கின்றேன். இங்கே யார் முருகபூபதி ? கேள்வி எழுந்த பக்கம் நோக்கித் திகைக்கிறேன். வாசல் கண்ணாடிக்கதவை தள்ளித் திறந்து கொண்டு ஒரு இளைஞர் நிற்கிறார். எனக்கும் அவரை முன்பின் தெரியாது. நான்தான் முருகபூபதி. நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்? – என்று எழுகின்றேன். சக ஊழியர்களின் முகத்திலும் திகைப்பு வழிகின்றது. திடீரென ஒருவர்…

    noelnadesan

    18/02/2014
    Uncategorized
  • எகிப்தில் சிலநாட்கள் 16: யாவோவின் பத்துக்கட்டளைகள்.

    நடேசன் நாங்கள் நைல் நதியின் பயணத்தில் கடைசியாக சென்ற இடம் அபு சிம்பல்(Abu Simbel). இது அஸ்வான் அணையில் இருந்து இருநூற்று ஐம்பது கிலோமீட்டர் தெற்கே நூபியாவின் பிரதேசத்தில் உள்ளது. இங்கு இரண்டு கோயில்கள் மலைப்பாறையில் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது அஸ்வான் அணை கட்டும்போது உருவாகிய லேக்நாசர் என்ற நீரத்தேக்கத்தால் மூழ்கிவிடவிருந்த இந்தக் கோயில் யுனெஸ்கோ மற்றும் அமெரிக்க உதவியுடன் துண்டு துண்டாக வெட்டி உயரமான இடத்தில் மீண்டும் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு தற்பொழுது பாதுகாப்பாக செயற்கையான…

    noelnadesan

    16/02/2014
    Uncategorized
  • இலக்கியத்தினூடே பயணித்த பாலுமகேந்திரா

    முருகபூபதி ‘பாலு… உன்னுடைய நுண்ணுணர்வுகளுக்கும் இந்த மீடியத்தின் மீது நீ கொண்டிருக்கும் காதலுக்கும் உன்னுள் இருக்கும் படைப்புத்தாகத்திற்கும் நீ ஒரு இயக்குநராக மாறுவதுதான் இயல்பானது — விரைவில் நீ ஒரு படத்தை இயக்குவாய்— Mark My Words – என்று பல வருடங்களுக்கு முன்னர் கல்கத்தா மருத்துவமனையிலிருந்தவாறு – தன்னைப்பார்க்கவந்த பாலுமகேந்திராவை வாழ்த்தியவர் சர்வதேச புகழ் பெற்ற இயக்குநர் சத்தியஜித்ரே. புனா திரைப்படக்கல்லூரியில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவுக்கலையை பயின்ற காலத்தில் வருகைதரு விருந்தினராக விரிவுரையாற்ற வந்த சத்தியஜித்ரேயை ,…

    noelnadesan

    14/02/2014
    Uncategorized
  • ஒரு கூடைக்கொழுந்தின் இலக்கிய வாசம்

    திரும்பிப்பார்க்கின்றேன் சாயி இல்லத்தில் பக்தர்களின் பாதணிகளை ஏந்திய எளிமையான மலையகப்படைப்பாளி என்.எஸ்.எம். ராமையா முருகபூபதி இயற்கைச் சூழலின் மத்தியில் ஏகாந்தமாயிருந்து கலையம்சம் மிக்க – கலை – இலக்கியங்களைப் படைக்க வேண்டிய மணிக்கரங்கள் இரும்புக்கடையின் மத்தியில் கணக்கு ஏட்டுடன் சதா கருமமாற்றம் நிலை என்றுதான் மாறுமோ ? என்று நண்பர் மேகமூர்த்தி பல வருடங்களுக்கு முன்னர் என்.எஸ்.எம். ராமையாவைப் பற்றி மல்லிகையில் எழுதியது நினைவுக்கு வருகிறது. மேகமூர்த்தி இன்று கனடாவில். முன்பு வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியிலிருந்தவர்.…

    noelnadesan

    13/02/2014
    Uncategorized
  • சிரித்திரன் சிவஞானசுந்தரம்

    திரும்பிப் பார்க்கின்றேன் தமிழர்களைத் தட்டி எழுப்பிய பெரியோர் யார் ? கேள்வியால் வாழும் கார்டுன் கலைஞர் முருகபூபதி ஒருவர் தாம் பிறந்த நாளிலே பிறந்தநாள்தான் கொண்டாடுவார். ஆனால் யார்தான் இந்த உலகில் தாம் பிறந்த தினத்திலேயே தமது இறந்த நாளையும் பதிந்துவிட்டுச்செல்வார்? யோசித்துப்பாருங்கள். இவ்வாறு அபூர்வமான நிகழ்வுகள் சிலருக்குத்தான் சம்பவிக்கும். மறைந்தவரின் பிறந்தநாளை கொண்டாடுவதா அல்லது இறந்த நாளை நினைத்து அழுவதா? தாம் பிறந்த தினத்தையே இறந்த தினமாக்கிவிட்டுச் சென்ற ஒருவர் எம்மத்தியில் வாழ்ந்தார். அவர்தான் எங்களையெல்லாம்…

    noelnadesan

    11/02/2014
    Uncategorized
  • பிரேம்ஜி காலமானார்..

    முருகபூபதி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நீண்டகாலமாக அந்த அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பிரேம்ஜி ஞானசுந்தரன் நேற்று மாலை கனடாவில் காலமானார். அச்சுவேலியில் 17-11-1930 ஆம் திகதி பிறந்த பிறந்த ஞானசுந்தரன் தமது ஆரம்பக்கல்வியை அச்சுவேலி கிறீஸ்தவ கல்லூரியிலும் பின்னர் யாழ். பரமேஸ்வராக்கல்லூரியிலும் கற்றார். 1947 இல் தமது 17 வயதிலேயே சுதந்திர இளைஞர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். அன்றிலிருந்து ஞானசுந்தரன் தீவிரமான வாசிப்பிலும் எழுத்துத்துறையிலும் ஈடுபடத்தொடங்கினார். தமிழகம்சென்று மூத்த…

    noelnadesan

    08/02/2014
    Uncategorized
  • மக்களே எனது எஜமானர்கள்

    திரும்பிப்பார்க்கின்றேன் மக்களே எனது எஜமானர்கள் – அவர்களிடம்தான் நான் படித்தேன் – எனச்சொன்ன டானியல் ‘ இனவாதிகளினால் யாழ். பொது நூலகம் எரிந்ததற்கும் – மேல்சாதியினரால் தென்மராட்சியில் தாழ்த்தப்பட்ட மாணவரின் நூல்கள் எரிக்கப்பட்டதற்கும் இடையே வேறுபாடுகள் இல்லை ‘ முருகபூபதி ஒரு பத்திரிகையில் இவ்வாறு ஒரு நகைச்சுவைத்துணுக்கு. – ஒரு எழுத்தாளர் பத்திரிகை ஆசிரியரைச் சந்திக்கின்றார். பத்திரிகை ஆசிரியர் – வாரும் – வணக்கம். நீர் எழுத்தாளரா? எழுத்தாளர்: ஆம் நான் ஒரு எழுத்தாளன். பத்திரிகை ஆசிரியர்…

    noelnadesan

    06/02/2014
    Uncategorized
  • சிக்னல் பற்பசை தலையிடி மருந்தாகியது.

    எக்ஸோடஸ் 84 நடேசன் அமிஞ்சிக்கரையில் அடுக்கு மாடியில் ஒரு வீட்டில் காசி விஸ்வநாதன் மாஸ்டர் மனைவியுடன் இருந்தார். மாஸ்டரும் மனைவியும் ஏற்கனவே என்னுடன் படித்த செல்வகுமாரின் பெற்றோர்கள் என்பதால் ஏற்கனவே அறிமுகமானவர்கள். அவர்கள் வீட்டில் பரந்தாமன் என்ற சிறுவயது நண்பன் எனக்கு ஞானம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஈழமக்கள் புரடசிகரமுன்னணியின் முக்கியஸ்தராகவும் காசி விஸ்வநாதன் மாஸ்டரால் அறிமுகப்படுத்தப்பட்டார். என்னுடன் படித்தவர்கள் இப்படி அரசியல் முக்கியஸ்தர்களாக இருப்பது ஒருவிதத்தில் ஆச்சரியமளித்ததுடன், அந்த அறிமுகம் எனக்கு அதிர்ச்சியையும் தந்தது. அதுவரையும்…

    noelnadesan

    04/02/2014
    Uncategorized
  • எகிப்தில் சிலநாட்கள்- 15: பாலஸ்தீன- இஸ்ரேலிய முரண்பாடு சகோதர முரண்பாடா?

    temple-of-philae நடேசன் இரவு உல்லாசப்படகில் பயணம் செய்யும் எங்களுக்கு இசை மற்றும் நடனவிருந்து என்பன எமது பயணமுகவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி வந்ததும் – இரவு உணவிற்குப்பின் அதற்காக ஆவலுடன் காத்திருந்தோம். என் மனத்துள் எகிப்தியப் பெண் ஒருத்தியின் பெலிடான்ஸ் நடந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் பாதம்வரை மறைத்த எகிப்திய பெண் தொப்புளை எப்படி காட்டப்போகிறாள் என்ற நினைவுடன் எகிப்திய வெண்ணிறப் பெண்ணா இல்லை, நூபிய பிரதேசத்து சொக்கிளேட் வர்ணப்பெண்ணா என்ற கேள்வியும் நித்தம் படகில்…

    noelnadesan

    03/02/2014
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 122 123 124 125 126 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar