-
ஜெயமோகன்
2009ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் நான் வெளியிட்ட உதயம் இருமொழி (தமிழ்ஃஆங்கிலம்) பத்திரிகையின் 12 ஆவது நிறைவுவிழாவுக்கு அவரை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்திருந்தேன். அப்பொழுதும் பலர் அவரை அவுஸ்திரேலியாவுக்கு நடேசனது அழைப்பில் போகவேண்டாம் என தடுத்தார்கள். அவர் வந்தால் அவரது வருகைமூலம் தமிழ்த்தேசியத்துக்கு துடக்கு வந்துவிடும் என கனவுகண்டார்கள். இங்கு அவரது நிகழ்வுகளை பகிஷ்கரிக்க ஆர்பாட்டம் செய்யவும் தயாரானார்கள். அந்த நிகழ்ச்சியில் அவுஸ்திரேலியாவின் பிரபல நாளிதழான the Age இன் இணை ஆசிரியர் ஜேம்ஸ் பட்டன் அவர்களும்…
-
What is wrong with the Tamil leadership in Sri Lanka ?
Noel Nadesan ( Courtesy colombotelegraph) Present political climate in Sri Lanka, especially the Tamil politics, reminds me an ancient Greek mythology. King Sisyphus was condemned by the Olympian God Zeus to spend all the eternity in fruitless labour, rolling a rock up a mountain until it rolled back down its own weight, again and again.…
-
எழுத மறந்த கவிதை
பேராதனையில் படித்த காலத்தில் எழுத நினைத்துவிட்டு அது எனது நண்பர்களுக்கோ எனது காதலிக்கோ புரியாது என நினைத்து மறந்துவிட்ட கவிதை இப்போதய நிலையில் விடலைதனத்தை நினைத்து பார்கிறேன் நேரடியாக பேசும் எனக்கு மறைபொருள் தேவையில்லை என நினைக்கிறேன். பார்வையில் அழிந்து தொடுகையில் கலைந்து உடல் கலந்து உப்புக் கடலாகி அடுத்து முத்தாகினேன்
-
தமிழகக் கவிஞர் சல்மாவுடன் இலக்கியச்சந்திப்பு
மெல்பனில் தமிழகக் கவிஞர் சல்மாவுடன் இலக்கியச்சந்திப்பு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஒழுங்குசெய்துள்ள இலக்கியச்சந்திப்பில் தமிழ் நாட்டில் இருந்து வருகைதரும் எழுத்தாளரும் சமூகச்செயற்பாட்டாளருமான கவிஞர் சல்மா உரையாற்றுவார். எதிர்வரும் 14-08-2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரையில் மெல்பனில் Mulgrave Neighborhood House ( 36 – 42 Mackie Road, Mulgrave – Vic – 3170) மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும். ஒரு மாலையும் இன்னொரு மாலையும் – பச்சை தேவதை…
-
இரத்தினதுரையின் கவிதை
காசியானந்தன் ஒரு வக்கிரமான கவிஞன் , ஆனால் புதுவையை கவிஞனாக ஏற்றுக்கொண்டேன் . விடுதலை இயக்கம் மனிதர்களைக் கொலைகாராக்குவதுடன் கவிஞர்களை வக்கிரமானவர்களாக மாற்றியது என்பதற்கு இந்தக்கவிதை உதாரணம் இரத்தினதுரையின் கவிதை ஒன்றில் முக்கியமான துரோகிகள் பட்டியல் இட்டு காட்டப்பட்டு இருந்தனர். கவிதை வருமாறு: – வானத்துத் தேவதை பூமிக்கு வருகின்றாள். வரம்கேட்க காத்திருப்பவர்களே வரிசையாக வாருங்கள். “வெண்தாமரைத் தட்டேந்திய” வெடியரசி வீதிக்கு வருகின்றாள் எல்லோரும் எழுந்து நில்லுங்கள். ” நவாலி நரபலி” நாயகி உலா வருகின்றாள் பிக்குகளே…
-
பர்மிய நாட்கள் 10.
மண்டலேயில் இருந்து நாங்கள் வீதி வழியாக சென்ற இடம் பகான் என்ற பர்மாவின் புராதனத் தலைநகரம். வுழியெங்கும் இலங்கையின் அனுராதபுரம் மாதிரியான நிலஅமைப்பு . பர்மியர்களின் பானை வனைதல், பனைமரத்தின் கள்ளில் இருந்து சர்க்கரை எடுத்தல், சாராயம் வடித்தல், விவசாயம் செக்கில் எண்ணை எடுத்தல் என்பவற்றை வழி நெடுக பார்த்தபோது ஊர் இலங்கையின் நினைவுகள் வந்தன. நாங்கள் போகும் வழியில் பகன் அருகில் 1500 அடிகள் உயரத்தில் ஒரு சுற்றிவரக் குன்றுகள் அற்று ஒற்றைமலை நேராகத் வானத்தை…
-
வாழும்சுவடுகள் – முதல் நூல் வெளியீட்டு அனுபவம்.
மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் இடையே நீடிக்கும் உறவை சித்திரித்தேன்.எனது தொழில்சார் அனுபவங்களின் ஊடாகவே இலக்கியத்தில் பிரவேசித்தேன்.நடேசன் – அவுஸ்திரேலியா நூலாசிரியனாவது இலகுவானது அல்ல எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஆர்வம் திறமை கடும் உழைப்பு என்பவற்றோடு, தமிழ் மொழியில் எழுதுவது எந்தவித பிரதிபலனோ அற்ற விடயமாக இருக்கிறது. மொழி என்பது கோசத்திற்கு மட்டுமே பாவிக்கப்படும் துர்ப்பாக்கியம் நமது மொழிக்கு உண்டு. இலக்கியம் – செய்தி என்ற இரு விடயங்களைத் தவிர அறிவு சார்ந்த துறைகளில் தமிழில் எழுதுபவர்களோ, வாசிப்பவர்களோ இல்லாத காலத்தில் நாம்…
-
என் பர்மிய நாட்கள் 9.
ஐராவதி நதியில் ஒரு பயணம் ஆறுகள் மனித வரலாற்றின் தொட்டில்கள். நாடோடிகளாக வாழ்ந்த மனிதர்கள் ஆற்றுப் படுக்கைகளில் நிரந்தரமாக குடியிருந்து விவசாயம் செய்தது மடடுமல்ல, மனிதர்களின் நாகரீகம், பண்பாட்டுடன் வழிபடும் மதங்களின் ஊற்றிடமும் ஆறுகளே. கங்கையை இந்துமதத்தில் இருந்து மடடுமல்ல, இந்தியதேசத்தின் கலாச்சாரத்தில் இருந்து பிரித்து பார்க்க முடியாது அதேபோல் யுத மதத்தின் மூலமான பத்துக் கட்டளைகள் நைல்நதியில் மிதந்த குழந்தை மோசஸ் உருவாகியது. புராதன எகிப்திய மதம், பபிலோனியர்களது வாழ்க்கை, பண்பாடு ஆறுகளை அண்டியே வளர்ந்தது.…
-
பதுங்கு குழி. (சிறுகதை)
நடேசன் 00 அவளுக்கென தற்பொழுது சொந்தங்கள் இல்லை. அகதிமுகாம் வாழ்க்கை நிம்மதியை கொடுக்காது விட்டாலும் தனிமையைக் குறைத்தது. பேசுவதற்கும் பழகுவதற்கும் பலர் இருந்தார்கள். அவளால் பலருக்கு உதவி செய்யமுடிந்தது. அதிலும் குழந்தைகளை பராமரிக்க உதவுவதில் பெரும்பாலான நேரம் கழிந்தது. ஒருவிடயம் மட்டும் அவளுக்கு தொந்தரவாக இருந்தது. அதுவும் இரவுகளில் அந்தத் தொல்லை வந்து சேருகிறது. மற்றவர்களிடம் பேசி ஆறுதலடைய முடியாத விடயம். அதைத் தீர்க்க அவளுக்கு வழி தெரியவில்லை. பல நாட்களாக தலையைப் போட்டு உடைத்தாள். எதுவும்…
-
சாபத் நாளில் மட்டும் (சிறுகதை)
நடேசன் சாபத் நாளில் மட்டும் (சிறுகதை) / நடேசன் ( ஆஸ்திரேலியா ) அவுஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்து வந்த பின்னர் உணவு விடுதி, தொழிற்சாலை மற்றும் பல்கலைக்கழகம் முதலான சில இடங்களில் பலரோடு பணியாற்றியிருக்கின்றேன். இந்தப் பணிகள் மிருகவைத்தியராக என்னை நான் இந்த நாட்டில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக இடைக்காலத்தில் மேற்கொண்டவை. இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தை கவனித்தவாறு எனது துறையில் படிப்பது என்பது, கடலில் தனியாக படகைச் செலுத்தியபடி வலைவீசி மீன்பிடிப்பது போன்றது. இலங்கையில் ஐந்து…