-
“King Asoka’s Veterinary Hospital,” is available on Amazon.
Siva Sundram Pillai is a young veterinarian who has migrated to Melbourne Australia to start a new life. After several years of studying and drifting from job to job he finally secures a position in one of the prominent Veterinary hospitals in Melbourne. As he settles into his new position and starts to lay down…
-
குஜராத்- காந்தியின் நிலம்.
இந்தியாவில் அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் மாநிலங்கள் ராஜஸ்தான், கோவா, மற்றும் கேரளம் என்பன. இதைவிடப் மற்றய மாநிலங்ளுக்கு செல்வதற்கான வசதிகள் செய்வதற்கு வழிவகைகள் வெளிநாட்டில் உள்ள பிரயாண முகவர்களிடம் இருப்பதில்லை. பெரும்பாலும் நியூ டெல்கி – தாஜ்மகால்- ஜெய்ப்பூர் படங்கள் பதிவான முக்கோணத்தை இந்திய பயணத்திற்கான முக்கிய இடங்கள் என விளம்பரப்படுத்துவார்கள். இதற்கு யார் காரணம்? பெரிய வசதிகள் உள்ள தமிழ்நாடு மாநிலத்திற்கான பயணத்தைப்பற்றிய தகவல்களை வெளிநாடுகளிலிருக்கும் முகவர்களிடம் தேடினால் கிடைக்காது. மற்ற மாநிலங்களுக்குப் பயணிப்பவர்கள் பெரும்பாலும்…
-
With SBS interview after the war.
https://www.youtube.com/watch?v=dyJNLcIMvas&has_verified=1&fbclid=IwAR1b52pY7idwjy2tTgcfp0XdfmlMjsg3LJn-b27ocwC1ct3mBWTTpTK4Hmg https://www.youtube.com/watch?v=gyRSDq-HET0&fbclid=IwAR1b52pY7idwjy2tTgcfp0XdfmlMjsg3LJn-b27ocwC1ct3mBWTTpTK4Hmg
-
காயங்கள் ஆறவேண்டும்
நடேசன் அவுஸ்திரேலியாவில் புதிதாக வீடு கட்டிய பின்னர், வீட்டுக்கு முன்புறமும் பின்புறமும் புற்களை விரிப்பாகக் கொண்டு வந்து பதித்து புற்தரையை உருவாக்குவார்கள். சில இடங்களில் புல் அழிந்தாலோ அல்லது , வளராது போனாலோ புல் விதைகளை நட்டு, மெல்பன் கிரிக்கட் மைதானம்போன்று புற்களை வளர்ப்பார்கள். பின்பு இரண்டு அல்லது மூன்று கிழமைக்கு ஒரு முறை அவற்றை வெட்டுவார்கள் . நன்றாக வளராதபோது அதற்கு பசளையிடுவார்கள். கோடை வந்தால் பணம் கொடுத்து வாங்கிய குடி நீரை ஒன்று விட்டு…
-
ஆவி எதை தேடியது ?
நத்தை தனது ஓட்டையும் பாம்பு தனது தோலையும் புதுப்பித்துக்கொள்வது போன்று, அவுஸ்திரேலியர்களும் தாங்கள் வாழும் வீட்டை ஏழு வருடங்களுக்கு ஒரு தடவை மாற்றிக்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்ந்த வீடுகள் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை விற்பனைச் சந்தைக்கு வரும். வயதானவர்கள் பெரிய வீட்டை விற்றுவிட்டு, மற்றும் ஒரு சிறிய வீட்டைத் தேடுவார்கள்.அதேபோன்று குடும்பம் பெருகுவதால் மட்டுமன்றி, குடும்பம் பிரிவதாலும் வீடுகள் மாறுகின்றன. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இங்கு வாழ வந்தவர்களால் அவுஸ்திரேலியர்களின் இந்த மனப்பான்மையை நம்ப…
-
எனது கணவன் எனது நாய்க்கு அலர்ஜி
கடந்த நான்கு வருடங்களாக விவியனின் இருநாய்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறேன். ராணியை நான்கு வயது குட்டியாக இருந்தபோது தடுப்பூசி போட்ட காலத்தில் இருந்து எனக்கு தெரியும். எனது பரிசோதனைமேசையில் ஏறியவுடன் மிகவும் சாவகசமாக இருந்து என் கைகளையும் ஏன் முகத்தையும் கூட நக்க முயற்சிக்கும்.பொப்பி வயதான தீபெத்தியன் ரெரியர் எனப்படும் நாய். எனது விரலைக் கடித்து ருசி பார்க்க விரும்பும். நகம்வெட்டுவது போன்ற சிறிய வேலைகளுக்குக்கூட மயக்க மருந்து கொடுக்க வேண்டும். இது பல வருடங்களாகத் தோல்…
-
இலங்கை சாகித்திய மண்டலம் – தமிழ்ப் பிரிவு என்ன செய்கிறது?
அன்புள்ள கலை, இலக்கிய நண்பர்களுக்கு வணக்கம். அனைவரும் நலம்தானே..? கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதி முதல் தற்போது வரையில் உலகெங்கும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் சமூக இடைவெளி பேணலுக்கு நாம் ஆளாகியிருக்கின்றோம். இந்தப்பின்னணியில் இணையவழி காணொளி நிகழ்ச்சிகள் உலகெங்கும் இடம்பெற்றுவருகின்றன. அண்மையில் தமிழ்நாட்டில் மறைந்த மூத்த எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்களின் நினைவுப்பகிர்வு நிகழ்ச்சியை இந்திய சாகித்திய அக்கடமி இணையவழியில் காணொளியாக நடத்தியதை அறிந்திருப்பீர்கள். இவ்வாண்டு மறைந்த ஈழத்தின் மற்றும் ஒரு எழுத்தாளர் சமூகச்செயற்பாட்டாளர்…
-
MY THOUGHTS – By Dr Narendran 2009
Tamils of Sri Lanka are at a point in history when we have to: 1. Honestly, dispassionately and objectively view the past and draw the correct inferences. 2. Envision a future that takes into account current realities. The most significant of these being the enfeebled state of the indigenous Tamils (of the north and east)…
-
தன்மைக்கூற்றின் பலவீனம்
நோயல் நடேசனின் கதையொன்றை முன்வைத்து ஒரு விசாரணை ”இராமேஸ்வரத்திலிருந்து உங்களுரில் அநேக ஆவிகள் சுற்றித் திரிவதை என்னால் பார்க்க முடிகிறது . அவற்றில் நல்ல ஆவிகள் மற்றும் தீய ஆவிகள் என இரண்டு பிரிவுகள் உண்டு. அவை அனைத்துமே மரணம் அடைந்தவர்களின் ஆவிகள். ஒருவர் மரணம் அடைந்துவிட்ட பின்பு, அவர்கள் உடலில் இருந்து வெளியேறும் ஜீவன், உடனேயே இன்னொரு பிறவி எடுக்க முடியாது. மறுபிறப்படைய வழக்கமாக ஒரு வருடகாலமாகும் . இந்த மறுபிறப்பிற்காகவே திதி செய்கிறோம் .…
-
பெருநண்டு
இக்கதையின் நாயகன் பெருநண்டு. ஆறறிவுள்ள மனிதன் வில்லன். நண்டு வர்க்கத்தில் பெரியது பெருநண்டாகும். அதனது சுவை மறக்கமுடியாதது. அதிலும் எழுவைதீவு எனும் சிறிய தீவில் பிறந்து வளர்ந்த எனக்கு நண்டுகறி பிடித்தமானதாகும். ஆஸ்திரேலியாவுக்கு வந்தபின் நண்டுக் கறி சாப்பிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.இங்கு சீனக்கடைகளில் மட்டுமே நண்டு காணப்படும். எங்கள் ஊரில் மீன்வலையில் நண்டு சிக்கினால் மீனவர்களுக்குப் பலத்த கோபம் ஏற்படும். நண்டு வலையில் சிக்கியவுடன் வலையைக்கடித்து சிதைத்துவிடும். மீனவர்கள் நண்டின் மீது கொண்ட ஆத்திரத்தால் அதன் இருகால்களையும்…