-
தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்
முருகபூபதி “ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா…? “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி. எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “ இவ்வாறு தனுஜா, தன்வரலாற்று நூலில் பேசும் வரிகள் 133 ஆம் பக்கத்தில் இடம்பெறுகின்றன. ஆம் , எமக்கும் திருநங்கை ஜமாத் பற்றி எதுவுமே அதன் அரிச்சுவடியே தெரியாதுதான். தமிழ்த்திரைப்படங்களில் திருநங்கைகளை ரசிகர்களை சிரிக்கவைக்கும் பாத்திரமாக படைத்து இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் பணம் சம்பாதித்தனர்.…
-
மெல்பன் நகரம் சொல்லும் கதை
Photos and article நடேசன் பெருநகரங்கள் நமது காதலிகள் போன்றவை. காதலியின் அகத்தையும் புறத்தையும் முழுமையாகத் தெரிந்து கொண்டோம் என நினைத்து திருமணத்திற்குத் தயாராகும் பொழுது அவர்கள் புதிதாக மாறிவிடுவார்கள். உங்களது பார்வையில் லியோனிடோ டாவின்சியின் ஓவியமாகத் தெரிந்தவர்கள் பின்பு , பிக்காசோவின் அரூப ஓவியமாக தெரிவார்கள். புதிய புதிய அர்த்தம் கொள்ளவைப்பார்கள். நீங்கள் பழைய காதலியைத் தேடும்போது அவர்கள் அங்கிருக்கமாட்டார்கள். ஆச்சரியம் , ஆதங்கம், ஏமாற்றம் ஏற்பட்டால் அதற்கு அவர்கள் பொறுப்பல்ல. அது…
-
உண்மை கலந்த நாட்குறிப்புகள்.
அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள். நடேசன் ————————————————————- ஆயிரத்தொரு இரவுகள் என்ற புனைவைப் பற்றி நாம் கேட்டிருப்போம். ஃபிரேம் (Frame) வகையான கதை சொல்லல் முறையில், அதாவது திரைப்படத்திற்கான காட்சிகள் ஒன்று – இரண்டு என எழுதப்படுவதுபோல் கதைக்குள் கதை வைத்துக் (Genre )கதை சொல்லல். ஆயிரத்தொரு இரவுகள் அரபிக் கதையல்ல. இந்தியாவிலிருந்து மேற்காக நகர்ந்தது . பஞ்சதந்திரம் மற்றும் ஜாதகக்கதைகள் இப்படியான பிரேம் கதைகளாக உருவாகி பாரசீகத்துடாக அரேபிய வியாபாரிகளால் வியாபாரப் பொதிகளோடு எடுத்துச்…
-
மேரியின் நாய்.
நடேசன் 2020 கார்த்திகை மாதம்- மெல்பேன் – மல்கிறேவ் மிருக வைத்தியசாலை வசந்தகாலமாக இருக்கவேண்டும் ஆனால் இந்த வருடம் குளிர்காலமும் வசந்தமும் ஒன்றுடன் ஒன்று பிரியாது இருந்தது. அது பெரிதான பிரச்சனை இல்லை . கொரானால் மெல்பேன் நகரம் மூடப்பட்டு அல்பேட் காமுவின் பிளேக்கின் கற்பனைக்கு, 21ம் நூற்றாண்டில் நிஜமான வடிவம் கொடுக்கப்பட்ட காலம். ஆனால் மிருகவைத்தியர்கள் அவசரகால வேலையாளர்களின் பகுதியாக இருப்பதால் தொழில் செய்ய அனுமதியுள்ளது. மிருக வைத்திய நிலையத்தில் காலை பத்து மணிக்குப் பதியப்பட்டிருந்த…
-
நினைவோடையில் நண்பர் சபேசன்
நடேசன்.https://youtu.be/FDqzNiBA4Go இந்த நினைவுக் காணொலியை சபேசனுக்காக நண்பர் முருகபூபதியும் நானும் ஒழுங்கு பண்ணியது நண்பர் சபேசனுக்காக மட்டுமல்ல. பல காரணங்கள் உண்டு 1) பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களை சமூகம் இலகுவாக மறந்துவிடுகிறது. பல முறை அவர்கள் குடும்பத்திலும் நல்ல பெயர் வாங்குவதில்லை . அப்படி இயங்குபவர்கள் எப்படி குடும்பங்களைப் புறந்தள்ளுவார்கள் என்பது எனக்கும் தெரியும். ஆறு நாட்கள் வேலை செய்ததுடன் என ஏழாவது நாளும் உதயத்திற்காக வேலை செய்தேன். அதற்கு முன்பு அஸ்திரேலிய தமிழ் அகதிகள் சங்கம் அதற்கு…
-
கானல்தேசம்
Ⓜ️ G _ கிஷ்னா ♨️ rated it it was amazing ஈழத்தில் போர் முடிந்த பின்னர் வெளிவந்த இலக்கியபடைப்புகளில் அநேகமானவை விடுதலைபுலிகளின் சார்பாக, உண்மையை முற்றிலும் புறம்தள்ளி எழுதபட்டவை . அவற்றில் இருந்து நோயல் நடேசனின் #கானல்தேசம் வித்தியாசபடுகிறது. புனைவுதான் என்றாலும், வெளிநாட்டு அரசுகள் எவ்வாறு இப்போரின் பின்நிலையில் இயங்கின. அவர்களது உளவு நிறுவனங்கள் எங்கெல்லாம், எவ்வாறு ஊடுருவி இருந்தன, எமது பொடியளின் சர்வதேச வலையடைப்பு எவ்வாறு இயங்கியது. உள்நாட்டிலும் எங்களுக்கு தெரியாமல் கண்கட்டி…
-
கொரோனா காலத்தின் பின் பயணம்.
நடேசன் மெல்பனில் இருநூற்றி ஐம்பது நாட்கள், ஐந்து மில்லியன் மக்கள் வீட்டுக் காவலில் இருந்தார்கள். உணவு, உடற்பயிற்சி முதலான அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டும் வெளியே போக முடியும். அதுவும் ஐந்து கிலோமீட்டர் மட்டுமே. கடந்த இரண்டு கிழமைகள் கொரோனாவால் எதுவித தொற்றும் மெல்பனில் இல்லை என்பதால் நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டு , தடுப்புக்காவல் முடிவடைந்து, முகமூடியோடு மெல்பன் மக்கள் வெளியேசெல்ல அனுமதியளிக்கப்பட்டது. அந்த அனுமதி விக்ரோரியா மாநிலத்தின் உள்ளே மட்டும் செல்லுபடியாகும். பக்கத்து மாநிலங்களுக்குப் போக முடியாது.…
-
Gorden Weiss- Cage- தமிழாக்கமான ‘கூண்டு’.
(Gorden Weiss)கார்டன் வைஸ்சின் தமிழாக்கமான கூண்டு தற்செயலாக வாசிக்கக் கிடைத்தது. பல இடங்களில் ஆங்கில புத்தகத்தை பார்த்திருந்தேன். அதை மேலாலே பார்த்து விட்டு நகர்ந்தேன் . ஆனால் கூண்டு என்ற அதன் தமிழாக்கம். ஏன் தமிழ்த்தேசியர்கள் பலர் அதைப் பேசவில்லை என ஆச்சரியப்படுகிறேன்.அவர்கள் பெரும்பாலானவர்கள் புத்தகங்களை வாசிக்காதவர்கள் அல்லது ஆனந்தவிகடன் குமுதத்தின் வாசகர்கள் என்பது தெரிந்தாலும் அவர்களில் ஒரு வீதத்தினராவது பேசியிருந்தால் புத்தகத்தைப்பற்றி எனக்குத் தெரிந்திருக்கும். முக்கியமாக தமிழர்கள் மத்தியில் வெளியிட்டதாகத் தெரியவில்லை. பின் அட்டைக்கு பேராசிரியர்…
-
சபேசனின் வாழ்வும் பணிகளை நினைவுகூரல்
சபேசனின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூரும் அரங்கம் இன்று 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இணையவழி காணொளி ஊடாக ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வை சபேசனின் நண்பர்கள் – எழுத்தாளர்கள் நடேசன், முருகபூபதி ஆகியோர் ஏற்பாடுசெய்துள்ளனர். இணைய வழி காணொளி அரங்கின் இணைப்பாளர் திரு. விமல் அரவிந்தன். இக்காணொளி அரங்கில் திரு. ஜூட் பிரகாஷ், தமிழக பேராசிரியர் சுப. வீரபாண்டியன், சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன், திரு. சுந்தரமூர்த்தி, திரு. நவரத்தினம் இளங்கோ, எழுத்தாளர் பாடும்மீன் ஶ்ரீகந்தராசா, திரு. மோகன் குமார் திருமதி சிவமலர்…
-
அனார் கவிதைகள்- ஒரு சுருக்கமான அறிமுகம்
எம். ஏ. நுஃமான் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் நடத்தும் அனார் கவிதைகள் பற்றிய கலந்துரையாடலைத் தொடக்கிவைக்கும் முகமாக அனாரை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு சிறு குறிப்பை அனுப்பிவைக்குமாறு நண்பர் நடேசன் என்னைக் கேட்டுக்கொண்டார். அனாருக்கு புதிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை எனினும், கருத்தரங்கச் சம்பிரதாயத்துக்காக நான் இந்தச் சிறிய அறிமுகக் குறிப்பை உங்கள் முன்வைக்கின்றேன். அனார் 1990 களின் நடுப்பகுதியில் கவிதை எழுதத் தொடங்கினார் என்று நினைக்கிறேன். எனினும் அவருடைய ஆரம்ப காலத்திலேயே, 2004ல் வெளிவந்த…