-
Gorden Weiss- Cage- தமிழாக்கமான ‘கூண்டு’.
(Gorden Weiss)கார்டன் வைஸ்சின் தமிழாக்கமான கூண்டு தற்செயலாக வாசிக்கக் கிடைத்தது. பல இடங்களில் ஆங்கில புத்தகத்தை பார்த்திருந்தேன். அதை மேலாலே பார்த்து விட்டு நகர்ந்தேன் . ஆனால் கூண்டு என்ற அதன் தமிழாக்கம். ஏன் தமிழ்த்தேசியர்கள் பலர் அதைப் பேசவில்லை என ஆச்சரியப்படுகிறேன்.அவர்கள் பெரும்பாலானவர்கள் புத்தகங்களை வாசிக்காதவர்கள் அல்லது ஆனந்தவிகடன் குமுதத்தின் வாசகர்கள் என்பது தெரிந்தாலும் அவர்களில் ஒரு வீதத்தினராவது பேசியிருந்தால் புத்தகத்தைப்பற்றி எனக்குத் தெரிந்திருக்கும். முக்கியமாக தமிழர்கள் மத்தியில் வெளியிட்டதாகத் தெரியவில்லை. பின் அட்டைக்கு பேராசிரியர்…
-
சபேசனின் வாழ்வும் பணிகளை நினைவுகூரல்
சபேசனின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூரும் அரங்கம் இன்று 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இணையவழி காணொளி ஊடாக ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வை சபேசனின் நண்பர்கள் – எழுத்தாளர்கள் நடேசன், முருகபூபதி ஆகியோர் ஏற்பாடுசெய்துள்ளனர். இணைய வழி காணொளி அரங்கின் இணைப்பாளர் திரு. விமல் அரவிந்தன். இக்காணொளி அரங்கில் திரு. ஜூட் பிரகாஷ், தமிழக பேராசிரியர் சுப. வீரபாண்டியன், சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன், திரு. சுந்தரமூர்த்தி, திரு. நவரத்தினம் இளங்கோ, எழுத்தாளர் பாடும்மீன் ஶ்ரீகந்தராசா, திரு. மோகன் குமார் திருமதி சிவமலர்…
-
அனார் கவிதைகள்- ஒரு சுருக்கமான அறிமுகம்
எம். ஏ. நுஃமான் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் நடத்தும் அனார் கவிதைகள் பற்றிய கலந்துரையாடலைத் தொடக்கிவைக்கும் முகமாக அனாரை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு சிறு குறிப்பை அனுப்பிவைக்குமாறு நண்பர் நடேசன் என்னைக் கேட்டுக்கொண்டார். அனாருக்கு புதிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை எனினும், கருத்தரங்கச் சம்பிரதாயத்துக்காக நான் இந்தச் சிறிய அறிமுகக் குறிப்பை உங்கள் முன்வைக்கின்றேன். அனார் 1990 களின் நடுப்பகுதியில் கவிதை எழுதத் தொடங்கினார் என்று நினைக்கிறேன். எனினும் அவருடைய ஆரம்ப காலத்திலேயே, 2004ல் வெளிவந்த…
-
மரண அறிவித்தல்
திருமதி சண்முகவடிவம்பாள் சண்முகம் (செல்வி ) நீர்கொழும்பு திரு. சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும், சிவகுமார், சாந்தகுமார், பிரேம்குமார், ஜெயசித்ரா ஆகியோரின் அருமைத் தாயாரும், இந்திரன், ஜெயந்தி, சுபாஷினி, சாதினி ஆகியோரின் அன்பு மாமியாரும், முருகபூபதி, பரிமளஜெயந்தி, நித்தியானந்தன், ஶ்ரீதரன் ஆகியோரின் அன்புச்சகோதரியும், நவரட்ணம், மாலதி, ஜெயா, சோபிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஜெயானா, ஜெயமிதா, ரஷிகா ஆகியோரின் அருமைப்பேத்தியாருமான திருமதி “செல்வி “ சண்முகவடிவம்பாள் சண்முகம் நேற்று 01 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ( 01-12-2020…
-
அமரர் சண்முகம் சபேசன் காணொளி அரங்கு
( அமரர் ) சண்முகம் சபேசன் நினைவுப்பகிர்வு காணொளி அரங்கு எழுத்தாளரும் சமூகச்செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளரும் வானொலி ஊடகவியலாளருமான ( அமரர் ) சண்முகம் சபேசன் அவர்களைநினைவுகூரும் இணையவழி காணொளி அரங்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி (06-12-2020 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணி – அவுஸ்திரேலியா – மெல்பன் நேரம் ) இந்தியா – தமிழ்நாடு நேரம் பகல் 1.30 மணி ஐரோப்பா – நேரம் காலை 8.00 மணி அமரர்…
-
சில நேரத்தில் சில நினைவுகள்.
நடேசன். அமெரிக்காவில் 2020 இல் நடந்து முடிந்த தேர்தலை மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எப்படி எதிர் கொள்வார்கள்? அமெரிக்க மக்களில் அதிகமானவர்கள் இறை நம்பிக்கைகொண்டவர்கள். டொனால்ட் ட்ரம்ப்பும் சரி ஜோசப் பைடனும் சரி பைபிளில் தங்களது உறுதியை எடுத்துக் கொள்பவர்கள் . அதிலும் பைடன் ஒரு ஐரிஸ் கத்தோலிக்கர் . தலைவர்கள் அப்படிப்பட்டவர்கள் என்றால் மக்களும் அவ்வழியே . இல்லையா ? ஆபிரகாமிய மதங்களது தொடக்கப்புள்ளியான ஆபிரகாம், கடவுள் சொன்னதற்காகத் தனது மகனைப் பலியிடத் துணிந்தவர். யூதர்கள்…
-
‘ க்ரியா ‘ எஸ். ராமகிருஷ்ணன்
அஞ்சலிக்குறிப்பு: ‘ க்ரியா ‘ எஸ். ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் அகராதியை நீண்ட கால உழைப்பில் வரவாக்கிய இலக்கிய ஆளுமை ! முருகபூபதி க்ரியா இராமகிருஷ்ணன் இன்று நவம்பர் 17 ஆம் திகதி, அதிகாலை சென்னையில் கொரோனோ தொற்றின் தாக்கத்திலிருந்து மீளாமலேயே நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. க்ரியா இராமகிருஷ்ணனின் திடீர் மறைவு தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடத்தை இனி யார் நிரப்புவார்கள்..? என்ற வினா மனதில் நிழலாட இந்த அஞ்சலிக்குறிப்பினை பதிவுசெய்கின்றேன்.…
-
being alive’ – diaspora short stories
Written by – K S Sivakumaran – “The Surreptitious Cobras ” is the story by Ravi. It’s a satire on the mindset of a samplecharacter of a person belonging to the older generation and a set of young people running a flourishing restaurant in Melbourne. The so-called love for the birthplace (Valvettithurai) in Yaalpaanam (Jaffna)…
-
நாவல்: ஜே.ஜே குறிப்புகள்.
ஜோசஃப் ஜேம்ஸ் என்பவரைப் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே குறிப்புகள் என்ற நாவலை வாசித்தபோது பேனாவாலும் ஹைலைட்டராலும் எனக்குப் பிடித்த பகுதிகளைக் கோடிட்டேன். புத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களில் கோடாகி, புத்தகத்தின் பக்கங்கள் வரிக்குதிரையின் தோலாக மாறிவிட்டது. மீண்டும் வாசித்தேன். அப்பொழுது மேலும் கோடுகளிட்டேன் . இதுவரை நான் எனது பாடப்புத்தகங்களைக் கூட இப்படிக் கோடிடவில்லை. பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை வாசிக்கக் கையில் எடுத்துவிட்டு, வார்த்தைகள் புரியவில்லை என வைத்துவிட்டேன் . இம்முறை கூர்ந்து…
-
தேனி ஆசிரியர் உடல் நலம் பெறவேண்டும்
முருகபூபதி இணைய ஊடகத்துறையில் இணைந்திருக்கும் தோழர் ஜெமினி தோழர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் ! எனது எழுத்துலக வாழ்வு வெள்ளீயத்தில் தயாரிக்கப்பட்ட அச்சு ஊடகங்களில் ஆரம்பமாகி, பின்னாளில் இணைய ஊடகத்தை நோக்கி வளர்ந்தது.1970 களில் எனது எழுத்துக்கள் வீரகேசரி, தினகரன் முதலான நாளேடுகளிலும் மல்லிகை, பூரணி, புதுயுகம், கதம்பம், மாணிக்கம் முதலான சிற்றிதழ்களிலும்தான் வெளிவந்தன.அவுஸ்திரேலியாவுக்கு வரும்வரையில் ஒவ்வொரு வெள்ளீய அச்சு எழுத்துக்களினால் கோர்க்கப்பட்டு அச்சாகிய எனது படைப்புகள், 2000 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கணினியில் பதிவாகி இணைய ஊடகங்களிலும்…