-
அருந்ததியின் ஆண்பால் உலகு
ஆணாதிக்கத்தினால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் உண்மைக் கதை ! முருகபூபதி கனடாவிலிருந்து இயங்கிவரும் வசந்தம் தமிழ் உளவளத்துணை நிலையம் மெய்நிகர் வழியாக நடத்திவரும் தொடர் கருத்தரங்கில், கனடாவில் குடும்ப வன்முறை பற்றிய ஒரு நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தவேளையில்தான், பிரான்ஸில் வதியும் எழுத்தாளர் நாடகக் கலைஞர் அருந்ததி எழுதிய ஆண்பால் உலகு நாவலையும் படித்து முடித்திருந்தேன். மெய்நிகர் கருத்தரங்கும், இந்த நாவலும் குடும்ப வன்முறை பற்றியே பேசியிருந்தமையால், அதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன? என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. குடும்ப வன்முறையினால் (Domestic Violence) பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். அதற்கு…
-
ஒக்ரோபர் 30 -1990 .வெளியேற்றம்: கானல் தேசம்.
நான் மட்டுமல்ல, வடபகுதியில் காலம் காலமாக வாழ்ந்த இஸ்லாமியர்கள் எவரும் மறக்கமுடியாத அந்த நாள் வழக்கம் போலத்தான் விடிந்தது. நெருக்கமாக அமைந்த வீடுகளானதால் பக்கத்து வீட்டு குழந்தைகளின் அழுகை, பெரியவர்களின் படுக்கையறை முனகல்கள், முதியவர்களின் குறட்டையொலி எல்லாவற்றையும் இரவில் கேட்கலாம். சிறுவர்களின் கூக்குரலுடன் அவர்களை நோக்கிய உம்மாக்களின் அழைப்புகள், வாப்பாமாரின் பயமுறுத்தல்கள் என்பன காலையில் காதை அடைக்கும். அன்றும் வழமைபோல் எதிர்வீட்டு இஸ்மாயிலின் சேவல் கூவியது. மசூதியின் பாங்கொலி முழங்கியது. பாண்காரன், மரக்கறிக்காரன் எல்லோரும் அன்று தாமதமின்றி…
-
Cut and Past Journalism.
கல்லிலிருந்து கணினிக்கு வந்த தமிழின் அதிசயங்கள் ! Download Journalism – Cut and Past Journalism பெருகும் காலத்தில் வாழ்கின்றோம் ! ! முருகபூபதி பாரிஸ் மாநகரில் வென்மேரி அறக்கட்டளை நடத்திய வாழ்நாள் சாதனையாளர்கள் விருது விழாவுக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் முற்பகுதியில் நான் சென்றிருந்தபோது, சில நாட்கள் அந்த நகரில் தங்கியிருந்தேன். எனக்கு சிறிய வயதில் ஏடுதுவக்கி வித்தியாரம்பம் செய்வித்த பண்டிதர் க. மயில்வாகனன் அவர்களின் புதல்வி உமாவின் குடும்பத்தினர் என்னை ஒரு …
-
தமிழ் அகதிகள் விரட்டப்பட்டனரா?
நன்றி எதிரொலி விக்டோரியா தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மாமனிதர் பேராசிரியர் சி.ஜே.எலியேஸர் ஞாபகர்த்த விரிவுரை 24 ஆம் திகதி செப்ரெம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது. இந்தநிகழ்வில், understanding the voice referendum என்ற தலைப்பில் இந்தநிகழ்வு இடம்பெற்றது. மொனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மெலிஸா கஸ்டன் மற்றும் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கான விக்டோரியா மாநில செனட்டர் ஜனா ஸ்ரீவாட் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு டன்டிநொங் பிரதேசத்திலிருக்கும் விக்டோரிய தமிழ்க் கலாசார மண்டபத்தில்…
-
ஜோர்டானின் வினோதங்கள்: 3 வாடி ராம், சாக்கடல்
பெட்ரோவில் (Treasury) உயரமான பாறையில் செதுக்கப்பட்ட அழகிய சிற்பவேலைகள், இரண்டாயிரம் வருடங்கள் தாண்டி, தற்போழுது உலகில் அதிக அளவில் படமெடுக்கப்படும் இடமாக கணிக்கப்படுகிறது. ஏறுவதற்கோ உள்ளே பார்ப்பதற்கோ தடை செய்யப்பட்டுள்ளதால் வெளியே இருந்து மட்டும் பார்க்க முடியும். பல மணி நேரம் நின்று ரசிக்கக்கூடிய இடம். பெட்ரோவைக் கடந்து தொடர்ச்சியாக சில கிலோமீட்டர் நடந்தபோது அங்கும் சமாதிகள், கோவில்கள், ரோமர்களின் தியேட்டர் எனப் பார்க்க முடிந்தது. இங்கு பாதையில் நடப்பது இலகுவானதல்ல. கல்லுகள், குழிகள் கொண்ட பிரதேசம்.…
-
லண்டனில் ஊன்றுகோலுடன் இலக்கியம் பேசிவரும் ராஜேஸ்வரி.
முருகபூபதி கடந்த ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி லண்டன் விம்பம் அமைப்பினால் நடத்தப்பட்ட பெண் படைப்பாளிகளின் நூல்களின் விமர்சன அரங்கிற்கு வருகை தந்திருந்த எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் , “ தம்பி, நாம் வேளைக்கே புறப்படுவோம். ரயில், பஸ் ஏறித்தான் எனது வீட்டுக்குச்செல்லவேண்டும். “ என்றார். எனது தொடர் பயணத்தில் அன்றை மாலைப்பொழுது அவருடன்தான் ஆரம்பித்தது. எனது பொதிகளையும் சுமந்துகொண்டு அவரைப் பின்தொடர்ந்தேன். அவரது கையில் ஒரு ஊன்றுகோல். அதன் துணையோடுதான் அவர் லண்டன்…
-
ஆண்கள் பெண்கள்.
நன்றி – அபத்தம், கனடா. சமீபத்தில் நான் முதுகு வலியால் அவஸ்தைப்பட்டபோது அக்குபஞ்சர் எனும் குத்தூசி மருத்துவமே கைகொடுத்தது. இது ஊசிகளை உடலின் முக்கிய அக்கு புள்ளிகளில் சொருகி சிகிச்சை செய்யும் சீன வைத்திய முறை ஆகும். ஏற்கனவே நான் மிருகங்களுக்கு அக்குபஞ்சர் வைத்தியம் செய்வதுபற்றி படித்திருந்தேன் என்பதால் வலி நிவாரண மருந்துகளை விட அக்குபஞ்சர் ஊசிகளை நம்புகிறேன். எனக்கு வைத்தியம் செய்த மியா என்ற அந்த சீன இளம்பெண் (30 வயதின் மேல்) பல ஊசிகளை…
-
ஜோர்டான்:பெட்ரோ
Courtesy -Wowtamil.com ஜோர்டானில் இரண்டாவது நாள் இரவு… ஒரு கிறித்துவர் வீட்டில் எங்களது உணவு பரிமாறப்பட்டது. அங்கு ஒரு தாயும் மூன்று பெண்களுமாக ஜோர்டானிய உணவு தந்தார்கள். அவர்கள் அம்மான் நகரில் பிரபலமான ஒரு உணவுக்கடை நடத்துகிறார்கள். ஜோர்டானிய உணவுகள் அதிகம் வாசனைத் திரவியங்கள் கொண்டது. உணவில் ஆட்டிறச்சி முக்கியம். அத்துடன் இனிப்பு வகை அதிகமானது. முதல் இரண்டும் பிடித்தபோதிலும் கடைசியிடமிருந்து விலகியிருந்தேன். இந்த பெண்கள் அமரிக்காவின் உதவி நிறுவனம் ஒன்றுடன் சேர்ந்து வேலை செய்பவர்கள். வெளிப்படையான…
-
ஜோர்டான்: நபட்டியன்ஸ்
மனிதர்களால் உருவாக்கிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான பெட்ரா நகரம் ஜோர்டானில் அமைந்துள்ளது. இவற்றில் உலக அதிசயங்களாக நாம் பார்க்கும் தாஜ்மகால் , பிரமிட் என்பன இறந்தவர்களது சமாதிகள் என்பது நமக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் பெட்ரா எனப்படும் சிவந்த கோயில் (Treasury) 40 மீட்டர் உயரத்தில் அமைந்த ஒரு கல்லில் 2000 வருடங்கள் முன்பாக செதுக்கப்பட்ட கட்டிடம், அதை பல நூற்றாண்டுகளாக ஒரு புராதன கோயில் எனப் பலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் அதுவும் சமாதிகளின் …
-
கல்பரா – முதுமையை திரையிடல்
நன்றி அம்ருதா. ———————————— இப்பொழுது எனக்கு அறுபத்தெட்டு வயது. ஆனாலும் எனது முதுமை எப்படி இருக்கும் என்பதை நான் நினைத்துப் பார்ப்பதில்லை. முதுமை என்பதை “கல்பரா” என்ற திரைப்படத்தை பார்க்கும்போது நான் புரிந்துகொண்டேன். திரையில் படம் ஓடும்போது நான் எனக்கான திரைக்கதையை மனத்திரையில் எழுதியபடியிருந்தேன். பன்மொழிப் படங்களைப் பார்க்கும் எனக்கு இப்படியான அனுபவம் இதுவரை எந்த படத்திலும் கிடைக்கவில்லை என்பது உண்மை. வழக்கமான திரைப்படம்போல் இதில் பெரிய நடிகர்கள் கிடையாது, விளம்பரம் கிடையாது, பின்னணி இசைக்கலைஞர், பாடகர்…