-
சிண்டி தந்த அர்த்தங்கள்.
நமது வாழ்க்கையில் நமது பெற்றோர், பிள்ளைகள், உறவினர் எனப் பல உறவுகள் நம்மைத் தொடரும். ஆனால், அவை எங்களை நம்பியிருக்கின்றன என்ற எண்ணத்தில் நமது அசைவியக்கம் இருந்தாலும், உண்மை வேறானது. ஐந்து வயதின் பின்னர், பிள்ளைகள், பெற்றோரை நம்புவதில்லை. அவர்கள் கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கு தன்னியல்பாக தங்கள் சூழ்நிலையை அறிந்து கொள்ளும் அறிவு வளர்ந்துவிடும். மனைவி, உறவினர் எவரும் நம்மை முழுவதும் நம்புவதில்லை. உறவு, தேவைகள், பாதுகாப்பு, என்பனவற்றால் நாம் பரஸ்பரமாக கட்டுண்டு குடும்பமாக வாழ்கிறோம். ஆனால்,…
-
சட்டம் ஒரு இருட்டறை.
நன்றி : அபத்தம். கொரானா காலத்தில் புதிய நம்பரிலிருந்து எனது தொலைப்பேசியில் ஒரு அழைப்பு வந்தது. அதில் “நான் சமந்தா… நினைவிருக்கிறதா?” என்றிருந்தது. “உன்னை மறக்க முடியுமா?“ எனத் தகவல் அனுப்பினேன். அப்போது இரவு நேரம் சமைத்துக்கொண்டிருந்த என் மனைவி சியாமளாவிடம் ‘சமந்தாவிடமிருந்து தகவல் வந்துள்ளது’ என்றேன் . ‘யார் அது ?’ ‘எனது கிளினிக்கில் வேலை செய்தபோது அவள் கர்ப்பிணியாகி பின்னர் நான் நீதிமன்றம் போனேனே…. நினைவிருக்கிறதா?‘ ‘ ஓ! அவளா? ஏன் உங்களுக்குத் தகவல்…
-
நாட்டில் அமைதி நிலவவேண்டும்.
கட்டுரை – நடேசன். யாழன்பன். யாழ்ப்பாணம் சென்றால் நான் ஒரு ஓட்டோ சாரதியை எனது தேவைகளுக்கு அழைப்பேன். இம்முறை அந்த ஓட்டோ சாரதியைத் தேடியபோது, அவர் தனது இரு பிள்ளைகளையும் மனைவியையும் விட்டு மரணமடைந்து விட்டார் எனச் சொன்னார்கள். “ அடப்பாவி…. இளவயதுக்காரனே! என்ன வயது ? “ எனக்கேட்டேன். “ நாற்பத்து மூன்று “ “ என்ன நோய் ? “ “ இதய நோய். ஓட்டோவிலேயே இறந்து விட்டார். “ ஓடி ஓடி…
-
சில்கா ஏரியில் ஐராவதி டொல்ஃபின்!
சீனாவில் சுதந்திரத்தின் பின்னர் சீன கம்மியூனிஸ்ட் கட்சித் தலைவர் மாவோ சேதுங் (Mao Zedong) நான்கு உயிரினங்களான எலி, இலையான். நுளம்பு, குருவி என்பவை, தானியங்களை உண்பதால் அவற்றை அழிக்கவேண்டும் என்று தீவிரமான நடவடிக்கை எடுத்தார். அதன் பயனாக சீனாவில் மேற்கூறிய நான்கு இனங்களும் அழிந்தன. அதனால், இலையான், எலி, நுளம்பு என்பவற்றால் மனிதர்களுக்கு உண்டாகக்கூடிய சில நோய்கள் குறைவடைந்தது உண்மைதான். ஆனால் குருவிகள் அழிந்ததால், வெட்டுக்கிளிகள் பெருகி, தானியங்கள் உருவாகும் முன்பே உணவுப் பயிர்கள் அழியும்…
-
Farewell to a Lankan Warrior.
L. Murugapoopathy H. L. D. Mahindapala, former editor-in-chief of Sri Lanka’s Sunday Observer and a renowned writer, passed away on January 30 in Colombo. I was introduced to Mahindapala by Noel Nadesan, a literary friend of mine who lives in Melbourne. Nadesan was publishing a bilingual (Tamil-English) newspaper called Uthayam at the time. Mahindapala also…
-
எல். டி. மகிந்தபால நினைவுகள்
மூத்த பத்திரிகையாளர் எச். எல். டி. மகிந்தபால நினைவுகள் முருகபூபதி இலங்கை Sunday Observer பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும், பிரபல எழுத்தாளருமான எச். எல். டி. மகிந்தபால கடந்த 30 ஆம் திகதி கொழும்பில் மறைந்துவிட்டார் என்ற செய்தியை மெல்பனில் வதியும் இலக்கிய நண்பர் எழுத்தாளர் நொயல் நடேசன் தெரிவித்தார். எனக்கு மகிந்தபாலவை 1995 களில் அறிமுகப்படுத்தியவரும் நொயல் நடேசன்தான். அக்காலப்பகுதியில் நடேசன் உதயம் என்ற இருமொழி ( தமிழ் – ஆங்கிலம் ) பத்திரிகையை…
-
அண்ணல் சுத்தப்படுத்த விரும்பிய பாரத தேசம் !
ஜனவரி 30 – மகாத்மா காந்தி நினைவு தினம் முருகபூபதி இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்த குழந்தை காந்தி எப்படி மகாத்மாவானார்…? எவ்வாறு ஒரு தேசத்தின் பிதாவாக மாறினார் ….? என்பதற்கெல்லாம் வரலாறுகள் இருக்கின்றன. தற்காலக் குழந்தைகளுக்கும் இனிபிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் இப்படியும் ஒரு மனிதர் ஆசியாக்கண்டத்தில் ஒரு காலத்தில் பிறந்து – வாழ்ந்து – மறைந்தார் என்று சொல்லிக்காண்பிப்பதற்கு காந்தி பற்றிய திரைப்படங்களும் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய மொழிகளிலும் இருக்கின்றன. இந்திய சுதந்திரத்திற்காக …
-
Odyssey of war’
Caught between love, loyalty, and a web of secrets, Asokan, a young Sri Lankan Tamil refugee in Melbourne, navigates a treacherous path. Orphaned by the Sri Lankan civil war and brought to Australia by LTTE sympathizers, Asokan finds himself drawn into their clandestine world of fundraising and money laundering. His life takes an unexpected turn…