-
உனையே மயல் கொண்டு
Priya Ramanathan பொதுவாக நான் நாவல்கள் வாசிப்பதில்லை .. ஆனால் , நேற்று எதேச்சையாய் இந்த நாவல் என் கண்ணில் சிக்கியது . இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து australiaவிற்கு புகலிடம் தேடிச் சென்ற ஒரு ஆணின் பார்வையில் , அவனது உடலின்பம் குறித்த சிக்கல்களையும் அதன் விளைவுகளையும் விபரிக்கும் “உனையே மயல் கொண்டு ” ! நாவல், இரண்டு தளங்களில் இயங்குகிறது . ஓன்று , புகலிடத்தில் உள்ள நிம்மதியற்ற பிழைப்பின் விளைவாக ஏற்ப்படும் மனவெறுமையும் , அதை…
-
ஜெயகாந்தன் – படைப்பிலக்கியவாதி – பத்திரிகையாளர் – சினிமா வசனகர்த்தா – பாடலாசிரியர் -திரைப்பட இயக்குநர்
தமிழ்நாட்டில் கடலூரில் 24-04-1934 ஆம் திகதி பிறந்து தமது 81 வயதில் கடந்த 08-04-2015 ஆம் திகதி சென்னையில் மறைந்த மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் – படைப்பிலக்கியவாதி – பத்திரிகையாளர் – சினிமா வசனகர்த்தா – பாடலாசிரியர் -திரைப்பட இயக்குநர் என பன்முக ஆளுமை கொண்டிருந்தவர். அவரது வாழ்வும் எழுத்தும் கம்பீரமானது. அவர் நீண்டகாலம் ஈடுபட்ட துறைகள் குறித்து ஏற்கனவே ஏராளமான மதிப்பீடுகள் வெளியாகியிருக்கின்றன. அவரது படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உட்பட ருஷ்ய மற்றும் ஐரோப்பிய…
-
கனவுகளை விதைத்த மல்லிகை ஜீவாவும் கனவுலகில் வாழும் டொமினிக்ஜீவாவும்
முருகபூபதி இந்த ஆண்டு (2015 ) தொடக்கத்தில் நான் இலங்கைக்கு வந்ததும் முதலில் தொலைபேசியில் பேசியவர்களில் டொமினிக்ஜீவாவும் ஒருவர். அவர் நீண்ட காலம் நடத்திய மல்லிகை இதழ் நிறுத்தப்பட்டதன் பின்னர் அவரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனினும் 2011 இற்குப்பின்னர் அவருடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தேன். மல்லிகை நின்றுவிட்டதை அறிந்து அவர்பற்றிய நீண்ட விரிவான கட்டுரையும் எழுதினேன். பல இதழ்களில் வெளியானது அவரது பால்ய கால நண்பர் எஸ்.பொ. சிட்னியில் மறைந்ததும் தகவலும் சொன்னேன். இம்முறை பயணத்தில் அவரைச்சந்தித்து…
-
உலகக் கிரிகட்போட்டி
தொலைக்காட்சியில் கிடைத்த இன்பம் ஸ்ரேடியத்தில் இல்லை. நடேசன் கிரிக்கெட்டின் மெக்கா என சொல்லப்படுவது மெல்பன் கிரிக்கெட் மைதானம். பெயருக்குத் தகுந்தபடி ஸ்ரேடியம். கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேரை கொள்ளக்கூடியது. அதனை கூர்ந்து பார்த்தால் பொறியியல் மற்றும் கட்டிடத்துறையின் உன்னதமான வடிவமைப்பு தெரியவரும். மெல்பன் கிரிக்கட் கிளப் அங்கத்தினரால் நடத்தப்படுகிறது. ஒருவர் அங்கத்தவராக தற்பொழுது கால்நூற்றண்டுகள் காத்திருக்க வேண்டுமென அறிந்தேன். நகரத்தின் மத்தியில் சகல போக்குவரத்துவசதிகளும் ஒருங்கு சேர இந்த ஸ்ரேடியம் அமைந்திருக்கிறது. சிறுவயதில் இருந்தே கிரிக்கட் விளையாட்டில்…
-
ராமசாமி கோனாரின் கவலைக்கு மருந்து
– நடேசன் தமிழ் நாட்டில் -மகாபலிபுரத்திற்கும் தாம்பரத்திற்கும் இடையே பசுமை கொழிக்கும் அயனாவரம் என்ற சிற்றூர். ஒரு பக்கத்தில் சிறிய மலைத்தொடர். மறுபக்கத்தில் நீர் நிரம்பிய ஏரி. இச்சிற்றூரில் சுமார் 150ஏக்கரில் மாடுகள் ஆடுகள் – கோழிகள் பராமரிக்கப்படும் பெரிய பண்ணை. மாரிகாலத்தில் ஏரியில் நீர் நிரம்பினால் பண்ணை வீ;ட்டு வாயிலை ஏரி மீன்கள் வந்து கவ்வும். இயற்கை அழகு செழித்த அந்த ஊரில் 86ஆம் ஆண்டளவில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தப் பண்ணையின் சொந்தக்காரர்…
-
ஹோமோசெக்சுவாலிற்றி
ஒரு பால் உறவுகள் ( பல காலத்தின் முன்பு எழுதியது) நடேசன் உடல்நலக் குறைவான பூனையொன்றை கொண்டு இரு இளைஞர்கள் வந்தார்கள். பூனையை பரிசோதித்து நோய்கான மருந்துகளை கொடுப்பதற்கு எனது நர்சான ஜேன் உதவினாள். எனது அறையை விட்டு இரு இளைஞர்கள் போனபின்பு ஜேன் என்னிடம் ”what a waste ?” என கூறினாள். அழகான இளைஞர்கள் இருவரும் Gays என புரிந்ததால் நான் பதில் கூற முன்பு எனது பின்னாலே இருந்து ஒரு குரல் கேட்டது.…
-
முன்பட்டமும் பின்பட்டமும் -நடேசன்
இதுவரையில் ஓர் பட்டமும் பொன்னாடையும் கிடைக்காத கவலையில் பல வருடங்களுக்கு முன்னால் எழுதியது. எனது எழுத்தாள நண்பர் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி தொலைபேசியில் ”கலைஞர் பேசுகிறேன்” என்றபோது ஜெயகாந்தன் ”கருணாநிதி பேசுகிறேன்” என்று கூறுங்கள் என்றாராம். இப் பட்டங்களின் மேல் உள்ள வெறுப்பை ஜெயகாந்தன் தெரிவித்திருக்கிறார் என நான் நினைத்தேன். இந்தியாவில் முக்கியமாகத் தமிழ்நாட்டில் இப்படியான பட்டங்கள் கொடுப்பதையும் வாங்குவதையும் ஒரு கலையாகவே செய்கிறார்கள். ”கவியரசர்”…
-
உரத்துப் பேச…ஆழியாளின் கவிதைக் குறிப்பு.
பலகாலத்திற்கு முன்பு எழுதியது – Noel Nadesan . தமிழர்கள் வாழ்க்கையில் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக கவிதை வடிவங்கள் ஒட்டி உறவாடின. சராசரியான தமிழ் அறிவு கொண்ட என்போன்றவர்களுக்கு கவிதைகளைப் படிக்கப் பொறுமை இல்லை. மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது சில கவிதைகளின் வரிகள் மனத்தில் நெருடும். சில வரிகள் குற்றவுணர்ச்சியை தூண்டும். பல மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன. இப்படிப்பட்ட ஒரு கவிதைத் தொகுப்பு ஆழியான எழுதிய உரத்துப் பேச… இந்த கவிதைத் தொகுப்பில் இருந்த கவிதைகள்…
-
யானைகள் தேடும் சவக்காலை
நடேசன். காட்டில் வாழும் மற்றைய மிருகங்களிலும் பார்க்க யானைகள் பற்றிய விடயங்கள் எனக்கு ஆவலானவை. அதற்குக் காரணம் அவற்றைப்பற்றி அரைகுறையாக தெரிந்ததால்தான் என நினைக்கிறேன். மிருக வைத்தியராக இலங்கையில் யானைகளை பற்றி படித்திருப்பதுடன், அவற்றிற்கு வைத்தியம் பார்க்கும் வேலைகளையும் ஓரளவு செய்திருக்கிறேன். தந்தத்திற்காக கொலை செய்த யானைகளை பிரேத பரிசோதனை செய்திருக்கிறேன். குட்டிகளை பிடிப்பதற்காக, வெட்டிய குழிகளில் விழுந்த ஓரிரு மாதங்களேயான, யானைக் குட்டிகளை இலங்கையில் பொலிஸ் பாதுகாப்பில் எடுத்தால், அவற்றை வளர்ப்பதற்கு உதவுவது மிருகவைத்தியர்களான எங்கள்…
-
மூத்த படைப்பாளி அன்புமணி
திரும்பிப்பார்க்கின்றேன். பல்துறை ஆற்றலுடன் பதிப்பாளராகவும் விளங்கிய மூத்த படைப்பாளி அன்புமணி சமூகநலன் சார்ந்த பணிகளிலேயே தனது வாழ்நாளை செலவிட்டு விடைபெற்ற கர்மயோகி முருகபூபதி “ஒருவன் என்னவாக இருக்க வேண்டும் என்பதை அவன் மனமோ அல்லது அவனின் அறிவோ தீர்மானிப்பதில்லை, அவனின் ஆன்மாதான் தீர்மானிக்கிறது” என்ற மகாபாரத தத்துவத்தை சமீபத்தில் படித்தேன். இந்தத்தத்துவத்தை நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் அதிலிருக்கும் உண்மை புலப்படுகிறது. வயது செல்லச்செல்ல நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்கள் யார்…? என்ற தெரிவு எம்மையறியாமலேயே மனதிற்குள் உருவாகிவிடுகிறது. அவர்களில் பலருடைய…