ஆசிரியர்: noelnadesan
-
முதல் மரியாதை தமிழில் ஒரு செவ்வியல் திரைப்படமா ?
நடேசன் – அவுஸ்திரேலியா —————————————————————————— இளமைக்காலத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் முதல் மரியாதை திரைப்படத்தை பார்த்தபோது, என்னைக் கவர்ந்தது என்னவென்றால், அக்காலத்தில் சிவாஜி ரசிகனாக இருந்த எனக்கு மத்திய வயதான ஒரு வருக்கு இளம் பெண்ணில் ஏற்பட்ட காதல் ஒரு புதுமையாகவிருந்தது. இது நல்ல திரைப்படமென்ற நினைவே மனதிலிருந்தது. சமீபத்தில் அதனை தமிழின் செவ்வியல் படம் எனக்குறிப்பிட்டு பலர் எழுதியதைப் படித்தபின்பு, மீண்டும் பார்ப்போம் எனச் சமீபத்தில் பார்த்தபோது இந்தப்படம் புரட்சியானதோ புதுமையானதோ அல்ல, படு பிற்போக்கு வாதத்தை…
-
அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்:
எனது பார்வை நடேசன் ஆபிரிக்கா சென்றுபோது அங்கே சில விடயங்களைப் படித்ததில் ஆபிரிக்காவில் நிலங்களில் விவசாயம் செய்து வந்த சமூகங்களில் தந்தை வழிசமூகம் பற்றியும் அறியமுடிந்தது. அங்கு தந்தை, பின்பு மகன் என குடும்பத்தலைமை தொடர்வதால் தலைமைத்துவம் உருவாகிவிடுகிறது. தந்தையின் பின்பு மகன், இல்லாதவிடத்து தம்பி அந்த சமூககூட்டத்திற்கு தலைமையேற்றுவிடுகிறான். ஆபிரிக்காவில் அத்தகைய இடங்களில் ஐரோப்பியர்கள் அதிகாரம் செலுத்தும் போது, அவர்கள் இப்படியான தலைவர்கள் மூலமாக வரி அறவிடல் மற்றும் யுத்தத்துக்கு ஆள்சேர்த்தல் முதலான பணிகளைச் செய்தார்கள்.…
-
இயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேலியாவில் (12 Apostles)
———————————————————————- அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்த காலத்தில் மூன்று வருடங்கள் வேலை – படிப்பு என மெல்பன், சிட்னி நகரங்கள் எங்கும் அலைந்து திரிந்தபோது, ஒரு நாள் எனது மனைவிக்கு வார்ணம்பூல் மருத்துவமனையிலிருந்து வேலைக்கு வரும்படி தகவல் வந்தது. வார்ணம்பூல் என்ற இடத்தை அவுஸ்திரேலியா வரைபடத்தில் அதுவரையும் கேள்விப்பட்டதே இல்லை . அக்காலத்தில் நான் வேலையின்றி, எனது மிருக வைத்திய செய்முறைப் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தேன். மனைவியை வேலைக்கு அழைத்ததும், பரபரப்பாக சிட்னியிருந்து மெல்பன் வந்து, அதன்பின்பு முந்நூறு கிலோமீட்டர்கள் …
-
‘சர்வதேச மகளிர் தினம் 2021’
By Vajna Rafeek at ATLAS IWD 2021 இந்த வருடத்து மகளிர் தினத்திற்கான பிரச்சார கருப்பொருள் Choose to challenge Women in leadership – achieving an equal future in COID-19 world! ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது! தாயாக, தாரமாக, அக்கா தங்கையாக, மகளாக, தோழியாக நம் உறவின் அனைத்து நிலைகளிலும் நிறைந்திருக்கிறார்கள் பெண்கள். பல்வேறு துறைகளில், பல சவால்களுக்கு…
-
அந்தரங்கம் -என்னுரை
எனது அந்தரங்கம் சிறுகதைத் தொகுப்பை வைத்து எழுதும்போது வாசகர்களுக்குப் புதிதாக எதைச் சொல்ல முடியும் என்பதை யோசிக்கிறேன் . எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்று, நீளமான முன்னுரை எழுத விரும்பவில்லை . கதையில் சொல்லாததை எப்படி முன்னுரையில் சொல்லமுடியும்.? மற்றவர்கள் சொல்லவேண்டும் என்பதற்காக, நான் பெரிதும் மதிக்கும் நண்பர்களான மாலனும் கருணாகரனும் முன்னுரை மற்றும் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள். ஆனவே ஒரு சிறிய குறிப்புடன் இங்கு நன்றி மட்டுமே எழுதவுள்ளேன். நான் எழுதிய நாவல்கள் திட்டமிடப்பட்டு கருத்தியலை வைத்து எழுதப்பட்டது…
-
தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம் அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது. இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் செயற்படுத்தப்படவுள்ள இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்டு அமையவுள்ளது. 1. கடந்த 2019, 2020 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சிறுகதை,…
-
கதை சொல்லல் :சுருக்கமான வரலாறு.
நடேசன் மனிதர்களது பிரயாணங்கள் கால்நடை மற்றும் குதிரைகளில் தொடங்கி கப்பல், ஆகாயவிமானம், ஏவுகணை என மாறுவதுபோல் பயணங்களின் வடிவங்கள் மாறுகின்றன. கதை சொல்வது கற்காலத்திலிருந்து தொடரியாக வந்தபோதும், வடிவம் மாறுகிறது. கதை சொல்வதை நான் பயணத்திற்கு ஒப்பிடுவது இங்கு உதாரணத்திற்கு மட்டுமல்ல, ஒரு தொடர்ச்சியான படிமமாகவும் (Allegory) புரிந்து கொள்ளவேண்டும். கதை சொல்பவர்கள் , கேட்பவர்களை புதிய இடம் , தேசம் , ஏன் புதிய உலகிற்கே அழைத்துச் செல்கிறார்கள் ., இலங்கையைப் பற்றிய கதை வாசிக்கும்போது…
-
முருகபூபதியும் சிவகுமாரனும்
வீரகேசரியில் 1977 இல் ஒப்புநோக்காளர் பணி கிடைத்தபின்னரும், கொழும்பில் தொடர்ந்தும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினதும் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினதும் வேலைகளை மேற்கொண்டவாறு, இலங்கை ஆசிரியர் சங்கம், மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவற்றின் தலைமை அலுவலகங்களுக்கும் சென்று அங்கு தரப்பட்ட பணிகளை செய்துகொடுத்தேன். சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன், கொழும்பு -07 இல் சேர் ஏர்ணஸ் டீ. சில்வா மாவத்தையில் அமைந்திருந்த சோவியத்தகவல் பிரிவில் பணியாற்றினார். இங்கிருந்துதான் சோவியத் நாடு மற்றும் சோசலிஸம் தத்துவமும் நடைமுறையும் முதலான இதழ்கள்…
-
அந்தரங்கம் – சிறுகதைத் தொகுப்பு
சென்னை மனிதன் தன் வளரிளம் பருவத்தில் தொடங்கி வாழ்நாள் முடியும் வரை நடத்தும் போர் ஒன்று உண்டு.அதில் வென்றவர்கள் மிகக் குறைவு. ஞானம், கல்வி, அதிகாரம், செல்வம், இப்படி மனிதன் சம்பாதித்துக் கொண்ட சம்பத்துக்கள், இவையன்றி மனிதனுக்கு அருளப்பட்ட குலம், குடும்பம் இன்ன பிற வரங்கள் இவை யாவும் அதன் முன் தோற்றுத்தான் போயிருக்கின்றன. அது : காமம். மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் மூச்சை நிறுத்திவிடு என பாரதியின் கதறல்…