-
காட்சி இரண்டு கதையொன்று
நடேசன் எனது ஆச்சி வாயாடி!கோபம் வந்தால் ஊரிலுள்ள தூஷண வார்த்தைகள் அவர் வாயிலிருந்து தாராளமாக வெளியே வரும். ஆச்சி எரிச்சலடையும்போது அவர் அவிட்டுவிடும் ‘பூனையின் புடுக்கு மாதிரி” என்ற வார்த்தையை சிறுவயதில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வயதில் அதன் படிமமான கருப்பொருள் புரிந்திருக்கவில்லை. பிற்காலத்தில் ஆச்சி பாவித்த சந்தர்ப்பத்தை பார்த்தபோது அந்தச் ‘சொல்லடை’ மனமுடைந்திருக்கும் பெண்ணிடம் ஒரு உளவியல் மருந்தாக பாவிக்கப்பட்டதை தெரிந்து கொண்டேன். எங்கள் பகுதியான வட இலங்கையின் தீவுப்பகுதியில் பெரும்பாலான திருமணங்கள் ‘பேசி’ச் செய்வார்கள்.…
-
நாவல்: உதயனின்: U P 83.
UP 83 (உத்தரப்பிதேசம்) நான் சமிபத்தில் வாசித்த தமிழ் புத்கங்களில் தொடர்ச்சியாக பக்கங்களை சுவாரசியத்தோடு திருப்ப வைத்தது. ஒவ்வொரு பக்கமும் சுவையானது. அரைத்தமாவைஅரையாமல் புதிதான ஒரு பகுதியை சொல்லுகிறது. வித்தியாசமான மொழி (remarkable genre) நான் சென்னையில் இருந்த காலத்தில் உத்தரப் பிரதேசத்ததில் பயிற்சி எடுத்து முடித்த பல இயக்க இளைஞர்கள் மீண்டும் சென்னைக்கு வந்திருந்தார்கள். 84 ஆண்டின் ஒரு நாள்சூழைமேட்டில் உள்ள தமிழர் மருத்துவமனைகட்டிடத்தின் மேல் நின்றபோது எனக்குஅறிமுகமான சில ஈ பி ஆர் எல்…
-
அவுஸ்திரேலியாவின் கிழக்கு முனை பைரன் பே (Byron Bay)
அவுஸ்திரேலியாவின் கிழக்கு முனை பைரன் பே (Byron Bay) நடேசன் பேராதனைப் பல்கலைக்கழகக் காலத்தில் ஒரு நாள் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா புகைத்தேன். அதில் எனக்கு எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. ஆனால், என்னுடன் சேர்ந்து குடித்த ஒரு நண்பனுக்கு முகத்தில் விறைப்புத்தோன்றி தேறி வருவதற்கு சில நாட்களாகியது. அவனுக்கு ஏதோ வந்துவிட்டது என்ற குற்ற உணர்வில் குறிப்பிட்ட அந்தச் சிலநாட்கள் மனம் குழம்பினேன். அவனுக்கு முற்றாகக் குணமாகியதும் எனக்கு நிம்மதி வந்தது. அவனுக்கு வந்த முகவிறைப்புக்கு…
-
மரணதேவதை
நடேசன் அந்த வீட்டின் முன்கதவைத் திறந்தபடி உள்ளே சென்ற என்னைத் தனது வெள்ளைத்தாடியை ஒரு கையால் தடவியபடி சிவந்த கலங்கிய கண்களுடன் மறுகையால் வீட்டின் கதவைத் திறந்து ‘நொயல் நன்றி’ எனச்சொல்லியவாறு மகிந்தபால உள்ளே அழைக்க, மிருகவைத்தியராகிய என்னைப் பார்த்து ‘மரணதேவதை வருகிறது’ என்று திருமதி மகிந்தபால சொன்னார். நான் எதிர்பார்க்காத வார்த்தைகள். பழைய சுவிஷேச வார்த்தைகள். மெல்பனின் வசந்தகாலத்தின் மாலை நேரம். பசுமையான புற்கள் அழகாக செதுக்கியபடியிருந்தது. வேலியோரத்து பொக்ஸ் செடிகள் இடுப்பளவு உயரத்தில் கத்தரிக்கப்பட்டிருந்தன.…
-
கோல்ட் கோஸ்டில், ஹம் பாக் திமிங்கிலங்கள்
நடேசன் கடற்பரப்பிலிருந்து தண்ணீர் ஒரு மீட்டர் உயரத்திற்குப் பீறி அடித்தது. ஏதோ வாய்க்குள் வைத்து தண்ணீரை மேல் நோக்கி வாணம்போல ஊதுவது தெரிந்தது. ‘சுவாசிக்க எப்படியும் மேலே வரவேண்டும்’ திமிங்கிலங்கள் காற்றிலிருந்தே சுவாசிக்க வேண்டும். நீரின்மேல் தலையை நீட்டி காற்றை உள்ளெடுக்க வேண்டும். உற்றுப்பார்த்த போது சாம்பலும், கறுப்பும் கலந்த நிறத்தில் ஒரு ஹம் பாக் திமிங்கிலம் . அந்த நீல நிற சமுத்திரத்தை கிழித்தபடி நீர் மூழ்கிக்கப்பல் எழுவதுபோல் நீர்ப்பரப்பில், ஒரு மீட்டர் உயரத்திற்கு…
-
பர்மிய நாட்கள் -ஜோர்ஜ் ஓர்வல்
பழைய புத்தகக்கடைகளை எட்டிப் பார்க்கும் பழக்கம் சிறுவயதிலே இருந்து தொடர்கிறது. இதை பர்மாவிலும் தொடர்ந்தேன். முக்கியமாக எந்த ஆங்கிலப்புத்தகம் கிடைக்கும் என்பது எனது நோக்கமாக இருக்கம். புத்தகங்கள் மூலம் நாட்டின் வரலாறு, கலாச்சாரத்தை மேலும் புரிந்துகொள்ள எத்தனிப்பேன் யங்கூனில் ஒரு பழைய புத்தக கடையில் இருந்த ஆங்கிலப்புத்தகம் ஜோர்ஜ் ஓர்வலால் எழுதப்பட்ட பர்மிய நாட்கள்(Burmese Days). தனது புத்கம் இந்த அளவு பர்மாவில் புகழ்பெறுமென ஜோர்ஜ் ஓர்வல் நினைத்திருக்கமாட்டார். நாவலில் ஆங்கில காலனி ஆதிக்கத்தையும் அதை நடத்திய…
-
நாவல்: ஜெ.கே. ஜெயக்குமாரனின் கந்தசாமியும் கலச்சியும்.
அதீத கற்பனையும்(Fantastic) அரசியல் நையாண்டியும் ( Political satire) கலந்த ஒரு நாவல் வடிவம் தமிழில் அரிது. ஆனால் அதீத கற்பனையாக விஞ்ஞானக் கதைகளை வாசித்திருக்கிறேன். அதீத கற்பனையான விஞ்ஞானச் சிறுகதைகளை சுஜாதா எழுதியிருக்கிறார்.தமிழில் அரசியல் நையாண்டி மிகவும் அரிது ஆங்கிலத்தில் சிறுகதைகளின் தொடக்கத்தில் எட்கார் அலன் போ (EdgarAllanPoe) மனிதர்களின் பயத்தை, அதாவது மனப்பிராந்தியை வைத்துக் கதை பின்னிய சிறுகதை எழுத்தாளர். குழந்தை இலக்கியத்தில் இந்த அதீதகற்பனை உருவாகியது தவளையொன்றை இளவரசி முத்தமிட்ட பின்பு அந்தத்…
-
நண்பர் முருகபூபதி
Life may be difficult; Circumstances may be impossible. There may be obstacles but we are responsible. We cannot shift that Burdon into God or Nature. ஆதிகாலத்தில் வேட்டைக்குப் போகும் மனிதன் பத்து அல்லது பன்னிரண்டு பேருடன் மட்டுமே காட்டுக்குப் போவான் காரணம் உயிர்ப்பாதுகாப்பு. அதற்கு மேலானவர்கள் இருக்கும் போது போட்டி, பொறாமை என ஏற்படும். இந்தக் காரணங்கள் நாகரீகமான காலத்திலும் பொருந்தும். என்னைப் பொறுத்தவரை நட்பு வட்டத்திலும்…
-
பர்மிய நாட்கள் 12
<img 80 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த வாவி சான் மாநிலத்தில் (Shan province) சுற்றியுள்ள மலைகளில் இருந்து உருவாகியது இது கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் மக்களின் வாழ்க்கைக்கு உதவுகிறது. யங்கூனில் இருந்து 660 கிலோமீட்டரில் உள்ள மலைப்பிரதேசமானதால் வெப்பம் குறைந்த இடம். இங்கு உல்லாசப்பிரயாணிகள் அதிகம் வருகிறார்கள். இந்த வாவியின் அருகே பல கிராமங்கள் சிறிய நகரங்கள் உள்ளது. புதிய ஹொட்டேல்கள் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் தங்கிய ஹொட்டேல் வாவியின் கரையில் உள்ளது. காலையிலும் மாலையிலும் அந்த…
-
விடைபெறும் பேராசிரியர் ஹென்றி சதானந்தன்
From his family ”Prof. Henry Arunachalam Sathananthan has passed away peacefully on the 18th of August 2016 at the age of 81. He has been taken away to meet his beloved mum Ruby, wife Bernadine and sisters Sita and Luckshmi in heaven. He is leaving behind 3 sons, a daughter and their spouses and 7…