-
“பாரதிய பாஷா விருது
எழுத்தாளர் மாலனுக்கு “பாரதிய பாஷா விருது” வழங்கப்படுகிறது இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்று என மதிக்கப்படும் ‘பாரதிய பாஷா விருது’ இவ்வாண்டு தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்படுகிறது கடந்த ஆண்டுகளில், ஜெய்காந்தன், சிவசங்கரி, ராஜம்கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், பிரபஞ்சன், வைரமுத்து ஆகியோருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் மாலன் இலக்கிய உலகில் பல சிறப்புக்களைப் பெற்றவர். இருபதிற்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். உணர்ச்சிகள், சம்பவங்கள் இவற்றிற்கு பதிலாகப் புனைவுகளில்…
-
நாவல்: உறுபசி.
எஸ். இராமகிருஸ்ணனின் உறுபசியை இரண்டாவது தடவையாக வாசித்தேன்.இறந்த நண்பனை நினைத்து நான்கு நாட்களில் அவனைப்பற்றி அசைபோடும் நண்பர்கள், மனைவி, மற்றும் காதலி என்பவர்களது எண்ணங்களின் தொகுப்பு இங்கு நாவலாகிறது தங்கை இறப்புக்கு காரணமாகிய குற்ற உணர்வால் தொடர்ச்சியாக சமூகத்தில் தன்னை சமப்படுத்திக்கொள்ள முடியாமல் இளவயதில் இறக்கும் ஒருவனது கதை. எனக்குப் பிடித்தது சம்பத்தின் பிரேதத்தை சுற்றியும், அதே வேளையில் பின்பாக மலையேறும்போது நண்பர்கள் மன ஓட்டங்கள் மூலமாக இரண்டு தளங்களில் ஒரே நேரத்தில் கதையை நகர்த்துவது. உறுபசிக்கு…
-
கோமகன் தொகுத்திருக்கும் “குரலற்றவரின் குரல்”
படித்தோம் சொல்கின்றோம் பல திசைகள் நோக்கியும் விரிவான வாதங்களுக்கு கதவு திறக்கும் கருத்துப்போராட்டத்தை தூண்டும் நூல் முருகபூபதி ” எழுத்தாளர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை. எப்பொழுதும் சண்டை பிடித்துக்கொண்டிருப்பார்கள்.” என்று ஒரு நண்பர் சொன்னார். இத்தனைக்கும் அவர் எழுத்தாளர் அல்ல. எழுத்தாளர்கள் பலரை நண்பர்களாகக்கொண்டவர். கோயில்கள் மற்றும் பல்கலாசார பொது அமைப்புகளில் அங்கம் வகித்து கசப்பான அனுபவங்களினால் நொந்து நூலாகிப்போனவர். கசப்பான அனுபவங்களை சுமந்துகொண்ட, தொடர்ந்தும் பல அமைப்புகளில் ஈடுபாடு காண்பித்துக்கொண்டிருப்பவர். ” நீங்கள் சொல்வது உண்மைதான். எழுத்தாளர்களிடையே…
-
கத்தரின் மாளிகை -புஷ்கின் நகரம்
எனது இரத்தத்தில் இருந்து ,துளி துளியாக அடிமைத் தன்மையை சிறிது சிறிதாக அகற்றவேண்டியிருக்கிறது என்றார் அன்ரன் செகோவ். அவரது பேரன் ஒரு பண்ணையடிமை. வைத்தியராகவும் , புகழ்பெற்ற எழுத்தாளரான அன்ரன் செகோவ் இப்படி சொல்லுவதன் மூலம் அக்கால பண்ணையடிமை முறை எவ்வளவு கொடுமையானது என்பதைப்புரிந்து கொள்ளலாம். ஏராளமான பண்ணை அடிமைகளை ரஸ்சியாவில் வைத்திருந்தார்கள். அடிமைகள் பண்ணையாரால் கொலை செய்யபபடுவது தண்டனைக்குரிய குற்றமல்லவென பலகாலமாக இருந்தது.18 ம் நூற்றாண்டிலே சட்டம் திருத்தப்பட்டு அடிமைகள் கொலை செய்வது, தண்டனைக்குரிய குற்றமாகியது.…
-
“எழுத்துக்கள் மாத்திரமே என்னை, என் மரணம் வரையிலும் மட்டுமன்றி அதன்பின்னரும் வாழ்விக்கும்”
“எழுத்துக்கள் மாத்திரமே என்னை, என் மரணம் வரையிலும் மட்டுமன்றி அதன்பின்னரும் வாழ்விக்கும்” — அஷ்ரப்பின் வாக்குமூலம் ஒரு படைப்பை பற்றிய மதிப்பீட்டில் அதன் ஆசிரியரின் ஆளுமைக்கு இடம் இல்லை முருகபூபதி “கவிதை பூவுலகம், அரசியல் முள்ளுலகம். இரண்டும் எதிரெதிரானவை. அரசியல்வாதி கவிஞனாக இருப்பது அல்லது கவிஞன் அரசியல்வாதியாக இருப்பது, வினோதமான நிகழ்வு. நாடாளுபவனே ஏடாளுபவனாகவும் இருப்பது, வரலாற்றில் அபூர்வமாகவே நிகழுகிறது. சங்க காலத்தில் காவலர் சிலர் பாவலராகவும் இருந்திருக்கின்றனர். பின்னர் அமைச்சர் சேக்கிழார், அதிவீரராம பாண்டியன் என்று…
-
எம்.எச்.எம். அஷ்ரப் நினைவுகள்
இலக்கிய அரங்கிலிருந்து அரசியல் அரங்கிற்கு வருகைதந்த படைப்பாளி எம்.எச்.எம். அஷ்ரப் நினைவுகள் முஸ்லிம் காங்கிரஸ் எழுச்சியின் ஆத்மாவின் அஸ்தமனத்தால் தோன்றியிருக்கும் வெறுமை!!! முருகபூபதி ” பூரணி காலாண்டிதழ் தற்பொழுதுதான் வெளியாகத்தொடங்கியிருக்கிறது. ஒரு சில இதழ்களே வெளியாகியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதன் குறைகளை சுட்டிக்காட்டும் அதேவேளையில், அதன் வளர்ச்சிக்காக உழைக்கும் பூரணி குழுவினருக்கு அதில் உள்ள நிறைவுகளை எடுத்துக்கூறி ஊக்குவிக்கவேண்டியது நம்போன்ற வாசகர்களது கடமையாகும். அதற்கு இப்படியான விமர்சன அரங்குகள் சந்தர்ப்பம் அளிப்பது மகிழ்ச்சிதரக்கூடிய விஷயமாகும். சஞ்சிகைகள் எல்லோருக்கும் புரியக்கூடிய…
-
நாவல்:தமிழ்நதியின் பார்த்தீனியம்.
இரண்டு விதமான எழுத்தாளர்கள் உண்டு. ஒருவகையினர் நரிகள் மாதிரி அவர்களுக்கு முழுக்காடும் பாதுகாப்பை அளிக்கும். எங்கும் நுளைந்து வருவார்கள். மற்றவர்கள் முள்ளம்பன்றிபோல். அவர்களது பாதுகாப்பு அவர்களது முட்கள் மட்டுமே. ஆனால் அது வலிமையாகவிருக்கும். இந்த உதாரணம் ஈழத்து மற்றும் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் பொதுவானது. பெரும்பாலானவர்களது பேசுபொருள் ஈழப்போராட்டமே.போர் முடிந்தாலும் இந்த போர் நிழலாகத் தொடர்ந்து வருகிறது. போரைவைத்து சிறப்பாக பலர் இலக்கியம் படைத்திருக்கிறார்கள். நெப்போலியனது படையெடுப்பு நடந்து நூறு வருடங்கள் பின்பாகவே டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் எழுதப்பட்டது.…
-
ஆவணப்பட தயாரிப்பாளர் கனடா மூர்த்தி
தேசங்கள் கடந்த கலை, இலக்கிய நேசர் சிவாஜியை தமிழர் பண்பாட்டியல் குறிப்பிலும் ஜெயகாந்தனை உலகப்பொதுமனிதனாகவும் காண்பித்த ஆவணப்பட தயாரிப்பாளர் கனடா மூர்த்தி முருகபூபதி முகநூல் கலாசாரம் தீவிரமாகியிருக்கும் சமகாலத்தில், முகநூல் எழுத்தாளர்களும் பெருகியிருக்கிறார்கள். இக்கலாசாரத்தின் கோலத்தினால் முகவரிகளை இழந்தவர்களும் அநேகம்.அதே சமயம் முகநூல்களில் பதிவாகும் அரட்டை அரங்கங்களை முகநூல் பாவனையற்றவர்களிடத்தில் எடுத்துச்சென்று சேர்க்கும் எழுத்தாளர்களும், அவற்றை மீள் பதிவுசெய்து பொதுவெளிக்கு சமர்ப்பிக்கின்ற இதழ்கள், பத்திரிகைகளும் அநேகம். அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், மற்றும் பிரபலமானவர்களினால் உதிர்க்கப்படும் வார்த்தைகளுக்கு…
-
புத்துயிர்ப்பு தேவாலயம்(Church o the Savior on Blood)
பீட்டர்ஸ்பேக்கின் முக்கியமான இந்த தேவாலயம் கட்டுவதற்கு 24 வருடங்கள் சென்றன. போலஸ்சுவிக்குகள் தமது ஆரம்பகாலத்தில் மதத்தை இல்லாதொழிக்கும் நோக்கத்தில் தேவாலயங்களை புறக்கணித்தார்கள். அதன் பின்பாக ஜேர்மன் குண்டுவீச்சால் அழிந்த இந்தத் தேவாலயத்தை புதுப்பிக்க 27 வருடங்கள் எடுத்தது. இந்த புதுப்பித்தல் முடியும்போது 1991ம் ஆண்டு சோவியத் ரஸ்சியா உடைந்துபோனது. ரஸ்சியாவில் பண்ணை அடிமைகளை விடுவித்த மன்னனை (அலக்சாண்டர்11) இந்தத் தேவாலயம் இருந்த இடத்ததில் குண்டெறிந்து கொலை செய்தார்கள். குண்டெறிந்தவன் மன்னனது, பண்ணை அடிமைகளை விடுவிக்கும் செயலை எதிர்க்கும்…
-
சுவான்லேக் (SWAN LAKE).
பத்தொன்பதாம் நுற்றாண்டில் பிறந்த உன்னத சங்கீத மேதை சக்கோகியை(Tchaikovsky)1875 மாஸ்கோவில் போல்சி நாடக குழுவினர் அழைத்து சுவான்லேக் என்ற பலே நாடகத்திற்கு இசையமைக்க சொன்னார்கள். அன்றிலிருந்து ரஸ்சியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் இந்த நாடகம் அதே இசையுடன் தொடந்து அரங்கேறுகிறது. இம்முறை அதை பார்பதற்கு பீட்டஸ்பேர்கில் நின்றபோது அதற்காக டிக்கட் எங்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டது. விடுமுறையில் இப்படியான நிகழ்சிகளுக்கு செல்லும்போது தனியே எங்களுக்காக மட்டும் நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். வசதியான நேரத்தில் வாகனங்களில் அழைத்துச் சென்று பிரத்தியேகமான…