-
உன்னையே மயல் கொண்டு –பாகம் ஆறு
சந்திரனது மேசையில் அவனது ஆய்வுகளுக்கு உதவும் சஞ்சிகைகள், புத்தகங்கள், ஒலிப்பிரதிகள் என பரவலாக இறைந்து கிடந்தன. வாரம் ஒருமுறை மேசையை துப்பரவாக வைத்தாலும, வார இறுதியில் மீண்டும் அதேமாதிரி வந்துவிடும். இதனை உணர்ந்து அடுக்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்து சிண்டி “என்ன அவுஸ்திரேலியா கிளினப் டேயா” என்று கேட்டாள். கேள்வியின் கேலியை புரிந்தபடி “யேஸ் மிஸ் பேர்பெக்ட்” என்று முணுமுணுத்தபடி அடுக்கினான். அப்பொழுது சிறுதுண்டொன்றில் எழுதப்பட்ட தொலைபேசி இலக்கம் கிடைத்தது. இதுதானே அன்று சிண்டி தந்து நான் பதில்…
-
மெல்பனில் கவிஞர்கள் ஒன்றுகூடும் கவிதா மண்டலம்
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கவிஞர்கள் ஒன்றுகூடும் கவிதா மண்டலம் நிகழ்ச்சி எதிர்வரும் 08-04-2018 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையில் மெல்பனில் நடைபெறவுள்ளது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் இக் கவிதா மண்டலம், நடைபெறும் இடம்: கிளேய்ட்டன் பொது நூலகம் (Clayton Community Centre Library Meeting Room – 9-15, Cooke Street , Clayton, Victoria – 3168 )…
-
THE VOICE OF A DISSIDENT: KARUNAKARAN’S POST – WAR POETRY
S.Pathmanathan, Sri Lanka The making of the poet : Karunakaran was born in Yakkachi in 1963. Yakkachi is close to Elephant Pass that links the Jaffna peninsula to the mainland. Karunakaran was a member of the EROS – one of the many Tamil youth groups that were frustrated with the partial treatment they got at…
-
விழித்திருக்கும் கட்டகேனா நகரம்.
கொலம்பியாவின் கரிபியன் கடற்கரை நகரமான கட்டகேனா அழகான நகர்மட்டுமல்ல நகரமே 16- 17 நூற்றாண்டுகளின்வரலாற்றின் காட்சிப்பொருள். அந்த இருநூறு வருடங்கள் மத்திய தரைக்கடல் நாடுகளான ஸ்பெயின் போர்த்துக்கல் இரண்டும் புவியின் பெரும்பகுதியை ஆண்டார்கள். அவர்களது கடற்படைகள் செல்வங்களைத் தேடி சமுத்திரங்களைக் கடந்தன. சாம்ராட்சிய விஸ்தரிப்புக்காக மில்லியன்கணக்கான சுதேசிகள் அவர்களாலும் அவர்கள் காவி வந்த அம்மை மற்றும் பால்வினை நோய்களால் மடிந்தார்கள். அதேபோல் ஸ்பெயின் போர்த்துகல்நாட்டு போர்வீரர்களும் தூரதேசங்களில் இறந்தார்கள். ஸ்பெயின் சாம்பிராட்சியத்தின் அத்திலாந்துகரையின் சாம்ராட்சிய விஸ்தரிப்பின் தாக்கங்களைப்…
-
பனோராமிக் போரோவியம்-(Borodino)
இரண்டாவது உலகயுத்தத்தில் 25 மில்லியன் சோவியத் மக்கள் அதில் 13 லட்சம் ரஸ்சியர்கள் மரணமடைந்தார்கள் என்பதைப் பலர் கேள்விப் பட்டிருந்தோம். 3 மில்லின் ரஸ்சியர்கள் முதலாவது உலகப் போரிலும், அதற்கப்பால் ஸ்ராலின் காலத்தில் பல மில்லியன் மக்கள் இறந்ததாக வரலாறு உள்ளது. மாபெரும் தேசம் அங்கு அழிவுகளும் அதிகமென நினைத்த எனக்கு ரஸ்சியப் பயணத்தில் மேலும் அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது 1812 ம் ஆண்டு மாஸ்கோவுக்குப் பக்கத்தில் நடந்த யுத்தத்தில் ஒரு நாளில் 75000 படைவீரர்கள்…
-
சிறுகதை : ஒரு தாய் உறங்குகிறாள்
மாதா கோவில் மணி கேட்டதும், எங்களை எழுப்புவதற்காக போடிங் ஹவுஸ் வார்டன் அதிகாலை நேரத்தில், பிரம்பால் அடிப்பார். அதே போன்ற அடி, காலில் விழுந்தது போல இருந்தது. கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்தேன். இருந்தும் அதன் துண்டு நினைவுகளும், அதிலிருந்து விடுபட்ட பல அத்தியாயங்களும் காற்றில் மிதக்கும் இறகுகளாக, என்னைச் சுற்றிச் சுழன்றது. எனது சிறுவயதுப் பாடசாலை நிகழ்வுகளின் பாத்திரங்களாக வகுப்பில் என்னுடன் படித்த பால்ய நண்பர்களை கனவு கண்டுகொண்டிருந்தேன். பழய நினைவுகள் இப்பொழுது மீண்டும் வருகிறது.…
-
வரலாற்று சிறையில் வாழும் தமிழ் அரசியல்வாதிகள்
என் எஸ் நடேசன் உதயம் APRIL 2006 திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அம்மா ஓ-க பு—–டை என்ற தகாத வார்த்தையால் பிரித்தானிய பாராளுமன்றத்தில் வைத்து தமிழ் ஈழ மதியுரைஞர் பாலசிங்கத்தால் பேசப்பட்டவர் என்ற செய்தி அங்கு உடனிருந்த ஜெயதேவனால் ஐலண்ட் பத்திரிகைக்கு கூறப்பட்டு உதயம் பத்திரிகையிலும் மறு பிரசுரமாகியது. செல்வம் அடைக்கலநாதன் 86ல் ஒருநாள் டெல்லியில் ஒரு ஹொட்டேலில் (அசோக்காவாக இருக்கலாம்) சந்தித்தேன். புலிகளால் சிறிசபாரட்ணம் கொலை செய்யப்பட்ட பின் செல்வம் பதவி ஏற்று…
-
ரஸ்சிய விவசாயக் குடும்பத்தில் புத்தக அலுமாரி.
உலகத்திலே அதிக உணவு தானிய ஏற்றுமதி செய்யும் நாடாக ரஸ்சியா மாறி அமெரிக்கா,கனடா, அவுஸ்திரேலியாவைப் பின் தள்ளியுள்ளது. ரஸ்சியாவில் கருங்கடலை அடுத்த பிரதேசத்தில் விளையும் கோதுமை இப்பொழுது அருகில் உள்ள மத்திய ஆசிய நாடுகளுக்கு மட்டுமல்ல எகிப்து போன்ற தூரத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்றைய உணவுப் பொருட்களும் அபரிமிதமாக ரஸ்சியாவில் தற்பொழுது உற்பத்தியாகிறது. ரஸ்சியாவில் விவசாய உற்பத்தி 1930 இல் இருந்து கூட்டுப் பண்ணைகளாக 1980 வரையும் நடந்தது. அக்காலத்திலே பிரமாதமாக நடக்காதபோதிலும் தேவையான உணவு…
-
உன்னையே மயல் கொண்டு –பாகம் ஐந்து
இரத்மலானை அகதி முகாமில் இருந்து கப்பல் மூலமாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த இராசம்மா குடும்பத்தினர் நண்பர்கள் உதவியுடன் சுண்டிக்குளியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வாழத்தொடங்கினர். கலவரம் ஓய்ந்தும் மூன்று மாதங்கள் லீவில் நின்ற இராசநாயகம் மீண்டும் கொழும்பு வேலைக்கு வரவேண்டியதாயிற்று. சோபா சுண்டிக்குளி பெண்கள் பாடசாலையிலே சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தாள். கலவரத்துக்குச் சில மாதகாலம் முன்புதான் ஹட்டன் நாஷனல் வங்கியில் வேலைக்கு சேர்ந்திருந்தான் கார்த்திக். ஏஜன்சியில் காசுகட்டி வெளிநாட்டுக்கு அவனை அனுப்புவது பற்றி இராசநாயகம் மனைவியிடம்…
-
சிங்கள இலக்கியங்களை தமிழுக்குத்தந்த முஸ்லிம் சகோதரர்கள்.
சொல்லத்தவறிய கதைகள் – அங்கம் 05 சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்தவாறு சிங்கள இலக்கியங்களை தமிழுக்குத்தந்த முஸ்லிம் சகோதரர்கள் தர்மபோதனை செய்யவேண்டிய தேரர்களை அரசியலுக்குள் இழுத்து தேசத்தையும் கண்டத்துள் சிக்கவைத்த சிங்களத்தலைவர்கள் முருகபூபதி இலங்கையில் பிரபல சிங்கள எழுத்தாளர் மார்டின் விக்கிரமசிங்கா, மாத்தறை கொக்கல என்ற பிரதேசத்தைச்சேர்ந்தவர். அவர் எழுதிய கம்பெரலிய நாவலை, தென்னிலங்கை பேருவளையைச்சேர்ந்த கலாநிதி எம். எம் உவைஸ் ” கிராமப்பிறழ்வு” என்ற பெயரில் மொழிபெயர்த்தார். கம்பெரலிய நாவல் மட்டுமன்றி, மார்டின் விக்கிரமசிங்காவின் மடோல்தூவ,…