Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • ‘அசோகனின் வைத்தியசாலை’ ஜெயமோகன் எழுதிய முன்னுரை.

    ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு முன்பு தமிழ்ச்சூழலில் ஒரு கூற்று மிக அதிகமாக விவாதிக்கப்பட்டது. எஸ்.பொன்னுத்துரை அதைச்சொன்னார் என்று நம்பப்பட்டது.’அடுத்த நூற்றாண்டு தமிழிலக்கியத்தை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எழுதுவார்கள்’. அந்தவரி அன்றைய புலம்பெயர்ந்த ஈழத்தவர்களை பெரிதும் கவர்ந்தது. இந்தியாவில் பலர் அது ஈழத்தவர்களை மகிழ்விக்குமென்பதனாலேயே திரும்பச் சொன்னார்கள். இன்னும் சிலர் இலக்கியமென்பது அனுபவப்பதிவு என்ற எளிய சமவாக்கியத்தின் மீதான நம்பிக்கை காரணமாக அதைச் சொன்னார்கள். அதற்கேற்ப அன்று புலம்பெயர்ந்த ஈழத்தவர்கள் நடத்திய இதழ்கள் வந்து குவிந்தன. 1990ல் சுந்தர ராமசாமியின் இல்லத்தில்…

    noelnadesan

    09/06/2018
    Uncategorized
  • எகிப்தில் சிலநாட்கள்19: எகிப்திய வைத்தியர்.

    கடல் சூழ்ந்த எங்கள் எழுவைதீவுக்கு கிழமைக்கு ஒருமுறை அருகில் உள்ள அனலைதீவிலிருந்து வைத்தியர் வருவார். அவரை சந்திப்பதற்கு எப்பொழுதும் கூட்டம் நிற்கும். சடுதியாக நோய் வந்தால் வள்ளத்தின் மூலம் பக்கத்தூருக்குச் செல்வோம். சிலநாட்கள் வரை தாக்குப் பிடிக்கக் கூடிய நோய் வந்தால் தினம் இருமுறை நடைபெறும் மோட்டார் படகு சேவையை உபயோகிப்போம். எம்மோடு சேர்ந்து வாழும் நோய்களான தொய்வு, சர்க்கரை வியாதி, (நீரழிவு) போன்றவற்றிற்கு பக்கத்து ஊர் வைத்தியரின் வருகையை எதிர்பார்த்து நிற்போம். ஒவ்வொரு கிழமையும் அம்மா…

    noelnadesan

    05/06/2018
    Uncategorized
  • குஸ்கோ- இன்கா நகரம்

    கொலம்பியாவின் போகொட்டா விமான நிலயத்தில் காத்திருந்தபோது சில பெண்கள், குழந்தைகளை அழகான துணியால் கட்டி தோளில் ஊஞ்சலாக வைத்திருந்ததை கண்டேன். குழந்தைகள் அழாமல் அமைதியாக சிரித்தபடியே இருந்தார்கள். அந்தீஸ் மலைப் பகுதியில் வாழும் பெண்களிடம் இன்னமும் இந்த வழக்கம் மாறாமல் உள்ளது. மலையேறும்போது இலகுவாக பாரத்தைத் தூக்க ஏற்ப்பட்டது இப்பொழுது விமானமேறும் போதும் கடைப்பிடிக்கப்படுகிறது. விமான ஊழியர்களுக்கு இவர்கள் குழந்தைகளின் பிராமை கொண்டு செல்லும் வேலையைக் கொடுக்கவில்லை. 3310 மீட்டர் உயரத்தில் உள்ள குஸ்கோ எனப்படும் நகரம்…

    noelnadesan

    04/06/2018
    Uncategorized
  • மெல்பன் ‘சுந்தர்’ சுந்தரமூர்த்தி வாழ்வும் பணிகளும்

    பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்ற தீர்க்கதரிசியாக அயராமல் உழைத்துவரும் சமூகப்பணியாளர் முருகபூபதி சமூகப்பணிகளில் ஈடுபடுவதற்கு மூலதனமாக இருப்பது: பொறுமை, சகிப்புத்தன்மை, தியாக மனப்பான்மை, நெகிழ்ச்சியான இயல்புகள், அர்ப்பணிப்பு, இரக்க சிந்தனை. இந்தப்பண்புகளை கொண்டிருப்பவர்கள் நண்பர்களாக கிடைப்பதும் பெரிய கொடுப்பினை. அவ்வாறு மெல்பனில் எனக்குக் கிடைத்த நண்பர்தான் திரு. சபாரத்தினம் சுந்தரமூர்த்தி அவர்கள். இவரை நாம் சுந்தர் எனச்செல்லமாக அழைப்பது வழக்கம். இலங்கையில் காரைநகர் களபூமியில் 31-05-1948 ஆம் திகதி பிறந்திருக்கும் சுந்தர், நேற்றைய தினம் தனது 70…

    noelnadesan

    02/06/2018
    Uncategorized
  • உன்னையே மயல் கொண்டால் -பாகம் பன்னிரண்டு

      “உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். உண்மையை சொல்ல வேண்டும். என்னைக் கல்யாணம் செய்வதற்கு முன்பு யாரையாவது காதலித்தீர்களா? “ சந்திரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘இரு வருடங்களில் கேட்காத கேள்வியை கேட்கிறாளே!  யாராவது அவளிடம் சொல்லி விட்டார்களா? இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழும் ஏரியா தான் ஓபன். சோபாவோ பெற்றோரோ மற்றவர்களோடு பேசிப் பழகுவது குறைவு. தாங்களும் தங்கள் குடும்பமும் என வாழ்பவர்கள் இவர்கள். பாடசாலையில் ஒன்றாக படித்தவர்களை தவிர மற்றவர்களை தெரியாது. ஏன்இப்படி தனியாக இருக்கிறார்கள்…

    noelnadesan

    01/06/2018
    Uncategorized
  • உன்னையே மயல் கொண்டு-பாகம் பதினொன்று

    சோபா காலையில் படுக்கையில் இருந்தபடி தனது கடந்த காலத்தை இரை மீட்டுக் கொணடிருந்தாள். எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளபோது நினைக்க கூடியது கடந்தகாலம் மட்டும்தானே. எதிர்காலம் இல்லாத முதியவர்கள் மட்டும் தான் கடந்த காலத்தை நினைப்பார்கள். பதினெட்டு வயதில் திருமணமாகி பத்தொன்பது வயதில் குழந்தையைப் பெற்று இருபதாவது வயதில் கடந்த காலத்தில் மிதப்பவளின் மனோநிலையை என்னவென்று சொல்வது? “தங்கச்சி இந்தா கோப்பி” என்று கையில் கொடுத்தார் இராசநாயகம். கையை நீட்டி மெதுவாக வாங்கியவள் தகப்பனின் முகத்தை பார்க்க வில்லை.…

    noelnadesan

    26/05/2018
    Uncategorized
  • மச்சுபிச்சு

    என் வாழ்க்கையில் இவ்வளவு அழகானது மட்டுமல்ல, வரவேற்று உபசரிப்பும் கொண்ட இரயிலைக் கண்டதில்லை. வர்ணிக்க விரும்பினால் வார்த்தைகளுக்குப் பஞ்சம் ஏற்படும். காலை நேரத்தில் இன்கா தலைநகரானன குஸ்காவில்இருந்து மச்சுப்பிச்சு செல்வதற்காக நாங்கள் ஏறிய சொகுசு இரயில் மச்சுபிசுவைக் கண்டறிந்த ஹரன் பிங்கம் என்ற ஜேல் பல்கலைக்கழகப் சரித்திரப் பேராசிரியரின் பெயரில் பெரு அரசால் நடத்தப்படுகிறது. அரசாங்கத்தின் சேவைகளும்நேர்த்தியாக நடத்த முடியும் என்பதற்கு இந்த இரயில் உதாரணமாக இருந்தது. மிகவும் வசதியான நாற்காலிகள் மேசைகள்அதன் மேல் மேசை விரிப்புகள்…

    noelnadesan

    21/05/2018
    Uncategorized
  • ” எழுத்துச்சித்தர் “பாலகுமாரன் நினைவுகள்

    அஞ்சலிக்குறிப்பு: முருகபூபதி ” என்னுடைய கன்டென்ட் கஷ்டமானது, அதனால் நடையும் அப்படித்தான் இருக்கும். ” என்று சொல்லும் பாலகுமாரன், வித்தியாசமாக எழுதுகின்ற எழுத்தாளர் வரிசையில் முதன்மையானவரும் முக்கியமானவருமாவார். ஆரம்பத்தில் கணையாழியில் எழுத ஆரம்பித்த இவர், பின்னர் சாவி, மோனா, தாய், ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பரவலான சஞ்சிகைகளில் தனது வீரியமான கதைகளை விதைக்கத்தொடங்கினார். ஜிகினா வேலைசெய்து வாசகரை ஏமாற்றி இருட்டுக்கு இட்டுச்செல்லும் சில கதாசிரியர்கள் செய்யும் வேலையைச்செய்யாது, யதார்த்தங்களை அப்படியே சாயம் பூசாமல், மனதால் மட்டுமே எழுதிக்காட்டுபவர்…

    noelnadesan

    16/05/2018
    Uncategorized
  • Memories of late K.G Amaradasa -an Ardent Tamil Literary Lover &Advocate for National Unity

    Written By: L. Murugapoopathy, Australia “Some might say that if a Sinhala man marries a Tamil woman or a Tamil man marries a Sinhala woman, then national unity will be born. I don’t think so. If people of different ethnic origin get married, only the children would be born as a natural consequence” quipped Ven.…

    noelnadesan

    12/05/2018
    Uncategorized
  • உன்னையே மயல் கொண்டால்- பாகம் பத்து

    ஜுலியாவின் கதை “நான் விவசாய குடும்பத்தில் பிறந்தேன். எங்கள் பண்ணையில் பால் மாடுகளும், செம்மறி ஆடுகளும் வளர்த்தோம். பெற்றோருக்கு பண்ணையில் வேலை செய்யவே நேரம் போதாது. நாங்களும் பண்ணை மிருகம் போல வளர்ந்தோம். இரண்டாம் உலகப்போரில் கலந்துவிட்டு வந்த தந்தையின் கவனம் முழுவதும் பண்ணைமீது இருந்தது. போர்க்காலத்தில் பராமரிப்பு குறைந்து பண்ணை நல்லநிலையில் இருக்கவில்லை. மாடுகள் செம்மறியாடுகள் என வாங்கி பண்ணையை பெருக்கினார். பின்னர் பண்ணையில் மாடுகள் கன்று போடுதல் பால் கறத்தல் என்று வேலைகள் உண்டு.…

    noelnadesan

    12/05/2018
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 81 82 83 84 85 … 163
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar