Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • டான்” தொலைக்காட்சி குகநாதன்

    நீரில் வாழும் மீன்போல் 40 வருடங்கள் ஊடகத்துறையில் தனது சுவாசக்காற்றை எடுத்து வாழும் “டான்” தொலைக்காட்சி குகநாதனை 2009 மார்ச் மாதத்தில் சந்தித்த பின்பு ஒரு சகோதரனாக எனக்கு நெருக்கமானவர். இலங்கை சென்றால் அவருடன் தங்குவது, ஐரோப்பா சென்றால் அவரது குடும்பத்தினருடன் தங்கியது மற்றும் நல்லது கெட்டது எனப் பல விடயங்களில் பங்கு பற்றியபோது எனக்குத் தோன்றிய எண்ணத்தை இங்கே சொல்லவேண்டும். ஊடகம், எழுத்துத்துறை என்பது கொக்கெயின் போன்று போதை தரும் விடயம். அதில் உண்மையாக ஈடுபாடு…

    noelnadesan

    27/12/2018
    Uncategorized
  • தமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்

    ” நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் ” தொடருக்கு களம் தந்தவர் முருகபூபதி ” யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகையில் தனது தம்பி குகநாதன் பணியாற்றுகிறார் ” என்று கொழும்பில் என்னைச்சந்தித்த நண்பரும் எழுத்தாளருமான காவலூர் ஜெகநாதன் ஒரு நாள் சொன்னார். அப்பொழுது 1978 ஆம் ஆண்டு. தமது 19 வயதில் யாழ்.ஈழநாடுவில் இணைந்த குகநாதனை 1984 இல்தான் முதல் முதலில் அந்த அலுவலகத்தில் சந்தித்தேன். அப்பொழுது எனக்கு அவரை அறிமுகப்படுத்தியவர் தற்பொழுது லண்டனில் வதியும் மற்றும் ஒரு பத்திரிகையாளர்…

    noelnadesan

    26/12/2018
    Uncategorized
  • மீகொங் நதிக்கரையில் மார்கரிட்டா டுராஸ் – த லவர்ஸ்(The Lovers).

    மீகொங் நதிவழியே மிதக்கும் சந்தையை பார்த்து விட்டு , நாம் பயணித்த எமது படகு தொடர்ந்து போனபோது , நாங்கள் இறங்கிய சிறியநகரம் ( Cai be). அங்கு அவல் செய்வது , அரிசியில் சாராயம் வடிப்பது போன்ற பல சிறு கைத்தொழில்களைச் செய்யும் மக்களைப்பார்க்க முடிந்தது. நதிக்கரையில் இவற்றைத் தயாரிப்பதனால், இவர்களால் பொருட்களை எளிதாகச் சந்தைப்படுத்த முடிகிறது . இந்த இடங்கள் தற்பொழுது உல்லாசப்பிரயாணிகள் தரிசிக்கும் பகுதிகளாகிவிட்டது . பாம்பு அடைத்த வடிசாரயங்கள் கொண்ட போத்தல்கள்…

    noelnadesan

    15/12/2018
    Uncategorized
  • பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலைகளும் தூங்குதப்பா!

    அன்றும் இன்றும் – அங்கம் 01 டீ.பி.-தென்னக்கோன் கலாநிதி-விஜயானந்த-தகநாயக்கா ரஸஞானி உலகம் தோன்றிய காலத்திலிருந்து பார்ப்போமேயானால், வனாந்தரமயமாதல், பாலைவனமயமாதல், வறட்சிமயமாதல், வெப்பமயமாதல், கிராமமயமாதல், நகரமயமாதல் முதலான பரிணாம வளர்ச்சியும், இவை தொடர்பான சிந்தனையும் மேலோங்கியிருந்தன. கடந்துவிட்ட சில நூற்றாண்டுகளிலிருந்து பார்த்தால் உலகமயமாதலும் பேசுபொருளாகிவிட்டது. இதற்கு தேசங்கள் பலியாகியிருப்பதை காணமுடிகிறது. சமூகத்தில், மதங்களில், நோய் உபாதைகளில், வெகுஜன அமைப்புகளில், உள்நாட்டு மற்றும் உலக அரசியலில் மாற்றங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அன்று நாம் வாழ்ந்த வாழ்க்கை இன்றில்லை. இன்று நாம்…

    noelnadesan

    14/12/2018
    Uncategorized
  • படித்தோம் சொல்கின்றோம்:

    ஆழியாள் மொழிபெயர்த்த அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள் பூவுலகைக்கற்றலும் கேட்டலும் முருகபூபதி பூமித்தாயை கற்கவும் அவளது உணர்வுகளை கேட்கவும் முடியுமா? ஆம்! முடியும் என்பவர்கள்தான் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான அபோர்ஜனிஸ் இனத்தவர்கள். இயற்கையை நேசித்து அதற்கியைந்து வாழ்ந்த மக்கள் கூட்டத்தினரிடமிருந்து, வந்தேறு குடிகளால் அபகரிக்கப்பட்ட பெருநிலப்பரப்பிலிருந்து குரல்கள் தொடர்ந்தும் ஒலிக்கின்றன. அங்கு இசையும் அவலமும் கண்ணீரும் இழப்பும் பண்பாட்டுக்கோலங்களும் வரலாற்றுச்செய்திகளும் வெளிப்படுகின்றன. அந்த மக்கள் குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் ஆய்வு செய்தும் வந்திருப்பவர் அவுஸ்திரேலியா கன்பரா மாநில நகரத்தில்…

    noelnadesan

    08/12/2018
    Uncategorized
  • எறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்கும் மரங்கள்

    கருணாகரன் “கஜா புயல்” மிரட்டியதால் எங்கள் வீட்டில் முப்பது வருசமாக நின்று பழம் பழமாகப் பழுத்துக் கொட்டிய பலா மரத்தை வெட்ட வேண்டியதாகி விட்டது. துக்கமwar-tree்தான். ஆனால் வேறு வழியில்லை. கிளைகள் வளர்ந்து வானமுகட்டைத் தொடுமளவுக்கு உயர்ந்து விட்டன. ஏதேனும் ஒரு கிளை ஒடிந்தாலும் கூரையில் பாதி போய் விடும். ஏற்கனவே ஒவ்வொரு பழச் சீசனிலும் பத்துப் பன்னிரண்டு ஓடுகள் உடையும். விசுவர் வந்து எவ்வளவு கவனமாகப் பழங்களை இறக்கினாலும் சோளகக் காற்றிற்கு விழுகின்ற காய்களைச் சமாளிக்கவே…

    noelnadesan

    08/12/2018
    Uncategorized
  • மனாமியங்கள் – சல்மா

    சாந்தி சிவகுமார் மெல்பேர்ன் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் எழுத்தாளர் விழாவில், இந்த நாவலை மெல்பேர்ன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதற்க்காக எந்தவிதமான முன்னுமானமுமின்றி நாவலை வாசிக்க தொடங்கினேன். ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் ”புற உலகம் அறியாத பெண்களின் உள் உலகத்தை விரிக்கும் எழுத்து”. எனக்கு அறிமுகமில்லாத புது வெளியை, புது வாழ்க்கையை என் முன் நிறுத்தியது. இயல்பான் ஒரு சின்ன கிராமம். பெரும்பான்மையானவர்கள் இசுலாமியர்கள். அந்த கிராமாத்தில் உள்ள ஒரு குடும்பத்தின் கதை. ஹசன் மெஹர் கணவன், மனைவி.…

    noelnadesan

    07/12/2018
    Uncategorized
  • மாவீரர்நாள் வியாபாரம்

    நடேசன் ஓ……. மரணித்த வீரனே…… உன் சீருடைகளை எனக்குத் தா…… உன் பாதணிகளை எனக்குத் தா… உன் ஆயுதங்களை எனக்குத்தா…. என்றவர் முடிவில் பிள்ளைகளுக்கும் சேர்த்து கொத்துரொட்டி வாங்கிக் கொண்டு வீடு ஏகினார்! நன்றி: ஜோர்ச் குருசேவ் ரொபின் ஐலன்ட் சிறையை சில வருடங்கள் முன்பு சென்று பார்த்தபோது நெல்சன் மண்டேலா ரொபின் ஐலன்ட் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலத்தில், நல்லவேளையாக தற்கொலைக் கலாச்சாரம் தென் ஆபிரிக்காவில் இருக்கவில்லை . இருந்திருந்தால் அவரும் சயனைட்டை விழுங்கி மாவீரனாகியிருப்பார். தென்…

    noelnadesan

    03/12/2018
    Uncategorized
  • நாவல்:வுதெரிங் கைட்-Emily Bronte- 200 வருடங்கள்

      இன்னமும் எமது மொழியில் தனித்துவமான ஒரு நாவலாசிரியையைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். ஆங்கிலத்தில் காலமெல்லாம் நிலைக்கக்கூடிய ஒரே ஓரு நாவலை மட்டும் தனது நோய் படுக்கையில் இருந்து எழுதிவிட்டு சென்ற இளம் பெண்ணான எமிலி புரண்டியை அவர் பிறந்த 200 வருடத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன் எமிலி புரண்டியின் 22 வயதில் எழுதப்பட்டு வுதெரிங் ஹைட் 1847 ல் புத்தகமாகியது. அதுவரையிலும் வந்த நாவல்களில் இருந்து வித்தியாசமானது மட்டுமல்ல, தற்பொழுது எடுத்துப் பேசும் பத்து…

    noelnadesan

    03/12/2018
    Uncategorized
  • தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை உலகம்

    கவி காளிதாசரின் “சகுந்தலை”யை பெண்ணடிமை கோட்பாடுகளிலிருந்து விடுவிக்கும் கவிஞர் சாந்தி சிவக்குமார் – அவுஸ்திரேலியா (மெல்பனில் நடைபெற்ற தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச் சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட நயப்புரை) கவிதை நான் பயணப்படாத தளம். சிறுகதைகளிலும் புதினங்களிலும் இயல்பாக இலகுவாக பயணிப்பதுபோல், கவிதை கைவரவில்லை. மனம் இன்னும் அதற்குப் பக்குவப்படவில்லை என்று நினைக்கிறேன். தமிழச்சி தங்கபாண்டியனின் பல கவிதைகள் ஒரு சிறுகதைக்குரிய கருவை தாங்கியிருப்பதும், என் மனம் அதை சிறுகதையாய் மாற்ற முயற்சித்ததும், பின் அதை நான் கட்டியிழுத்து அடுத்த…

    noelnadesan

    03/12/2018
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 75 76 77 78 79 … 163
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar