பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • நூல் அறிமுகம். கானல் தேசம்

    எழுத்தாளர் நடேசன் (கானல் தேசம்) மீது முகநூலில் முன்வைக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டதுமான விமர்சனங்களே கானல் தேசம் மீது எனக்கும் எதிர்பார்ப்பை கூட்டியது. ஆசிரியர் தனது முன்னுரையில் ஒப்புவிப்பதைப் போலவே, ஓர் அறிதல் / கேள்விப் புனைவாக கானல்தேசத்தை படைத்திருக்கிறார். நியூட்டனின் 3ம் விதியைப் போலவே; ஈழம் மீது தாக்கம் செலுத்திய விடுதலை என்கிற வினை, கொண்டிருந்த நேர் வினைகளை தீபச்செல்வன், தமிழ்நதி, குணாகவியழகன் (இன்னும் பலர்) சமகாலத்தில் இலக்கியப்புனைவுகளாக்கி தந்திருக்கிறார்கள். அதைப் போல, அதன் எதிர்வினைகளை சோபா சக்தி…

    noelnadesan

    20/09/2019
    Uncategorized
  • பிடித்த சிறுகதை – 442. நந்தினி சேவையர்

    சலனங்களுக்கு வயதில்லை “ “இன்றைய ஈழத்தமிழ்ப்பரப்பிலும் புலம்பெயர் பரப்பிலும் அதிக சர்ச்சைக்குள்ளானவர். பல நெருக்கடிகளையும் கடினமான விமர்சனங்களையும் மிக மோசமான அவதூறுகளையும் சந்தித்தவர். இன்னும் இவரைப் பற்றிய எதிர்ப்பலைகள் முற்றாக ஓய்ந்து விடவில்லை. இந்த ஓயாத அலைகளுக்கு மத்தியிலும் தன்னுடைய படகினை வலிமையோடும் ஓர்மத்தோடும் ஓட்டிச் சென்று கொண்டிருப்பவர்.” மேற்படி கூற்று இவர் பற்றிய ஒரு இணைய சஞ்சிகை நேர்காணலின் குறிப்பாக வந்தது. இவரது படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை. “நோயல் நடேசன்.” ****************** என்.எஸ். நடேசன்.…

    noelnadesan

    11/09/2019
    Uncategorized
  • இலங்கை மாணவர் கல்வி நிதியம் -நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி

    அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெற்ற நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி மாணவர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியைப்பெறும் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி மாணவர்களுக்கான இவ்வாண்டின் இறுதிக்கட்ட நிதிக்கொடுப்பனவுகள் அண்மையில் வழங்கப்பட்டது. கல்லூரி அதிபர் திரு. புவனேஸ்வரராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நடப்பாண்டு தலைவர் திரு. லெ. முருகபூபதியும்…

    noelnadesan

    09/09/2019
    Uncategorized
  • கானல் தேசம் — நடேசன் 1 பாலைவனத்து நடனம்.

      அசோகனுக்கு தூரத்தில் பாலைவனம் தண்ணீராகத் தெரிந்தது. இதுதான் கானல்நீரா? . பாலை நிலத்தில் மட்டுமா யாழ்ப்பாணத் தெருவிலும் கூட பாடசாலை விட்டு வரும்போது இந்தக் கானல் நீரை பார்த்திருக்கிறேனே!. தார் வீதியில் தெளிவாகத் தெரியுமே. நாமும் கானல் தேசத்து மனிதர்கள்தானோ? மேகமற்ற வெளிர் நீலவானம், ராஜஸ்தான் தார்ப் பாலைவனத்தில் மேல் குடைவிரித்திருந்தது. பத்துமணிக்கே ஆக்ரோஷமாக சூரியக்கதிர்கள் தரையை நோக்கிப் பாய்ந்தன. போட்டிருந்த பேஸ்போல் தொப்பியின் கீழ் தலை வியர்த்தது. அணிந்திருந்த சேட் வியர்வையில் நனைந்து முதுகோடு…

    noelnadesan

    30/08/2019
    Uncategorized
  • Dr David Alexander Young, Honored

    Mr David Young Orthopaedic Surgeon MBBS, FRACS (ORTH) Special Area of Interest: Sports Injuries, Hip & Knee Surgery The Sri Lankan National Awards Ceremony was conducted at the BMICH hall on Monday 19th August at 4 pm. The President of Sri Lanka, His Excellency Maithripala Sirisena conferred National Honours on 70 distinguished people among them…

    noelnadesan

    26/08/2019
    Uncategorized
  • அஞ்சலிக்குறிப்பு: உபாலி லீலாரத்ன !…

    அஞ்சலிக்குறிப்பு: தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைக்கு பாலமாக விளங்கிய உபாலி லீலாரத்ன ! புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் ஈழத்து – புகலிட தமிழ் படைப்புகளையும் சிங்களத்திற்கு வரவாக்கிய இலக்கியத் தொண்டன் ! ! முருகபூபதி புன்னகை தவழும் முகம். தமிழில் பேசினால் குழந்தையின் மழலை உதிரும். ஆழ்ந்த அமைதி. இலக்கிய நண்பர்களை அரவணைக்கும் வார்த்தைகள். இந்த அடையாளங்களுடன் வாழ்ந்த நண்பர் உபாலி லீலாரத்ன அவர்களை இனிமேல் ஒளிப்படங்களில்தான் பார்க்கமுடியும்! இனிமேல் நிகழும் மொழிபெயர்ப்பு சார்ந்த உரைகளில் பேசுபொருளாவார். தமிழ்…

    noelnadesan

    02/08/2019
    Uncategorized
  • கானல் தேசம் – உனையே மயல்கொண்டு

    மதிப்பீடு : சி. செல்வராசா ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் 1972-76 வரை பேராதனைப்பல்கலைகழகத்தில் படித்த காலத்தில் நிறையச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகளும் வாசித்து மகிந்தேன். அதன் பின் அரசறிவியலில் சிறப்புத்தேர்ச்சி பெற்று 1977-87 வரை பத்தாண்டுகள் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்தபோதோ அல்லது 1987ல் அவுஸ்திரேலியா வந்து கடந்த 32 வருடங்களாக இந்த நாட்டில் வாழ்கின்றவேளையிலோ இந்த அரசறிவியல் மற்றும் இலங்கை அரசியல் பற்றி வாசித்து எழுதியது மட்டுமே. நாவல், சிறுகதை, கவிதை பெரிதாக வாசித்து…

    noelnadesan

    16/07/2019
    Uncategorized
  • விமர்சனம் -நடேசனின் வண்ணாத்திக் குளம்

    பாலியல் வயது இளையயோடும் ஒரு காதல் கதை. இப்படித் தான் இந்த வண்ணாத்திக் குளம் குறுநாவலின் தொடக்கத்தை என்னால் முதலில் உணரமுடிந்தது. ஆனால் இக்கதைப் பின்னணியின் ஆழத்தை ஒரு தமிழன் என்ற பகுப்பாய்வில் நின்று கொண்டு நான் வாசித்த போது தான், ஏதோ ஒரு ஏக்கம் இளையோடுவதை உணர முடிந்தது. கதையின் கருத்து உணர்த்தும் உள் நோக்கம் எல்லா வாசகர்களுக்கும் கொண்டு சென்றிருக்குமா என்ற கேள்வியோடு தான் இதை எழுதுகிறேன். பெரும்பான்மையான இடங்கள் ஒவ்வொன்றிலும் ஏதோ நடக்க…

    noelnadesan

    12/07/2019
    Uncategorized
  • 1-கரையில் மோதும் நினைவலைகள் கள்ளவிசா.

    நடேசன் 62ஆவது பிறந்ததினம் கடந்த மார்கழி 23 ஆம் திகதியன்று மாலை 6.30 மணிவரையும் வேலை செய்தேன். வெளியே சென்று காலையில்; ரெஸ்ரோரண்ட் ஒன்றில் உணவருந்துவோம் என்று மனைவி கேட்டபோது மறுத்துவிட்டேன். கோதில்லாத நண்டு வீட்டில் சமைக்கப்பட்டிருந்தது. வீட்டில் உணவு சிறந்ததாக இருக்கும்போது வெளியில்போகத்தேவையில்லையே? ஆனால், வாய்க்கு இதமாகவும் சமிப்பதற்கு வசதியாகவும் வெள்ளை வைன் போத்தல் ஒன்றை வாங்கிவருவதற்கு நினைத்தேன். நியூசிலாந்து ஓய்ரர் பே சவன் பிலாங் எனக் கேட்டேன். வெள்ளை வைனும் கடல் உணவுக்குப் பொருத்தமானது…

    noelnadesan

    07/07/2019
    Uncategorized
  • கானல் தேசம் ஏற்புரை – கான்பராவில் பேசவிருந்தது.

    ஆங்கிலத்தில் pregnant pause என்று ஒரு வார்த்தையுள்ளது . அதாவது கேள்விக்கு பல பதில்களை வைத்தபடி கேட்பது. உதாரணமாக- do you love me ? என்றால் அதற்கு பல பதில்கள் இருக்கலாமல்லவா? அப்படியான கேள்வியைக் கேட்டு விட்டு பதிலுக்காக காத்திருக்கும் அந்த இடைவேளை pregnant pause என்பது. அதேபோல் பல உண்மைகளைத் தெரிந்து கொண்டு பேசாமல் இருப்பது மிகவும் கடினமானது . அதிலும் பத்திரிகை ஆசிரியராகவும் பின்பு ஒரு நாவலாசியராக மாறிய எனக்கு அப்படியான கர்ப்பமான…

    noelnadesan

    06/07/2019
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 76 77 78 79 80 … 168
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 102 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar