-
பயங்கரவாதத்தின் மன நிலை
நடேசன் சமீபத்தில் நியூசிலாந்து கிரைசேர்ச்சில்(Chiristchurch) ஐம்பது பேரை பள்ளிவாசலில் கொலை செய்த பிரன்ரன் ராறன்ட் (Brenton Tarrant) என்பவனின் அவுஸ்திரேலியரான தந்தை தனது சிறுவயதில் அஸ்பஸ்ரஸ்(Asbestos) தொழிற்சாலையில் வேலை செய்ததால் நோய் வந்து இறந்தார். தாய் பாடசாலை ஆசிரியை. இவர்கள் நியூ சவுத் வேல்ஸ்ஸை சேர்ந்த சிறு நகரமான கிராவ்ரன்(Grafton) என்ற ஊரில் வசித்தவர்கள். கிராவ்ரன், கிளரன்ஸ் ஆற்றருகே உள்ளது . இங்கு ஜக்கரண்டா மரம் பூக்கும் காலத்தில் திருவிழா நடக்கும். இந்த நகரத்தில் பிறந்து வளர்ந்த…
-
புலிகளின் அழிவுக்குக் காரணம் தேடிய பிரேத பரிசோதனை
டாக்டர் நடேசனின் நாவலான ‘கானல் தேசம்’ பற்றிய சிறு விமர்சனம். ( 1) இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-லண்டன் ‘கானல் தேசம்’ என்ற நாவல் தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்ற, பல பிரமாண்டமான எதிர்பார்ப்புகளுடன் ஆயுதம் தாங்கிய அற்புத அவதாரமாய்’ வளர்ந்த விடுதலைப் போராளிகளின் போராட்டம் என்னவென்று சட்டென்று அழிந்து சாம்பலானது என்பதை,ஒரு மருத்துவர் பல காயங்களுடன் இறந்துவிட்டவனின் உடலின் முக்கிய பகுதிகளை வெட்டியெடுத்து ஆராய்ந்து,அவனின் இறப்புக்குக் காரணங்களைத் தேடும் பிரேதப் பரிசோதனை செய்வதுபோல் டாக்டர் நடேசனால் ‘கானல் தேசம்’ என்ற…
-
முகவுரை மட்டும் வைத்து ஒரு மணிநேரம் பேசமுடிகிறதே!
சும்மா சொல்லக்கூடாது நம்மால முடியாத விடயம். சாகித்திய அக்கடமி பரிசு பெயற்ற நாவல்களுக்கே கிடைக்காத வாய்ப்பு. இதைப்பற்றி நான் யோசித்திருந்தால் நாய் பூனைக் கதைகளை எழுதாமல் பலவருடங்கள் முன்பாக எழுதியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
-
அறிமுகம் கானல் தேசம்
சுகு-ஸ்ரீதரன் கானல் தேசம் தமிழ் சமூகத்தில் பேசப்படுவதை விரும்பாத பிரச்சனைகளை கலை இலக்கிய வடிவத்திற்கு கொண்டு வருகிறது. பேசாப் பொருளைபேசத்துணிந்தது. தமிழ்போராட்டத்தின் அறஞ்சார் தராதரத்தை அது அலங்காரம் எதும் இல்லாமல் தனது இயல்பான ஓட்டத்தில் கேள்விக்குள்ளாக்குகிறது. போராட்டத்தின் பிரதான போக்கில் பொதிந்திருந்த சர்வதேச அளவிலான “மாபியாதனத்தை” மக்களின் பேரில் சேகரிக்கப்பட்ட உலகளாவிய நிதி எவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்பட்டது மற்றும் கருத்து சுதந்திர இடைவெளியை இல்லா தொழிப்பதில் ஊரிலும் உலகிலுமாக இருந்த மிருக வெறியையும், பிரக்ஞை பூர்வமாக போராட்டத்தில்…
-
நடேசனின் எக்சைல்
சுகு-ஸ்ரீதரன் திருநிலை- புனிதப்படுத்தப்பட்டவை மீதான தீவிரமான கேள்விகள் நடேசனின் எக்சைல் மற்றும் கானல் தேசம் இரண்டு நூல்களும் சமகால கவனத்திற்குரியன. படைப்பு சுதந்திரம் ஒரு சமூகத்தின் சுயவிசாரணை தொடர்பாக அவை முக்கியத்தும் வாய்ந்தன. எக்ஸைல் “முறிந்த பனை” 1990 களின் முற்பகுதியில் பரவலாக பேசப்பட்டது. அக்காலத்தில் அது தமிழ் “புனிதங்களை” பற்றி கேள்வி எழுப்பியதால் பூசிப்பவர்களின் கடும் சினத்திற்குள்ளானது. அதனை வாசிப்பவர்களும் அதனை வினியோகிப்பவர்களும் உயிராபத்தை எதிர் கொள்ளும் நிலை நிலவியது. இலங்கையின் எந்த தமிழ் புத்தக…
-
அறச்சீற்றமா? ஆற்றாமையா?
ஜெயமோகனுக்கு எதிராக ஈழத்தமிழர்கள் முக்கியமாக கவிஞர்களின் அறச்சீற்றம் ஆழிப் பேரலையென பொங்கியெழுந்ததைக் கண்டு பயந்து போய்விட்டேன் . 2004 மார்கழியை நினைவு படுத்தியது. ஐரோப்பாவில் இருந்து பெருந்தலை எனது பெயரையும் இழுத்து விட்டது. இது அடுக்குமா? ஒருவரின் நண்பனாக இருப்பது குற்றமா ? வேறொருவர் அல்லக்கை என ஒரு நக்கல். ஜெயமோகனது நண்பனாக இருப்பது மட்டும் நல்ல நாவல் எழுதுவதற்கு போதுமா என இலக்கியப் பெரும்தலை என்னை இழுத்துவிட்டிருந்தார். அதாவது கம்பன் வீட்டு கைத்தறி கணக்கில்.எனது நாவல்கள்…
-
நொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்
மதிப்புரை ஈழத்தமிழ் இலக்கிய படைப்புலகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் போரியல் சார்ந்த பிரதிகளுக்கு “ஜனவசியம்” மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுவது ஒன்றும் புதிதான விடயம் அல்ல. ஆனால், அந்தப் பிரதிகள் என்ன வகையிலான அரசியலை பேசுகின்றன என்பதைப் பொறுத்து ஒவ்வொரு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வந்துள்ளன. ஈழத்தில் போர் முடிந்த பின்னர் வெளிவந்த பிரதிகளை மாத்திரம் எடுத்து நோக்குவோமானால் அவற்றில் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட பிரதிகள் பிரச்சார நெடி நிறைந்தவையாகவும் போரினால் பொதுமக்கள் இழந்தவற்றை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கின்ற பாடுகளாகவுமே காணப்பட்டிருக்கின்றன.…
-
கானல்தேசம்- முன்னுரை
அப்பிள் நிலத்தில் விழுவது, அதனது காம்பு சூரியவெப்பத்தில் காய்ந்துவிடுவதாலா? காற்று பலமாக வீசியதாலா? புவியீர்ப்பினாலா? அல்லது அப்பிள் மரத்தின் கீழே நின்ற சிறுவன் அதை உண்பதற்கு விரும்பியதாலா? இப்படி பல காரணங்கள் பழமொன்று விழுவதற்கு இருக்கும்போது, ஏனைய விடயங்களுக்கு எத்தனை காரணங்கள் இருக்கலாம் என ருஷ்ஷிய எழுத்தாளர் லியோ ரோல்ஸ்ரோய் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதை வாசித்தபோது இலங்கையில் தமிழர்கள் போராட்டம் தோற்றதற்கு இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல காரணம் என்ற விசாலமான சிந்தனையில் உருவாகியதே இந்த நாவல். அதேவேளையில்…
-
வரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”
கருணாகரன்— “வரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ” என்ற எண்ணமே பலரையும் அரசியல் குறித்துச் சிந்திக்க வைக்கிறது. சிந்திக்க மட்டுமல்ல, அரசியலில் செயற்படவும் வைக்கிறது. அது நேரடியான பங்கேற்பாகவும் இருக்கலாம். சற்று இடைவெளி கொண்ட ஆதரவாகவும் இருக்கலாம். அதுவும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் நிகழ்கின்ற காலத்தில் அல்லது இன ரீதியான அரசியல் விவகாரம் என்று வந்து விட்டால் இதைச் சொல்லவே தேவையில்லை. இந்த உணர்வு ஒரு உந்துதலாக அல்லது ஈர்ப்பாக மாறி எங்கெங்கோ கொண்டு சென்று…
-
நடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி.
மகேந்திரன் திருவரங்கன் இன்னும் நான்கு மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் முடிவுற்று 10 வருடங்களாகி விடும். இந்த யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து மீண்டெழுகின்ற நிலையில் வாழும் சமூகங்களாகவே நாம் இன்னமும் இருந்து வருகிறோம். யுத்தத்துக்குக் காரணமான அடிப்படை அரசியற் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு தொடர்ந்தும் தீர்வுகளை வழங்காது தமிழர்களையும், ஏனைய சிறுபான்மை இனங்களையும் இழுத்தடித்தும், ஏமாற்றியும் வருகிறது. இந்த யுத்தம் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் குறிப்பாக வடக்குக் கிழக்கிலே வாழும் சமூகங்களை…