-
காந்தியின் சபர்மதி ஆச்சிரமம்.
நடேசன் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றருகில் மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் உள்ள அவர் வழக்கமாக அமரும் அந்த வீட்டின் திண்ணையில் பல ஐரோப்பியர்கள் இருந்தார்கள். அவர்களின் குழந்தைகள் அங்குள்ள கைராட்டையில் நூல் சுற்றிப்பார்த்தார்கள். அவர்கள் எல்லோரும் விலகிய பின்னர், அந்த இடத்தில் நானும் மனைவியுடன் இருக்க விரும்பி காத்திருந்தேன். தொடர்ந்தும் ஆட்கள் வந்துகொண்டிருந்தார்கள் . சிறிது இடைவெளி வந்ததும் நானும் எனது மனைவியும் சில நிமிடங்கள் அங்கிருந்து ஏற்கனவே பார்த்த ஆசிரமத்திலுள்ள கடிதங்கள், படங்கள் ,மற்றும் பத்திரிகை செய்திகளை…
-
அழகி ஒருத்தி இளநி விற்கிறாள், திருவண்ணலையிலே. இயற்கை எழிலில் கண்ட உயிரோவியம் !
சுபாஷினி சிகதரன் திருவண்ணாமலை ரமணாச்சிரமம் முன் வாயிலிலிருந்து கோயில் செல்லும் திசை நோக்கி பிரதான வீதியால் சிறிது தூரம் நடந்தால் வீதியின் இடப்பக்கத்தில் ஓர் ஒழுங்கை வாயில் போன்ற சிறிய சந்து தென்படும். இதற்குள் பிரவேசித்து மேற்கொண்டு நடந்தால் மலையினூடு செல்லும் ஒற்றையடிப் பாதை ரமண மகரிஷி வருடக்கணக்கில் தவம் செய்த விருபாக்ஷி குகை எனப்படும் ஆற்றங்கரையோரக் காட்டுக் குகைக்கு அழைத்துச் செல்லும். ஆறு எல்லாம் வற்றிவிட்டது. வெறும் தடயம் மாத்திரமே உள்ளது. நாம் கடைசியாகத் திருவண்ணாமலை…
-
இது ஒரு வகை வசியம்
இரவு பத்துமணி மெல்போனில் குளிரும், மழையும் சயாமிய இரட்டையர்களாக வந்து போகும். மிருக வைத்தியசாலையில் எலும்பை விழுங்கிய நாயைப்பரிசோதித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு சீன தம்பதியரின் ஆசை பொமனேரியன். அதன் வாய்க்குள் இருந்த எலும்பை எடுத்துவிட்டுஅவர்களிடம், என்ன எலும்பு கொடுத்தது” என்று கேட்டேன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். நிச்சயமாக அது பூனை அல்லது நாய்க்குட்டியின் தாடை எலும்புத் துண்டு. அது அவர்களது அன்றைய மதிய உணவாக இருக்க வேண்டும். ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, இனி சமைத்த…
-
“King Asoka’s Veterinary Hospital,” is available on Amazon.
Siva Sundram Pillai is a young veterinarian who has migrated to Melbourne Australia to start a new life. After several years of studying and drifting from job to job he finally secures a position in one of the prominent Veterinary hospitals in Melbourne. As he settles into his new position and starts to lay down…
-
குஜராத்- காந்தியின் நிலம்.
இந்தியாவில் அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் மாநிலங்கள் ராஜஸ்தான், கோவா, மற்றும் கேரளம் என்பன. இதைவிடப் மற்றய மாநிலங்ளுக்கு செல்வதற்கான வசதிகள் செய்வதற்கு வழிவகைகள் வெளிநாட்டில் உள்ள பிரயாண முகவர்களிடம் இருப்பதில்லை. பெரும்பாலும் நியூ டெல்கி – தாஜ்மகால்- ஜெய்ப்பூர் படங்கள் பதிவான முக்கோணத்தை இந்திய பயணத்திற்கான முக்கிய இடங்கள் என விளம்பரப்படுத்துவார்கள். இதற்கு யார் காரணம்? பெரிய வசதிகள் உள்ள தமிழ்நாடு மாநிலத்திற்கான பயணத்தைப்பற்றிய தகவல்களை வெளிநாடுகளிலிருக்கும் முகவர்களிடம் தேடினால் கிடைக்காது. மற்ற மாநிலங்களுக்குப் பயணிப்பவர்கள் பெரும்பாலும்…
-
With SBS interview after the war.
https://www.youtube.com/watch?v=dyJNLcIMvas&has_verified=1&fbclid=IwAR1b52pY7idwjy2tTgcfp0XdfmlMjsg3LJn-b27ocwC1ct3mBWTTpTK4Hmg https://www.youtube.com/watch?v=gyRSDq-HET0&fbclid=IwAR1b52pY7idwjy2tTgcfp0XdfmlMjsg3LJn-b27ocwC1ct3mBWTTpTK4Hmg
-
காயங்கள் ஆறவேண்டும்
நடேசன் அவுஸ்திரேலியாவில் புதிதாக வீடு கட்டிய பின்னர், வீட்டுக்கு முன்புறமும் பின்புறமும் புற்களை விரிப்பாகக் கொண்டு வந்து பதித்து புற்தரையை உருவாக்குவார்கள். சில இடங்களில் புல் அழிந்தாலோ அல்லது , வளராது போனாலோ புல் விதைகளை நட்டு, மெல்பன் கிரிக்கட் மைதானம்போன்று புற்களை வளர்ப்பார்கள். பின்பு இரண்டு அல்லது மூன்று கிழமைக்கு ஒரு முறை அவற்றை வெட்டுவார்கள் . நன்றாக வளராதபோது அதற்கு பசளையிடுவார்கள். கோடை வந்தால் பணம் கொடுத்து வாங்கிய குடி நீரை ஒன்று விட்டு…
-
ஆவி எதை தேடியது ?
நத்தை தனது ஓட்டையும் பாம்பு தனது தோலையும் புதுப்பித்துக்கொள்வது போன்று, அவுஸ்திரேலியர்களும் தாங்கள் வாழும் வீட்டை ஏழு வருடங்களுக்கு ஒரு தடவை மாற்றிக்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்ந்த வீடுகள் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை விற்பனைச் சந்தைக்கு வரும். வயதானவர்கள் பெரிய வீட்டை விற்றுவிட்டு, மற்றும் ஒரு சிறிய வீட்டைத் தேடுவார்கள்.அதேபோன்று குடும்பம் பெருகுவதால் மட்டுமன்றி, குடும்பம் பிரிவதாலும் வீடுகள் மாறுகின்றன. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இங்கு வாழ வந்தவர்களால் அவுஸ்திரேலியர்களின் இந்த மனப்பான்மையை நம்ப…
-
எனது கணவன் எனது நாய்க்கு அலர்ஜி
கடந்த நான்கு வருடங்களாக விவியனின் இருநாய்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறேன். ராணியை நான்கு வயது குட்டியாக இருந்தபோது தடுப்பூசி போட்ட காலத்தில் இருந்து எனக்கு தெரியும். எனது பரிசோதனைமேசையில் ஏறியவுடன் மிகவும் சாவகசமாக இருந்து என் கைகளையும் ஏன் முகத்தையும் கூட நக்க முயற்சிக்கும்.பொப்பி வயதான தீபெத்தியன் ரெரியர் எனப்படும் நாய். எனது விரலைக் கடித்து ருசி பார்க்க விரும்பும். நகம்வெட்டுவது போன்ற சிறிய வேலைகளுக்குக்கூட மயக்க மருந்து கொடுக்க வேண்டும். இது பல வருடங்களாகத் தோல்…
-
இலங்கை சாகித்திய மண்டலம் – தமிழ்ப் பிரிவு என்ன செய்கிறது?
அன்புள்ள கலை, இலக்கிய நண்பர்களுக்கு வணக்கம். அனைவரும் நலம்தானே..? கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதி முதல் தற்போது வரையில் உலகெங்கும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் சமூக இடைவெளி பேணலுக்கு நாம் ஆளாகியிருக்கின்றோம். இந்தப்பின்னணியில் இணையவழி காணொளி நிகழ்ச்சிகள் உலகெங்கும் இடம்பெற்றுவருகின்றன. அண்மையில் தமிழ்நாட்டில் மறைந்த மூத்த எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்களின் நினைவுப்பகிர்வு நிகழ்ச்சியை இந்திய சாகித்திய அக்கடமி இணையவழியில் காணொளியாக நடத்தியதை அறிந்திருப்பீர்கள். இவ்வாண்டு மறைந்த ஈழத்தின் மற்றும் ஒரு எழுத்தாளர் சமூகச்செயற்பாட்டாளர்…