-
நாவல்:அல்பேட் காமுவின் (Stranger)அந்நியன்.
அக்கால செக்கோஸ்லேவியாவில் பணம் சேர்ப்பதற்காக ஒரு இளைஞன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். பல வருடங்கள் பணத்தைச் சேர்த்து, திருமணமாகி குழந்தையுடன் குடும்பஸ்தனாகிறான். பணத்துடனும் மனைவி குழந்தையோடு தனது பிறந்த வீட்டை நோக்கிப் புறப்படுகிறான். ஊரை அடைந்தபோது குழந்தையையும் மனைவியையும் ஒரு ஹோட்டலில் விட்டு விட்டு, தனது வீட்டை நோக்கிச் சென்றபோது, அங்கு அவனது சகோதரியும் தாயும் அந்த வீட்டை ஹோட்டேலாக நடத்துகிறார்கள். அவர்கள் அவனை அடையாளம் காணவில்லை. தன்னை அடையாளம் காட்டாமல் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்ததுடன்…
-
நடுக்காட்டில் பிரதேப் பரிசோதனை
யானை வாழ்ந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்” எனச் சொல்வார்கள். டெஹிவளை மிருகக்காட்சிசாலையிலும், கண்டி எஸல பெரஹராவிலும்தான் யானைகளைப் பார்த்திருக்கிறேன். மிருக மருத்துவம் பயிலும் பொழுது, என்றாவது ஒருநாள், ஒரு யானையைப் பிரேதப் பரிசோதனை செய்வேன் எனக் கனவிலும்நினைத்ததில்லை. பயிற்சி முடிந்து மிருகமருத்துவர் பட்டத்துடன் தொழில் தொடங்கி இரண்டாவது நாளே ஒரு யானையின் மரணம் தொடர்பாக பிரேதப்பரிசோதனைக்குச் சென்றமை என் மிருக மருத்துவத்துறை வாழ்வில் வித்தியாசமான அனுபவம்தான். சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு மதவாச்சியில் நான்…
-
வட்டுக்கோட்டை வேண்டாம் வாழ்வதற்கு உதவுங்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து நடேசன் வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் பேசுபவர்களில் பலர் தமிழர் வரலாறு அறிந்தவர்களோ அல்லது இதன் பின்விளைவுகளை புரிந்தவர்களோ அல்ல. இலங்கை அரசாங்கம் என்ற பாரிய இயந்திரத்தில் ஏற்பட்ட காழ்ப்புணர்வுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எதிர்வினையாக நினைக்கிறார்கள்;. அரசியலை புரிந்து கொள்ளாமல் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கடந்த முப்பது வருடமாக விதைத்த இனவாத விதையை விழுங்கியவர்கள்;;. இவர்களைப் போன்ற இனவாதிகள் சிங்கள சமூகத்திலும் உண்டு. எங்கள் ஆச்சி அடிக்கடி சொல்லும்; ஒரு பழமொழி ‘பன்னீர்குடம்…
-
போர்க்கால இலக்கியம் — ஈழப்போருக்கு முன்பும் பின்னரும் !
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கடந்த 15 ஆம் திகதி நடத்திய இணையவழி காணொளி அரங்கில் சமர்ப்பித்த உரை ! முருகபூபதி போர்க்கால இலக்கியம்பற்றி பேசுவதற்கும் நாம் மற்றும் ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போராடும் காலத்திலும் தயாராகியிருக்கின்றோம். இனி கொரோனா கால இலக்கியம் என்பதும் பேசுபொருளாகிவிடும். சமகால போராட்டத்தில் எம்மை பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி தேவைப்பட்டிருந்தமைபோன்று, ஈழவிடுதலைப்போரில் எமது மக்களின் பாதுகாப்பிற்கு பதுங்கு குழிகள்தான் தேவைப்பட்டன. அப்படியிருந்தும் பதுங்கு குழிகளை நோக்கியும் எறிகணை வீச்சுக்கள் நிகழ்ந்தன.…
-
நாவல் வரலாறு – சுருக்கமானது .
நாவலின் வரலாறு. அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் ( ஓகஸ்ட் ) 15 ஆம் திகதி நடத்திய – போர்க்கால இலக்கியம் – தொடர்பான இணைய வழி காணொளி அரங்கில் நிகழ்த்தப்பட்ட தொடக்கவுரை நடேசன் நாவல் இலக்கிய வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்து கொண்டு மேலே செல்வோம். 100000 வருட மனித வரலாறு கதைகளால் நிரம்பியுள்ளது. மொழி தோன்றாத காலங்களில் பாறைகளிலும் குகைகளிலும் எமது முன்னோர்கள் எழுதினார்கள் . எகிப்தியர் பப்பரசு என்ற புல்லிலும், இன்காக்கள் நூல்…
-
என் ஆத்மாவுக்கு ஒரு தொப்பி இருக்கிறது
A beautiful poem by Mario de Andrade (San Paolo 1893-1945) Poet, novelist, essayist, and musicologist.One of the founders of Brazilian modernism. கூகுளின் உதவியுடனும் எனது திறமையுடனும் தமிழ்படுத்தினேன். எனக்காக எழுதப்பட்டதுபோல் உள்ளதால் —————————————————————–நான் என் ஆண்டுகளை எண்ணினேன், என்னிடம் மிகுதியாகவாழ குறைந்த நேரமே உள்ளது , நான் இதுவரை வாழ்ந்ததை விட.ஒரு தொகை மிட்டாய்களை வென்ற ஒரு குழந்தையைப் போல நான் உணர்கிறேன்: முதலில் குழந்தை அவற்றை மகிழ்ச்சியுடன்…
-
வாழும் சுவடுகள் 2
மிருக வைத்தியத்தின் பின்னணியில் சமுதாயத்தின் பல தரப்பட்ட பிரச்சினைகளைப் படம் பிடிக்கும் கதைகள். கடந்த இருபது ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வாழும் மிருக வைத்தியரான திரு நடேசன் அவர்கள், தன்னிடம் வரும் மிருகங்களையும் அந்த மிருகங்களை வளர்க்கும் மனிதர்களையும் பின்னணியாக வைத்து இருபது சிறு கதைகளைத் தொகுத்து இரண்டாவது முறையாகத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தந்திருக்கிறார். இவர், மிருகங்கள் பற்றிய தனது படைப்புக்களுக்கு, இங்கிலாந்தில் வாழ்ந்து, மிருகங்களையும் அந்த மிருகங்களை வளர்க்கும் மனிதர்களையும் பற்றிப்பல படைப்புக்களைப் படைத்த மிருவைத்திய…
-
தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள்
நடேசன் எழுவைதீவில் இருந்த காலத்தில் நான் கேட்டு வளர்ந்த பல தமிழ்ச் சொற்களை பின்பு அரைநூற்றாண்டுகளாக நான் கேட்டதில்லை. அதனால் அவை மூளையில் புதைபொருளாகிவிட்டன. தமயந்தி எழுதிய ஏழு கடல்கன்னிகள் என்ற சிறுகதைத் தொகுப்பின் பக்கங்களில் அந்த சொற்கள் மீண்டும் எழுந்து வந்தபோது மனம் புல்லரித்தது. மீனவர்கள் மத்தியில் வளர்ந்தேன். சோளகம் , வாடை என்று பருவக்காற்றைச் சொல்வதும், அணியம் – சுக்கான் என மீன் பிடிக்கும் வள்ளங்களின் பாகங்களைக் குறிப்பதும், படுப்புவலை , களங்கண்டி ,…
-
ஆதிக்குடிகளின் கவிதைகள் ;ஆழியாள்.
படித்தோம் சொல்கின்றோம்: ஆழியாள் மொழிபெயர்த்த அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள் முருகபூபதி பூமித்தாயை கற்கவும் அவளது உணர்வுகளை கேட்கவும் முடியுமா?ஆம்! முடியும் என்பவர்கள்தான் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான அபோர்ஜனிஸ் இனத்தவர்கள். இயற்கையை நேசித்து அதற்கியைந்து வாழ்ந்த மக்கள் கூட்டத்தினரிடமிருந்து, வந்தேறு குடிகளால் அபகரிக்கப்பட்ட பெருநிலப்பரப்பிலிருந்து குரல்கள் தொடர்ந்தும் ஒலிக்கின்றன. அங்கு இசையும் அவலமும் கண்ணீரும் இழப்பும் பண்பாட்டுக்கோலங்களும் வரலாற்றுச்செய்திகளும் வெளிப்படுகின்றன.அந்த மக்கள் குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் ஆய்வு செய்தும் வந்திருப்பவர் அவுஸ்திரேலியா கன்பரா மாநில நகரத்தில் வதியும் கவிஞர்…