Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • being alive’ – diaspora short stories

    Written by – K S Sivakumaran – “The Surreptitious Cobras ” is the story by Ravi. It’s a satire on the mindset of a samplecharacter of a person belonging to the older generation and a set of young people running a flourishing restaurant in Melbourne. The so-called love for the birthplace (Valvettithurai) in Yaalpaanam (Jaffna)…

    noelnadesan

    11/11/2020
    Uncategorized
  • நாவல்: ஜே.ஜே குறிப்புகள்.

    ஜோசஃப் ஜேம்ஸ் என்பவரைப் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே குறிப்புகள் என்ற நாவலை வாசித்தபோது பேனாவாலும் ஹைலைட்டராலும் எனக்குப் பிடித்த பகுதிகளைக் கோடிட்டேன். புத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களில் கோடாகி, புத்தகத்தின் பக்கங்கள் வரிக்குதிரையின் தோலாக மாறிவிட்டது. மீண்டும் வாசித்தேன். அப்பொழுது மேலும் கோடுகளிட்டேன் . இதுவரை நான் எனது பாடப்புத்தகங்களைக் கூட இப்படிக் கோடிடவில்லை. பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை வாசிக்கக் கையில் எடுத்துவிட்டு, வார்த்தைகள் புரியவில்லை என வைத்துவிட்டேன் . இம்முறை கூர்ந்து…

    noelnadesan

    09/11/2020
    Uncategorized
  • தேனி ஆசிரியர் உடல் நலம் பெறவேண்டும்

    முருகபூபதி இணைய ஊடகத்துறையில் இணைந்திருக்கும் தோழர் ஜெமினி தோழர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் ! எனது எழுத்துலக வாழ்வு வெள்ளீயத்தில் தயாரிக்கப்பட்ட அச்சு ஊடகங்களில் ஆரம்பமாகி, பின்னாளில் இணைய ஊடகத்தை நோக்கி வளர்ந்தது.1970 களில் எனது எழுத்துக்கள் வீரகேசரி, தினகரன் முதலான நாளேடுகளிலும் மல்லிகை, பூரணி, புதுயுகம், கதம்பம், மாணிக்கம் முதலான சிற்றிதழ்களிலும்தான் வெளிவந்தன.அவுஸ்திரேலியாவுக்கு வரும்வரையில் ஒவ்வொரு வெள்ளீய அச்சு எழுத்துக்களினால் கோர்க்கப்பட்டு அச்சாகிய எனது படைப்புகள், 2000 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கணினியில் பதிவாகி இணைய ஊடகங்களிலும்…

    noelnadesan

    05/11/2020
    Uncategorized
  • கங்கை கரையில்-காசி.

    இந்தியாவில் வாழ்ந்த (84-87) காலத்தில், காசி எனப்படும் வாரணாசிக்கு செல்வதற்கு எத்தனித்தேன். முடியவில்லை. பல வருடங்களுக்குப் பின்னர் அந்த சந்தர்ப்பம் கிடைத்ததுஅதுவும் ஒரு பகல், இரண்டு இரவுகள் மட்டுமே. காசி பற்றிய முதல் தெரிந்துகொண்டது, எழுவைதீவில் 5 -6 வயதான எனது இளம் பருவத்தில். எனது தந்தை , கங்கை நீர் என இந்தியாவில் இருந்து போத்தலில் கொண்டுவந்தபோது, அம்மாவால் அதில் சில துளிகளை எனது தலையில் வைக்கப்பட்டது. ஊரில் பலர் அந்த நீரை கையால் தொட்டு…

    noelnadesan

    04/11/2020
    Uncategorized
  • King Asoka’s veterinary hospital -Novel

    KING ASOKA’SVETERINARYHOSPITAL by Noel Nadesan (2020) Amazon USA available from Amazon in paperback and Kindle REVIEWED BY JayanthaSomasundaram, Canberra In recent years a number of Sri Lanka expatriates in Australia have taken to creative writing. Some of the best known like Michelle de Kretser, Channa Wickremesekera and Ranjith Savanadasa are located in Melbourne. Adding to…

    noelnadesan

    04/11/2020
    Uncategorized
  • நவம்பர் 01 ஜே.ஆர்.ஜெயவர்தனா மறைந்த தினம்

    இன்று நவம்பர் 01 ஆம் திகதி – மிஸ்டர் தர்மிஸ்டரின் நினைவு தினம் ! அவச்சாவுகளைக்கண்ட அரசியல் சாணக்கியர் இயற்கை எய்திய தினம் !!அமெரிக்க ரேகனுக்கு யானைக்குட்டி வழங்கி, கியூபா காஷ்ரோவையும் அணைத்தவர் !!! முருகபூபதி இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1943 ஆம் ஆண்டு நடந்த சட்ட சபைத்தேர்தலில் ஒருவர் வெற்றிபெற்றார். களனி பிரதேசத்திலிருந்து முதல் முதலாக அவர் தெரிவாகும்போது அவரது வயது 37. இலங்கையில் நீதித்துறை சார்ந்த ஒரு பெரியவருக்கும் செல்வந்த குடும்பத்திலிருந்து வந்த…

    noelnadesan

    31/10/2020
    Uncategorized
  • கானல்தேசம் 19. வெளியேற்றம்.

    நான் மட்டுமல்ல, வடபகுதியில் காலம் காலமாக வாழ்ந்த இஸ்லாமியர்கள் எவரும் மறக்கமுடியாத அந்த நாள் வழக்கம் போலத்தான் விடிந்தது. நெருக்கமாக அமைந்த வீடுகளானதால் பக்கத்து வீட்டு குழந்தைகளின் அழுகை, பெரியவர்களின் படுக்கையறை முனகல்கள், முதியவர்களின் குறட்டையொலி எல்லாவற்றையும் இரவில் கேட்கலாம். சிறுவர்களின் கூக்குரலுடன் அவர்களை நோக்கிய உம்மாக்களின் அழைப்புகள், வாப்பாமாரின் பயமுறுத்தல்கள் என்பன காலையில் காதை அடைக்கும். அன்றும் வழமைபோல் எதிர்வீட்டு இஸ்மாயிலின் சேவல் கூவியது. மசூதியின் பாங்கொலி முழங்கியது. பாண்காரன், மரக்கறிக்காரன் எல்லோரும் அன்று தாமதமின்றி…

    noelnadesan

    31/10/2020
    Uncategorized
  • அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்.

    மெல்பன் பொலிஸ் இலாகாவில் பணிபுரியும் சிமித் தம்பதியரின் செல்லப் பிராணி பூனை. பெயர் ரைகர். பக்கத்துவீட்டு நாய், சிமித் வீட்டினுள் அத்துமீறி நுழைந்ததுமல்லாமல் அவர்களின் அருமையான பூனையையும் கடித்து பதம் பார்த்துவிட்டது. பக்கத்துவீட்டு- லிண்டா அந்த நாயின் சொந்தக்காரி Single mother . தன் பிள்ளைகளையே பொறுப்பாகக் கவனிப்பதில்லை. இந்தஇலட்சணத்தில் தனது நாயை மாத்திரம் பொறுப்போடு கவனிப்பாளா?”” – இது திருமதி சிமித்தின் வாதம். Single mother வாழ்வு வாழும் பெண்கள் மீது வித்தியாசமான பார்வை கொள்பவர்களின்…

    noelnadesan

    22/10/2020
    Uncategorized
  • கே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்.

    காலமும் கணங்களும் : இலக்கிய திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன்வாழ்நாளில் கற்றதையும் பெற்றதையும் பதிவுசெய்த கலை, இலக்கியவாதி ! ஒக்டோபர் 01 பிறந்த தினம் !! முருகபூபதி எனது நீண்ட கால நண்பரும் புகழ்பெற்ற இலக்கியத்திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் சுகவீனமுற்று கொழும்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி எனது செவிக்கு எட்டியதும், அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பெடுத்து அவரது சுகம் விசாரித்தேன்.மறுமுனையிலிருந்து எனது குரலை அடையாளம் கண்டுகொண்ட அவர், என்னை “ சேர் “ என…

    noelnadesan

    15/10/2020
    Uncategorized
  • தெய்வங்களது தரிசனம்

    8 கரையில் மோதும் நினைவலைகள் 1970 ஆம் வருடத்தில் எனது பத்தாவது வகுப்பு பரீ ட்ஷையின் முக்கியமான பாடங்களின் வினாத்தாள் முதல் நாள் இரவு கிடைத்ததும் அதற்கான பதில்களை மற்றைய மாணவர்களிடமிருந்தும் புத்தகங்களைத் தடவியும் விடைகளை எடுத்தோம். அன்றைய இரவில் எம்மைப் பொறுத்தவரை அக்கால பிரித்தானிய சாம்ராச்சியம்போல் சூரியன் மறையவில்லை .வினாக்களிற்கான விடைகளை எழுதும்போது சிரித்தபடியே எழுதினேன் . வகுப்புக்குப் போகாது சுற்றித் திரிந்த எனக்கு இப்படி ஒரு விடயம் நடக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. என்னைத் தவிர…

    noelnadesan

    14/10/2020
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 55 56 57 58 59 … 163
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 103 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar