-
கங்கை கரையில்-காசி.
இந்தியாவில் வாழ்ந்த (84-87) காலத்தில், காசி எனப்படும் வாரணாசிக்கு செல்வதற்கு எத்தனித்தேன். முடியவில்லை. பல வருடங்களுக்குப் பின்னர் அந்த சந்தர்ப்பம் கிடைத்ததுஅதுவும் ஒரு பகல், இரண்டு இரவுகள் மட்டுமே. காசி பற்றிய முதல் தெரிந்துகொண்டது, எழுவைதீவில் 5 -6 வயதான எனது இளம் பருவத்தில். எனது தந்தை , கங்கை நீர் என இந்தியாவில் இருந்து போத்தலில் கொண்டுவந்தபோது, அம்மாவால் அதில் சில துளிகளை எனது தலையில் வைக்கப்பட்டது. ஊரில் பலர் அந்த நீரை கையால் தொட்டு…
-
King Asoka’s veterinary hospital -Novel
KING ASOKA’SVETERINARYHOSPITAL by Noel Nadesan (2020) Amazon USA available from Amazon in paperback and Kindle REVIEWED BY JayanthaSomasundaram, Canberra In recent years a number of Sri Lanka expatriates in Australia have taken to creative writing. Some of the best known like Michelle de Kretser, Channa Wickremesekera and Ranjith Savanadasa are located in Melbourne. Adding to…
-
நவம்பர் 01 ஜே.ஆர்.ஜெயவர்தனா மறைந்த தினம்
இன்று நவம்பர் 01 ஆம் திகதி – மிஸ்டர் தர்மிஸ்டரின் நினைவு தினம் ! அவச்சாவுகளைக்கண்ட அரசியல் சாணக்கியர் இயற்கை எய்திய தினம் !!அமெரிக்க ரேகனுக்கு யானைக்குட்டி வழங்கி, கியூபா காஷ்ரோவையும் அணைத்தவர் !!! முருகபூபதி இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1943 ஆம் ஆண்டு நடந்த சட்ட சபைத்தேர்தலில் ஒருவர் வெற்றிபெற்றார். களனி பிரதேசத்திலிருந்து முதல் முதலாக அவர் தெரிவாகும்போது அவரது வயது 37. இலங்கையில் நீதித்துறை சார்ந்த ஒரு பெரியவருக்கும் செல்வந்த குடும்பத்திலிருந்து வந்த…
-
கானல்தேசம் 19. வெளியேற்றம்.
நான் மட்டுமல்ல, வடபகுதியில் காலம் காலமாக வாழ்ந்த இஸ்லாமியர்கள் எவரும் மறக்கமுடியாத அந்த நாள் வழக்கம் போலத்தான் விடிந்தது. நெருக்கமாக அமைந்த வீடுகளானதால் பக்கத்து வீட்டு குழந்தைகளின் அழுகை, பெரியவர்களின் படுக்கையறை முனகல்கள், முதியவர்களின் குறட்டையொலி எல்லாவற்றையும் இரவில் கேட்கலாம். சிறுவர்களின் கூக்குரலுடன் அவர்களை நோக்கிய உம்மாக்களின் அழைப்புகள், வாப்பாமாரின் பயமுறுத்தல்கள் என்பன காலையில் காதை அடைக்கும். அன்றும் வழமைபோல் எதிர்வீட்டு இஸ்மாயிலின் சேவல் கூவியது. மசூதியின் பாங்கொலி முழங்கியது. பாண்காரன், மரக்கறிக்காரன் எல்லோரும் அன்று தாமதமின்றி…
-
அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்.
மெல்பன் பொலிஸ் இலாகாவில் பணிபுரியும் சிமித் தம்பதியரின் செல்லப் பிராணி பூனை. பெயர் ரைகர். பக்கத்துவீட்டு நாய், சிமித் வீட்டினுள் அத்துமீறி நுழைந்ததுமல்லாமல் அவர்களின் அருமையான பூனையையும் கடித்து பதம் பார்த்துவிட்டது. பக்கத்துவீட்டு- லிண்டா அந்த நாயின் சொந்தக்காரி Single mother . தன் பிள்ளைகளையே பொறுப்பாகக் கவனிப்பதில்லை. இந்தஇலட்சணத்தில் தனது நாயை மாத்திரம் பொறுப்போடு கவனிப்பாளா?”” – இது திருமதி சிமித்தின் வாதம். Single mother வாழ்வு வாழும் பெண்கள் மீது வித்தியாசமான பார்வை கொள்பவர்களின்…
-
கே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்.
காலமும் கணங்களும் : இலக்கிய திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன்வாழ்நாளில் கற்றதையும் பெற்றதையும் பதிவுசெய்த கலை, இலக்கியவாதி ! ஒக்டோபர் 01 பிறந்த தினம் !! முருகபூபதி எனது நீண்ட கால நண்பரும் புகழ்பெற்ற இலக்கியத்திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் சுகவீனமுற்று கொழும்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி எனது செவிக்கு எட்டியதும், அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பெடுத்து அவரது சுகம் விசாரித்தேன்.மறுமுனையிலிருந்து எனது குரலை அடையாளம் கண்டுகொண்ட அவர், என்னை “ சேர் “ என…
-
தெய்வங்களது தரிசனம்
8 கரையில் மோதும் நினைவலைகள் 1970 ஆம் வருடத்தில் எனது பத்தாவது வகுப்பு பரீ ட்ஷையின் முக்கியமான பாடங்களின் வினாத்தாள் முதல் நாள் இரவு கிடைத்ததும் அதற்கான பதில்களை மற்றைய மாணவர்களிடமிருந்தும் புத்தகங்களைத் தடவியும் விடைகளை எடுத்தோம். அன்றைய இரவில் எம்மைப் பொறுத்தவரை அக்கால பிரித்தானிய சாம்ராச்சியம்போல் சூரியன் மறையவில்லை .வினாக்களிற்கான விடைகளை எழுதும்போது சிரித்தபடியே எழுதினேன் . வகுப்புக்குப் போகாது சுற்றித் திரிந்த எனக்கு இப்படி ஒரு விடயம் நடக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. என்னைத் தவிர…
-
எனது அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை
இலக்கியம் என்பது அனுமானம் ,அனுபவம் மற்றும் அவதானிப்பில் பிறக்கிறது என சொல்வார்கள். இலங்கையில் மதவாச்சி என்னும் பிரதேசத்தில் தொழில் நிமித்தம் வாழ்ந்த காலப்பகுதியில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் அவதானிப்பையும் பின்னணியாக வைத்து உருவாகியது எனது முதல் நாவல் வண்ணாத்திக்குளம். இலங்கை அரசியலில் சாதாரண சிங்கள மக்களின் மனங்களில் இனவாதத்தை தூவிய சிங்கள அரசியல்வாதிகளினாலும் – அதேபோல் தமிழ் இளைஞர்களுக்கு உணர்ச்சியூட்டி கொம்பு சீவிய தமிழ் அரசியல்வாதிகளாலும் ஏற்பட்ட இனநெருக்கடிகளை கோடிகாட்டி எழுதப்பட்ட இந்த நாவல்; ஆங்கிலத்திலும் (Butterfly…
-
காந்தி பிறந்த ஊர்.
நடேசன் காந்தியின் நிலத்தில் எங்கள் பயணத்தின் அடுத்த இடம் ராஜ்கோட் நகராக இருந்தது. பிரித்தானியர் காலத்தில் சமஸ்தானத்தின் தலைநகர். அங்கு காந்தியின் தந்தையார் திவானாக இருந்தார். அதுவே காந்தி சிறு வயதில் வாழ்ந்து, இங்கிலாந்து போகும் வரையும் கல்வி கற்ற இடம். அவர் கல்வி கற்ற மேல் நிலைப் பாடசாலையை தற்பொழுது அவரது நினைவிடமாக்கி, அதைக் காந்தியின் வரலாற்று அருங்காட்சியமாக அமைத்திருக்கிறார்கள். இரண்டு மாடி கட்டிடம். அங்கு போனால் அங்குள்ள வரலாற்றின் பகுதிகளை வாசித்தபடியே பல மணி…
-
சேகுவேராவின் மரண வாக்குமூலம்.
வாழ்வின் அவலத்தை தேடிச்சென்ற கெரில்லாத்தலைவர் ( அங்கம் -02 ) மரணத்தின்போதும் மனைவிக்கு மறுவாழ்வு கொடுக்கவிரும்பிய விடுதலைப் போராளி ! முருகபூபதி மரணம் நெருங்கிவிட்டதருணம் ஒவ்வொருவரும் என்ன நினைத்துக்கொள்வார்கள்?இது அவரவர்க்கே வெளிச்சம். ஏர்ணஸ்ட் சேகுவேரா என்ற வாழ்வின் அவலத்தை தேடிச்சென்ற சர்வதேசப்போராளி, தன்னைக்கொல்ல வந்தவர்களிடம் “ என்னைக்கொல்வதிலும் பார்க்க உயிரோடு என்னை வைத்திருப்பதே உங்களுக்கு பயனளிக்கும்” என்றாராம். பன்முக ஆற்றலும் ஆளுமையும் மிக்க ஒரு போராளியிடமிருந்து இயல்பாகவே வரக்கூடிய வார்த்தைகள்தான் அவை. சேகுவேரா உட்பட அனைத்துப்போராளிகளையும் வேட்டையாடுவதற்காக…