-
வவ்வால்கள்- கருத்து
எழுத்தாளர் சுதாராஜ். முதலில் பிங்கோவுக்கு மேற்கொள்ளும் சத்திர சிகிச்சையை வாசிக்கும்போது மனப்பதட்டமாயிருந்தது. ஏனெனில் உங்களைப்போலவே சக பிராணிகளை நேசிக்கும் மனது கொண்டவன் நான். அடுத்த கட்டத்தில் அடிக்காவின் நடவடிக்கைகள்! அவளுக்கு மனோவியாதியில்லை… மனக்கசிவு என நினைக்கிறேன். பிங்கோவின் சிகிச்சையின்போது தவறான நூலைக் கொடுத்துவிட்டேனோ என மனம் கலங்குகிறாள். அந்த சீவனுக்கு தன் காரணமாக ஏதும் மோசம் நடந்துவிடக்கூடாதே என்றும், தனது மனதை ஆற்றுவதற்காகவேனும் அதை உறுதி செய்துகொள்ள முயல்கிறாள். பின்னர் கதை இன்னொரு பக்கம் திரும்புகிறது! கணவர்…
-
15.கரையில் மோதும் நினைவலைகள்: மெல்பன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
நடேசன் யாழ்ப்பாணம் ஐந்து வருடங்கள் படித்த மிருக வைத்தியக் கல்வி , நாற்பது வருடங்கள் செய்த தொழில், அதனாலடைந்த வாழ்வு, அம்மா ஆனந்தராணியின் கழுத்தில் தாலியாகத் தொங்கியது என்ற உண்மையை நான் இங்கு சொல்ல வேண்டும். 1975 ஆண்டு சித்திரை மாதத்தில் இலங்கையில் பல்கலைக்கழகத்தில் அனுமதியிருந்த காலமது. இலங்கையில் பேராதனை மட்டுமே மிருக வைத்திய பீடம் உள்ள ஒரே பல்கலைக்கழகம் என்பதால், நான் செல்லாத இலங்கையின் மத்திய மலைப்பகுதிக்குச் செல்கிறேன் எனச் சந்தோசத்தில் மிதந்த நாட்கள்…
-
அ.ஆ.இ
— சிறுகதை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (கிளிநொச்சி பிராந்திய கிராமம்-இலங்கை) அது ஒரு சாதாரண மாலைப் பொழுது. கணேஸ் மாஸ்டர் தனது சின்ன மகள் மாலதிக்கு அ,ஆ.இ சொல்லிக் கொண்டிருந்தார்.மனைவி குசினியில் சமைத்துக்கொண்டிருந்தாள்.அவர்களின் கேற்றைத் திறந்துகொண்டு யாரோ வருவது போலிருந்தது.மாஸ்டர் தனது படிப்பித்தலை நிறுத்திக்கொண்டு வந்தவர்களை நிமிர்ந்து பார்த்தார். நான்கு பேர் வந்து நின்றார்கள் அவர்களில் மூவர் துப்பாக்கி வைத்திருந்தார்கள் நாலாவது பேர்வழி அவர்களுக்குத் தலைவர்கள்போல் எடுப்பாக நின்றான்.அவன் துப்பாக்கி கையிலில்லாமல் இடுப்பிற் சொருகப் பட்டிருந்தது. அவன் மாஸ்டரைப்…
-
14 கரையில் மோதும் நினைவலைகள். புலம் பெயர்ந்தோர் உதவிகள்?
74 ஆம் ஆண்டு இறுதிக் காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியிலிருந்து அதிபர் சபாலிங்கத்தால் கல்லூரிக்கு என்னை வரக்கூடாது என விரட்டப்பட்டது பற்றி ஆரம்பத்தில் எழுதியிருந்தேன். பரீட்சையில் முதல் தடவையில் சித்தியடையாது போனால் இந்துக்கல்லூரிக்குப் போகமுடியாது . இலங்கை அரசு இரு வருடங்கள் உயர்தர வகுப்பில் படிக்கலாம் என்று மாணவர்களுக்கு அளித்த அடிப்படைக் கல்வி உரிமை எனக்கு அதிபர் சபாலிங்கத்தால் மறுக்கப்பட்டது. அதற்கும் மேல் காதலித்தபடியால் இவனை மேலும் பல்கலைக்கழகத்தில் காசு செலவழித்துப் படிப்பித்தால் என்ன பிரயோசனம்? இதுவரை செலவு…
-
வவ்வால்கள்
நோயல் நடேசன் நம் மனம் புனிதமற்றது என்பது மட்டும் உண்மை; குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கலாம். கொலை, பாலியல் வன்முறைகள், வஞ்சனைகள், திருட்டுகள் எனப் பல குற்றச்செயல்கள் கணத்துக்குக் கணம் முளைவிடும் அநியாய பூமி எமது மனவெளியே. அங்குதான் புவியில் நடக்கும் அநியாயங்களின் விதைகள் முளைப்பதற்கான தருணம் பார்த்துக் காத்திருக்கின்றன. மனத்தில் குமிழ்விட்டு உடையும் அழுக்கான எண்ணங்களுக்கு மதம், நாகரிகம், கலாச்சாரம், சட்டமெல்லாம் உறை போடமுடியாது. மனத்தில் ஏற்படும் எண்ணங்களை மறைக்க நாம் நினைத்தாலும் முடியாது. நாம் எல்லாருமே…
-
ஒளிப்படங்களும் நாமும்
நடேசன் ஒளிப்படங்களுக்கான வருடம்தான் 2021. இந்த வருடத்தில் எவ்வளவு ஒளிப்படங்கள் எடுக்கப்படும் என்று கணினியை தட்டிப் பார்த்தபோது 1.4 ரில்லியனுக்கு மேல் ஒளிப்படங்கள் எடுப்பார்கள் என்றிருந்தது. உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? 1.4 ரில்லியன் ஒளிப்படங்களில் பெரும் பகுதி சேமிக்கப்படும் . பயணம் போகும்போது கமராவும் கையுமாக அலையும் பலரில் நானும் ஒருவன். ஆரம்ப காலத்தில் எடுத்த ஒளிப்படங்களில் குறை கண்டதால் தற்பொழுது கமராவைக் கையாளுதல் மற்றும் அதை எடிட் பண்ணும் திறமையையும் சிறிது பெற்றுள்ளேன் . இதைவிட…
-
From A Black Tiger
I was born in 1985. From that time till 2004 my life was rounded and went on beautifully with studies, sports and friends. During my school life, I never thought about this world or the problem in our country. All I knew were friends, sports, and studies. In 2004, I completed my studies, left school,…
-
டொமினிக் ஜீவாவை நினைவு கூரல்.
நடேசன் எழுத்தாளர் டொமினிக் ஜீவா நான்கு வருடங்கள் முன்பாகவே நினைவுகள் இழந்து வாழ்ந்தவர். அவரது நினைவுகள் அந்தியில் இருக்கும் காலத்தில் அவரது வீட்டில் அவரை என்னால் சந்திக்க முடிந்தது. அவரது இறப்பை ஒரு வரமாக அவரை நேசிப்பவர்கள் கொண்டாடவேண்டும் . அவர் போன்ற ஒருவரது சாதனைகள் இறப்போடு முடிவதில்லை. மற்ற சமூகத்திலும் பார்க்க நமது சமூகத்தில் இறந்த பின்பே ஒருவரை நினைவு கூர்வார்கள் அதிலும் எழுத்தாளராக இருந்தால், அதுவே ஒரு விதியாக அமைந்துள்ளது. அந்த விதியை…
-
அஸ்தியில் பங்கு
அது மெல்பன் குளிர்காலத்தில் ஒரு சனிக்கிழமை. அரை நாள் மட்டும் வேலை. பாதையில் ஏற்பட்ட தாமதத்தால் சற்று பிந்தி வந்ததால் எனக்காகக் காத்திருந்த நாயொன்றைப் பரிசோதித்துவிட்டு கம்பியூட்டரில் விபரங்களைப் பதிந்து கொண்டிருந்தேன். இக்காலத்தில் நாய்- பூனைகளை சரியாகப் பரிசோதிக்கிறோமோ இல்லையோ, எழுத்தில் பதிந்து விடவேண்டும். நான் மட்டும் அந்த கிளினிக்கில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் விபரங்கள் எனக்கு மட்டுமே. ஆனால், மற்றவர்களுக்காக வேலை செய்யும்போது விபரமாக எழுதவேண்டும். வெளிப்புறமாக ஒரு கார் வந்து நின்றது யன்னலூடாகத்…