-
அத்தியாயம் 5: முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்
ரெரன்ஸ் அந்தோனிப்பிள்ளை ‘மாத்தையாஎன்டகிவ்வா’ (ஜயா வரட்டாம்) என்றகுரல் கேட்டது. முக்கால்மணி நேரமாக வவுனியாவாகனதொடரணி சோதனைமுகாமிற்கு அருகாமையிலிருந்த மரநிழலின் கீழ் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த நான் திடுக்குற்றுநிமிர்ந்துபார்த்தேன்.கையில் துப்பாக்கியுடன் இராணுவச்சிப்பாய் எதுவித உணர்ச்சிகளுமின்றி என்னைப்பார்தவாறு நின்றிருந்தான். எனக்குநெஞ்சுதிக்கென்றது. இராணுவச்சிப்பாய் என்னுடன் கதைத்தது சுற்றியிருந்த பலரின் கவனத்தை எனது பக்கம் திருப்பியது. வன்னியில் பணிபுரியும் பலஅரச. அரசசார்பற்ற உத்தியோகஸ்தர்கள்,வாகனசாரதிகள் எனப்பலர் தொடரணி புறப்படுவதற்காக காத்திருந்தனர். ஏதோதடை செய்யப்பட்டபொருட்களைக் கடத்த முற்பட்டுப் பிடிபட்டுவிட்டேன் என்றுஅவர்கள் எண்ணியிருக்கக்கூடும். விடலைப்பருவத்தில் சுயஇன்பத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொழுது கையும்…
-
மகாகவி பாரதி மறைந்து நூறு ஆண்டுகள் !
செப்டெம்பர் 11 : முருகபூபதி மகாகவி பாரதிக்கு கிடைத்த நண்பர்கள் பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். அவர்களில் சித்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், வக்கீல், வர்த்தகர், தீவிரவாதிகள், விடுதலை வேட்கை மிக்கவர்கள், பத்திரிகாசிரியர்கள், சாதாரண அடிநிலை மக்கள் , பாமரர்கள் என பலதரத்தவர்களும் இருந்தனர். அவர் சந்தித்த சித்தர்கள் அவருக்கு ஞானகுருவாகியுமிருக்கின்றனர். அவ்வாறு அவரது வாழ்வில் மாற்றங்களையும் சிந்தனைப்போக்கில் புதிய திசைகளையும் தந்தவர்களின் வரிசையில்தான் எங்கள் யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் அவர்களும் வருகிறார். பாரதி தனது வாழ்நாளில் சந்தித்த சித்தர்களில்…
-
திருப்பூர்இலக்கியவிருது 2021
( 11ஆம்ஆண்டு ) அன்புதமிழ்சொந்தங்கள்அனைவருக்கும்வணக்கம். வருடம்தோறும்வழங்கப்படும்திருப்பூர்இலக்கியவிருதுவழங்கும்விழாஇவ்வாண்டுசென்னையிலும் ,திருப்பூரிலும்நடைபெறும். இவ்வாண்டுமுதல்கொங்குமுன்னோடிஎழுத்தாளர்ஆர்.சண்முகசுந்தரம்நினைவுவிருதுவழங்கப்படும்.இவ்விருதுஇவ்வாண்டு‘தாளடி’நாவல்,எழுத்தாளர்சீனிவாசன்நடராஜன்அவர்களுக்குவழங்கப்படுகிறது. விருதுவழங்கும்விழாநடைபெறும்தேதி, இடம்பின்னர்அறிவிக்கப்படும். சென்னைவிழாவில்விருதுபெறுவோர் : அருண்.மோ, ஆண்டாள்பிரியதர்ஷினி, தேவசீமா, பூமாஈஸ்வரமூர்த்தி, பாக்யம்சங்கர், முத்துராசாகுமார், இவள்பாரதி, அக்களூர்ரவி, சந்தியாநடராஜன், இரா.கவியரசு, மருத்துவர்ஜெ.பாஸ்கரன், கணேஷ்ராகவன், ஐஸ்வர்யன், தீபம்எஸ்.திருமலை, சுசித்ராமாறன், ஜெய்சக்திவேல், கன்னிகோவில்இராஜா, பாலசாண்டில்யன், மயிலாடுதுறைஇளையபாரதி, கவின், சீராளன்ஜெயந்தன், முரளிதரன்சத்தியானந்தன், விஜயராவணன், குமரிஎஸ்.நீலகண்டன், சிந்துசீனு, எழில்மதி, தனசேகரபாண்டியன், குணசேகர், தமிழன்ராகுல்காந்தி. பாண்டிச்சேரிஎழுத்தாளர்கள் : லெனின்பாரதி, டாக்டர்சந்திரசேகரன், பாரதிவசந்தன், பூங்குழலி, கலாவிசு, பூபதிபெரியசாமி, செந்தமிழினியன், தி.கோவிந்தராசு, நா.இராசசெல்வம், ஊத்தங்கால்கோவிந்தராசு, இரா.இளமுருகன், துரையரசன். ஹைதராபாத்எழுத்தாளர்கள்…
-
A balloon that spoiled the footy match
It was a very quiet day at the Veterinary Clinic. The reason: the crowds were all at the footy match at the Melbourne Cricket Ground. The MCG is known to overflow with footy fans whenever there is a popular contest. Traffic jams on the roads leading to the MCG are common occurrences on such days.…
-
கர்ப்பம்.
நடேசன். நான் ஒரு மிருகவைத்தியர். அந்த சனிக்கிழமை வேலைக்குச் சென்றபோது, வாசலில் வைத்தே கதவைத் திறந்தபடி “ இன்று ஒரு நாயை எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.” என்று எனது நேர்ஸ் சொன்னாள். வழக்கமாகவே சனிக்கிழமையில் அப்படி வேலை இருப்பதில்லை. வெளி நோயாளர்களைப் பார்ப்பது மட்டுமே. ஏதாவது அவசரமாக இருக்கலாம். அல்லது தன்னார்வத்தில் அவளே தீர்மானித்தாளா? எக்ஸ்ரே எடுக்க அரைமணியிலிருந்து முக்கால் மணிநேரம் எடுக்கும். மனிதர்கள்போல் இலகுவானதல்ல. ஒத்துழைக்காத அல்லது பயந்த பூனை , நாயானால் சில நேரத்தில்…
-
17. கரையில் மோதும் நினைவலைகள்: பேராதனை: பல்கலைக்கழக றாகிங்.
நடேசன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் றாகிங் உச்சக்கட்டமாக இருந்த காலமது. எனது வருடத்தில் (1975) பல்கலைக்கழகம் சென்ற அல்பிட்டி(காலி) மாணவி ரூபா ரத்தினசீலி, றாகிங் தாங்காது ராமனாதன் விடுதியின் மேல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்று, பிற்காலத்தில் சக்கர நாற்காலியில் கால் நூற்றாண்டுகள் மேல் வாழ்ந்தவர். இவருக்கு வீடும் கிணறும் கட்டி, பேராதனை மாணவர்கள் உதவி செய்தார்கள். பிற்காலத்தில் அந்த வீட்டை விட்டு விலகும்படி அவரது சகோதரர் வலியுறுத்தியபோது ரூபா ரத்தினசீலி 2002 இல் மனமுடைந்து பேராதனை…
-
வரலாற்றை எழுதியவரது , வரலாற்றுக்குச் சாட்சியானேன்.
நடேசன் 1980களில் நான் சென்னையிலிருந்த காலத்தில், என் மாணவப் பருவத்து நண்பனான இரகுபதியை சந்தித்ததேன். அக்காலத்தில்தான் இரகுபதியின் ஆய்வு நூல் சென்னையில் பதிக்கப்பட்டது. இராமாயணத்தில் அணிலாக Early Settlements in Jaffna என்ற ஆய்வு நூலின் பதிப்பில் எனது பங்கும் இருப்பதால் சில உண்மைகளை விளம்ப விரும்புகிறேன். வரலாற்றை, வரலாற்றியல் மரபோடு பதிவிட விரும்புவர்கள், அதைத் தாங்களே தேடி அறிந்து பதிவிடுவது நல்லது. மரபைக் கவனிக்காத கூற்றுகளுக்காக ஒதுங்கி இருக்கும் நண்பரை இழுத்து வருவதற்கு எனக்குப் பிரியமில்லை.…
-
அவன் ஒரு அகதி
வழமையான இடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியுடன் கடையை நோக்கிச் சென்றேன். சிகை அலங்கார நிலையத்திற்கும், மில்க்பார் என அழைக்கப்படும் கடைக்கும் இடையில் அமர்ந்திருக்கிறது இந்த ஸ்பைஸ் சொப். எமது நாட்டு பலசரக்கு சாமான்களை விற்கும் இடம் வாரம் ஒருமுறை சென்று இலங்கையில் இருந்து வரவழைக்கப்பட்ட மளிகைச் சாமான்களையும், தமிழ் நாட்டின் புதிய கலாச்சார வடிவங்களாக இறக்குமதியாகும் தமிழ் வீடியோக்களையும் வாடகைக்கு எடுத்து வருவது எமது வாராந்த கடமையில் ஒன்று. கடையை அண்மித்தபோது, முன் கண்ணாடி ஊடாக கவுண்டரில்…