-
பண்ணையில் ஒரு மிருகம் நாவல்-Murugesu Natkunathayalan
உங்களின் பண்ணையில் ஒரு மிருகம் நாவல்Murugesu Natkunathayalan இப்போது படித்து முடித்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். சில விடயங்களை நாசூக்காகச் சொல்லும் விந்தையைக் கற்றுக்கொண்டேன். சலிப்பில்லா நகர்வு. நிஜ மிருகங்கள்பற்றிய அறிவூட்டல் அற்புதம். படிக்கும்போது லண்டனைவிட்டு அந்தப் பண்ணைக்குப் போய்விட்டேன். பண்ணைத் தொழிலாளர்களுடன் நீங்கள் மட்டுமல்ல நானும் தோழமை கொண்டுவிட்டேன். ராமசாமிக்கு நான் மிக நெருக்கமாகிவிட்டேன். கற்பகம் மனதில் வாழத் தொடங்கிவிட்டாள். நெருடியவை: இராமசாமி சிலவேளை ராமசாமி என வந்துள்ளது. கதை முடிவுக்கு வந்தமை ஒரு…
-
வியட்நாம் துரைசாமி
நோயல் நடேசன் நாங்கள் வியட்நாம் சென்றபோது எங்களுக்கு வழிகாட்டியாக வந்த பெண் மிகவும் கரிசனையாக எங்களைப் பார்த்துக்கொண்டாள். என் மனைவிக்குத் துணிகள் தைக்குமிடமெல்லாம் அவளே கூட்டிச் சென்றாள். என்னால் அந்த நேரத்தில் ஓய்வெடுக்க முடிந்தது. அவள் மற்றைய மஞ்சள் நிற வியட்நாமியப் பெண்களைவிட கறுப்பான நிறத்திலிருந்தாள். எங்களது நிறத்தில் எனலாம். அதாவது பொது நிறமென இலங்கையிலும் மாநிறமெனத் தமிழ்நாட்டிலும் சொல்லும் நிறம் கொண்டவள். அது எங்களது மனதில் கேள்வியை உருவாக்கி, முகத்தைச் சுற்றி பட்டாம்பூச்சியாகப் பறந்தபடி இருந்தது.…
-
பண்ணையில் ஒரு மிருகம்-நாவல்
தமிழகத்தை சாராதவரின் நாவலில் தமிழகச் சூழல் ! கதை சொல்லி நடேசனின் மற்றும் ஒரு நாவல் முருகபூபதி அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்தி எழுத்தாளருமான விலங்கு மருத்துவர் நடேசன், இதுவரையில் சிறுகதை, நாவல், பயண இலக்கியம், மற்றும் தனது தொழில்சார் அனுபவக் கதைகள் என பல நூல்களை வரவாக்கியிருப்பவர். நடேசன் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரே இலக்கியப் பிரதிகள் எழுதத் தொடங்கியவர். அதாவது 1990 ஆம் ஆண்டுக்குப்பின்னரே இந்தத்துறையில் தீவிரமாக இயங்கினார். கடந்துவிட்ட மூன்று தசாப்த…
-
சினிமா: நன்றிகெட்ட மனிதர்களை விட நாய்கள் மேலடா… !
அவதானி நாய் நன்றியுள்ள மிருகம். நாய் வீட்டைக் காக்கும் . என்றவாறெல்லாம் எமது சிறிய வயதில் பாடசாலைகளில் சொல்லித் தந்திருக்கிறார்கள். நாய் பற்றி திருவாசகம் முதல் திரைப்படங்கள் வரையில் ஏராளமான பாடல்கள் பிறந்திருக்கின்றன. நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு என்று தாம் இயற்றிய திருவாசகத்தில் மாணிக்கவாசகரும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மூத்த கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப்புலவரும் வீமா வீமா ஓடி வா என்ற தலைப்பினைக்கொண்ட குழந்தைகளுக்கான பாடலை வரவாக்கியவர். கவியரசு கண்ணதாசனும் படிக்காத மேதை திரைப்படத்திற்காக எழுதிய…
-
இன்று ஓகஸ்ட் 10 – பேராசிரியர் நுஃமானுக்கு பிறந்த தினம்
இலக்கிய உலகம் கொண்டாடும் இந்த ஆளுமையின் கவிதை காலிமுகத்திடலிலும் ஒலித்தது ! முருகபூபதி நூறு நாட்களையும் கடந்து தொடர்ந்த காலிமுகத்திடல் போராட்டம் பல காட்சிகளை கண்டது. அதனை உள்நாட்டினர் மட்டுமல்ல சர்வதேச சமூகமே தினம் தினம் பார்த்தது. குறிப்பிட்ட காலிமுகத்திடல் பேராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் 1981 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அன்றைய ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கினால், அரச கூலிப்படைகளே பொது நூலகத்தை எரித்து சாம்பராக்கியது. 41 ஆண்டுகள் கடந்த பின்னரும் புத்தகப்பிரியர்கள் அனைவரது மனதிலும் அந்த நெருப்பு கனன்றுகொண்டுதானிருக்கிறது.…
-
பண்ணையில் ஒரு மிருகம் – நோயல் நடேசன்:
சரவணன் மாணிக்கவாசகம் யாழ்பாணத்திற்கு மேலே அமைந்திருக்கும் எழுவைத்தீவில் பிறந்தவர். கால்நடை மருத்துவர். பலகாலமாக ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இந்தியாவிலும் சிலகாலம் வசித்திருக்கிறார். இங்கே ஒரு பண்ணையில் சிலகாலம் வேலைசெய்த அனுபவத்தை வைத்து எழுதப்பட்டதே இந்த நாவல். இந்தியர் எல்லோருக்கும் சிறுவயதில் இருந்து கேட்ட புராணக்கதைகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மேலைநாட்டினருக்கு ஆச்சரியமூட்டுபவை. கீதாஞ்சலியின் Tomb of Sand இந்தியத்தனத்தினாலேயே விருதை வென்றது. இந்தியா போல Rich heritage கொண்ட நாடுகள் குறைவு. ஈழத்தமிழர்கள் சினிமா, இலக்கியம், கலை மூலம் நம்முடன்…
-
ஒற்றைக் கொம்பன் காண்டாமிருகம்.
நடேசன். இந்தியாவின் வடகிழக்குப் பயணத்தில் அசாமில் காஞ்சிரங்கா (Kaziranka national Forest )வனத்திற்குப் போவது எனது இலக்காக இருந்தது. அதன் முக்கியம் என்ன ? ஒரு மிருக வைத்தியராக எங்கு போனாலும் வன விலங்குகளைப் பார்ப்பது எனது விருப்பம் . அதே நேரத்தில் காட்டு விலங்குகளை மிருககாட்சி சாலையில் வைத்திருப்பது மனதிற்கு ஒவ்வாதது . ஆனால், என்ன செய்யமுடியும் ? எல்லோராலும் வனத்திற்குச் செல்லமுடியாது . முக்கியமாக குழந்தைகள் சிறுவர்களுக்கு விலங்கு காட்சி சாலையே விலங்குகளைப் பார்க்க…
-
கலைஞர் கருணாநிதியும் தமிழ் சினிமாவும்..
முருகபூபதி. கலைஞர் கருணாநிதி 1924 ஆம்ஆண்டு பிறந்து 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி மறைந்தார். தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவர். தற்போது அவரது வாரிசு ஸ்டாலின் முதல்வராக பணியேற்றுள்ளார். இவரது புதல்வர் உதயநிதியும் தற்போது சட்டசபையில் அங்கம் வகிக்கின்றார். கருணாநிதியின் புதல்வி கனிமொழி இந்திய நாடாளுமன்ற உறுப்பினர். இவ்வாறு வாரிசு அரசியலுக்கும் வித்திட்ட கலைஞர் கருணாநிதியின் அரசியல் குறித்தும், அவர் முன்னர் தோளில் அணிந்த கறுப்பு சால்வை …
-
பிரித்தானியாவில் தமிழ் பெண் எழுத்தாளர்கள்
நவஜோதி ஜோகரட்னம்லண்டன்இங்கிலாந்தில் இலக்கியத்துறையில் பிரகாசித்த பெண் எழுத்தாளர்களைப் பற்றிய ஓர் ஆய்வு முயற்சி இது. இலங்கையிலேயே தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்திப் பின்னர் எழுதாவிட்டாலும் இங்கிலாந்தில் குடியேறிய இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களிலிருந்து இந்த ஆய்வு ஆரம்பமாகிறது. இவர்களில் பவானி ஆழ்வாப்பிள்ளை இலங்கையிலேயே தனது எழுத்தின் முத்திரையைப் பதித்தவர் ஆவார். அவரது எழுத்துப்; பயணத்தை தொடர்ந்து லண்டனிலே குடியேறிய பின்னர் அவர் எதுவுமே எழுதவில்லையாயினும் அவரை முதன்மையான எழுத்தாளராக இங்கு முன்னிறுத்துவது பொருந்தும் என நினைக்கிறேன். அதே போன்று…
-
Butterfly Lake from a reader
I just finished reading your book for 2nd time. My husband Janith gave me this book when we were at the University of Peradeniya where we two met before we fell in love. He is Sinhalese and I’m Tamil we met in 2007 and Married. we have two kids called Navam and Naveena. I always…