-
காலத்திற்குத்தேவையான நடைப்பயிற்சி
நடடா ராஜா நடடா நல்லாரோக்கியத்திற்காக நடடா – காலத்திற்குத்தேவையான நடைப்பயிற்சி முருகபூபதி ஒவ்வொரு நாள் நடைப்பயிற்சியின்போதும் பார்க்கின்றேன் – உடல்நலத்திற்காக நடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. பயம்தான் அவர்களை நடக்கவைக்கிறது. ஒவ்வொரு அடி வைக்கும்போது பதற்றமாகவே நடக்கிறார்கள். பலரது நடையிலும் எரிச்சலும் வேண்டாவெறுப்புமே விஞ்சியிருக்கிறது. நடத்தலின் இனிமையை நாம் உணர்வதேயில்லை. இவ்வாறு கடந்த (2014) ஜனவரி தீராநதி இதழில் தமிழக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எதிர்த்திசை என்ற தொடர்பத்தியில் புத்தனோடு நடப்பவர்கள் என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நான்…
-
எறிகணை வீச்சுக்குப்பலியான எழுத்தாளன் நெல்லை க.பேரன்
திரும்பிப்பார்க்கின்றேன் மனைவி பிள்ளைகளுடன் எறிகணை வீச்சுக்குப்பலியான எழுத்தாளன் நெல்லை க.பேரன் துளிர்க்கத்துடித்த ஒரு மனிதனின் ஓலம் முருகபூபதி சங்கத் தமிழாலே தாலட்டுப்பாடி எந்தன் தங்கக் குழந்தையை நான் நித்திரையாக்கிவிட்டால் திடீரென்று கேட்கும் வெடிச்சத்தம் எங்கோ— அர்த்த ராத்திரியில் ஆசையாய் மணம் முடித்த அன்பு மனையாளைக் கட்டியணைத்து ஒரு முத்தம் தரவென்று சிந்தையில் நினைத்திட்டால் கேட்கும் ஒரு குண்டுச்சத்தம் நெஞ்சு கலங்கி என் வேட்கையும் கலைந்து மிக்க வேதனையோடு நான் முகத்தைத் திருப்பிடுவேன் குண்டுகள் வந்து கூரையைத் துளைத்தாலும்…
-
காவலூர் ராசதுரை: பல்துறை வல்லுனர்
திரும்பிப்பார்க்கின்றேன் மௌனமே மொழியாக முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்துள்ள காவலூர் ராசதுரை வருங்காலத்தில் நாம் கடக்கவிருக்கும் பாதையில் பயணிக்கும் ஆளுமை முருகபூபதி இதுவரையில் நான் எழுதிய திரும்பிப்பார்க்கின்றேன் தொடர்பத்தியில் பெரும்பாலும் மறைந்தவர்களைப்பற்றித்தான் எழுதிவந்திருக்கின்றேன். நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரிலும் மறைந்த 12 ஆளுமைகளை பதிவுசெய்துள்ளேன். இந்தத் தொடர் பாரிஸ் ஈழநாடுவில் வெளியானபொழுது ஒரு இலக்கிய சகோதரி என்னிடம் ஒரு வினாவைத் தொடுத்தார். குறிப்பிட்ட தொடரில் நான் மறைந்த ஆண் படைப்பாளிகளைப்பற்றி மாத்திரம் எழுதியதாகவும் பெண்களைப்பற்றி எழுதவில்லை என்றும் புகார்…
-
எழுத்தாளர் எச்.எம்.பி.மொஹீதீன்
திரும்பிப்பார்க்கின்றேன் வட கொரியாவின் கிம் இல் சுங்கை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதன் எதிரொலி : சிறையில் சிலவருடங்கள் வாழ்ந்த முற்போக்கு எழுத்தாளர் எச்.எம்.பி.மொஹீதீன் முருகபூபதி இந்தியாவில் சுதந்திர போராட்ட காலம். ஒரு கிராமத்தில் காதலியை சந்திக்கச் சென்றவன் – அவள் வீட்டில் இரவுப் பொழுதை கழித்துவிட்டு -அதிகாலை வேளையில் காலைக்கடன் கழிக்க கிராமத்தை ஊடறுத்து ஓடும் ரயில் தண்டவாளப் பாதையில் அமருகிறான். கடன் கழியும் மட்டும் அவனது கரங்கள் சும்மா இருக்குமா? கற்களை பொறுக்கி தண்டவாளத்தில் தட்டி தாளம்…
-
Implication of Ban on LTTE fronts abroad
Naga (friend of mine) Sri Lankan Government has decided that enough is enough. It is banning 16 foreign based Sri Lankan Tamil organisations as foreign terrorist organizations under UN Security Council Resolution No. 1373 which was passed by the Council in September 2001. The resolution was brought by the United States following the New York…
-
Comment on ”the wind of change in Jaffna”
Dear Nadesan, 1.There is no chance for a change of mind, in the thinking pattern of the Jaffna tamil man. 2.Do you believe that you or any one can change the thinking of the SriLankan Tamil man ,particularly the Jaffna man. Whether they are the high cast or low cast but both of them are…
-
படைப்பாளிகளை ஊக்குவித்த தி.க. சிவங்கரன்
முருகபூபதி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒருவரின் பணிகளை ஆதரிப்பது ஊக்குவிப்பது முதலான அரிய நற்குணங்கள் கொண்ட மனிதர்களை காண்பது அபூர்வம். கலை இலக்கிய உலகத்தில் மற்றவர்களின் ஆற்றல்களை இனம் கண்டு ஊக்குவிக்கும் சிறப்பியல்புகொண்டிருந்த நண்பர் இலக்கிய விமர்சகர் தி.க.சிவங்கரனின் மறைவு அவரை நேசித்தவர்களுக்கு ஆழ்ந்த துயரத்தை தருகிறது. அவர் பொதுவுடைமை கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு முற்போக்கு இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் தனது வாழ்நாள் பூராவும் பதிவுசெய்துகொண்டிருந்தவர். ஒரு இலக்கியப்படைப்பை படித்தவுடன் தனது வாசிப்பு அனுபவத்தை நயப்புரையாகவே தாமதமின்றி எழுத்தில்…
-
இலக்கியத்தில் தொழில்சார் அனுபவம்: மாபியாவின் நாய்
நடேசன் உலகத்தின் சகல மக்களது எழுத்து வடிவம் தொடங்கி 5000 வருடங்கள் மட்டுமே என அறிந்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்த சமூகத்தினர் முதல் எழுதினார்கள் என்பது பெரிய புதிர். குறியீட்டு வடிவங்கள்தான் ஆரம்பத்திலே இருந்திருக்கும் என்பது பலரது எண்ணம். நமது மொழில் எழுத்து வடிவத்திற்கு குறைந்தது 2500 வருடவரலாறு இருப்பதாக சொல்லப்படுகிறது. மொழி ஆராச்சியாளனோ , வரலாற்று ஆசிரியனோவாக இல்லாதபடியால் எனக்கு புரிந்த விடயங்களையே பேச விரும்புகிறேன். தமிழ் மொழியில் தற்போது எழுதுபவர்களில் பெரும்பானவர்கள் சிறுகதை,…
-
Comment on my article https://www.colombotelegraph.com/index.php/winds-of-change-in-jaffna/
Nadesan has hit the nail on its head with this observation: “During the last days of war, knowing the inevitable military defeat, the LTTE took cover behind 400, 000 Tamil civilians hoping to raise an international cry. Taking cover behind unarmed civilians is a shameful act not worthy of our so-called heroes. It was a…
-
பிரிஸ்பேர்ண் கலை – இலக்கிய சந்திப்பு அரங்கு
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் Mountommaney என்னுமிடத்தில் அமைந்த Centenary Community Hub மண்டபத்தில் நிகழ்ந்த கலை – இலக்கிய சந்திப்பு அரங்கில் மூத்த தலைமுறையினரும் இளம் தலைமுறையினரும் இணைந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை அமர்வில் மெல்பனிலிருந்து வருகை தந்த கலை – இலக்கியச்சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் டொக்டர் நடேசன், சங்கத்தின் துணைச்செயலாளர் கவிஞர் ஆவூரான் சந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் ஸ்ரீநந்தகுமார்…