-
எழுத்துச்சித்தர் எஸ்.பொ.
அவுஸ்திரேலியா மரபு இதழில் எழுத்துச்சித்தர் எஸ்.பொ.வின் நனவிடை தோய்தல் மரபு ஆசிரியர் விமல் அரவிந்தன். (அவுஸ்திரேலியா மெல்பனில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற நினைவரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட உரை) எஸ்.பொ. என அழைக்கப்பட்ட எஸ்.பொன்னுத்துரை அவர்கள் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சிட்னிக்கு வந்து இறுதியில் சிட்னியிலேயே மறைந்துவிட்டவர். ஆனால் – அவர் என்றைக்கும் மறையாத சொத்தை எமக்கு விட்டுச்சென்றுவிட்டார். இங்கு அவருக்கும் எனக்கும் இடையே தோன்றிய நட்பையும் அதற்கும் அப்பால் நீடித்த உறவையும் சாட்சியமாகக்கூறும் ஒரு படைப்பு இலக்கியத்தையே…
-
நாவல் இலக்கியத்தின் அடிப்படை.
அவுஸ்திரேலியா மெல்பனில் நடந்த நாவல் இலக்கியம் அனுபவப்பகிர்வில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையே நாவலுக்கு என்ன நடக்கிறது. நடேசன் பலரும் நாவலை வாசிக்க முடிவதில்லை எனச்சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. புதிய மொழி, புதிரான கதை எனக் காரணங்கள் இருக்கலாம். ஒரு நாவலை ஒதுக்குவதற்கோ பாராட்டுவதற்கோ நமக்கு நாவலின் கூறுகளைத் தெரிந்திருக்கவேண்டும். மேம்போக்காக நாவல் நன்றாக இல்லை எனச் சொல்லும்போது உங்களுக்கு ஈகோவைத் தடவியதாகவும், நாவல் எழுதியவருக்கு கோபத்திற்கு அப்பால் தமிழ் இலக்கியத்தில்…
-
எஸ்.பொ. – காவலூர் ராஜதுரை நினைவரங்கு
அவுஸ்திரேலியா மெல்பனில் மறைந்த மூத்த படைப்பாளிகள் எஸ்.பொ. – காவலூர் ராஜதுரை நினைவரங்கு அவுஸ்திரேலியா – சிட்னியில் அண்மையில் அடுத்தடுத்து மறைந்த ஈழத்தின் மூத்த படைப்பாளிகளான எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) காவலூர் ராஜதுரை ஆகியோரின் படைப்பிலக்கிய மதிப்பீட்டு நினைவரங்கு எதிர்வரும் 20 ஆம் திகதி (20-12-2014) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மெல்பனில் Preston – Darebin Intercultural Centre இல் நடைபெறும். கலை, இலக்கிய ஆர்வலரும் சட்டத்தரணியுமான செல்வத்துரை ரவீந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அவுஸ்திரேலியாவுக்கு வருகை…
-
நாவல்: டோனி மொரிசனின் பிலவ்ட் (Beloved By Toni Morrison).
அயல்மொழி இலக்கியம் நடேசன் பெண் இலக்கியம் என்றால் என்ன? பலகாலமாக என் மனதில் அரித்துக்கொண்டிருந்த கேள்வி. இலக்கியத்தில் ஆண்கள் சொல்லும் விடயங்கள் பெண்கள் சொல்வதாக இருந்தால் அது பெண் இலக்கியமாகுமா?. அதுக்கு மேல் அர்த்தம் உள்ளதா? பெண்கள் இலக்கியமாக எழுதும் கருத்து மொழியை, ஆண்களும் சொல்ல முடியும். பல பெண்கள் சொல்லும் கவிதைகள் கதைகளும் அப்படித்தான். ஆனால் படைக்கப்பட்ட இலக்கியமே பெண்மைக்கு மட்டும் உரியதாகவும்,அதை ஆணால் நினைத்தும் பார்க்க முடியாததாக இருக்கும்போது மட்டுமே, அது பெண்ணிலக்கியமாகிறது. அங்கே…
-
A CHANGE OF HEART
A CHANGE OF HEART I have been treating Vivian’s dogs Rani and Poppy for four years . Both dogs are look alike, but they are far apart in their character. I have known Rani, the younger one, from the time I vaccinated her as a four month old puppy. Each time Rani was placed on…
-
பொழுது சாயும் நேரத்தில் சிறுத்தைகளின் தரிசனம்
நடேசன் இந்தியாவில் பெரியார் தேசியவனத்தில் 2014 ஜனவரியில் புலியை பார்க்க இரண்டு நாட்கள் வாகனத்தில் சென்றபோது அங்கே புலி கண்ணுக்கு தென்படவில்லை. உண்மையிலேயே இப்படிச் சென்று பார்ப்பதற்கும் அதிஷ்டம் தேவைதான். ஒரு வழிகாட்டியோடு நானும் மனைவியுமாக காட்டுக்குள் சில கிலோமீட்டர் கால்நடையாக சென்றபோது புலி வந்து சென்ற அடையாளத்தை பார்க்க முடிந்தது. புதிதாக கிடந்த புலியின் மலத்தை பார்க்க முடிந்தது. புலியின் மலம் என எப்படித் தெரியும்? நான் பார்த்தபோது ஈரலிப்போடு காயாமல் மலம் நீள்வடிவில் அதாவது…
-
நாவல் இலக்கியம் அனுபவப்பகிர்வு
நாவல் இலக்கியம் அனுபவப்பகிர்வு13-12-2014 சனிக்கிழமை மாலை 4.00 மணி அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை கலை இலக்கிய ஒன்றுகூடலாக நடத்திவருவதுடன் அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்து வருகிறது. கடந்த காலங்களில் சிறுகதை, கவிதை மற்றும் தமிழ் விக்கிபீடியா பயிலரங்கு அனுபவப்பகிர்வுகளை நடத்தியுள்ள சங்கம் – நாவல் இலக்கியம் தொடர்பான அனுபவப்பகிர்வையும் நடத்தவுள்ளது. சங்கத்தின் தலைவர் Dr. நடேசனின் தலைமையில் நடைபெறவுள்ள நாவல் இலக்கிய அனுபவப்பகிர்வில் இலங்கை – தமிழக நாவல்கள் புலம்பெயர்ந்தவர்களின் நாவல்…
-
உண்மைகள் இரண்டு
எக்ஸோடஸ்1984 The day we see the truth and cease to speak is the day we begin to die -Martin Luther King Jr நடேசன் நானும் விசாகனும் பாண்டிபஜாரில் இருந்த காலத்தில் நடந்த ஒரு விடயம் மனதை பலகாலமாக நெருடிக்கொண்டிருந்தது. ஏன் இன்னமும் அந்த விடயம் என்னைப் பாதிக்கிறது? அது ஒரு சகோதரனை பறிகொடுத்த தொடரும் சோகத்தின் நிழல். ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவரான பத்மநாபவை பொறுத்தவரை, நாம்…
-
சரித்திரத்தின் நித்திய உபாசகன்எஸ்.பொன்னுத்துரை-4
அமரர் எஸ்.பொ. அங்கம் – 4 எஸ்.பொ.வுக்கு நேற்று இறுதி அஞ்சலி மதிப்பீடுகளுக்கு நடுவே உண்மைகளைத் தேடுவோம். மதிப்பீடுகள் கசக்கும் – இனிக்கும் – துவர்க்கும் – இதில் உண்மைகள் சுடுவதும் மறைபொருள்தான். முருகபூபதி அவுஸ்திரேலியாவில் பல தமிழ் அமைப்புகள் 1983 இற்குப்பின்னர் இயங்கியபோதிலும் 1988 இற்குப்பின்னரே கலை – இலக்கியம் சார்ந்த சிந்தனைகள் உதயமாகின. 1986 – 1987 காலப்பகுதியில் இங்கு குடியேறிய ஈழத்தமிழர்கள் மத்தியில் நடன – இசை ஆசிரியர்கள் கலைஞர்கள் – எழுத்தாளர்கள்…
-
சரித்திரத்தின் நித்திய உபாசகன்எஸ்.பொன்னுத்துரை-3
அமரர் எஸ்.பொ. அங்கம் – 03 புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் வேர் அங்கும் வாழ்வு இங்குமாக இலக்கியத்தாகம் தணிக்க முயன்றவர் முருகபூபதி பொன்னுத்துரை நைஜீரியாவிலிருந்து இலங்கை திரும்பியதும் அடுத்து என்ன செய்வது…? என யோசித்தவாறு தமிழ்நாட்டுக்கும் சென்று திரும்பினார். கொழும்பிலிருந்து மீண்டும் தமது இலக்கிய தாகம் தணிக்க நண்பர்களைத்தேடினார். அவரது நீண்ட கால நண்பர் வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபாலிடம் சென்று முருகபூபதியைப்பற்றி விசாரித்திருக்கிறார். ஏற்கனவே 1985 இல் அவர் வந்தபொழுது எடுத்த ஒளிப்படத்தின் பிரதியைக்கொடுப்பதற்காகவும் மீண்டும்…