பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • கன்பராவில் கலை, இலக்கிய சந்திப்பு

    அவுஸ்திரேலியா கன்பரா மாநிலத்தில் எதிர்வரும் 16-05-2015 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள கலை, இலக்கிய சந்திப்பில் நூல்களின் அறிமுகம், கூத்து ஒளிப்படக்காட்சி நிகழ்ச்சிகளுடன் கலந்துரையாடலும் இடம்பெறும். மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய நகரங்களிலிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் கலந்துகொள்ளவிருக்கும் இச்சந்திப்பு எதிர்வரும் மே 16 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கன்பரா மூத்த பிரஜைகள் சங்கத்தின் ( Tamil seniors citizens Hall, Bromby Street, Isaacs, Canberra, ACT) மண்டபத்தில் நடைபெறவுள்ளது இச்சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு…

    noelnadesan

    28/04/2015
    Uncategorized
  • பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு

    மெல்பன் பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு விழாவும் பெற்றோர் – பிள்ளைகள் – பொதுமக்கள் ஒன்றுகூடலும். மெல்பனில் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வேறு வேறு பிரதேசங்களில் நான்கு வளாகங்களில் வாராந்தம் இயங்கிவரும் பாரதி பள்ளியின் இருபது வருட நிறைவு விழாவும் மாணவர்கள் – பெற்றோர்கள் – பொதுமக்கள் இணைந்து பங்குபற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒன்றுகூடலும் எதிர்வரும் 26-04-2015 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரையில் Dandenong High School…

    noelnadesan

    22/04/2015
    Uncategorized
  • விசித்திரமான கழுதைப்புலிகள்

    நடேசன் ஆபிரிக்க காடுகளில் மட்டும் பார்க்கக் கூடிய மிருகம் கழுதைப்புலி. ஆசியாவின் சில பகுதிகளில் முன்பு இருந்தாலும் தற்பொழுது அரிதாகிவிட்டது. உல்லாசப்பயணிகளில் ஏராளமானவர்கள் குருகர் காட்டுக்கு சென்றாலும் சில முக்கியமான மிருகங்களை பார்க்கத் தவறிவிடுவார்கள். பருவகாலம் தப்பினால் அல்லது வழிகாட்டிகள் காண்பிக்கத்தவறினால் முக்கியமாக பார்க்கவேண்டியனவற்றை பார்க்கத்தவறிவிடுவார்கள். இப்படி பல காரணிகள் உள்ளது. மிருகங்களை அவற்றின் உறைவிடங்களில் காணவேண்டும் என்ற எனது ஆவல் இந்தமுறை குருகர்வனத்திற்கு சென்றபோது நிறைவேறியது. இரவுவேளைகளில் மட்டும் வேட்டைக்குத்திரியும் கழுதைப்புலியை பகல்நேரத்தில் கண்டது அதிசயமே.…

    noelnadesan

    17/04/2015
    Uncategorized
  • உனையே மயல் கொண்டு

    Priya Ramanathan பொதுவாக நான் நாவல்கள் வாசிப்பதில்லை .. ஆனால் , நேற்று எதேச்சையாய் இந்த நாவல் என் கண்ணில் சிக்கியது . இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து australiaவிற்கு புகலிடம் தேடிச் சென்ற ஒரு ஆணின் பார்வையில் , அவனது உடலின்பம் குறித்த சிக்கல்களையும் அதன் விளைவுகளையும் விபரிக்கும் “உனையே மயல் கொண்டு ” ! நாவல், இரண்டு தளங்களில் இயங்குகிறது . ஓன்று , புகலிடத்தில் உள்ள நிம்மதியற்ற பிழைப்பின் விளைவாக ஏற்ப்படும் மனவெறுமையும் , அதை…

    noelnadesan

    17/04/2015
    Uncategorized
  • ஜெயகாந்தன் – படைப்பிலக்கியவாதி – பத்திரிகையாளர் – சினிமா வசனகர்த்தா – பாடலாசிரியர் -திரைப்பட இயக்குநர்

    தமிழ்நாட்டில் கடலூரில் 24-04-1934 ஆம் திகதி பிறந்து தமது 81 வயதில் கடந்த 08-04-2015 ஆம் திகதி சென்னையில் மறைந்த மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் – படைப்பிலக்கியவாதி – பத்திரிகையாளர் – சினிமா வசனகர்த்தா – பாடலாசிரியர் -திரைப்பட இயக்குநர் என பன்முக ஆளுமை கொண்டிருந்தவர். அவரது வாழ்வும் எழுத்தும் கம்பீரமானது. அவர் நீண்டகாலம் ஈடுபட்ட துறைகள் குறித்து ஏற்கனவே ஏராளமான மதிப்பீடுகள் வெளியாகியிருக்கின்றன. அவரது படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உட்பட ருஷ்ய மற்றும் ஐரோப்பிய…

    noelnadesan

    09/04/2015
    Uncategorized
  • கனவுகளை விதைத்த மல்லிகை ஜீவாவும் கனவுலகில் வாழும் டொமினிக்ஜீவாவும்

    முருகபூபதி இந்த ஆண்டு (2015 ) தொடக்கத்தில் நான் இலங்கைக்கு வந்ததும் முதலில் தொலைபேசியில் பேசியவர்களில் டொமினிக்ஜீவாவும் ஒருவர். அவர் நீண்ட காலம் நடத்திய மல்லிகை இதழ் நிறுத்தப்பட்டதன் பின்னர் அவரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனினும் 2011 இற்குப்பின்னர் அவருடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தேன். மல்லிகை நின்றுவிட்டதை அறிந்து அவர்பற்றிய நீண்ட விரிவான கட்டுரையும் எழுதினேன். பல இதழ்களில் வெளியானது அவரது பால்ய கால நண்பர் எஸ்.பொ. சிட்னியில் மறைந்ததும் தகவலும் சொன்னேன். இம்முறை பயணத்தில் அவரைச்சந்தித்து…

    noelnadesan

    07/04/2015
    Uncategorized
  • உலகக் கிரிகட்போட்டி

    தொலைக்காட்சியில் கிடைத்த இன்பம் ஸ்ரேடியத்தில் இல்லை. நடேசன் கிரிக்கெட்டின் மெக்கா என சொல்லப்படுவது மெல்பன் கிரிக்கெட் மைதானம். பெயருக்குத் தகுந்தபடி ஸ்ரேடியம். கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேரை கொள்ளக்கூடியது. அதனை கூர்ந்து பார்த்தால் பொறியியல் மற்றும் கட்டிடத்துறையின் உன்னதமான வடிவமைப்பு தெரியவரும். மெல்பன் கிரிக்கட் கிளப் அங்கத்தினரால் நடத்தப்படுகிறது. ஒருவர் அங்கத்தவராக தற்பொழுது கால்நூற்றண்டுகள் காத்திருக்க வேண்டுமென அறிந்தேன். நகரத்தின் மத்தியில் சகல போக்குவரத்துவசதிகளும் ஒருங்கு சேர இந்த ஸ்ரேடியம் அமைந்திருக்கிறது. சிறுவயதில் இருந்தே கிரிக்கட் விளையாட்டில்…

    noelnadesan

    01/04/2015
    Uncategorized
  • ராமசாமி கோனாரின் கவலைக்கு மருந்து

    – நடேசன் தமிழ் நாட்டில் -மகாபலிபுரத்திற்கும் தாம்பரத்திற்கும் இடையே பசுமை கொழிக்கும் அயனாவரம் என்ற சிற்றூர். ஒரு பக்கத்தில் சிறிய மலைத்தொடர். மறுபக்கத்தில் நீர் நிரம்பிய ஏரி. இச்சிற்றூரில் சுமார் 150ஏக்கரில் மாடுகள் ஆடுகள் – கோழிகள் பராமரிக்கப்படும் பெரிய பண்ணை. மாரிகாலத்தில் ஏரியில் நீர் நிரம்பினால் பண்ணை வீ;ட்டு வாயிலை ஏரி மீன்கள் வந்து கவ்வும். இயற்கை அழகு செழித்த அந்த ஊரில் 86ஆம் ஆண்டளவில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தப் பண்ணையின் சொந்தக்காரர்…

    noelnadesan

    30/03/2015
    Uncategorized
  • ஹோமோசெக்சுவாலிற்றி

    ஒரு பால் உறவுகள் ( பல காலத்தின் முன்பு எழுதியது) நடேசன் உடல்நலக் குறைவான பூனையொன்றை கொண்டு இரு இளைஞர்கள் வந்தார்கள். பூனையை பரிசோதித்து நோய்கான மருந்துகளை கொடுப்பதற்கு எனது நர்சான ஜேன் உதவினாள். எனது அறையை விட்டு இரு இளைஞர்கள் போனபின்பு ஜேன் என்னிடம் ”what a waste ?” என கூறினாள். அழகான இளைஞர்கள் இருவரும் Gays என புரிந்ததால் நான் பதில் கூற முன்பு எனது பின்னாலே இருந்து ஒரு குரல் கேட்டது.…

    noelnadesan

    28/03/2015
    Uncategorized
  • முன்பட்டமும் பின்பட்டமும் -நடேசன்

    இதுவரையில் ஓர் பட்டமும் பொன்னாடையும் கிடைக்காத கவலையில் பல வருடங்களுக்கு முன்னால் எழுதியது. எனது எழுத்தாள நண்பர் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி தொலைபேசியில் ”கலைஞர் பேசுகிறேன்” என்றபோது ஜெயகாந்தன் ”கருணாநிதி பேசுகிறேன்” என்று கூறுங்கள் என்றாராம். இப் பட்டங்களின் மேல் உள்ள வெறுப்பை ஜெயகாந்தன் தெரிவித்திருக்கிறார் என நான் நினைத்தேன். இந்தியாவில் முக்கியமாகத் தமிழ்நாட்டில் இப்படியான பட்டங்கள் கொடுப்பதையும் வாங்குவதையும் ஒரு கலையாகவே செய்கிறார்கள். ”கவியரசர்”…

    noelnadesan

    23/03/2015
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 111 112 113 114 115 … 164
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 103 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar