-
நாவல்: ஸர்மிளா ஸெய்யத்தின் சமூகம் – உம்மத்.
நடேசன் மனிதர்கள் பேசும்போது அதில் உண்மை, உணர்வு, தர்க்கம் ( Ethos, Pathos, Logos )என்பன இருக்கவேண்டும் என்றார் கிரேக்க தத்துவஞானி அரிஸ்ரோட்டல். ஸர்மிலா ஸெய்யத்தின் உம்மத் நாவலில் இந்த மூன்றும் ஆழமாக பதிந்துள்ளன. நரம்பியல் நிபுணர் நோயாளியின் மூளையில் பாதிப்பு ஏற்படாமல் அதில் உருவான கட்டியை வெட்டுவதற்காக தனது திறமையை பாவிப்பதுபோல், தான்சார்ந்த இஸ்லாம் மதத்தை தாய்ப்பறவை தனது குஞ்சை பாதுகாப்பதுபோல் அணைத்துக் கொண்டே மதத்தின் பெயரால் பெண்களை அடக்கும் ஆண்வர்க்கத்தை அதே பறவை தனது…
-
முள்ளிவாய்க்கால் அநர்த்தத்தை நினைவுகூர்ந்து இலங்கை மாணவர் கல்வி நிதியம் நடவடிக்கை
” உலகின் எப்பகுதிக்குச் சென்றாலும் தமிழின் தொன்மையையும் கலை, இலக்கியத்தின் செழுமையையும் போற்றிப் பாதுகாப்பதில் ஈழத்தமிழர்கள் முன்னணியில் நிற்கின்றனர் ” அவுஸ்திரேலியா – கன்பரா கலை, இலக்கியச் சந்திப்பில் கப்பலோட்டிய தமிழனின் பேரன் புகழாரம் கண்காட்சிகள், நூல்களின் அறிமுகம், கூத்து குறும்படக்காட்சி, கலந்துரையாடல் சங்கமித்த விழா முள்ளிவாய்க்கால் அநர்த்தத்தை நினைவுகூர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் பணிகளை மேலும் விஸ்தரிக்க இலங்கை மாணவர் கல்வி நிதியம் நடவடிக்கை ரஸஞானி ” ஈழத்தமிழர்கள் உலகின் எந்தப்பகுதிக்குப் பிரவேசித்து புகலிடம் பெற்றாலும்,…
-
Let My People Go In Peace
“Today we are facing the biggest humiliation in our history. We are on the verge of being defeated in a war that has brought no benefit to our people. Our people are forced to sacrifice their lives for what? Our people are far safer and much better off if we do not have a war.…
-
ஜோதிகா 36 வயதினிலே ……
ஆற்றலை இனம் கண்டு ஊக்குவிக்கும் பண்பு முதலில் குடும்பத்திலிருந்து தோன்றவேண்டும் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் திரையில் தோன்றிய ஜோதிகா ஒவ்வொரு குடும்பமும் பார்க்கவேண்டிய பெண்ணுலகத்தின் பக்கங்கள் முருகபூபதி உடைகள் உலர்த்தும் – சீட்டாட்டம் நடக்கும் – பெற்றோருக்குத் தெரியாமல் இளசுகள் திருட்டுத் தம் – தண்ணி அடிக்கும் – பெண்கள் அப்பளம், வடாகம், மோர் மிளகாய், ஊறுகாய் காயப்போடும், எதிர் எதிர் வீட்டு இளசுகள் கண்களினால் காதல் மொழி உதிர்க்கும் மொட்டை மாடிகளில் பசுமைப்புரட்சியும் செய்ய முடியும் என்பதை…
-
கம்பன் கழகத்தின் மேல் ஏன் இவ்வளவு கடுப்பு?
தெய்வீகன் அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவில் சிறிலங்கா அரச அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மகுடம் சூட்டி மரியாதை செலுத்திய படங்களும் செய்திகளும் ஆய்வுகளும் மூஞ்சிப்புத்தகத்திலும் மூத்திரச்சந்திலும் சூடுபறக்கும் விவாதங்களாக பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கின்றன. வெளியே தெரியாத கம்பன் கழகத்தின் அரசியலையும் அதில் அங்கம் வகிக்கும் சிலரது குசும்புத்தனங்களையும் புரிந்துகொள்ளாது இவ்வளவு காலமும் கம்பனது தமிழில் மட்டும் தங்களை கட்டிவைத்துக்கொண்ட பலர், மைத்திரிக்கு வைத்த மகுடத்துடன் திடுக்கிட்டு எழும்பியுள்ளார்கள். அகில இலங்கை கம்பன் கழகத்தையும் அதன்…
-
கறுப்பு ஏவாளும் அவள் பிள்ளைகளும்
நடேசன் உயிரியல் பரிணாமக் கொள்கையின் தந்தையான சாள்ஸ் டார்வின் உலகத்தின் பல இடங்களுக்கும் சென்று ஆராய்வுகள் செய்து தற்போதய பரிணாமம் என்ற கொள்கையை உருவாக்கியவர் . அவுஸ்திரேலியாவிற்கு அவர் வந்ததை நினைவு கூரும் முகமாக வட அவுஸ்திரேலிய நகரத்தை அவர் பெயரில் டார்வின் என அழைக்கிறார்கள்.ஒரு விஞ்ஞானியின் பெயரில் நகரமொன்று பெயரிடப்படுவது அரிது. அதற்காக அவுஸ்திரேலியனாக நான் பெருமையடைகிறேன். சாள்ஸ் டார்வின் ஆபிரிக்காவை மனிதசமூகத்தின் தொட்டில் எனச் சொன்னார். அவர் சொன்னதின் காரணத்தின், மிகச்சிறிய பகுதியை அறிந்துகொள்ளும்…
-
கன்பராவில் கலை, இலக்கிய சந்திப்பு
அவுஸ்திரேலியா கன்பரா மாநிலத்தில் எதிர்வரும் 16-05-2015 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள கலை, இலக்கிய சந்திப்பில் நூல்களின் அறிமுகம், கூத்து ஒளிப்படக்காட்சி நிகழ்ச்சிகளுடன் கலந்துரையாடலும் இடம்பெறும். மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய நகரங்களிலிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் கலந்துகொள்ளவிருக்கும் இச்சந்திப்பு எதிர்வரும் மே 16 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கன்பரா மூத்த பிரஜைகள் சங்கத்தின் ( Tamil seniors citizens Hall, Bromby Street, Isaacs, Canberra, ACT) மண்டபத்தில் நடைபெறவுள்ளது இச்சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு…
-
பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு
மெல்பன் பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு விழாவும் பெற்றோர் – பிள்ளைகள் – பொதுமக்கள் ஒன்றுகூடலும். மெல்பனில் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வேறு வேறு பிரதேசங்களில் நான்கு வளாகங்களில் வாராந்தம் இயங்கிவரும் பாரதி பள்ளியின் இருபது வருட நிறைவு விழாவும் மாணவர்கள் – பெற்றோர்கள் – பொதுமக்கள் இணைந்து பங்குபற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒன்றுகூடலும் எதிர்வரும் 26-04-2015 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரையில் Dandenong High School…
-
விசித்திரமான கழுதைப்புலிகள்
நடேசன் ஆபிரிக்க காடுகளில் மட்டும் பார்க்கக் கூடிய மிருகம் கழுதைப்புலி. ஆசியாவின் சில பகுதிகளில் முன்பு இருந்தாலும் தற்பொழுது அரிதாகிவிட்டது. உல்லாசப்பயணிகளில் ஏராளமானவர்கள் குருகர் காட்டுக்கு சென்றாலும் சில முக்கியமான மிருகங்களை பார்க்கத் தவறிவிடுவார்கள். பருவகாலம் தப்பினால் அல்லது வழிகாட்டிகள் காண்பிக்கத்தவறினால் முக்கியமாக பார்க்கவேண்டியனவற்றை பார்க்கத்தவறிவிடுவார்கள். இப்படி பல காரணிகள் உள்ளது. மிருகங்களை அவற்றின் உறைவிடங்களில் காணவேண்டும் என்ற எனது ஆவல் இந்தமுறை குருகர்வனத்திற்கு சென்றபோது நிறைவேறியது. இரவுவேளைகளில் மட்டும் வேட்டைக்குத்திரியும் கழுதைப்புலியை பகல்நேரத்தில் கண்டது அதிசயமே.…