-
அகில உலக பெண்கள் தினவிழா
மெல்பனில் பெண்ணிய கருத்துக்கள் சங்கமித்த அகில உலக பெண்கள் தினவிழா அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் அகில உலகப்பெண்கள் தினவிழா கடந்த 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஆ.சி. கந்தராஜாவின் தலைமையில் நடந்தது. சங்கத்தின் துணைச்செயலளார் திருமதி சாந்தினி புவனேந்திரராஜா ஒருங்கிணைத்த நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. திரு. கணநாதன், திருமதி சகுந்தலா கணநாதன் தம்பதியினர் மங்கல விளக்கேற்றி நிகழ்ச்சிகளை தொடக்கிவைத்தனர். திரு. நாகராஜாவின் வாழ்த்துப்பாடலும் கலைஞர் சந்திரசேகரத்தின் நடனமும்…
-
நல்லதைக் கூறும் குத்துப்பாடல்
லண்டனில் வாழும் எனது நண்பன் டாக்டர் சாம் ஜெபகுமார் (ரஞ்ஜித்சிங்) உருவாக்கப்பட்ட குத்துப்பாடல் இதை கேட்பதுடன் மறறவர்களுடன் பகிரவும்.
-
அசோகனின் வைத்தியசாலை
Ponniah Karunaharamoorthy உலகின் முதலாவது விலங்கு வைத்தியசாலையை அசோகச்சக்கரவர்த்திதான் போரில் காயமடைந்த விலங்குகளைக் குணப்படுத்துவதற்காக அமைத்தாரென்பது சரித்திரத்திலிருந்து கிடைக்கும் ஒரு தகவல். அவுஸ்ரேலியாவில் கருணையுள்ளமும், செல்வச்சம்பத்தும் வாய்த்த ஒரு பெண்மணி மெல்பனின் ஒரு பகுதியில் ஸ்தாபித்த இவ்வைத்தியசாலைதான் நாவலின் பிரதான களமாகத் திகழ்கிறது. இலங்கையிலிருந்து செல்லும் ஒரு தமிழ் மிருகவைத்தியர் தான் பணிபுரியும், அம்மிருகவைத்தியசாலைச்சூழல், அங்குள்ள விலங்குகளின் நோய்கள், பிரச்சனைகள், வைத்தியமுறைகள்; அவற்றின் பழக்கவழக்கங்கள், அவற்றுக்கும் அவற்றின் எஜமானர்களுக்குமான உறவுகள், ஊடாட்டங்கள், பற்றிய விவரணங்களை ஆசிரியர் புதினம்…
-
ஸ்ரில் அலிஸ்.(Still Alice)
அவுஸ்திரேலியாவிற்கு வந்தபோது 50 டாலர் ஒற்றை நோட்டுடன் வந்தேன். மனத்தில் இருந்த நினைவுகளாக கல்வியை பயன்படுத்தமுடியும் என நம்பிக்கையிருந்தது. அவை எனக்கு மொழியால் அறிந்த விடயங்கள். ஆங்கிலம் அல்லது தமிழாக இருக்கலாம். இங்கு வந்த சிறிது காலத்தில் எனது மூளை தொழிலைச் செயற்படும் ஆற்றலை மறந்திருந்தால் எப்படி இருக்கும் ? யாராவது அப்படி நினைத்துப் பார்கிறோமா? பணம், உறவுகள் எனபனவற்றிலும் பார்க்க எனது நினைவுகளே முக்கியம் என நினைத்துப் பார்க்க வைத்த ஒரு படம் ஸ்ரில் அலிஸ்.…
-
என் பர்மிய நாட்கள்-1.
நடேசன் இலங்கைக்கு மிக அருகில் இருக்கும் தேசம் மட்டுல்ல கலாச்சாரம், மதம் என்பவற்றால் மிகவும் நெருங்கிய தேசம் (மியான்மார்) எனப்படும் பர்மா. பர்மாவை நினைத்தவுடன் இராணுவ அரசுக்கு எதிராக போராடி வருடக்கணக்கில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பெண்மணி அங் சான் சூ கி யும் நினைவுக்கு வருவார். தற்போது ராக்கின் மாநிலத்தில் இருந்து அகதிகளாக வந்து வங்காளக்கடலிலும், தாய்லாந்திலும் துன்பப்படும் ரொகிங்கா முஸ்லீம் மக்களை நினைக்கத் தோன்றும். இதற்கும் அப்பால் பர்மாவில் இருந்து வெளியேறிய தமிழர்களால் சென்னையில் உருவாகிய…
-
மெல்பனில் தென்னாசிய கவிஞர்களின் சங்கமம்
கண்காட்சியும் கவிதா நிகழ்வும் இலங்கை – இந்தியா – பாக்கிஸ்தான் – பங்களாதேஷ் – நேபாளம் – பூட்டான் – மாலைதீவு – ஆப்கானிஸ்தான் முதலான எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் SAPAC (South Asian Public Affairs) என்னும் தென்னாசிய விவகாரங்களுக்hகன அமைப்பு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெல்பனில் தொடங்கியது. பல்லின கலாசார நாடாக விளங்கும் அவுஸ்திரேலியாவில் இதுபோன்ற பல தேசிய அமைப்புகள் இயங்குகின்றன. பொருளாதாரம் – விளையாட்டு –…
-
அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
அகில உலக மகளிர்தினத்தை முன்னிட்டு எமது அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கம், எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி ( 06-03-2015) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் கருத்தரங்கு – கவியரங்கு – விவாத அரங்கு – நினைவரங்கு முதலான அமர்வுகளில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிரும்பும் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் – பெண்ணியச்சிந்தனையாளர்கள் மற்றும் அன்பர்களின் வரவை பெரிதும் எதிர்பார்க்கின்றோம். அண்மையில் மறைந்த பெண்ணிய ஆளுமைகளான படைப்பாளிகள் அருண்…
-
68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு
நடேசன் இலங்கை சுதந்திரமடைந்த 68 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இலங்கையர்களாகிய நாம் தமிழர்கள், சிங்களவர்கள், இஸ்லாமியர்கள் என்ற எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாயினும் நமது தாய்நாட்டில் உருவாகும் ஒவ்வொரு அதிர்வுகளும் எல்லோரையும் இன, மத பாகுபாடு இன்றி பாதிக்கிறது என்பதுதான் வரலாற்றில் படித்த உண்மை. இயற்கையின் பேரழிவு 2004 இல் நடந்த சுனாமி. அது தெற்கு மற்றும் கிழக்கு கரையோர மக்களை ஆயிரக்கணக்கில் காவு கொண்டது. அந்த சுனாமி மனிதர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கையின் சீற்றம். இதைவிட…
-
‘தவறான விமர்சனங்கள் நூலுக்கான வரவேற்பை குறைத்துவிடுகின்றது’
நேர்காணல்: எஸ்.ஜீவா ஒரு புத்தகம் நன்றாக இருந்தாலும் எல்¬லோ¬ரும் விரும்பும் அளவுக்கு இருக்கப்போவதில்லை. அதாவது எல்லோரும் விரும்பும் வகையில் அனைத்தும் முழுமையாக இருக்குமென கூற முடியாது. ஒரு புத்தகம் பலரின் கைகளில் சேர்ந்த பின்பு அதனை விமர்சிக்கலாம். அதுவும் குறிப்பிட்ட புத்தகத்தில் உள்ள விடயங்களை மாத்திரம் விமர்சிக்கலாமே தவிர அதற்கு அப்பாற்பட்ட விடயத்தை விமர்சிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது. இது காலங்காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. பிழையான விமர்சனங்கள் மூலம் புத்தகத்திற்கான வரவேற்பு முற்றாக தடைப்பட்டுவிடுகிறது. இலங்கையில்…
-
மெல்பனில் அமரர் அருண். விஜயராணி நினைவரங்கு
மெல்பனில் அமரர் அருண். விஜயராணி நினைவரங்கு விஜயதாரகை வெளியீடு அவுஸ்திரேலியாவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கலை இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்ட எழுத்தாளரும், வானொலி ஒலிச்சித்திர பிரதியாளருமான, கடந்த டிசம்பர் மாதம் 13-12-2015 ஆம் திகதி மறைந்த திருமதி அருண். விஜயராணியின் நினைவாக அன்னாரின் குடும்பத்தினர் ஒழுங்குசெய்துள்ள நினைவு அரங்கு அஞ்சலிப்பகிர்வு நிகழ்ச்சி 31-01-2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் அமரத்துவம் எய்திய அருண். விஜயராணியின் உருவப்படத்திற்கு…