Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • நினைவில் வாழும் காவலூர் ஜெகநாதன்.

    முருகபூபதி காவலூர் ஜெகநாதன் எனக்கு 1977 இற்குப்பின்னர்தான் அறிமுகமானார். முதலில் அவர் தமிழ்த்தேசியவாதம் பேசியவர். இன்றும் பலர் தமது சுயநலனுக்காகவும் பதவி மோகத்திற்காகவும் இந்தவாதநோயுடன் வாழ்கின்றனர். அன்று ஜெகநாதன் முற்போக்கு எழுத்தாளர்களை அவர் ஏற்கவில்லை. அக்காலப்பகுதியில் அவர் கோவை மகேசனின் சுதந்திரன் பண்ணையின் மற்றும் ஒரு வெளியீடான சுடர் இதழில் எழுதினார். காலம் கடந்தே மல்லிகையில் எழுதத்தொடங்கினார். 1983 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் அவருடைய வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது. யாழ்ப்பாணம் திருநேல்வேலியில் அமைந்திருந்த விவசாய ஆராய்ச்சி நிலையத்தில்…

    noelnadesan

    28/04/2016
    Uncategorized
  • இரத்தக்கறை படிந்த அங்கிகள்

    எக்ஸைல் 1984 நடேசன் ” IS IT TRUE TELO KILLED KAVALOOR JEGANATHAN…? ” ” YES” முகநூலில் ஒரு நண்பரிடம் சமீபத்தில் பெற்றுக்கொண்ட பதில்தான் இங்கு மேலே சொல்லப்பட்டது. சென்னையில் தமிழர் மருத்துவ நிலையம்(MUST) நடத்திய காலத்தில் நடந்த விடயங்களை முன்னர் எழுதிக்கொண்டிருந்தேன். நான் எழுதும் சில விடயங்கள் சிலரை பாதிக்கும் என்ற தயக்கத்தின் காரணத்தால்தான் அந்தப்பத்தியை இடை நிறுத்தியிருந்தேன். சமீபத்தில் எனது முகநூலில் ஒரு நண்பரால் எழுதப்பட்ட விடயம் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.…

    noelnadesan

    28/04/2016
    Uncategorized
  • என் பர்மிய நாட்கள் 5 / நடேசன்

    பர்மாவின் வரலாற்றில் பல தலைநகரங்கள் இருந்தன. ஆரம்பத்தில் பகான் என்ற நகரம் மத்திய பகுதியில் இருந்தது. அங்குதான் பர்மா என்ற பரந்த நிலப்பரப்பு ஒரு தேசிய நாடாகியது. 300 வருடங்களாக பகான் அரசின் தலைநகரமாக இருந்தது. இந்தக் காலம் 10-12 நூற்றாண்டுகள்- ஆசிய நாடுகளில் உன்னத காலமாக இருந்திருக்கிறது. கம்போடியா தாய்லாந்து தமிழ்நாட்டில் சோழர்காலம் என தேசிய அரசுகள் உருவாகி ஆட்சி நடத்திய காலம். அதே வேளையில் ஐரோப்பியர்கள் தேசிய அரசுகள் அற்று நகர அரசுகளாக (City…

    noelnadesan

    27/04/2016
    Uncategorized
  • மெல்பனில் நினைவரங்கும் இலக்கியச்சந்திப்பும்

    அண்மையில் இலங்கையில் அடுத்தடுத்து மறைந்தவர்களான படைப்பாளி செங்கை ஆழியான், நூலியல் பதிவு ஆவணக்காப்பாளர் புன்னியாமீன், ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கே. விஜயன் ஆகியோரின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூரும் நிகழ்ச்சியும் இலக்கியச்சந்திப்பும் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் மே மாதம் 14 ஆம் (14-05-2015 ) திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (1, Karobran Drive – Vermont South, Vic – 3133) மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய…

    noelnadesan

    26/04/2016
    Uncategorized
  • ஞானம் ஆசிரியர் ஞானசேகரன்

    இன்று (15 – 04 – 2016) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 75 வயது பவளவிழாக்காணும் ஈழத்து படைப்பாளியின் பல்துறை பணிகள் புன்னாலைக்கட்டுவனிலிருந்து தமிழர் புலம்பெயர் நாடுகள் வரையில் பயணித்த யாத்ரீகன் முருகபூபதி ” கிழக்கு வானில் சூரியன் தங்கப்பாளமாக ஜொலித்தபடி உதயமாகிக்கொண்டிருந்தான். சூரியோதயத்தை நான் முன்னர் கடற்கரையோரங்களில் நின்று பார்த்துக் களித்திருக்கிறேன். ஆனால், உயரத்தில், பறந்துகொண்டிருக்கும் விமானத்திலிருந்து, புதிய கோணத்தில் வெண்பஞ்சுக் கூட்டங்களாக மிதந்துகொண்டிருக்கும் மேகங்களினூடாக அந்த அழகிய காட்சியைப்பார்த்தபோது நான் மெய்மறந்துபோனேன். ஆதவனின் ஒளிப்பிழம்புகள்…

    noelnadesan

    14/04/2016
    Uncategorized
  • என் பர்மிய நாட்கள் 4.

    இரங்கூன் வீதியில் தலையை மூடியபடி இந்திய முகத்துடன் ஒரு இஸ்லாமிய பெண் எதிரில் வந்தாள். அப்பொழுது வழிகாட்டியிடம் ‘ எப்படி எல்லா மதக்கோவில்களும் இவ்வாறு ஒரே இடத்தில் இருக்கின்றன ? ‘ என்று கேட்டேன். ‘ இவை பலகாலமாக இருக்கிறது. ‘ ‘ அவ்வாறாயின் எப்படி இரக்கீன் மாநிலங்களும் புத்த மதத்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பிரச்சினை எனச் செய்திகள் வருகிறது ?’ ‘அயல்நாட்டில் இருந்து வரும் முஸ்லீம்களால் எற்படும் பிரச்சினைதான் என்றான் தற்பொழுது பிரபலமாக பேசப்படும் இந்த விடயத்தை…

    noelnadesan

    11/04/2016
    Uncategorized
  • உனையே மயல் கொண்டு

    ஜேகே சந்திரன் அவுஸ்திரேலியாவிலே விஞ்ஞான முதுமானி ஆராய்ச்சி மாணவனாக இருக்கிறான். மனைவி ஷோபா, மிக இளம்வயதில் திருமணம் முற்றாக்கப்பட்டுபுகைப்படத்தில் பார்த்த சந்திரனை நம்பி அவுஸ்திரேலியாவுக்கு வந்திறங்கியவள். அவுஸ்திரேலியா வந்து இரண்டாம் வருடமே குழந்தை.குழந்தைப்பேற்றோடு ஷோபாவின் தாயும் தந்தையும் வந்திணைகிறார்கள். குழந்தை பிறந்த சில நாட்களிலேயே ஷோபாவின் நடவடிக்கைகளில் மாற்றம் உருவாகிறது. மனம் ஒரு நிலையில் இல்லாமல் திடீரென்று அதி உச்ச கோபத்தையும் சமயத்தில் அதியுச்ச மகிழ்ச்சியையும் காட்டத்தொடங்குகிறாள். இது உடலுறவு வாழ்க்கையிலும் பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது. ஷோபாவுக்கே தன்னில்…

    noelnadesan

    10/04/2016
    Uncategorized
  • உள்ளக சுயநிர்ணய உரிமை.

    என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா விடுமுறையில் குடும்பத்துடன் கொழும்பு சென்றபோது கொழும்பு மாநகர சபை கட்டிடத்தைக் காட்டி ‘ ‘இதுதான் சந்திரிகாவுக்கு குண்டு வைத்த இடம் என கூறி வாடகை கார் சாரதி நிறுத்தினார். கொழும்பில் தங்கும் சில நாட்களில் நான் பார்க்க வேண்டிய இடம் இது என அவரே தீர்மானித்து விட்டதை எண்ணிக்கொண்டு கையில் இருந்த கமராவால் அந்தக் கட்டிடத்தை படம் பிடித்துக் கொண்டேன். பின்பு மாநகரசபை கட்டிடத்துக்கு எதிரே உள்ள விகார மாதேவி பூங்காவுக்குள்…

    noelnadesan

    09/04/2016
    Uncategorized
  • என் பர்மிய நாட்கள் 3

    அடுத்த நாள் யங்கூன் வீதி வழியாக சென்றபோது வழியில் சந்திந்த பெண்கள் யாவரும் வயது வித்தியசமின்றி முகத்தில் சந்தனம்போல் எதனையோ பூசி கன்னத்தை அலங்கரித்திருந்தார்கள். அதைப்பற்றிக் கேட்டபோது அது அலங்காரத்திற்கு மட்டுமல்ல வெய்யிலின் தாக்கத்தை தடுக்கும் சன் கிறீமாகவும் பாவிக்கிறார்கள் என்றார் எமது வழிகாட்டி தனகா எனப்படும் இந்த மரம் சந்தனமரத்திற்கு ஒப்பானது. ஆனால் சிறிது விலை குறைந்தது. சந்தைகளில் மரத்துண்டுகளாகவும் கிறீமாக குப்பிகளிலும் அடைத்து விற்கப்படுகிறது. பெண்களிடம் அதிலும் மத்திய மற்றும் முதிய பெண்களிடம் அதிகமாக…

    noelnadesan

    01/04/2016
    Uncategorized
  • ஈழத் தமிழர் அரசியல் ஒரு யானைக்கால்

    நடேசன் அவுஸ்திரேலியாவில் பதின்மூன்று வருடகாலம் நான் முன்னின்று நடத்திய உதயம் இருமொழி (தமிழ் – ஆங்கிலம்) மாதப்பத்திரிகை வியாபார ரீதியில் 25000 டொலர்கள் செலவுடன் வெளியாகியது. ஒவ்வொரு வருடமும் வியாபாரரீதியில் நட்டத்தையே எதிர்நோக்கியது. விளம்பரதாரர்களின் ஆதரவுடன் வெளியானபோதிலும் நட்டம் தவிர்க்கமுடியாதிருந்தமைக்கு அவ்வேளையில் இங்கு புலிகள் இயக்கத்தின் தீவிரமான எதிர்ப்பிரசாரங்களும் முக்கிய காரணம். உதயத்திற்கு விளம்பரம் தருபவர்களை எச்சரித்தல், அதில் எழுதுபவர்களின் குடும்பத்தினருக்கு அழுத்தங்கள் பிரயோகித்தல், கடைகளில் இருந்து உதயம் இதழ்களை ஆட்களை அனுப்பி துக்கிவீசச்செய்தல் முதலான தமக்குத்தெரிந்த…

    noelnadesan

    22/03/2016
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 99 100 101 102 103 … 163
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar