பகுப்பு: Uncategorized
-
முருகபூபதிக்கு மணிவிழா
மெல்பேனில் வாழும் சமூக சேவையாளரும் தமிழ் இலக்கியவாதியுமான் திருவாளர் லெட்சுமணன் முருக பூபதின் மணிவிழாவையொட்டி அவரது நண்பர்கள் அவரது சேவைகளை பாராட்டும் முகமாக வரும் July 31(2011)ஞாயிறுகிழமை விருந்து நிகழ்சியை ஒழுங்கு செய்கிறார்கள். கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக இலங்கையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆதரவு அற்ற குழந்தைகளை இலங்கை மாணவர் நிதியம் ஊடாக கல்வி பெற ஊக்கு சக்திகாக இருந்து வருபவரும் மற்றும் அவுஸ்திரேலிய தமிழர் அகதிகள் கழகம் அவுஸதிரேலிய தமிழர் ஒன்றியம் ஊடாக பல வருடங்களாக…
-
அனலைதீவு மக்களுக்கு மட்டும்
நடேசன் சமீபத்தில் இலங்கை செல்ல முன்பு கனடாவில் இருந்து ஒரு நண்பர் என்னுடன் தொடர்புகொண்டார். அனலைதீவில்தான் ஒரு கம்பியூட்டர் வகுப்புக்கு ஏற்பாடு செய்யவிருப்பதனால் அங்குள்ள நிலைமைகளை அறிந்து வரும்படி கேட்டார். ஊருக்கு உதவ விரும்புபவருக்கு உதவ நினைத்தபடி இம்முறை அனலைதீவுக்கு செல்;ல முடிவு செய்தேன். ஆறு ஏழு வயதில் ஹெப்பரைரிஸ் என்ற ஈரல் நோய் என்னை தாக்கியபோது அனலைதீவு ஆஸ்பத்திரியின் தரையில் பாயில் படுத்திருந்ததும் எனது அம்மா என்னருகே அழுது கொண்டு இருந்ததும் தண்ணீரால் தரையில் வரைந்த…
-
பத்மநாபாவின் நினைவுகள்
செம்மறிகள் கூட நல்ல மேய்பனை தேடுகின்றன. அதேபோல பல வருடங்களாக பத்மநாபாவின் தகுதியில் தமிழ் இனத்தில் ஒரு தலைவரை தேடும் ஆவலில் இந்த கட்டுரை மீண்டும் ஜுன் 19 ம் திகதி மீண்டும் பிரசுரமாகிறது.நடேசன் என் எஸ் நடேசன் நமது வாழ்க்கைப் பயணத்தில் ஏராளமானவர்களை சந்திக்கிறோம்.பழகுகிறோம். பிற்காலத்தில் ஒவ்வொருவரும் வேறு வழிகளில் தங்களது பயணத்தை தொடர்கிறார்கள். இவ்வாறு பழகியவர்களில் பலரது நினைவுகளை நினைவு கூருகிறோம். சிலரது நினைவுகளை நண்பர்களுடன் பரிமாறுகிறோம். சொற்பமானவர்களைப் பற்றி பலர் கூடும் நிகழ்வுகளில்…
-
மன்னிப்பை யாசித்துக் கொண்டு……..
நடேசன் நமக்குத் தெரிந்த காலங்களில் நடந்த ஆயுதப்போராட்டங்களில் பெண்களின் பங்கு மிகக்குறைவாக இருக்கும். பாலஸ்தீனம், வியட்னாம் போராட்டங்களில் ஆண்களுக்கு பெண்களின் பக்கபலம் இருந்தாலும் ஒரு சில உதவியான பங்கேற்பாக மட்டுமே இருந்தது. காரணம் சமூகத்தின் உற்பத்தியும் உருவாக்கமும் பெண்களில் இருந்து தொடங்குவதால் பெண்கள் நேரடி அழிவில் இருந்து காலம் காலமாக பாதுகாக்கப்பட்டனர். இலங்கைத் தமிழ் போராட்ட இயக்கங்களில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியும் ஆரம்பத்தில் பெண்களை அவர்களின் விருப்பத்துடன் உள்வாங்கியபோது மற்ற இயக்கத்தினரால் விமர்சிக்கபட்டது. ஆனால் அந்த…
-
ஆபத்துக்குதவாப் பிள்ளை.
கிருஸ்ணமூர்த்தி அரவிந்தன். 00 ஐரோப்பிய நாடொன்றிலிருந்து ஊருக்கு வந்திருந்தார் புலம்பெயர்ந்த நண்பர் ஒருவர். வந்தவரிடம் ஊரிலிருந்த நண்பர் கேட்டார், “இருந்தாற்போல வந்திருக்கிறீங்களே, இந்த வருகைக்கு என்ன காரணம்” என்று. “சொந்த ஊரைப் பார்க்க வந்திருக்கிறேன். பிறந்து வளர்ந்த வீட்டையும் எங்களுடைய காணிகளையும் பார்க்க ஆவலாக இருந்தது. அதனால் வந்திருக்கிறேன்” என்று பதிலளித்தார் புலம்பெயர்ந்த நண்பர். இந்த மாதிரியான ஆவலோடுதான் புலம்பெயர்ந்த தமிழர்களிற் பெரும்பாலானவர்கள் இலங்கைக்கு – தங்கள் சொந்த ஊர்களுக்கு – வருகிறார்கள். இன்னும் ஊருக்கு வரமுடியாமலிருக்கும்…
-
Constitution can solve 99% of Tamils’ woes – Expat doctor
Prolonged battle due to West giving hope to LTTE on ceasfire: TNA’s tug-o-war will not help Tamils: By Manjula FERNANDO Dr. Noel Nadesan Noel Nadesan, a veterinarian who owns a private clinic in Melbourne was closely related to Sri Lanka’s conflict with the ruthless LTTE. As a young graduate in 1985, he set up the…
-
உன்னையே மயல் கொண்டு- பாகம் நாலு
1983ஆம் ஆண்டு மீனாவும் சோபாவும் ஒருவகுப்பில் படித்தார்கள். இருவர் வீடுகளுக்கும் அதிக தூரமில்லை. அன்று காலை பத்துமணிக்கு மீனாவின் வீட்டுக்கு சென்றுவிட்டு சோபா வரும்போது தானும் உடன்வருவதாக கூறி மீனா வந்தாள். இருவரும் தெருவில் வரும்போது ஏதோ சத்தம் கேட்டது திரும்பி பார்த்தவர்களுக்கு கத்திஇ வாள்இ பொல்லுகளுடன் பலர் இருவரைத் துரத்திக்கொண்டு வருவது தெரிந்தது.. துரத்திரயவர்களின் வாய்களிலிருந்து ஆபாசமான, ஆத்திரமான சிங்கள வார்த்தைகள் வந்தன. வார்த்தைகளின் அர்த்தம் புரியாவிடினும் கெட்டவார்த்தைகள் என்பது புரிந்தது. முன்பாக ஓடியவர்களில் ஒருவன்…
-
அன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கட்கு ஒரு பகிரங்க மடல்..
நடேசன் – அவுஸ்திரேலியா என்னை உங்களுக்கு நினைவுபடுத்திவிட்டு விடயத்துக்கு வருகின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியா மெல்பனுக்கு நீங்கள் வந்தசமயம் சந்தித்த போது, கிழக்கு மாகாணத்தை வடக்கோடு இணைக்க 65 வீதமான இஸ்லாமிய மற்றும் சிங்கள மக்கள்; ஆதாரிக்காத போது எப்படி 77இல் வடக்கு-கிழக்கு இணைந்த பிரதேசத்தை தமிழ் ஈழம் எனக் காண்பித்து எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றினீர்கள்?; என்று கேட்டபோது, தாங்கள் “48ஆம் ஆண்டில் தமிழர்கள் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள்” என்றீர்கள். அப்பொழுது நான்,…
-
சிறுகதை: சலனங்களுக்கு வயதில்லை.
காலை எட்டு மணியளவில் ஜெனிவாவில் ஒரு குறுக்குத் தெருவில் சம்பந்த மூர்த்தி நின்றுகொண்டிருந்தார். அந்தத் தெருவின் ஒரு மூலையில் ரூரிஸ்ட் ஆபீஸ் இருந்தது. அங்கே நின்றால் ‘நீங்கள் அல்ப்ஸ் மலைகளுக்கு செல்லும் வாகனத்தை பிடிக்கலாம்’ என ஏற்கனவே பஸ் ஸ்ராண்டில் இருந்த பெண் அரைகுறை ஆங்கிலத்தில் கூறி இருந்தாள். பிரான்ஸ்சும் ஆங்கிலமும் கலந்த அந்த பதிலில் சம்பந்த மூர்த்தி முடிந்தவரை ஆங்கிலத்தை பிரித்து எடுத்து புரிந்து கொண்டு தெருவைக் கண்டு பிடித்தது தன்னை ஒரு சாதனையாளனாக தனக்குள்…
-
உன்னையே மயல் கொண்டு – மூன்றாவது பாகம்
பரிசோதனை டிஸ்ஸில் வளர்ந்த பக்டீரியா கொலனிகளை மேசையில் வைத்து கீழே குனிந்தபடி எண்ணிக் கொண்டிருந்த சந்திரனின் முதுகில் பலத்த அடி விழுந்தது. எரிச்சலுடன் திரும்பியபோது குண்டலராவ் நின்றான். முகத்தில் சந்தோசம் வந்தது. “எப்படி உன் ஆராய்ச்சி போகிறது” என்றான் சந்திரன். “பரவாயில்லை ஏதோ போகிறது” என்றான் சலித்தபடி. இந்த ஆய்வுகூடத்தில் கலாநிதிப் பட்டத்திற்கு படிக்கும் மூன்றாவது மாணவன் அவன். இந்தியாவில் ஆந்திரப்ப்pரதேசத்தில் இருந்து வந்து ஸ்கொலசிப்பில் படிக்கிறான். “என்ன இலங்கை-இந்திய மகாநாடு நடக்கிறதா”? எனக் கேட்டபடி சிண்டியும்…