ஆசிரியர்: noelnadesan
-
கல்வி நிதிய 23 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம்
இலங்கை மாணவர் கல்வி நிதியம் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 23 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம் எதிர்வரும் 30-09-2012 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும். தயவுசெய்து குறிப்பிட்ட நாளையும் காலத்தையும் மறக்காமல், ஆண்டுப்பொதுக்கூட்டத்திலும் உறுப்பினர் ஒன்றுகூடல் தேநீர் விருந்திலும் கலந்துகொள்ளுமாறும் கல்வி நிதியம் அழைக்கின்றது. ஆண்டுப்பொதுக்கூட்டம் நடைபெறும் முகவரி: Darebin Intercultural Centre 59 A Roseberry Avenue, Preston, Victoria 3072 அவுஸ்திரேலியாவில் நீண்டகாலமாக இயங்கியவாறு இலங்கையில் நடந்த போரினால் பாதிப்புற்ற ஏழைத்தமிழ்…
-
காத்திருப்பு ‘புதுவை நினைவுகள்’
சொல்லமறந்த கதைகள் 10 (அங்கம் 02) முருகபூபதி – அவுஸ்திரேலியா புதுவை இரத்தினதுரை தனது குடும்பத்திற்காக மத்தியகிழக்கு நாடொன்றுக்குச்சென்று உழைத்து திரும்பியபின்னர், விடுதலைப்புலிகளினால் ஈர்க்கப்பட்டு அவர்களின் கலை. பண்பாட்டுக்கழகத்தினை வளர்த்தார். 1986 இல் நான் அவரை இறுதியாகச்சந்தித்தபோது அவருக்கு தனித்தமிழ் ஈழம்தான் கனவு. அவரின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் ஒருகாலத்தில் மாக்ஸீயம், கம்யூனிஸம் பேசியவர். எழுதியவர். அதிலிருந்து முற்றாக விடுபட்டாரா? என்பது எனக்குத்தெரியாது. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமையை விட்டும் அதன் கொள்கைகளை விட்டும் இறுதிவரையில் அவர்…
-
நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் !
தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்னும் பெயரில் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமாக இயக்கப்படும் சிறப்புஅகதிகள்முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாவும் விடுதலை செய்யப்பட நீங்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 1989ம் ஆண்டு புலிகள் இயக்கத்தினரைக் கட்டுப்படுத்த என கலைஞர் அரசால் வேலூர் கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டதே “சிறப்பு அகதிகள் முகாம்”. வெள்ளைக்காரன் காலத்தில் போடப்பட்ட அந்நியர் நடமாட்ட கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் இயக்கப்படுவதாக…
-
காத்திருப்பு – ‘புதுவை’பற்றிய நினைவுகள்
சொல்ல மறந்த கதைகள் —09 முருகபூபதி – அவுஸ்திரேலியா காத்திருப்பதில் சுகமும் உண்டு சோகமும் உண்டு. காதலர்களின் காத்திருப்பும் பரஸ்பரம் அன்பு நிறைந்த தம்பதியரின் காத்திருப்பும் நண்பர்களின் காத்திருப்பும் சோகத்தையும் சுகத்தையும் நினைவுகளையும் சுமந்துகொண்டிருப்பவை. நானும் ஒருவருக்காக காத்திருக்கின்றேன். “ வானவில்லுக்கு எவரும் வர்ணம் பூசுவதில்லை கரையைத்தழுவும் அலைகளை திரும்பிப்போ என்று எவரும் கட்டளை இடுவதில்லை. குருவிகளுக்கு இதுதான் உங்கள் கூடு என்று எவரும் பாதை காட்டிவிடுவதில்லை. கவிஞனும் இப்படித்தான். அவனுக்கு எவரும் அடியெடுத்துக்கொடுக்க முடியாது, கொடுக்கவும்…
-
காவி உடைக்குள் ஒரு காவியம்
சொல்லமறந்த கதைகள் -08 முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் வடமேல் மாகாணத்தில் அமைதியான ஒரு சிங்களக் கிராமம். பசுமையான வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் பாக்கு, கித்துல், மா, பலா, வாழை மரங்களும் செழித்து வளரும் விவசாயக்கிராமம். முன்னாள் பிரதமர்கள் பண்டாரநாயக்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா ஆகியோரின் பரம்பரை தேர்தல் தொகுதியையும் பரம்பரைக்காணிகளையும் கொண்டு விளங்கும் அத்தனகல்லை என்ற நகரத்துக்கு சமீபமான கிராமம்தான் இங்கு நான் குறிப்பிடும் கொரஸ்ஸ. மினுவாங்கொடை என்ற மற்றுமொரு ஊரைக்கடந்து உடுகம்பொலை என்ற…
-
நாய்களுக்கும் நீரழிவு நோய் வரும்.
கவிஞர் வைரமுத்து தமிழர்கள் அறிந்த கவிஞர். அவரது கவிதை நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ள கருணாநிதி – முத்தமிழறிஞர் எனப் போற்றப்படுபவர். அதனால் – வைரமுத்துவை ஆகா-ஓகோ எனப் புகழ்ந்துரைத்துள்ளார். ‘எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?’’ – என்றும் வைரமுத்து இந்த கவிதை நூலில் சொல்கிறார். அப்படிச் சொன்ன கவிஞருக்கும் – கவிஞரின் கவித்திறனுக்கும் ஆய்வுரை வழங்கிய கருணாநிதிக்கும் வாசகர்களுக்கும் – இது சமர்ப்பணம். காலைநேரம். கிளினிக்கை திறக்கச் சற்றுத் தாமதமாகிவிட்டது. பரபரப்புடன் பாதுகாப்பு அலாரத்தை நிறுத்திவிட்டு…
-
காலிமுகம்
சொல்லமறந்த கதைகள் 07 முருகபூபதி – அவுஸ்திரேலியா கொழும்பில் காலிமுகக் கடற்கரை சரித்திர பிரசித்தம் வாய்ந்தது. தமிழ் நாட்டில் சென்னை மெரீனா பீச்சுக்கு ஒப்பானது. இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்புடன் திகழும் காலிமுகத்திடலைப்பற்றி ஏராளமான கதைகள், செய்திகள் இன்றும் பேசப்படுபவை. 1974 ஆம் ஆண்டு நானும் சுமார் ஓராண்டுகாலம் இந்த காலிமுகத்திடலில் வெய்யிலில் குளித்து முகத்தை கறுப்பாக்கியிருக்கின்றேன். காலிமுகத்தில்(Galle Face) முன்னைய பாராளுமன்றத்திற்கு முன்பாக செல்லும் காலி வீதியை அகலமாக்கும் வேலை அந்த ஆண்டு தொடங்கப்பட்டபோது, படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த…
-
Boat people and border control
Noel Nadesan –Ex- Editor, Uthayam ,Australia In Australia, the political debate is only about people arriving by boat. These are the people capturing headlines in daily newspapers and news breaks on television. But the Majority of asylum seekers arrive through international air ports in the country applying for political asylum while living among the community.…
-
வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை.
சொல்ல மறந்த கதை 06 முருகபூபதி – அவுஸ்திரேலியா யாழ்ப்பாணம் கண்டி வீதியில் அரியாலை பிள்ளையார் கோயிலுக்கு அருகில் தேர்முட்டி. இந்தப்பகுதியில் வாழ்ந்த பல இளைஞர்கள் ஒன்றுகூடும் இடம். அவர்கள் வம்பளப்பார்கள். கார்ட்ஸ் விளையாடுவார்கள். அரசியல் பேசுவார்கள். மாலைவேளையில் எனக்கும் அவர்களுடன் பொழுதுபோகும். 1983 ஆடிக்கலவரம் என்னையும் குடும்பத்துடன் பெயர்த்தது. அரியாலை செம்மணி வீதியில் ஒரு வீட்டில் சிறிதுகாலம் தங்கினோம். அந்தவீட்டின் கிணற்றில் உவர்ப்பான தண்ணீர். அதனால் குடிநீருக்காக கண்டிவீதியைக்கடந்து பிள்ளையார் கோயில் கிணற்றுக்கு வருவேன். வீரகேசரியில்…
-
Island of tears and fears
• by: Amanda Hodge, South Asia correspondent • From: The Australian • August 15, 2012 12:00AM Sivanesaraghan, left, with other failed asylum-seekers after their rescue by a French supertanker last month. Picture: Amanda Hodge Source: The Australian LIKE thousands of his countrymen, Palitha plunged deep into debt for a gruelling passage to a first-world job…