-
கரிபியன் கடற்பயணம்
சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து ஆங்கிலேயருக்கு சொந்தமான (Princess Elizabeth) பயணக் கப்பலில் ஏறினோம். இது எங்களுக்கு கரிபியன் தீவுகளுக்கான ஒரு மாதக் கடற் பயணம். அடிமனத்தில் முதல் பயணமாதலால் எப்படி பயணம் இருக்கும்? போரடிக்குமா? புத்தகங்கள் மற்றும் கம்பியூட்டர் இருந்தால் எனது பொழுது போகும் ஆனால் சியாமளாவின நிலைவேறு. கடல் குருஸ் என்பது இதுவரை வயதானவர்களுக்கு உள்ள பயணம் என்ற நினைவே மனதில் இருந்தது. பல நினைவுகளை சுமந்தபடி பொதிகளுடன் கப்பலில் ஏறினோம். ஆரம்பத்தில் கப்பலில் ஏறுவது,…
-
கவிதை: வசந்தம் வராத காட்டில் பறவைகளின் அழைப்பு.
கவிதைகளில் எனக்கு பெரிதாக ஆழ்ந்த ஈடுபாடு இல்லை.ஆனால், கையில் கிடைத்ததை கவனமாகப் பார்ப்பவன்.அப்படிப் பார்த்தபோது“வசந்தம் வராத காட்டில் பறவைகளின் அழைப்பு”என்ற கவிதைத் தொகுப்பு என் கவனத்தை அதில் உறைய வைத்தது. ஜெர்மனியிலிருந்து பிரசாந்தி சேகரத்தின் மொழிபெயர்ப்பு மிகவும் அழகாகவும், இயல்பாகவும் இருந்தது.அதில் இடம்பெற்ற ஒரு கவிதை என்னை உண்மையிலேயே அதிர வைத்தது.அந்தக் கவிதையின் பின்னணி ஒரு கிரேக்கப் புராணக் கதை.கிரேக்கத் தெய்வமான சூயஸ் (Zeus), ஸ்பார்டாவின் அரசன் டைண்டரியஸ் (Tyndareus) அவர்களின்அழகிய, திருமணமான மனைவி லீடா (Leda)வைப்…
-
வெளிகள் ஆயிரம்.
நல்லையா அமிர்தநாதன். வெளிகள் ஆயிரம்(ஈழத்து இலக்கிய பிரதிகள் மீதான விசாரணை) என்ற நூல் படிக்க கிடைத்தது. ஈழத்தில் பிறந்து அவுஸ்ரேலியாவில் புலம் பெயர்ந்து வாழும் விலங்கு வைத்தியரான நொயல் நடேசன் விசாரணை என்ற பெயரில் அறுவை (சிகிட்சை) செய்கின்றார். தமிழிலும் ஆங்கிலத்திலும் படைப்பாற்றல் கொண்ட நடேசன் சிறந்த கதை சொல்லியாகவும் எனக்கு புலப்படுகின்றார். 17 நாவல்கள் கொஞ்சம் சிறுகதைகள் சில கவிதைகளை குறுக்கு விசாரணை செய்துள்ளார். என்னவொன்றுஎங்கே முடியுமோ அங்கேயெல்லாம் தன் புலி எதிர்ப்பை பதிவிட்டு போகிறார்…
-
கலா, நீ ஒரு அயராத போராளி
சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் முகநூலில் கலா ஸ்ரீரஞ்சனை தொடர்புகொண்டேன். அதிலிருந்து தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, லண்டனில் என் மனைவி சியாமளாவுடன் அவரை நேரில் சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் கலா, சியாமளாவுடன் நெருக்கம் கொண்டார். லண்டனில் இருந்தபோது, சிலருடன் பேசிக் கொண்டு ஒரு புற்றுநோய் நிதிக்கு நன்கொடை வழங்கினார். பின்னர், எங்களின் புற்றுநோய் அறக்கட்டளை குழுவிலும் அவரை இணைத்தேன். தொடர்ந்து, தன் புற்றுநோய் நிலை குறித்தும், மேற்கொண்ட சிகிச்சைகள் பற்றியும் என்னிடம் பகிர்ந்து…
-
Opening the Eye Through Education.
Dr. Noel Nadesan. Education, as both a process and a lived experience, enables people to see the world clearly, seek truth, broaden their perspectives, and empower themselves. This is what we, as parents, hope to give our children. But what happens when a poor family loses its father—especially during war? For such children, a gloomy…
-
மேற்கு அமெரிக்கா – 4
நம்மைப்போல் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற மூவர், தங்களின் நண்பரான ஒரு மில்லியனரின் திருமண அழைப்பை ஏற்று அமெரிக்காவின் கிழக்கு நகரங்களிலிருந்து லாஸ் வேகாஸ் நகருக்குச் செல்கிறார்கள். அந்த நண்பர் தன்னைவிட முப்பது வயது குறைவான பெண்ணைத் திருமணம் செய்ய இருக்கிறார். அவர்கள் அங்கே செய்யும் அட்டகாசங்களை நகைச்சுவையாக எடுத்த படமே “லாஸ்ட் வேகாஸ்” திரைப்படம். இந்தப் படத்தில் மில்லியனராக வரும் பாத்திரத்தில் மைக்கேல் டக்ளஸ் நடித்துள்ளார். அவருக்குப் மிகவும் பொருத்தமான பாத்திரம். அவரது நண்பர்களில் ஒருவர் மோர்கன்…
-
” Exile”in English.
Forward This memoir draws on memories that have lingered with me for more than four decades. What follows is not merely a personal recollection of events but an attempt to understand how lived experience gradually shaped my political consciousness. The incidents I witnessed and the people I encountered during those formative years later influenced the…
-
மேற்கு அமரிக்கா :3
மொன்யூமென்ட் வாலி (Monument Valley) எனப்படும் பகுதி உத்தா, அரிசோனா என்ற இரு மாகாணங்கள் இடையே உள்ள பிரதேசமாகும். தற்போது இந்தப் பிரதேசம் அமெரிக்க ஆதிகுடிகளின் வசம் உள்ளது. அவர்களில் முக்கியமாக நவகோ (Navajo Nation) என்ற ஆதிகுடிகளின் ஆட்சியிலும் தன்னாட்சியிலும் உள்ளது. தற்போது இவர்களே இப்பேகுதியில் வாழும் பெரிய இனக்கூட்டமாகியுள்ளனர். அவர்களது அனுமதியுடனே மொன்யூமென்ட் வாலிக்கு நாம் செல்ல முடியும். இந்த மொன்யூமென்ட் வாலி என்பது மிகவும் பெரிதான கற்கள், சிறிய குன்றுகள் போல் பல…
-
கல்விக் கண் திறத்தல்
கல்வி என்பது ஒரு செயல் முறை, வாழ்க்கை அனுபவம் என இருந்து, தற்போது உலகைத் தெளிவாகக் காணவும், உண்மையைத் தேடவும், பார்வையை விரிவுபடுத்திக் கொள்ளவும், நாம் மற்றோரில் தங்கியிராது சுயாதீனமடையவும் உதவுகிறது. இப்படியான கல்வியையே நாம் பெற்றோர்களாக, நம் குழந்தைகளுக்கு அளிக்க விரும்புகிறோம். ஆனால் ஏழைக் குடும்பம் ஒன்றில் தந்தை இறந்து விட்டால் என்ன நடக்கும்? குறிப்பாக போரின் காலத்தில்? அத்தகைய குழந்தைகளுக்கு, ஒரு இருண்ட உலகமே காத்திருக்கிறது. துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு இலங்கையர்கள் எப்போதும் ஆழ்ந்த…
-
Ernest Thalayasingham Macintyre.
Dr Thamizhachi ThangapandianMember of Parliament (Lok Sabha)- South ChennaiTamil Nadu, INDIA It is deeply painful to come to terms with the passing of Ernest Thalayasingham Macintyre. The news has left a silence that feels both personal and profound. For me, this is not only the loss of an extraordinary playwright and thinker, but the loss…