-
இன நல்லிணக்கத்திற்காக தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்”
” இன நல்லிணக்கத்திற்காக இலங்கையிலும் -வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்” மெல்பன் தமிழ் எழுத்தாளர் விழாவில் இலங்கைப்படைப்பாளி மடுளுகிரியே விஜேரத்ன வலியுறுத்து ” இலங்கையில் தமிழ் – சிங்கள நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அங்கிருக்கும் எழுத்தாளர்களும், புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களும் தம்மாலியன்ற பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தல் வேண்டும். இரண்டு இனங்களினதும் தாய்மொழிகளுக்கு இடையில் கருத்து ரீதியாக அதிகம் ஒற்றுமை இருக்கிறது. மொழிகளுக்கிடையில் இருக்கும் தொன்மையான உறவு இனங்களிடத்திலும் நீடித்திருக்கவேண்டும்” என்று…
-
தமிழ் – சிங்கள மொழிப்பரிவர்த்தனையில் அயராது உழைக்கும் மடுளுகிரியே விஜேரத்ன
சுவாமி விபுலானந்தரை சிங்கள மக்களிடம் அறிமுகப்படுத்தியவர் தேசிய ஒருமைப்பாடு இருவழிப்பாதை என்பதை உணர்த்திய எழுத்தூழியர் முருகபூபதி வவுனியாவின் எல்லையில் மடுக்கந்தை என்ற அந்த அழகிய கிராமத்தில் வசித்த மக்கள் துயில் எழுந்திருக்காத புலராத பொழுதிலே, அந்தச்சிறுவன் அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து, கால்நடையாக சுமார் 6 மைல் தூரம் ஒற்றையடிப்பாதையிலும் வயல் வரப்புகளிலும் நடந்து சமணங்குளம் தமிழ்ப்பண்டிதரிடம் வருவான். அவ்வேளையில் அவன் வவுனியா இரட்டைப்பெரிய குளத்தில் தனது ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்துகொண்டிருந்தான். தாய் மொழியும் வீட்டு மொழியும்…
-
மெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா2017
<img இலங்கையிலிருந்து ‘ஞானம்’ ஆசிரியர் ஞானசேகரன், எழுத்தாளர் மடுளுகிரியே விஜேரத்தின வருகை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இவ்விழாவுக்காக இலங்கையிலிருந்து எழுத்தாளரும் ‘ ஞானம்’ இதழின் ஆசிரியருமான மருத்துவர் தி. ஞானசேகரன், மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான திரு. மடுளுகிரியே விஜேரத்தன ஆகியோர் வருகை தருகின்றனர். எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி (06-05-2017) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மெல்பனில் விழா நடைபெறும் இடம்: Mulgrave…
-
நினைவில் வாழும் விசுவானந்ததேவன்
நடேசன் 77 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மார்ஸ் மண்டபத்தில் தங்கியிருந்தேன். நான் கலகா வீதியைக்கடந்து எதிர்ப்பக்கமாக புகையிரதநிலையம் அமைந்த பகுதியில் உள்ள மிருகவைத்தியத்துறைக்கு செல்லும்போது பலதடவைகள் விசுவானந்ததேவனைக் கண்டிருக்கிறேன். துணிப்பையை தோளில் கொழுவியபடி குறைந்தது இரண்டு நண்பர்களுடன் எதையோ தொலைத்துவிட்டதுபோல் புற்களோ அல்லது ஊர்வனவோ நசிந்துவிடாதிருக்கவேண்டும் என்பதுபோல் கால்களை எட்டி எட்டி வைத்தபடி சிரிப்பைத் தழுவ விட்டபடி என்னைக்கடந்து நடக்கும் விசுவானந்ததேவன் எப்பொழுதும் நினைவில் நிற்கிறார். அவரது உருவம், முகம், அவரது புதுமையான…
-
அவலங்கள்:சாத்திரியின் சிறுகதைத்தொகுதி.
நடேசன். ரோமர்கள் சாபோ மலை உச்சியில் மிருகங்களைப் பலி கொடுத்து, அதை எரிக்கும்போது அங்கிருந்து வந்த மரக்கரியும்(KOH) மிருகக்கொழுப்பும் மழையில் கழுவி அருவியுடன் சேர்ந்தது. அந்த அருவியுடன் கலந்த நீரோடையில் மிதந்து வந்த மிருக எச்சங்கள் கலந்த இடத்தில் ரோமன் மகளிர் துணிகள் துவைக்கும் போது அவை எதிர்பாராமல் பிரகாசமாக வந்தன. இதுவே சவர்க்காரம் உருவாகிய கதை. இன்னமும் சவர்க்காரம் செய்வதை சபோனிபிக்கேசன் (Saponification) என்பார்கள். விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் ஈழப்போராட்டத்தில் ஏற்பட்ட அழிவுகள் தவிர்த்து, போராட்ட…
-
3. கரையில் மோதும் நினைவலைகள்
மெல்பன் கரையில் மோதும் நினைவலைகள் 3 நடேசன் எனது வாழ்வில் அதிக காலம் மெல்பனில் வாழப்போகிறேன் என அக்காலத்தில் நான் எண்ணவில்லை. மனைவியின் சகோதரர்கள் இருவர் இங்கு இருந்தபோதும் மனைவிகூட அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை. நாட்டை விட்டு வாழ்வுதேடி ஓடியவர்களில் ஒருவனாக இருந்தேன். ஆனால் என்னையறியாமல் வாழ்வின் பெரும்பகுதி உலகத்தின் சிறந்த நகரங்களில் ஒன்றான மெல்பனில் அமைந்துவிட்டது. இந்தியாவில் இருந்து வந்து ஒரு மாதகாலம் மட்டும் சிட்னியிலிருந்தோம். எனது மனைவியின் இளைய சகோதரன் ரவி, மெல்பனில் மருத்துவராக இருந்தார்.…
-
பூமராங் இணைய இதழ்
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணைய இதழ் பூமராங் உங்கள் பார்வைக்கு வருகிறது. http://www.atlasonline.org சங்கத்தின் உத்தியோகபூர்வ ஏடாக இதனை உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்றோம். எமது சங்கத்தின் வளர்ச்சியின் ஊடாக மற்றும் ஒரு பரிமாணத்தில் பூமராங் இணைய இதழில் சங்கமிக்கின்றோம். சங்கத்தின் செய்திகள், சங்க உறுப்பினர்களின் படைப்புகள் மற்றும் அவுஸ்திரேலியத் தமிழ் கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள், அகில உலகரீதியான தமிழ் கலை, இலக்கிய ஆக்கங்கள், படைப்பிலக்கிய மொழிபெயர்ப்புகள் , நூல் மதிப்பீடுகள், வாசகர் பக்கம்,…
-
அசோகமித்திரன் நினைவுகள்
தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி. முருகபூபதி சென்னையில் வாழும் ஒரு நடுத்தரக்குடும்பம். மனைவி கடைத்தெருவுக்குப் போய்விட்டாள். கணவன் குழந்தையுடன் வீட்டில். தெருவில் சென்ற ஒரு ரிக்ஷாவை காணும் குழந்தை, ” அப்பா ரிஷ்க்கா ” என்று சொல்கிறது. உடனே தகப்பன், ” அது ரிஷ்க்கா இல்லையம்மா…. ரிக்ஷா” என்று திருத்திச்சொல்கிறார். குழந்தை மீண்டும் ரிஷ்க்கா எனச்சொல்கிறது. தகப்பன் மீண்டும் திருத்துகிறார். ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக்கொடுக்கிறார். ” ரி… க்…ஷா…” குழந்தையும் அவ்வாறே, ”…
-
லாபிரடோரும் சீனக்குடும்பமும்
ஒரு லாபிரடோர் நாயை வீட்டுக்குள் வைத்து வளர்க்கும் எனக்குத் தெரியும் அதனது நிபந்தனையற்ற அன்பு, விசுவாசம் மற்றும் தோழமை. ஆனால் வற்றாத நதியில் குளிக்கும்போது வேகமாக இழுத்துச் செல்லும் நதியின் சுழல்போல் சிக்கல்களையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். நமது வாழ்வில் ஏற்படும் காதல் பாசத்திற்குக் கொடுக்கும் விலை போன்றது. என்ன 12 அல்லது 13 வருடங்கள் மட்டுமே நீடிக்கும். அதில் முக்கியமானது வீட்டின் தரையில் தினம் தினம் புதிதாக முளைக்கும் உரோமங்கள். தரையில் மட்டுமல்ல வீட்டில் உள்ள கட்டில்,…
-
வாழும் சுவடுகள்
By Pon Vasudevan கடந்த இரண்டு நாட்களாக ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். படிக்கப்படிக்க மிகவும் பிடித்துப்போய் இதைப்பற்றி அவசியம் எழுத வேண்டும் என்று தோன்றியபடி இருந்தது. இன்று படித்து முடித்துவிட்டேன். எழுதலாம் என்று யோசித்தால், ‘ஆகா, ஓகோ, பிரமாதம், பேஷ் பேஷ்’ என்ற மாதிரியான வார்த்தைகளை மாற்றிப்போட்டு ‘உணர்வுகளை, ரசனையைத் தூண்டும் எழுத்து, சகல உயிரினங்களின் மீதும் உருவாகும் மனிதாபிமானம், நுண்ணுணர்வால் மனிதர்களை அடிமைப்படுத்துகிற செல்லப் பிராணிகள், அழகாகச் சித்தரிக்கப்பட்ட உறவுச்சிக்கல்கள்’ என்றெல்லாம் எழுத வேண்டி வருமோ…