-
மரணரயில்ப்பாதையில் இறந்த தமிழர்கள்.
இரண்டாம் உலகப்போர்க்காலத்தில் 70000- 80000 தமிழ்மக்கள் பட்டினி மற்றும் தொற்றுநோயால் அன்னிய நிலத்தில் கூட்டமாக இறந்தார்கள் என்ற தகவல் எனக்கு புதுச்செய்தியாக இருந்தது. எமது தமிழர்களது வரலாற்றுக் குறிப்புகளில் பொய்களும் புளுகுகளும் இடம்பெறும் போது உண்மைச்சம்பவங்கள் புறக்கணிக்கப்படுகிறது. இதனால் வரலாற்றில் இவர்களது மரணங்கள் கிழிந்த பக்கங்களாகிவிட்டன. இரண்டாவது உலகப்போரில் மலேயா, சிங்கப்பூரை வேகமாகக் கைப்பற்றியது யப்பானிய இராணுவம். அங்கிருந்த பிரித்தானிய அவுஸ்திரேலியப் படைகளும் மற்றைய சிவில் பதவி வகித்த ஆங்கிலேயரும் சரணடைந்தார்கள். மலேயாவில் பிரித்தானிய முதலாளிகள் சரணாகதி…
-
நைல் நதியின் ஊடே
எஸ் இராமகிருஸ்ணன் டாக்டர் நோயல் நடேசன் ஆஸ்திரேலியாவில் கால்நடைமருத்துவராகப் பணியாற்றுகிறார். வண்ணாதிகுளம், அசோகனின் வைத்தியசாலை போன்ற சிறப்பான நாவல்களையும் வாழும் சுவடுகள் என்ற விலங்குகளுக்கான சிகிட்சை அனுபவத் தொகுப்பு நூலையும் எழுதியிருக்கிறார். ஆஸ்ரேலியாவில் 12 ஆண்டுகளாக ‘உதயம்’ என்ற பத்திரிகையை தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட்டுள்ளார். அவரது சமீபத்திய புத்தகமான நைல் நதிக்கரையோரம் என்ற பயணநூலை வாசித்தேன். சுவாரஸ்யமாக, வரலாற்றுத் துல்லியத்துடன் எழுதப்பட்ட சிறந்த பயணநூலது. ஒரு மருத்துவரின் பார்வையில் வரலாறு அணுகப்படுகிறது…
-
அசோகனின் வைத்தியசாலை – நடேசன் (நாவல்)
மகிழ் வெளியீடு, கிளிநொச்சி, விலங்கை பக்கம் 402 விலை ரூ.300 ஆஸ்திரேலியாவில் மிருக வைத்தியசாலை ஒன்றைப் பின்புலமாகக் கொண்டு,அங்கு மருத்துவராக பணியில் சேரும் புலம்பெயர்ந்த தமிழன் சிவா சுந்தரத்தின் நோக்கில் விரியும் இந்நாவலில்,மிருக சிகிச்சையின் வரலாறு, மிருகத்திற்கும் மனிதர்களுக்குமான உறவு, அம்மருத்துவமனை நிர்வாகம்,அதன் உள்அரசியல் எனப் பலவும் பேசப்படுகிறது.சிவாவின் எண்ணங்களை மறுத்து உரையாடும் ‘கொலிங்வுட்’ என்னும் பேசும் பூனை,அவனுடைய மனசாட்சியின் தலைகீழ் வடிவமாக நாவல் முழுவதும் வருகிறது. இதில் ஈழப்பிரச்சனை குறித்து ஓரிடத்திலும் நேரடியாக எதுவும் சுட்டப்பெறாது…
-
Environmental degradation in north of Sri Lanka
History shows that many ancient cities were abandoned by people due to environmental degradation. It happened in many ancient civilisations. There were several reasons for this. In those times the global population was not so dense. Nor were there strict borders to control the movement of populations. Besides, plenty of land was available mass migration.…
-
அனட்டமி ஒவ் வயலன்ஸ் (Anatomy of Violence by Deepa Mehta)
மெல்பனில் நடக்கும் இந்தியத் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட அனட்டமி ஒஃப் வயலன்ஸ் என்ற திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. புதுடில்லியில் நிர்பாயா (Nirbhaya) என்ற மாணவியின்மீது ஆறு பேர் பாலியல் வன்முறை செய்ததால் அவள் மரணமடைந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட படம். இந்தியாவின் மனச்சாட்சியை உலுக்கியதாகப் பேசப்படும் இச் சம்பவத்தைமீள்கொண்டு வரும்வகையில் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது. இது ஆங்கிலத்தில் டொக்கியோ ஃபில்ம்(Docufilm) என்றவகைப்படும் படத்தின் முடிவில் தண்டனைபெற்ற ஒருவனிடம், உன்னால் மரணம் சம்பவித்ததைப்பற்றி என்னநினைக்கிறாய் என்ற நிருபரது…
-
சூரியனுக்கு அருகில் நயினாதீவு
நடேசன் வட இலங்கையின் தீவுகளில் ஒன்றான நயினாதீவிற்கு புத்தபெருமான் வந்துபோனார் என இலங்கையில் பவுத்த மதத்தினர் நம்புகிறார்கள். அதேபோல் மணிமேகலை தனது அட்சயபாத்திரத்துடன் தென் திசையில் முப்பது காதம் வந்தடைந்த மணிபல்லம் நயினாதீவு எனத்தமிழர்கள் நம்புகிறோம். அக்காலத்தில் இவர்கள் வந்துபோனதற்கான வரலாற்றை நயினாதீவு மக்களாகிய நாம் கொண்டாடுகிறோம். இது இவ்விதமிருக்க, தற்காலத்தின் ஈழத்து முதன்மை நாவலாசிரியரான நண்பர் தேவகாந்தன் தனது கனவுச்சிறை என்ற ஆயிரம் பக்கங்கள் கொண்ட நவீனகாவியத்தில் நயினாதீவின் 1980-90 காலங்களில் அங்கு வாழ்ந்த மக்களையும்…
-
குருதியில் தோய்ந்த வரலாறு
நடேசன் ஆண்கள் அழுவதைக்கண்டால் என்னால் சகிக்க முடியாது. எனது வாழ்கையில் சில தடவைகள் மட்டும் மற்றவர்களுக்குத்தெரியாமல் அழுதிருக்கிறேன். ஆனால், இந்த இடத்தில் என்னை மீறிய சோகமாக வெளிப்பட்டது. இலங்கைப் பயணத்தில் மட்டக்களப்பில் நின்றபோது அவுஸ்திரேலியாவிலிருக்கும் நண்பர் செய்யத்துடன் பேசினேன். அவர் என்னை காத்தான்குடிக்கும் போகும்படி சொன்னார்.எனது பயணம் கல்முனை நோக்கியிருந்தமையால் அதில் மாற்றம் செய்ய தயக்கமாகவிருந்தது. ஆனாலும் அவரது வற்புறுத்தல் என்னை அங்கு செல்லவைத்தது. அவர் எனக்காக ஒருவரை ஒழுங்கு பண்ணியிருந்தார். மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடிக்கு ஓட்டோவில்…
-
மெல்பனில் 1987 இல் முதலாவது சந்திப்பு
கங்காரு நாட்டுக்காகிதம் முருகபூபதி அவுஸ்திரேலியாவுக்கு 1987 பெப்ரவரியில் வந்து, மெல்பனில் West Brunswick என்னுமிடத்தில் ஒரு படுக்கை அறைக்குடியிருப்பை வாடகைக்கு எடுத்து புகலிட வாழ்வை நான் ஆரம்பித்து, இரண்டு நாட்களில் நண்பர் இராஜரட்ணம் சிவநாதன், ( இவரை எனக்கு இலங்கையிலேயே தெரியும்) தொலைபேசியில் ( அப்பொழுது கைத்தொலைபேசி இல்லாத காலம்) ” பூபதி, தருமகுலராஜா என்ற ஒரு நண்பர் வருகிறார். அவர் உங்களை Don caster என்ற இடத்துக்கு அழைத்துச்செல்வார். அங்கே மகேஸ்வரன் என்ற ஒரு பொறியிலாளரின்…
-
பெர்லின் நினைவுகள்.
பொ கருணகரகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் மற்றைய புலம்பெயர்ந்த அனுபவங்கள்போல் சிதைந்து நாவல், சிறுகதை என உருமாறாது, கற்பனை கலக்காமல் அபுனைவாக தமிழ் இலக்கியப்பரப்பிற்கு வரவாகியுள்ளது.இதனால் இது நமது புலப்பெயர்ந்தோரது இலக்கியத்தில் முக்கியமான ஒரு இடத்தை பிடித்துள்ளது. வாசிப்பதற்கான அவகாசத்தைத்தேடிப் பல காலங்களாக அடைகாத்து வைத்திருந்தேன்.கடைசியில் அது கை கூடியது. நிட்சயமாக ஒரு டாக்சி ஓட்டினராக அவர் முகம் கொடுத்த அனுபவங்கள் பலதரப்பட்டவை. டாக்சி ஓட்டினராகப் பலரோடு பல தருணங்களில் ஏற்படும் சம்பவங்கள் மற்றவர்களுக்கு எக்காலத்திலும் ஏற்படாது. அதிலும்…
-
நகரமயமாக்கலும் சூழல் மாசுபடலும் .
சுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள் நடேசன் பெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள் உருவாகின்றன. அவற்றிற்கு நகர நிர்வாகங்கள் முகம் கொடுக்க தயாரற்ற நிலையில் அந்த நகரங்கள் சிதைந்து விடுகின்றன. பிற்காலத்தில் அப்படியான இடங்களில் இருந்து மக்கள் வெளியேறுவார்கள். 16 ஆம் நூற்றாண்டில் உலகத்தில் மூன்று பெரும் நகரங்களில் மூன்று இலட்சம் மக்கள் வாழ்ந்தமை பற்றி அறிந்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. அவை பீக்கிங், கெய்ரோ மற்றையது மெக்சிகோவில் அஸ்ரெக்…