Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இடக்கை ( நாவல்)

    படித்தோம் சொல்கின்றோம்: முருகபூபதி 17 ஆம் நூற்றாண்டில் நீதி மறுக்கப்பட்டவர்களின் வரலாற்றை சமகால வரலாற்றுடன் ஒப்பீடு செய்யத்தக்க புதினம் சமகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் படித்திருப்பதுடன், உலக இலக்கியப்பேருரைகளும் காணொளிக்காட்சியாக பார்த்து ரசித்து வியந்துமிருக்கின்றேன். எனக்குப்பிடித்தமான எழுத்தாளர்களை நேரில் சென்று பார்த்துப்பேசுவதும் எனது இயல்பு. அந்தவகையில் எஸ்.ரா. அவர்களை இரண்டு தடவைகள் சென்னையில் அவர் வசிக்கும் சாலிக்கிராமத்திற்கே சென்று பார்த்திருக்கின்றேன். அவரது அன்பான உபசரிப்பில் திளைத்திருக்கின்றேன். அவ்வப்போது அவரது…

    noelnadesan

    07/12/2017
    Uncategorized
  • சிட்னி கலை – இலக்கியம் 2017-மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டு

    சிட்னி கலை – இலக்கியம் 2017 நிகழ்வில் மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டும் கௌரவமும் சிட்னியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடந்த கலை – இலக்கியம் 2017 நிகழ்வில் தமிழகத்தின் மூத்த படைப்பாளி கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் அவர்களும் இலங்கையின் மூத்த படைப்பாளி சமூகப்பணியாளர் ‘செங்கதிரோன்’ த. கோபாலகிருஸ்ணன் அவர்களும் பாராட்டி கௌரவிக்கபட்டார்கள். அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிட்னியில் Black town இல் அமைந்துள்ள பல்தேசிய கலாசார மண்டபத்தில் சங்கத்தின் நடப்பாண்டு நிதிச்செயலாளர்…

    noelnadesan

    02/12/2017
    Uncategorized
  • கவிஞர் வைதீஸ்வரனின் ஆளுமைப்பண்புகள்.

    கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித்தூக்க முயன்றவரின் படைப்பாக்கத்தின் ஆச்சரியங்கள் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் வைதீஸ்வரனின் ஆளுமைப்பண்புகள் முருகபூபதி ” கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு. நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கிவிடு. மணக்கும் அவள் உடலை மணல் மீது தோயவிடு. நடுக்கும் ஒளியுடலை நாணல்கொண்டு போர்த்திவிடு.” — இந்த வரிகளுடன் தொடங்கும் கிணற்றில் விழுந்த நிலவு கவிதையுடன் 1960 ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னரே முத்தாரம் என்னும் சிறுகதையுடன் 1957 இலேயே இலக்கிய…

    noelnadesan

    29/11/2017
    Uncategorized
  • நாவல்:பெருமாள் முருகன் எழுதிய பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை.

    நூல் அறிமுகம் : நடேசன் பெருமாள் முருகன் தனது முன்னுரையில் தான் அறிந்த ஐந்து விலங்குகளில் மாடுகளை பன்றிகளை பற்றி எழுதமுடியாது. நாய்களும் பூனைகளும் கவிதைக்கானவை என்கிறார். வெள்ளாடுகள் சுறுசுறுப்பானவை என்பதால் அவற்றை வைத்து நாவல் எழுதியிருக்கிறார். தெய்வங்களைப்பற்றி எழுத பேரச்சம் எனவே அசுரர்களை பற்றி எழுதுகிறேன் என்கிறார். இப்படி அவர் எழுதிய நாவல் புனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை . கோகுல் எழுதிய ஓவர்கோட்டை(Gogol’s ‘Overcoat’)ஆவிகளின் கதை என்றால் பெருமாள் முருகன் எழுதியது ஆடுகளின்…

    noelnadesan

    20/11/2017
    Uncategorized
  • ”நைல் நதிக்கரையோரம்

    சாந்தி சிவகுமாரின் வாசிப்பனுபவம் ”நைல் நதிக்கரையோரம்” நான் படித்த முதல் பயணநூல். அதனால், எந்த அனுமானங்களும், எதிர்பார்ப்புகளுமின்றி படிக்க துவங்கினேன். முதல் இரண்டு அத்தியாயங்கள் பயணநூல் போன்று இருக்கலாம். அதன் பின் உள்ள அத்தியாயங்களை படிக்கும்பொழுது வரலாற்று நூலை படிப்பதை போலத்தான் உணர்ந்தேன். முதல் அத்தியாயத்தில் முதல் வரியை அவர் தொடங்கியுள்ள விதம் பலருக்கு அதிர்ச்சியாகவும், சிலருக்கு வியப்பாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு மருத்துவர் எனும் முத்திரையாகவே நான் அதை பார்க்கிறேன். மருத்துவர் என்பதை கடந்து ஓர்…

    noelnadesan

    20/11/2017
    Uncategorized
  • ஜுலி.

    சிறுகதை நடேசன் அது ஒரு நட்சத்திர ஹோட்டல் அறை. அங்குள்ள ஒரே டபிள் பெட்டில் படுத்திருக்கிறேன். குளிர்சாதன இயந்திரம் குளிர்ந்த காற்றை அள்ளித் தாராளமாக வீசிக்கொண்டிருக்கிறது. நான் விழித்தபடி யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாரோ பெண்ணொருத்திக்கான காத்திருப்பாக இருக்கலாம். நிச்சயமாகத் தெரியவில்லை. மனதில் அங்கலாய்ப்பு இருந்தது. அதிக நேரம் காத்திருக்கவில்லை. எதிர்பார்த்ததுபோல கதவைத் திறந்தபடி அழகான ஐரோப்பிய பெண் ஒருத்தி உள்ளே வருகிறாள். அவளது உடலில் இருந்து வந்த வாசனை அறையெங்கும் நிறைக்கிறது. காற்றில் மெதுவாக அசையும்…

    noelnadesan

    13/11/2017
    Uncategorized
  • இலக்கியவாதி ‘செங்கதிரோன்’ கோபாலகிருஸ்ணன்

    கிழக்கிலங்கையிலிருந்து அயர்ச்சியின்றி இயங்கும் இலக்கியவாதி ‘செங்கதிரோன்’ கோபாலகிருஸ்ணன் முருகபூபதி ‘புதிர்’ என்னும் சொல்லுக்கு, எமது தமிழர் வாழ்வில் இரண்டு அர்த்தங்கள். ஒன்று அறிவுபூர்வமாக புரிந்துகொள்ளவோ, விளக்கிக்கூறவோ முடியாத மர்மம் (Mystery). மற்றது வயலில் அறுவடை முடிந்ததும் முதலில் பெறப்படும் நெல் (Newly harvested paddy). இலக்கியவாதி ‘செங்கதிரோன்’ கோபாலகிருஸ்ணன் இந்த இரண்டு அர்த்தங்களும் கலந்த வாழ்வின் விழுமியங்களை சந்தித்திருக்கும் இலக்கிய நண்பராகவே செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்களை இனம்காண்கின்றேன். இவருடைய அண்மைய வெளியீடு விளைச்சல் (குறுங்காவியம்) நூலின்…

    noelnadesan

    12/11/2017
    Uncategorized
  • மீள்வாசிப்பில் எஸ்.பொ.வின் சடங்கு.

    நடேசன் ஈழத் தமிழ் உலகில் எஸ்.பொ. வின் சடங்கு வித்தியாசமான நாவல் மட்டுமல்ல, அகண்ட தமிழ் இலக்கியப்பரப்பில் தனித்து நிற்கக்கூடியது. தமிழ்நாவல்களில் குறியீட்டுத்தன்மையால் சடங்கு முன்னுதாரணமாகிறது. கதை மூன்று முக்கிய பாத்திரங்களை மட்டும் கொண்டு சொல்லப்படுகிறது. அதிலும் மூன்றாவது மனிதனாக கதை சொல்லத்தொடங்கி செந்தில்நாதனின் அகக்குரலை மட்டும் பிரதானமாக வைத்து எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் வெர்ஜினியா வுல்ஃப் ஒரே நாளில் நடப்பதாக எழுதிய (Mrs Dalloway)போன்று மனச்சாட்சியின் குரலாக (stream of consciousness)) கொண்டு செல்லும் மொடனிஸ்ட் நாவல்.…

    noelnadesan

    10/11/2017
    Uncategorized
  • 60 வருடத்தில் பல முறை பிறந்தவர்..

    நடேசன் அவருக்கு அண்மையில் 60 வயது பிறந்துவிட்டது. பிடல் காஸ்ரோவுக்கு அடுத்து நான் அறிந்தமட்டில், அதிக கொலை அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பவர் அவர். தொடர்ச்சியான அச்சுறுத்தலிலிருந்து தப்பி அறுபது வயதை அடைந்திருப்பது மிகவும் பெரிய சாதனைதான். நீரில் கண்டம் நிலத்தில் கண்டம் என சோதிடர்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன். ஆனால், பாக்குநீரிணை, வெலிக்கடை, களுத்துறை என அடுத்தடுத்து கண்டங்களிலிருந்து தப்பி வந்தவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதமுடியும். அவர்தான் டக்ளஸ் தேவானந்தா. அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன் என்பதனால் அவருக்கு…

    noelnadesan

    10/11/2017
    Uncategorized
  • இலக்கியச்சந்திப்பு

    அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (Karobran Drive, Vermont South, Victoria 3133) மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும். கருத்துரை இலங்கையிலிருந்து வருகைதந்துள்ள எழுத்தாளரும் சமூகப்பணியாளரும் செங்கதிர் கலை, இலக்கிய இதழின் ஆசிரியருமான திரு. ‘செங்கதிரோன்’ த. கோபாலகிருஷ்ணன் “கிழக்கிலங்கை கலை, இலக்கியச் செல்நெறி” என்னும் தலைப்பில் உரையாற்றுவார். அதனைத்தொடர்ந்து அவருடனான கலந்துரையாடல் இடம்பெறும்.…

    noelnadesan

    05/11/2017
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 88 89 90 91 92 … 163
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar