Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • உன்னையே மயல் கொண்டால் -பாகம் பன்னிரண்டு

      “உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். உண்மையை சொல்ல வேண்டும். என்னைக் கல்யாணம் செய்வதற்கு முன்பு யாரையாவது காதலித்தீர்களா? “ சந்திரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘இரு வருடங்களில் கேட்காத கேள்வியை கேட்கிறாளே!  யாராவது அவளிடம் சொல்லி விட்டார்களா? இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழும் ஏரியா தான் ஓபன். சோபாவோ பெற்றோரோ மற்றவர்களோடு பேசிப் பழகுவது குறைவு. தாங்களும் தங்கள் குடும்பமும் என வாழ்பவர்கள் இவர்கள். பாடசாலையில் ஒன்றாக படித்தவர்களை தவிர மற்றவர்களை தெரியாது. ஏன்இப்படி தனியாக இருக்கிறார்கள்…

    noelnadesan

    01/06/2018
    Uncategorized
  • உன்னையே மயல் கொண்டு-பாகம் பதினொன்று

    சோபா காலையில் படுக்கையில் இருந்தபடி தனது கடந்த காலத்தை இரை மீட்டுக் கொணடிருந்தாள். எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளபோது நினைக்க கூடியது கடந்தகாலம் மட்டும்தானே. எதிர்காலம் இல்லாத முதியவர்கள் மட்டும் தான் கடந்த காலத்தை நினைப்பார்கள். பதினெட்டு வயதில் திருமணமாகி பத்தொன்பது வயதில் குழந்தையைப் பெற்று இருபதாவது வயதில் கடந்த காலத்தில் மிதப்பவளின் மனோநிலையை என்னவென்று சொல்வது? “தங்கச்சி இந்தா கோப்பி” என்று கையில் கொடுத்தார் இராசநாயகம். கையை நீட்டி மெதுவாக வாங்கியவள் தகப்பனின் முகத்தை பார்க்க வில்லை.…

    noelnadesan

    26/05/2018
    Uncategorized
  • மச்சுபிச்சு

    என் வாழ்க்கையில் இவ்வளவு அழகானது மட்டுமல்ல, வரவேற்று உபசரிப்பும் கொண்ட இரயிலைக் கண்டதில்லை. வர்ணிக்க விரும்பினால் வார்த்தைகளுக்குப் பஞ்சம் ஏற்படும். காலை நேரத்தில் இன்கா தலைநகரானன குஸ்காவில்இருந்து மச்சுப்பிச்சு செல்வதற்காக நாங்கள் ஏறிய சொகுசு இரயில் மச்சுபிசுவைக் கண்டறிந்த ஹரன் பிங்கம் என்ற ஜேல் பல்கலைக்கழகப் சரித்திரப் பேராசிரியரின் பெயரில் பெரு அரசால் நடத்தப்படுகிறது. அரசாங்கத்தின் சேவைகளும்நேர்த்தியாக நடத்த முடியும் என்பதற்கு இந்த இரயில் உதாரணமாக இருந்தது. மிகவும் வசதியான நாற்காலிகள் மேசைகள்அதன் மேல் மேசை விரிப்புகள்…

    noelnadesan

    21/05/2018
    Uncategorized
  • ” எழுத்துச்சித்தர் “பாலகுமாரன் நினைவுகள்

    அஞ்சலிக்குறிப்பு: முருகபூபதி ” என்னுடைய கன்டென்ட் கஷ்டமானது, அதனால் நடையும் அப்படித்தான் இருக்கும். ” என்று சொல்லும் பாலகுமாரன், வித்தியாசமாக எழுதுகின்ற எழுத்தாளர் வரிசையில் முதன்மையானவரும் முக்கியமானவருமாவார். ஆரம்பத்தில் கணையாழியில் எழுத ஆரம்பித்த இவர், பின்னர் சாவி, மோனா, தாய், ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பரவலான சஞ்சிகைகளில் தனது வீரியமான கதைகளை விதைக்கத்தொடங்கினார். ஜிகினா வேலைசெய்து வாசகரை ஏமாற்றி இருட்டுக்கு இட்டுச்செல்லும் சில கதாசிரியர்கள் செய்யும் வேலையைச்செய்யாது, யதார்த்தங்களை அப்படியே சாயம் பூசாமல், மனதால் மட்டுமே எழுதிக்காட்டுபவர்…

    noelnadesan

    16/05/2018
    Uncategorized
  • Memories of late K.G Amaradasa -an Ardent Tamil Literary Lover &Advocate for National Unity

    Written By: L. Murugapoopathy, Australia “Some might say that if a Sinhala man marries a Tamil woman or a Tamil man marries a Sinhala woman, then national unity will be born. I don’t think so. If people of different ethnic origin get married, only the children would be born as a natural consequence” quipped Ven.…

    noelnadesan

    12/05/2018
    Uncategorized
  • உன்னையே மயல் கொண்டால்- பாகம் பத்து

    ஜுலியாவின் கதை “நான் விவசாய குடும்பத்தில் பிறந்தேன். எங்கள் பண்ணையில் பால் மாடுகளும், செம்மறி ஆடுகளும் வளர்த்தோம். பெற்றோருக்கு பண்ணையில் வேலை செய்யவே நேரம் போதாது. நாங்களும் பண்ணை மிருகம் போல வளர்ந்தோம். இரண்டாம் உலகப்போரில் கலந்துவிட்டு வந்த தந்தையின் கவனம் முழுவதும் பண்ணைமீது இருந்தது. போர்க்காலத்தில் பராமரிப்பு குறைந்து பண்ணை நல்லநிலையில் இருக்கவில்லை. மாடுகள் செம்மறியாடுகள் என வாங்கி பண்ணையை பெருக்கினார். பின்னர் பண்ணையில் மாடுகள் கன்று போடுதல் பால் கறத்தல் என்று வேலைகள் உண்டு.…

    noelnadesan

    12/05/2018
    Uncategorized
  • பேராசிரியர் துரை மனோகரனது பத்தி -ஞானம்.

    சாதாரணமானவர்களது அரசியல் கூற்றை நான் கடந்து போவேன். ஆனால் பேராசிரியர் துரை மனோகரனைக் கடந்துபோக முடியவில்லை . முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மீண்டும் போட்டியிட்ட நினைப்பது வயிற்றில் பால்வார்ப்பது போன்று பத்தி ஒன்று ஞானத்தில் எழுதியிருக்கிறார். அதில் பல இடங்களை ஆசிரியர் எழுத்தைத் தடித்த எழுத்தாக்கியிருக்கிறார் (Bold) பத்திரிகையில் சில விடயங்களைத் தடிப்பாக்கும்போது அது பிரசாரமாகிறது. ஞானம் ஆசிரியர் சிலரது கூற்றை ஆதரிக்கிறார் என்பது கருத்தாகிறது. அரசியலில் ஒரு பகுதியை பிரச்சாரம் செய்வதாகிறது. ஆசியர் தனது ஆசிரியதலையங்கமாக இருந்தால்…

    noelnadesan

    09/05/2018
    Uncategorized
  • சொல்லத்தவறிய கதைகள்- அங்கம் 16

    மூன்று தலைமுறையாக இலங்கை அரசியலில் ஒலிக்கும் இரண்டு எழுத்துக்கள் நூற்றுக்கணக்கான மலர் மாலைகள் மண்ணில் சருகாகின! 65 பவுண் தங்கமாலைக்கு என்ன நேர்ந்தது….? முருகபூபதி 1965 ஆம் ஆண்டு. எனக்கு 14 வயதிருக்கும். அந்த ஆண்டு இலங்கையில் நடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றது. அந்த அரசில் டட்லி சேனாநாயக்கா பிரதமரானார். தமிழரசுக்கட்சியும் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சியும் அந்த அரசுக்கு ஆதரவு அளித்தன. இவ்வாறு அன்றும் ஒரு நல்லிணக்க ஆட்சி வந்தது! டட்லி, இக்கட்சித் தலைவர்களிடம்…

    noelnadesan

    07/05/2018
    Uncategorized
  • இன்காவின் புனிதப்பள்ளத்தாக்கு

    ஒலயன்தம்போ நகரம் சோவியத் சாம்ராச்சியம் தானாக உள்ளக உடைவால் அழிந்தது போன்றது. அது போன்றது ஒரு இலட்சம் படையினரை வைத்திருந்த இன்கா சாம்ராட்சியம் 180 ஸ்பானிய படையினருக்கும் அவர்களது 62 குதிரைகளுக்கும் பணிந்தது இராச்சியத்தைப் பறிகொடுத்தது. பல திருப்பங்கள் கொண்ட மெகா சீரியல் போன்று சுவாரசியமான கதை.இதில் ஸ்பானியர்கள் பங்கு மிகவும் சிறிதே. எப்படி நடந்தது? புனித பள்ளத்தாக்கு எனப்படும் பகுதி கொஸ்கோ நகருக்கு ஆடுத்துள்ள பள்ளத்தாக்கு இந்தப் பகுதியாலே மச்சுப்பிச்வுக்கு வாகனத்தில் செல்லவேண்டும். இப்பகுதியில் இன்காவின்…

    noelnadesan

    06/05/2018
    Uncategorized
  • உன்னையே மயல் கொண்டால்- பாகம் ஒன்பது

      காலை பத்துமணிக்கு குனிந்தபடி ஏதோ எழுதிக் கொண்டிருந்தான் சந்திரன். சிண்டி பக்கதில் வந்து நிற்பதை உணர்ந்து திரும்பாமல் “ஹலோ சிண்டி எப்படி இருக்கிறாய்?” அவளது கை இப்போது அவனது தோளில் இருந்தது. எழுதியதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். சிண்டியின் தலைமயிர் அரைவாசி பின்தோளிலும் மற்றப்பாதி நெஞ்சிலும் கிடந்தது. “என்ன சிண்டி,  இதுதான் பாஸ்சனா? “ “சட்அப்!. உங்களுக்கு தெரியுமா தலைமயிரை கழுவி காய வைக்க நான் எவ்வளவு கஸ்டப்படுகிறேன் உங்களுக்கு பிரச்சனை இல்லை” என சந்திரனின்…

    noelnadesan

    04/05/2018
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 82 83 84 85 86 … 163
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 103 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar