-
அஞ்சலிக்குறிப்பு: யுகமாயினி சித்தன்
யுகமாயினி சித்தன் நினைவுகள் முருகபூபதி “பல மொழிகளிலும் ஒருவரது படைப்பு மொழிபெயர்க்கப்பட்டு நூலுருவில் வெளியாவதும் ஒரு வகையில் படைப்பாளிக்கு கிட்டும் அங்கீகாரம்.” எனச்சொன்னார் நாமக்கல் கு. சின்னப்பபாரதி. என்னருகில் அமர்ந்திருந்த யுகமாயினி சித்தன் உடனே அதனை மறுத்துரைத்தார். “மொழிபெயர்ப்பில் ஒரு நாவல் வெளியானால் அதனை இலக்கிய அங்கீகாரம் என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு நாவல் சர்வதேச தரத்தில் எழுதப்பட்டால் மாத்திரமே அதற்கு அங்கீகாரம் தரமுடியும். ஒரு நாவல் இந்திய மொழிகளிலும் அய்ரோப்பிய மொழிகளிலும்…
-
மெல்பனில் நடந்த 18 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா
இரண்டு அரங்கங்களில் நடந்தேறிய நிகழ்வுகள் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வான தமிழ் எழுத்தாளர் விழா நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் மெல்பனில், Keysborough Secondary College மண்டபத்தில் நடந்த இவ்விழா மண்டபத்தின் வெளியரங்கில் இடம்பெற்ற கண்காட்சிகளுடன் தொடங்கியது. பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த தென்கிழக்காசிய நாடுகளின் அமைப்புகளின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மருத்துவர் சாபாஷ் சவுத்ரி கண்காட்சிகளை திறந்துவைத்தார்.…
-
நவீன இந்திய நாவல்கள்-என் பார்வை.
நடேசன் (அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2018 இல், இடம்பெற்ற நாவல் இலக்கிய அரங்கில் சமர்ப்பித்த கட்டுரை) நீலகண்டப்பறவையைத்தேடி – வங்காளம் ஹோமரின் இலியட் மற்றும் ஓடிசியையும் சேர்த்து பார்த்ததை விட பத்து மடங்கு பெரியது மகாபாரதம். காவியங்கள் தோன்றி காலங்கள் சரியாக கணக்கிட முடியாத போதிலும் புராதன இலக்கிய பாரம்பரியத்தின் உரிமையாளர்களைக் கொண்டது அக்காலப் பாரதம், இக்காலத் தென்னாசியா. மிருகங்களை பாத்திரமாக்கிய ஐதீகக் கதைகள் இங்கேயே தோன்றின. அதன் தொடர்ச்சியாகவே உலகெங்கிலும் மிருகங்களைக்…
-
அந்த ஆறு மாதங்கள்
அறுபத்து மூன்று வயதில் இளைப்பாறினேன்.இனிமேல் செய்வதற்கு பெரிதாக எதுவுமில்லையே! கடந்தகால விடயங்ளை மட்டும் இரை மீட்க முடியும். அதற்கு மேல் என்ன செய்ய முடியும் ? பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் முகநூல் பொழுதுபோக்கு என்ற விடயங்கள் மட்டுமே முடிந்தவை. மெல்பனின் குளிர் நாளொன்றில் ஓய்வுபெற்றேன். வெளியே உள்ள குளிரும் போர்வைக்குள் சூடும் உடலைத் தழுவியதால் சோம்பலாக படுக்கையில் இருந்து எழும்ப முடியவில்லை. விலகிய யன்னல் திரையூடாக வந்த பொன்னிற சூரியஒளி விடிந்து அதிக நேரமாகிவிட்டதை செய்தியாகச் சொல்லியது.…
-
தென்னிந்திய நினைவுகள்: 9 உண்மைகள் இரண்டு
The day we see the truth and cease to speak is the day we begin to die -Martin Luther King Jr நானும் விசாகனும் பாண்டிபஜாரில் இருந்த காலத்தில் நடந்த ஒரு விடயம் மனதை பலகாலமாக நெருடிக்கொண்டிருந்தது. ஏன் இன்னமும் அந்த விடயம் என்னைப் பாதிக்கிறது? அது ஒரு சகோதரனை பறிகொடுத்த தொடரும் சோகத்தின் நிழல். ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவரான பத்மநாபவை பொறுத்தவரை, நாம் அவரை இரஞ்சன்…
-
மெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி
ரஸஞானி மெல்பனில் வதியும் ஓவியர் மொஹம்மட் நஸீர் அவர்கள் நீண்டகாலமாக ஓவியத்துறையில் ஈடுபட்டுவரும் கலைஞர். இவர் யாழ்ப்பாணத்தில் 1955 ஆம் ஆண்டு காலத்தில் நகரபிதாவாக ( மேயர்) பதவியிலிருந்த (அமரர்) எம்.எம். சுல்தான் அவர்களின் புதல்வராவார். இவருடைய தாய் மாமனார்தான் இலங்கையின் மூத்த தமிழ் அறிஞரும் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபரும் செனட்சபை உறுப்பினருமான ( அமரர்) ஏ. அஸீஸ் அவர்கள். இவ்வாறு புகழ்பூத்த குடும்பத்திலிருந்து வந்திருக்கும் ஓவியர் நஸீர் யாழ்ப்பாணத்தில் மத்திய கல்லூரியில் பயின்ற…
-
தென்னிந்திய-நினைவுகள்8; தமிழர் மருத்துவ நிலையம்
1984 சித்திரை மாதத்தில் நான் இந்தியாவுக்கு சென்றிருந்த காலத்தில் (ENLF)எனறொரு அரசியல் கூட்டணி அக்காலத்து ஆயுத இயக்கங்களான தமிழ் ஈழவிடுதலை இயக்கம்(TELO) ஈழப்புரட்சிகர முன்னணி (EROS)மற்றும் ஈழமக்கள் புரட்சிகரமுன்னணி(EPRLF) ஆகிய மூன்றிற்கும் இடையே உருவாகியிருந்தது. இந்தக்கூட்டணியின் தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் கருணாநிதியை சந்தித்து படமெடுத்துக்கொண்டனர். இந்தப் படம் தமிழக பத்திரிகைகள் யாவற்றிலும் பிரசுரமாகியிருந்தது.இந்த நிகழ்வு அக்காலத்தில் பலருக்கும் மகிழ்வைக் கொடுத்தது. எனினும் இந்த நிகழ்வையிட்டு கவலை கொண்டவர்களையும் ஓன்று சேர்க்க உதவியது. அத்துடன் இந்தக் கூட்டணியினர்…
-
தென்னிந்திய-நினைவுகள்7; இந்திரா காந்தியற்ற ஈழவிடுதலை
யாழ்ப்பணத்தில் திருக்குடும்ப கன்னியர் மடத்தினரது வைத்தியசாலையில் மனைவி வேலை செய்து கொண்டிருந்தபொழுது அங்கேயே 1984 ஜுன் மாதம் 18 ஆம் திகதி எனது மகள் யாழ்ப்பாணத்தில் பிறந்ததும் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுந்தது. தொடர்ச்சியாக குண்டுகள் யாழ்ப்பாணத்தில் வெடித்துக் கொண்டிருந்தது. வேலை செய்யும் வைத்தியசாலைக்கு அருகிலும் அக்காலத்தில் குருநகர் இராணுவ முகாம் இருந்தது. எனது ஆலோசனைப்படி மனைவியும் இந்தியா வரத்தயாரானார் இந்தக்காலத்தில் சென்னையில் எனக்கும் எதிர்காலம் விடையில்லாத வினாவாக நீடித்து இருந்தது. அடுத்து என்ன செய்வது…?…
-
தென்னிந்திய நினைவுகள் 6 ; நாளையை நாளை பார்ப்போம்
சென்னையில் நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் நிறைந்த பாண்டிபஸாரில் நான்கு மாடிக்கட்டிடம். அதன் கீழ்ப்பகுதியில் கல்யாணமண்டபம் மேல்பகுதிகளில் சிறிய அறைகள் வாடகைக்கு விட்டிருந்தார்கள். ஆண்கள் மட்டும் இருப்பதற்காக அமைந்தவை. இரவு நடுநிசி வரையும் ஜனநடமாட்டமான பிரதேசமானதால் நாங்களும் பம்பலாக இருந்தோம். நண்பர் விசாகனுடன் சேர்ந்து இருந்த காலம் சில மாதங்களே ஆனாலும் சுவாரஸ்யமானது. விசாகன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படித்தவர். திருமணமாகி மனைவியையும் குழந்தையையும் பிரிந்து என்னைப்போல் வந்திருந்ததால் எனக்கு அவருடன் இணக்கமாக இருக்க முடிந்தது. அவர் நகைச்சுவை உணர்வுடன் அரசியலும்…
-
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து அற்பாயுளில் மறைந்த நல்லிணக்கத் தூதுவர்
யாழ்ப்பாணத்தில் விஜயகுமாரணதுங்க – கிட்டு – ரஹீம் சந்திப்பு http://ilakkiyainfo.com/1986-இல்-சந்திரிக்காவின்-கணவ/ இன்று விஜயகுமரணதுங்கவின் ( 1945 – 1988) பிறந்த தினம் முருகபூபதி இந்திரா பார்த்தசாரதி எழுதிய சுதந்திரபூமி நாவலை படித்திருக்கிறீர்களா? இந்திய அரசியலை அங்கதச் சுவையோடு எழுதிய இந்த நாவலில் வரும் முகுந்தன் என்ற பாத்திரம் முழுமையான சித்திரிப்பு. மத்திய அரசில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவரின் வீட்டுக்கு காப்பி தயாரிக்கும் வேலைக்காரனாக வரும் முகுந்தன், படிப்படியாக அங்குவரும் அரசியல் தலைவர்களின் நன்மதிப்பையும் பெற்று பின்னாளில்…