-
கானல்தேசம் “ நாவல் வௌியீட்டரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பு.
சென்னையில் ஜனவரி 13 ஹீக்கின் போதம்ஸ் ரைட்டர்ஸ் கபேயில் காலை 10 மணிக்கு சந்திப்பு நடந்த நடேசனின் “கானல்தேசம் “ நாவல் வௌியீட்டரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பு எழுத்தாளர் மோகனரங்கன் : நடந்து முடிந்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஈழத்தில் நடந்த போரை நாங்கள் ஒரே பக்கத்தில் உணர்வு பூர்வமாக பார்த்தபடி இருக்கிறோம். ஆனால், வரலாற்றில் இருந்து நாம் ஏதாவது கற்றுக் கொள்ளவேண்டும். போரில் எல்லாத்தரப்புகளும் இழந்துள்ளார்கள் போர் மனிதகுலத்திற்கே இழப்பாகும். ஒரு பகுதியினர் ஜெயித்தவர்கள் என்று…
-
நொயல் நடேசனின் ‘’கானல் தேசம்’’— காகிதங்களால் ஆன ஒரு ‘’மல்ரிபரல்’’
ஆர் எம் நௌஸாத்( தீரன்) சமீபத்திய வரவுகளுள் கானல் தேசம் பெற்ற கவனயீர்ப்பு பெரிது… கர்ப்பிணியை தற்கொடை போராளியாக்கிய சம்பவச் சித்தரிப்பில்தான் பலரதும் கவனம் குவிக்கப்பட்டிருந்தது…இதனால் கானல்தேசம் கொண்டிருந்த மையக் கரு மறைக்கப்பட்டு விட்டது.. நடேசன் தன புதினத்தில் வார்த்திருந்த பாத்திரங்களின் குணவியல்புகளும் சித்தரிப்புகளும் பேசப்படாமல் போய்விட்டன .. புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வாழ்வியல் அவலங்களும் … போராளிகளுக்குள்ளேயே உளவு பார்க்கும் சக போராளிகளின் மீதான அச்ச உணர்வுகளும் .. போராளிகளுக்குள் கிளர்ந்த காம உணர்வுகளும்……
-
முனைவரும் கவிஞருமாகிய தமிழச்சி தங்கபாண்டியன்
முனைவரும் கவிஞருமாகிய தமிழச்சி தங்கபாண்டியனை இங்கு உங்களுக்க அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மறைந்த ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை அவர்களால் 14 வருடங்களுக்கு முன்பாக எனக்கு சிட்னியில் அறிமுகமான பின்பு நெஞ்சுக் அருகில் உறவாகியவர் அவர் மட்டுமல்ல அவரது டிஐஜி கணவர் சந்திரசேகரன் குழந்தைகளும் உறவாகினார்கள். சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர். விருதுநகரில்ஆரம்பக்கல்வியையும் மதுரையில் கல்லூரிப்படிப்பையும் நிறைவுசெய்துகொண்ட சுமதி இளம் வயதிலிருந்தே கலை இலக்கியஆர்வலராகவும் சமூகச்செயற்பாட்டாளராகவும் வளர்ந்தவர். கவிதை விமர்சனம்…
-
பேராசிரியர் நுஃமானின் சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்.
புனைவை வாசிக்கும்போது தனிமனிதர்களையும் அபுனைவுகளை வாசிக்கும்போது சமூகத்தையும் புரிந்துகொள்ள முடியும் என்பதாககேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பேராசிரியர் நுஃமானின் அபுனைவு எனக்குப் புனைவுகளைப் புரிய வைத்தது என்று சொல்லலாம். நான் இலக்கியத்தை முறையாகப் பயின்றவனில்லை. சுயம்புலிங்கமாகப் புரிந்துகொண்டவன் என்பதால் “சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்” என்ற பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் புத்தகம் தெளிவைக்கொடுத்தது. தமிழகத்திற்கு 84இல் முதல் முதலாக சென்ற நான், இராமேஸ்வரத்தில் இறங்கி அங்கும், அதன் பின்பு சென்னை சென்ற இரயிலிலும் கோட்டுப் போட்டஆண்களையும் பொன்னிறப் பெண்களையும் தேடி…
-
பயங்கரவாதத்தின் மன நிலை
நடேசன் சமீபத்தில் நியூசிலாந்து கிரைசேர்ச்சில்(Chiristchurch) ஐம்பது பேரை பள்ளிவாசலில் கொலை செய்த பிரன்ரன் ராறன்ட் (Brenton Tarrant) என்பவனின் அவுஸ்திரேலியரான தந்தை தனது சிறுவயதில் அஸ்பஸ்ரஸ்(Asbestos) தொழிற்சாலையில் வேலை செய்ததால் நோய் வந்து இறந்தார். தாய் பாடசாலை ஆசிரியை. இவர்கள் நியூ சவுத் வேல்ஸ்ஸை சேர்ந்த சிறு நகரமான கிராவ்ரன்(Grafton) என்ற ஊரில் வசித்தவர்கள். கிராவ்ரன், கிளரன்ஸ் ஆற்றருகே உள்ளது . இங்கு ஜக்கரண்டா மரம் பூக்கும் காலத்தில் திருவிழா நடக்கும். இந்த நகரத்தில் பிறந்து வளர்ந்த…
-
புலிகளின் அழிவுக்குக் காரணம் தேடிய பிரேத பரிசோதனை
டாக்டர் நடேசனின் நாவலான ‘கானல் தேசம்’ பற்றிய சிறு விமர்சனம். ( 1) இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-லண்டன் ‘கானல் தேசம்’ என்ற நாவல் தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்ற, பல பிரமாண்டமான எதிர்பார்ப்புகளுடன் ஆயுதம் தாங்கிய அற்புத அவதாரமாய்’ வளர்ந்த விடுதலைப் போராளிகளின் போராட்டம் என்னவென்று சட்டென்று அழிந்து சாம்பலானது என்பதை,ஒரு மருத்துவர் பல காயங்களுடன் இறந்துவிட்டவனின் உடலின் முக்கிய பகுதிகளை வெட்டியெடுத்து ஆராய்ந்து,அவனின் இறப்புக்குக் காரணங்களைத் தேடும் பிரேதப் பரிசோதனை செய்வதுபோல் டாக்டர் நடேசனால் ‘கானல் தேசம்’ என்ற…
-
முகவுரை மட்டும் வைத்து ஒரு மணிநேரம் பேசமுடிகிறதே!
சும்மா சொல்லக்கூடாது நம்மால முடியாத விடயம். சாகித்திய அக்கடமி பரிசு பெயற்ற நாவல்களுக்கே கிடைக்காத வாய்ப்பு. இதைப்பற்றி நான் யோசித்திருந்தால் நாய் பூனைக் கதைகளை எழுதாமல் பலவருடங்கள் முன்பாக எழுதியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
-
அறிமுகம் கானல் தேசம்
சுகு-ஸ்ரீதரன் கானல் தேசம் தமிழ் சமூகத்தில் பேசப்படுவதை விரும்பாத பிரச்சனைகளை கலை இலக்கிய வடிவத்திற்கு கொண்டு வருகிறது. பேசாப் பொருளைபேசத்துணிந்தது. தமிழ்போராட்டத்தின் அறஞ்சார் தராதரத்தை அது அலங்காரம் எதும் இல்லாமல் தனது இயல்பான ஓட்டத்தில் கேள்விக்குள்ளாக்குகிறது. போராட்டத்தின் பிரதான போக்கில் பொதிந்திருந்த சர்வதேச அளவிலான “மாபியாதனத்தை” மக்களின் பேரில் சேகரிக்கப்பட்ட உலகளாவிய நிதி எவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்பட்டது மற்றும் கருத்து சுதந்திர இடைவெளியை இல்லா தொழிப்பதில் ஊரிலும் உலகிலுமாக இருந்த மிருக வெறியையும், பிரக்ஞை பூர்வமாக போராட்டத்தில்…
-
நடேசனின் எக்சைல்
சுகு-ஸ்ரீதரன் திருநிலை- புனிதப்படுத்தப்பட்டவை மீதான தீவிரமான கேள்விகள் நடேசனின் எக்சைல் மற்றும் கானல் தேசம் இரண்டு நூல்களும் சமகால கவனத்திற்குரியன. படைப்பு சுதந்திரம் ஒரு சமூகத்தின் சுயவிசாரணை தொடர்பாக அவை முக்கியத்தும் வாய்ந்தன. எக்ஸைல் “முறிந்த பனை” 1990 களின் முற்பகுதியில் பரவலாக பேசப்பட்டது. அக்காலத்தில் அது தமிழ் “புனிதங்களை” பற்றி கேள்வி எழுப்பியதால் பூசிப்பவர்களின் கடும் சினத்திற்குள்ளானது. அதனை வாசிப்பவர்களும் அதனை வினியோகிப்பவர்களும் உயிராபத்தை எதிர் கொள்ளும் நிலை நிலவியது. இலங்கையின் எந்த தமிழ் புத்தக…
-
அறச்சீற்றமா? ஆற்றாமையா?
ஜெயமோகனுக்கு எதிராக ஈழத்தமிழர்கள் முக்கியமாக கவிஞர்களின் அறச்சீற்றம் ஆழிப் பேரலையென பொங்கியெழுந்ததைக் கண்டு பயந்து போய்விட்டேன் . 2004 மார்கழியை நினைவு படுத்தியது. ஐரோப்பாவில் இருந்து பெருந்தலை எனது பெயரையும் இழுத்து விட்டது. இது அடுக்குமா? ஒருவரின் நண்பனாக இருப்பது குற்றமா ? வேறொருவர் அல்லக்கை என ஒரு நக்கல். ஜெயமோகனது நண்பனாக இருப்பது மட்டும் நல்ல நாவல் எழுதுவதற்கு போதுமா என இலக்கியப் பெரும்தலை என்னை இழுத்துவிட்டிருந்தார். அதாவது கம்பன் வீட்டு கைத்தறி கணக்கில்.எனது நாவல்கள்…