-
Terrorists have No Religion and No Humanity
Statement Released by the Kandy Forum The Kandy Forum vehemently condemn the barbarous terrorist attacks simultaneously carried out across the country, in Colombo, Negombo, and Batticaloa targeting at churches and tourist hotels that killed nearly 350 and seriously wounded 500 innocent people on Easter Sunday (21.04.2019). We are shocked and surprised to know that the…
-
முரண் : கோமகன்.
மூன்று மாதங்கள் முன்பாக வெளிவந்த இந்த சிறுகதைத் தொகுப்பை உங்களுக்கு புலம்பெயர்ந்த இலக்கியத்தின் வடிவமாக நான் அறிமுகப்படுத்த விரும்புகிறேன் . அதற்கு முன்பாக ஒரு சிறிய கதையை உங்களுக்கு சொல்ல வேண்டும் . ஒரு விவசாயி ஒரு குரங்கை வளர்த்து வந்தான். அந்தக் குரங்கு அவனது விவசாய வேலைகளில் அனுமாராக பல உதவிகள் செய்தது .புராதன இலங்கையில் வாரத்தில் ஒரு நாள் இராஜகாரியம் செய்யவேண்டும். அதற்காக ஒரு வாரம் வெளியூர் சென்றபோது சமீபத்தில் ஏற்கனவே நட்ட மிளகாய்…
-
நடேசனின் கானல் தேசம் – இனப் போரின் அறியாத பக்கம்
எம்.கே.முருகானந்தன் நான் கனவிலும் நினைத்திருக்க முடியாத ஒரு காரியம் சாத்தியமாயிற்று. அவுஸ்திரேலியா, மலேசியா, தமிழ்நாடு, வடஇந்தியா என முற்றிலும் எதிர்பாராத ஒரு குறுகிய பயணம் சில நாட்களுக்குள் நடந்தேறியது. சாதாரண மக்களை மட்டுமின்றி, சில உயர் அதிகாரிகளையும் பிரமுகர்களையும் கூட சந்திக்க முடிந்தமை என் அதிர்ஸ்டம்தான். அதற்குள் சற்று சுவார்சியமான விடயமாக வெள்ளைக்காரி போல தோற்றமளித்த ஒரு இளம் பெண்ணின் கறுத்த முலைகளைக் பார்த்து அவள் ஒரு ஜிப்ஸிப் பெண் என்பதை உறுதிப்படுத்தவும் முடிந்தது. இவை யாவும்…
-
திரைப்படமாகாத திரைக்கதை வசனம்
தமிழ்த் திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைந்தாலும் அவரது நினைவு என் நெஞ்சில் நிரந்தரமாக இருக்கும். ஏன் தெரியுமா? திரைப்படமாகாத கதை வசனம்- வண்ணாத்திக்குளம். சென்னையிலிருந்து – எஸ்பொ போர் நிறுத்த காலத்தில் தொலைப்பேசியில் “உமது வண்ணாத்திக்குளம் நாவலைத் திரைப்படமாக எடுக்க இயக்குனர் மகேந்திரன் விரும்புகிறார். அவர்தான் முள்ளும் மலரை எடுத்தவர். என்றார். எனக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை. “அப்படியா? “ என வாய் கேட்டாலும் இதயம் நெஞ்சுக் கூட்டில் துள்ளி விளையாடியது. மதவாச்சியில் மிருக வைத்தியராக வேலை…
-
இயக்குநர் மகேந்திரனின் ” சினிமாவும் நானும்”
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ.வின் ‘மித்ர’ பதிப்பித்த நூல் முருகபூபதி ” நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை. என்றாலும்கூட எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படியிருக்கவேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானதில்லை, என் சமூகத்துக்கானதில்லை என்று அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியிலிருந்து உருவானதொரு கனவு. எனது திரைப்படங்கள் அதிலிருந்துதான் வரவாகின. இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இளைஞர்களின் கனவு அப்படிப்பட்ட கனவா? என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பிப்பார்த்துக்கொள்கிறேன்”…
-
நமது சமூகத்தில் துரோகத்தின் தேவை
நடேசன் விபீசணன் இராமனோடு சேர்ந்திராமல் இராவணனோடு, சகோதரன் என்ற ஒற்றுமையோடு போர் செய்து அழிந்திருந்தால் இலங்கைக்கும் மக்களுக்கும் என்ன நடத்திருக்கும் ..? என நாம் சிந்தித்திருக்கிறோமா ? இராமனோ அல்லது சேர்ந்து வந்த குரங்குகளோ இலங்கையை எரியூட்டிவிட்டுச் சென்றிருப்பார்கள் என நான் நினைக்கிறேன். ஒற்றுமையாக இருப்பது என்பது மிகவும் ஆதிகால மக்களின் கோட்பாடு . மிருகங்கள் மற்றும் பகைவர்களிடமிருந்து தங்களையும் குடும்பத்தையும் அல்லது இனக்குழுவையும் காப்பதற்கான ஒரு பாதுகாப்பு கவசம். இந்தக் கவசம் கிரேக்கத்தில் 2500 வருடங்கள்…
-
கானல்தேசம் “ நாவல் வௌியீட்டரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பு.
சென்னையில் ஜனவரி 13 ஹீக்கின் போதம்ஸ் ரைட்டர்ஸ் கபேயில் காலை 10 மணிக்கு சந்திப்பு நடந்த நடேசனின் “கானல்தேசம் “ நாவல் வௌியீட்டரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பு எழுத்தாளர் மோகனரங்கன் : நடந்து முடிந்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஈழத்தில் நடந்த போரை நாங்கள் ஒரே பக்கத்தில் உணர்வு பூர்வமாக பார்த்தபடி இருக்கிறோம். ஆனால், வரலாற்றில் இருந்து நாம் ஏதாவது கற்றுக் கொள்ளவேண்டும். போரில் எல்லாத்தரப்புகளும் இழந்துள்ளார்கள் போர் மனிதகுலத்திற்கே இழப்பாகும். ஒரு பகுதியினர் ஜெயித்தவர்கள் என்று…
-
நொயல் நடேசனின் ‘’கானல் தேசம்’’— காகிதங்களால் ஆன ஒரு ‘’மல்ரிபரல்’’
ஆர் எம் நௌஸாத்( தீரன்) சமீபத்திய வரவுகளுள் கானல் தேசம் பெற்ற கவனயீர்ப்பு பெரிது… கர்ப்பிணியை தற்கொடை போராளியாக்கிய சம்பவச் சித்தரிப்பில்தான் பலரதும் கவனம் குவிக்கப்பட்டிருந்தது…இதனால் கானல்தேசம் கொண்டிருந்த மையக் கரு மறைக்கப்பட்டு விட்டது.. நடேசன் தன புதினத்தில் வார்த்திருந்த பாத்திரங்களின் குணவியல்புகளும் சித்தரிப்புகளும் பேசப்படாமல் போய்விட்டன .. புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வாழ்வியல் அவலங்களும் … போராளிகளுக்குள்ளேயே உளவு பார்க்கும் சக போராளிகளின் மீதான அச்ச உணர்வுகளும் .. போராளிகளுக்குள் கிளர்ந்த காம உணர்வுகளும்……
-
முனைவரும் கவிஞருமாகிய தமிழச்சி தங்கபாண்டியன்
முனைவரும் கவிஞருமாகிய தமிழச்சி தங்கபாண்டியனை இங்கு உங்களுக்க அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மறைந்த ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை அவர்களால் 14 வருடங்களுக்கு முன்பாக எனக்கு சிட்னியில் அறிமுகமான பின்பு நெஞ்சுக் அருகில் உறவாகியவர் அவர் மட்டுமல்ல அவரது டிஐஜி கணவர் சந்திரசேகரன் குழந்தைகளும் உறவாகினார்கள். சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர். விருதுநகரில்ஆரம்பக்கல்வியையும் மதுரையில் கல்லூரிப்படிப்பையும் நிறைவுசெய்துகொண்ட சுமதி இளம் வயதிலிருந்தே கலை இலக்கியஆர்வலராகவும் சமூகச்செயற்பாட்டாளராகவும் வளர்ந்தவர். கவிதை விமர்சனம்…
-
பேராசிரியர் நுஃமானின் சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்.
புனைவை வாசிக்கும்போது தனிமனிதர்களையும் அபுனைவுகளை வாசிக்கும்போது சமூகத்தையும் புரிந்துகொள்ள முடியும் என்பதாககேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பேராசிரியர் நுஃமானின் அபுனைவு எனக்குப் புனைவுகளைப் புரிய வைத்தது என்று சொல்லலாம். நான் இலக்கியத்தை முறையாகப் பயின்றவனில்லை. சுயம்புலிங்கமாகப் புரிந்துகொண்டவன் என்பதால் “சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்” என்ற பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் புத்தகம் தெளிவைக்கொடுத்தது. தமிழகத்திற்கு 84இல் முதல் முதலாக சென்ற நான், இராமேஸ்வரத்தில் இறங்கி அங்கும், அதன் பின்பு சென்னை சென்ற இரயிலிலும் கோட்டுப் போட்டஆண்களையும் பொன்னிறப் பெண்களையும் தேடி…