Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • நாவல்: ஷோபா சக்தியின் “ இச்சா “

    நடேசன் நல்ல நாவலைப்படிக்கும்போது நமக்குள் ஒரு உருமாற்றம் (Metamorphosis) நடக்கிறது என்பார்கள் . அப்படியான ஒரு மாற்றத்தை சமீபத்தில் தோப்பில் முகம்மது மீரானது சாய்வு நாற்காலியையும் ஷோபா சக்தியின் இச்சா நாவலையும் வாசித்தபோது உணர்ந்தேன். இந்த உருமாற்றம் மனதில் நடக்கும் . எப்படி புரியவைக்கலாம்? நகரவீதிகளில் நடந்து கொண்டு போகும்போது திடீரென ஒரு பெரிய காட்டுக்குள் இருக்கிறீர்கள் என்றால் அப்பொழுது உங்களது மனதில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்திருக்கிறீர்களா? அதை அனுபவித்திருக்கிறீர்களா? அதுபோலவே . கிட்டத்தட்ட 18 மாதங்கள்…

    noelnadesan

    25/11/2019
    Uncategorized
  • இலங்கைத் தேர்தலில் வெளிப்பட்ட அச்சம்

    நடேசன் “ இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளைப்பற்றி என்ன நினைக்கிறாய் நடேசன் ?” எனக்கேட்டாள் பிரீதி அவளது கேள்விக்கு, “ இந்த முடிவையே நானும் எதிர்பார்த்தேன். அங்கு மாற்றம் வருதையே விரும்பினேன் “ என்றேன். “ அப்படியா ? “ “ நாங்களும் கோத்தாவிற்கே ஆதரவு. நாடு பாதுகாப்பாக இருக்கும். மக்களும் பாதுகாப்பபாக இருப்பார்கள் “ என்றார் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த டொக்டர் பிரீதி கருணாரத்தின. அதேபோல்; எனது நண்பி புஸ்பா மாத்தறையில் வசிப்பவள். அவளும்…

    noelnadesan

    20/11/2019
    Uncategorized
  • 4. கரையில் மோதும் நினைவலைகள் .

    இலங்கை சிட்னியியில் நியு சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நான் படித்த காலம் ஒரு வருடமே . ஆனாலும் புதிய இடம், கலாச்சாரம் என்பதால் அவை நினைவில் நீங்காதவையே. யாழ்ப்பாணத்தில் இந்துக்கல்லூரியின் விடுதி வாழ்க்கை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நினைவுகள் போல் பசுமையானவையல்ல. புலம்பெயர்ந்தபின் வாழ்வதற்கு புதிய அவுஸ்திரேலியப் பட்டம் தேவையாகவிருந்தது இலங்கையின் வடகரையில் எழுவைதீவென்ற சிறு தீவில் பிறந்து வளர்ந்து அமைதியாக ஏழாம் வகுப்பில் படித்த எனக்கு வங்கக் கடலில் மையங் கொண்ட புயலாக எனது தந்தையார் வந்தார்.…

    noelnadesan

    06/11/2019
    Uncategorized
  • நவீனகால மதியூகி சுமந்திரனுக்கு ஒரு கடிதம்.

    “Our decision (to support Sajith Premadasa) was made, based on who should be defeated and who should not win. Not for any other reasons.” – M. A. Sumanthiran, in Mannar, to the media, on November 4th. நடேசன் இராமாயணத்தில் வரும் பரதன் 14 வருடங்கள் இராமன் அமரவேண்டிய சிம்மாசனத்தில் அண்ணன் இராமனின் பாதுகையை வைத்து அரசாண்டான். அங்கும் ஆலோசகராக சுமந்திரன் என்ற மதியூகி…

    noelnadesan

    06/11/2019
    Uncategorized
  • நாவல்:தோப்பில் முகம்மது மீரானின் சாய்வுநாற்காலி.

    வாசிப்பு அனுபவம் நடேசன் தோப்பில் முகம்மது மீரான் எழுதிய சாகித்திய அக்கடமி விருது பெற்ற நாவல் சாய்வுநாற்காலியை அவரை நினைவு கூர்ந்து பேசுவதற்காக இரண்டாவது முறையாக வாசித்தேன். காதலித்தபோது தெரியாத பெண்ணின் பக்கங்களை பிற்காலத்தில் மனைவியாக்கியபின் புரிந்து கொள்வது போல் இருந்தது. முதல்முறை வாசித்தபோது கண்ணில்படாத பல புதிய தருணங்கள் அவிழ்ந்து அழகு காட்டியது. இம்முறை இலகுவாக நாவலின் புதிய இடுக்குகள், மடிப்புகளுக்குள் பயணிக்க முடிந்தது. தாத்தா குதிரை வைத்திருந்தார் என்ற பாரம்பரிய பெருமைகளை பேசியபடி நிகழ்காலத்தை…

    noelnadesan

    03/11/2019
    Uncategorized
  • யாழ்ப்பாணத்திற்கு விமானசேவை

    நடேசன் பலாலிக்கு இந்திய விமானம் வந்திறங்கியது என்ற செய்தி பல காலமாக மனதின் ஆழத்திலிருந்த பாடசாலை நினைவுகளை கிளறிவிட்டது. பல விடயங்களைப் போர் உண்டு ஏப்பம் விட்டுவிட்டது. புதிதாக ஒரு தலைமுறை எதையும் தெரியாது குண்டுகளின் ஓசையிலும் , வெடிகளின் மணத்திலும், போரின் காயங்களையும் சுமந்தபடி வாழ்கிறது. ஆனால், நாங்கள் போர் தீண்டாத காலங்களை ருசித்தவர்கள் . அமைதியின் நினைவுகள் எம்மிடமுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பன்னிரண்டாம் தரத்தில் படித்தபோது, இலங்கையில் மொழிவாரியான தரப்படுத்தலுடன் மாவட்ட ரீதியாக…

    noelnadesan

    31/10/2019
    Uncategorized
  • இலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி

    இலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி கிழக்கிலங்கையில் பறிபோகும் தமிழ்ப்பெயர்கள் முருகபூபதி ” தமிழ்மக்களுக்குப் பல குறைகள் உண்டு என்பதனை பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சகல அரசியல் தலைவர்களும் ( கட்சிகளும் இயக்கங்களும்) ஏற்றுக்கொண்டு நீண்டகாலமாகிட்டது. அதனால் பல ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டன. மாநாடுகள் கூட்டப்பட்டன என்பது கண்கூடு. ஆனால், ஒரு பெரும்பான்மை மொழி மற்றுமொரு சிறுபான்மை மொழியினை ஆக்கிரமித்து, அமிழ்த்தி சாகடித்துவிட்டு, தான் மட்டும் மேலெழும்பி உலகைப்பார்ப்பதானது நியாயமற்ற செயல் என்பது இங்கு கவனிக்கப்படுவதில்லை. படிப்படியாக வாழை…

    noelnadesan

    26/10/2019
    Uncategorized
  • ஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவில் சில நாட்கள்

    ஹொஸ்டனில் ஏறிய விமானம் இருபதினாயிரம் அடிகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. திரைப்படங்களில்லாத விமானப்பயணம். கையில் இருந்த புத்தகத்தை வாசித்தவாறே, விமானப்பயணத்தின் பாதையை தொலைக்காட்சித் திரையில் இடைக்கிடையே பார்த்துக்கொண்டிருந்தேன். தரை இறங்குவதாக விமானத்திலிருந்து அறிவிப்பு வந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தேன் . இறுதியில் தரையில் தட்டி, விமானம் நின்றது. அமெரிக்கர்கள் மட்டும் கைதட்டினார்கள் . அப்போது மீண்டும் தொலைக்காட்சி திரையைப் பார்த்தபோது 8200 அடிகள் எனக்காட்டியது . ஏன் விமானம் தரையிறங்கவில்லை. அந்தரத்தில் நிற்கிறதா? என யோசித்தபடியே இருந்தபோது விமானத்தின்…

    noelnadesan

    24/10/2019
    Uncategorized
  • நாவல்கள்:கூனன் தோப்பு -குடியேற்றம்.

    வாசிப்பு அனுபவம் நடேசன் கடற்கரை அருகே ஒரு ஆற்றின் இரு பக்கத்திலும் காலம் காலமாக அமைதியாக வாழும் கிறீஸ்தவர்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே நடந்த கலவரங்களையும் அதன் விளைவாக அழியும் அப்பாவி மக்களின் அவலங்களையும் பேசும் கதையிது . இதைப் படித்தபோது இலங்கையில் நடந்த பல சம்பவங்கள் என் மனதில் வந்து போனது. கொழும்பான் சேமது நானா இதில் முக்கியமான பாத்திரம் . கொழும்பில் இருந்து பல வருட காலம் வேலை செய்து விட்டு ஊருக்குத் திரும்பியவர்.…

    noelnadesan

    21/10/2019
    Uncategorized
  • நாவல்:அஞ்சுவண்ணம் தெரு-தோப்பில் முகமது மீரான்.

    நடேசன் தோமஸ் காடியின் நாவலான த மேயர் ஒவ் காஸ்ரபிரிஜ் ( Thomas Hardy – mayor Of Casterbridge) உலக நாவல்களின் வரிசையில் அதனது ஆரம்ப அத்தியாயத்திற்காக விதந்து பேசப்படும் ஆங்கில நாவல். அந்த நாவலின் முதலாவது அத்தியாயம் மனைவியை ஐந்து பவுனுக்காக சந்தையில் ஏலம் விட்டு ஒரு கடலோடிக்கு விற்கும் சம்பவத்தை சித்திரிக்கிறது. அதனை எழுதப்பட்டிருந்த முறையால் அந்த நாவலுக்குள் நம்மை உள்ளே இழுத்துச் செல்லும். அதன் பின்விளைவாக தொடரும் கதையை எவரால் விடமுடியும்?…

    noelnadesan

    18/10/2019
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 70 71 72 73 74 … 164
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 103 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar