-
அசோகனின் வைத்தியசாலை- கலந்துரையாடல்
மே – 10 – ஞாயிறு மாலை இந்திய நேரம் 7 மணிக்குநறுநிழல் ZOOM MEETING ID : 4775896897 –மே – 10 – ஞாயிறு மாலை 7 மணிக்குஇந்திரன் உரை – நோயல் நடேசனின் “அசோகனின் வைத்தியசாலை” + புலம்பெயர் எழுத்து பற்றி. கலந்து கொள்ளுங்கள் நண்பர்களே.நோயல் நடேசன் ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை எழுவைத் தீவிலிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர். இவர் நான்கு நாவல்களையும் பயணக் கட்டுரைகள், கதைகள் அனுபவப் பதிவுகளையும் எழுதியிருக்கிறார்.இவர் எழுதிய நாவலை முன்…
-
நூதனம் அடங்கிய தொனி
வாழும் சுவடுகள் – நொயல் நடேசன்——————————–>நடேசன் இலங்கை – நபீல் யாழ்ப்பாணத்துக்கு மேலே அமைந்திருக்கும் எழுவைத் தீவில் பிறந்தவர்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மிருக வைத்தியத் துறையில் படித்த பின் சில காலம் இலங்கையில் பணியாற்றினார். இப்போது இருப்பது ஆண்டுகளுக்கும் மேல் அவுஸ்ரேலியாவில் வாழ்கிறார். <நடேசனுடைய நான்கு நாவல்களில் இரண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. கூடவே பயணக் கட்டுரைகள், கதைகள் அனுபவப் பதிவுகளையும் எழுதியிருக்கிறார்.அங்கு உதயம் என்ற பத்திரிகையை மிக்க துணிச்சலோடு வெளியிட்டிருக்கிறார். உண்மையில் ஒய்வு நேரத்தில் படிப்பதற்கான மிக மிகப்…
-
நேபாள நினைவுகள்: புத்தபெருமான் அவதரித்த லும்பினி
நடேசன் நேபாளப் பயணத்தில் இறுதியாகச் செல்லும் இடமாக கவுதம புத்தர் அவதரித்த லும்பினி இருந்தது. நேபாளத்தில் சாக்கிய வம்சமென்பது தற்பொழுது அங்கு தமிழ் நாட்டில் முதலியார் – பிள்ளை என்பதுபோல சாதிப்பேராக மாறிவிட்டது. புத்த மதம் பல காரணங்களால் எனக்கு நெருங்கியது . கட்டளைகளாக எதுவுமில்லாது, ஒழுக்கத்தையும் அறத்தையும் கடமைகளாகக் கொண்டு (சீலம்) மக்கள் வாழவேண்டுமெனச் சொல்வதுடன், தற்போதைய ஜனநாயக வாழ்வு முறைக்குள் வரக்கூடிய ஒரே மதமாகத் தெரிகிறது. இரண்டாவதாக புத்த மதத்தின் பிரிவுகளை தேரவாதம், மாகாஜான…
-
கானல்தேசம்
Safeer Hafiz நொயல் நடேசனின் எழுத்துகள் எதையும் இதுவரை நான் படித்ததில்லை. அவர் கடைசியாக எழுதிய நாவலே நான் படித்த அவரின் முதலாவது நாவல். கானல் தேசம். படித்து முடிந்த பின் விமர்சனமொன்றை எழுத வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் தொடங்கினேன். ஆனால், இப்படியொரு நாவலுக்கு விமர்சனம் எழுத எனக்கு இன்னும் இலக்கிய முதிர்ச்சி தேவை. அதனால், விமர்சனமாக அல்லாமல், நாவலைப் படித்த எனது அனுபவங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதே பொருத்தம். நானூறு பக்க நாவலொன்றை இரண்டே நாட்களில்…
-
கலைஞர் ஏ. ரகுநாதன் மறைந்தார்
அஞ்சலிக்குறிப்பு: ஈழத்து தமிழ்த்திரைப்படங்களின் வளர்ச்சியின் ஊடாக ஒரு நினைவுப்பகிர்வு முருகபூபதி இலங்கையின் மூத்த தமிழ் நாடக, திரைப்படக்கலைஞர் ஏ.ரகுநாதன் பிரான்ஸில் மறைந்தார் என்ற அதிர்ச்சி தரும் செய்தி வந்தது.சமீபகாலமாக உலகெங்கும் அச்சுறுத்திவரும் கண்ணுக்கு புலப்படாத எதிரி, எங்கள் தேசத்தின் கலைஞனையும் புலத்தில் காவுகொண்டுவிட்டது. இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு முற்பகுதியில் பாரிஸ் சென்றபோது, அங்கிருக்கும் நண்பர் எழுத்தாளர் ‘ ஓசை ‘ மனோகரனுடன் ரகுநாதனைப் பார்க்கச்சென்றேன். பாரிஸிலும் வைரஸின் தாக்கம் உக்கிரமடைந்தபோது, அங்கிருக்கும் கலை, இலக்கிய…
-
நாவல்: சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை.
நடேசன் 19 ஆம் நூற்றாண்டில் வந்த சிறந்த நாவல்களான மேடம் பாவாரி – அனா கரினினா இரண்டிலும் திருமண பந்தத்திற்கு அப்பால் உடலுறலில் ஈடுபட்ட பெண்கள் நாவலாசிரியர்களால் கொலை செய்யப்படுகிறார்கள் . ஒரு இடத்தில் ஆசனிக் கொடுக்கப்படுகிறது . மற்றயதில் ரயிலின் முன் தள்ளப்படுகிறாள் . தி.ஜானகிராமன் தனது மோக முள் நாவலில் வரும் நாயகன் பாபுவுடன் ஆரம்பத்தில் உடலுறவு கொண்ட பெண்ணை நதியில் தள்ளி கொலை செய்துவிட்டு மிகுதித் கதையைத் தொடர்கிறார் . இவர்கள் மூவரும்…
-
இலக்கியத்திற்கு அப்பால் மல்லிகை ஜீவா நேசித்த பறவை
/>திரும்பிப்பார்க்கின்றேன் – முருகபூபதி யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில் (இன்றைய கனகரத்தினம் கல்லூரி) நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த (1962 )காலத்தில் எங்கள் ஆண்கள் விடுதியின் சார்பாக ஒரு நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டிருந்த டொமினிக் ஜீவாவை வெள்ளை நேஷனல், வெள்ளை வேட்டியுடன்தான் முதல் முதலில் பார்த்தேன். இந்த ஆடைகள் அவருடைய தனித்துவமான அடையாளமாகவே இன்றுவரையில் இருந்துவருகிறது. அப்பொழுது அவர் எழுத்தாளராக இருந்தார். ஏறக்குறைய பத்து ஆண்டுகளின் பின்னர் அவரை 1971 இல் நீர்கொழும்பில் எதிர்பாராதவிதமாக சந்தித்தபொழுது, அவர் மல்லிகை…
-
“ஏமாற்றத்துடன் விடைபெற்றிருக்கும் செங்கை ஆழியான் “
தகவலை பதிவுசெய்கிறது யாழ்ப்பாணம் ஜீவநதி மறைந்தவரிடத்தில் மறைந்தவர் தேடும் ஈழத்து நாவல்க ள் தாயகம் கடந்தும் வாழும் படைப்பாளி செங்கை ஆழியான் முருகபூபதி” தொகுப்புகள் பெறுமதிவாய்ந்தவை என்பதை யாவரும் ஒப்புக்கொள்கிறார்கள். சற்றுநேரம் சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு தொகுப்பிற்குப் பலமணிநேரத்தை செலவிடவில்லை. வருடக்கணக்கில் செலவிட்டம். உதாரணமாக பழைய பத்திரிகைகள், சஞ்சிகைகளைத் தேடிப்பெற்று அதனைப்பிரதி எடுத்து அவற்றில் சிறந்ததை தெரிவுசெய்து பின்னர், பதிப்பித்தல், பதிப்புச்செலவு, அதனை விற்பனை செய்தல், களஞ்சியப்படுத்தல் அப்படிப்பல இடர்களைக் கூறலாம். குடும்பத்தில் பிள்ளைகள், ஏன் நான்…
-
சித்துவான் தேசிய வனம் – நேபாளம்.
நடேசன் அந்தி மயங்கிய நேரத்தில் இரண்டு, மங்கிய மஞ்சள் நிறக் கண்கள் இமைக்காது என்னை ஊடுருவியவாறு இருந்தது. இதுவரையில், இவ்வளவு அருகில் காரியல் முதலையை (Gharial Crocodil) அருகில் சென்று பார்த்ததில்லை. இதுவே சந்தனு மகாராஜாவின் மனைவியான கங்காதேவி பயணித்த வாகனமாக சொல்லப்படுகிறது. மரக்கட்டைபோல் தூரத்தில் தெரிந்தபோதும் அருகே நெருங்கிப்பார்த்தபோதுதான், பிரவுண் நிற வட்டமான கண்கள் நீளமான பலம்வாய்ந்த தாடை பெரிய மூக்கு பகுதி செதில்கொண்ட முதுகாக நாலடி நீளத்தில் அசையாது ஆற்றங்கரையில் கிடந்தது. அதனது பார்வை…