-
முள்ளுள்ள புதர்களின் மத்தியில் அத்தியாயம் 1
அக்கினி ஞானஸ்ஞானம் ரெரன்ஸ் அந்தோனிப்பிள்ளை ‘எங்களுக்குத் தெரியும் சனத்துக்கு என்ன தேவையெண்டு. நீங்கள் சனத்தோட கதைக்கத்தேவையில்லை. அதுகளோட கதைச்சிட்டு, வெள்ளைக்காரனுக்கு தேவையில்லாததைச் சொல்லி எல்லாத்தையும் குழப்பிப் போடுவியள். அதாலதான் சொல்லுறம், நாங்கள் சொல்லுறதை நீங்கள் செய்யுங்கோ.’ முக்கால் மணித்தியாலமாக TRO ரவி தனக்கேயுரிய உரத்த குரலில் எங்களை நோக்கி ‘அன்புடன்’ வேண்டிக்கொண்டிருந்தார். அவரது உதவியாளர் ரெஜி மௌனமாக எங்களை ஒருவிதமாக நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார். எனக்கோ சலிப்புத்தட்டத் தொடங்கியது. கூட்டம் நடந்த அறையின் பின்சுவரை அண்ணாந்து பார்தேன். ஒருவித…
-
விசிலர் , மேற்குக் கனடாவில் சில நாட்கள்
பஸ்ஸில் முப்பதிற்கும் மேற்பட்ட அவுஸ்திரேலியர்களுடன் எங்கள் பயணம் ரொக்கி மலையின்மீது தொடங்கியது. பிஜியைச் சேர்ந்த இந்திய இளைஞனே எங்கள் வழிகாட்டி. கேர்ணல் ரம்புக்கா, எண்பதின் இறுதியில் செய்த ஆயுதப் புரட்சி பிஜி இந்தியர்களை வெளித்தள்ளியது. பலர் அவுஸ்திரேலியா, கனடா , இங்கிலாந்து என இலங்கைத் தமிழர்கள்போன்று தப்பியோடினார்கள். கடந்தமுறை இரவில் சென்று பார்க்க முடியாத மலை சார்ந்த இடமான விசிலர் 11 ஆயிரம் நகரம் மக்கள் வசிக்கும் நகரம். ஆனால், குளிர்காலத்தில் இங்கு பத்துமடங்காக மக்கள் பெருகுவார்கள்.…
-
நடேசனின் கானல் தேசம்
வாசிப்பு அனுபவம் . வடகோவை வரதராஜன் பாலைவனத்தில் மனோரத்திய உணர்வுகளுடன் சிறப்பாக தொடங்கும் கதை, திகில் நிறைந்த துப்பறியும் நாவல் போல் தொடர்கிறது. போர் நடந்தபோது இலங்கையில் இல்லாத ஒருவர் மிகுந்த உழைப்பைக் கொடுத்தே இப்படியான நாவலை எழுத முடியும் . வன்னியில் நடந்த , மற்றவர் காட்டாத இன்னோர் பக்கத்தை இரத்தமும் சதையுமாக காட்டுகிறது இந்நாவல் . இலங்கைத் தமிழர்கள் உணர்வுகளை பேச்சு மொழியூடாக காட்டுவதில்லை உடல் மொழியூடாகவே காட்டுவார்கள் எனக் குறிப்பிடும் ஆசிரியர், அசோகன்…
-
விக்டோரியா, மேற்குக் கனடாவில் சில நாட்கள்
நடேசன் கனடாவில் வதியும் எனது சகோதரங்களைப் பார்ப்பதற்காக இதுவரையில் மூன்று தடவைகள் குளிர் காலத்தில் சென்று திரும்பியிருக்கின்றேன். விமானம் முதலில் தரிக்கும் நகரமான வன்கூவரில் இறங்காது, மீண்டும் விமானத்திலேயே ரொண்ரோவிற்குச் சென்று தங்கிவிட்டு மீண்டும் அதேவழியால் ஆஸ்திரேலியா திரும்பிவிடுவேன். கனடா என்ற பரந்த தேசத்தின் அழகான பகுதி மேற்கில் இருப்பதை அறிவேன். விமானத்திலிருந்து கீழே பார்க்கும்போது நீலக்கடலில் திட்டி திட்டியாக பல தீவுகளை தன்னகத்தே கொண்ட பிரதேசங்களை தரிசிக்க முடியும். இறங்கி பார்த்துவிட்டுபோவோமா என்ற ஆவலை அடக்கிக்…
-
அசோகனின் வைத்தியசாலை- கலந்துரையாடல்
மே – 10 – ஞாயிறு மாலை இந்திய நேரம் 7 மணிக்குநறுநிழல் ZOOM MEETING ID : 4775896897 –மே – 10 – ஞாயிறு மாலை 7 மணிக்குஇந்திரன் உரை – நோயல் நடேசனின் “அசோகனின் வைத்தியசாலை” + புலம்பெயர் எழுத்து பற்றி. கலந்து கொள்ளுங்கள் நண்பர்களே.நோயல் நடேசன் ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை எழுவைத் தீவிலிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர். இவர் நான்கு நாவல்களையும் பயணக் கட்டுரைகள், கதைகள் அனுபவப் பதிவுகளையும் எழுதியிருக்கிறார்.இவர் எழுதிய நாவலை முன்…
-
நூதனம் அடங்கிய தொனி
வாழும் சுவடுகள் – நொயல் நடேசன்——————————–>நடேசன் இலங்கை – நபீல் யாழ்ப்பாணத்துக்கு மேலே அமைந்திருக்கும் எழுவைத் தீவில் பிறந்தவர்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மிருக வைத்தியத் துறையில் படித்த பின் சில காலம் இலங்கையில் பணியாற்றினார். இப்போது இருப்பது ஆண்டுகளுக்கும் மேல் அவுஸ்ரேலியாவில் வாழ்கிறார். <நடேசனுடைய நான்கு நாவல்களில் இரண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. கூடவே பயணக் கட்டுரைகள், கதைகள் அனுபவப் பதிவுகளையும் எழுதியிருக்கிறார்.அங்கு உதயம் என்ற பத்திரிகையை மிக்க துணிச்சலோடு வெளியிட்டிருக்கிறார். உண்மையில் ஒய்வு நேரத்தில் படிப்பதற்கான மிக மிகப்…
-
நேபாள நினைவுகள்: புத்தபெருமான் அவதரித்த லும்பினி
நடேசன் நேபாளப் பயணத்தில் இறுதியாகச் செல்லும் இடமாக கவுதம புத்தர் அவதரித்த லும்பினி இருந்தது. நேபாளத்தில் சாக்கிய வம்சமென்பது தற்பொழுது அங்கு தமிழ் நாட்டில் முதலியார் – பிள்ளை என்பதுபோல சாதிப்பேராக மாறிவிட்டது. புத்த மதம் பல காரணங்களால் எனக்கு நெருங்கியது . கட்டளைகளாக எதுவுமில்லாது, ஒழுக்கத்தையும் அறத்தையும் கடமைகளாகக் கொண்டு (சீலம்) மக்கள் வாழவேண்டுமெனச் சொல்வதுடன், தற்போதைய ஜனநாயக வாழ்வு முறைக்குள் வரக்கூடிய ஒரே மதமாகத் தெரிகிறது. இரண்டாவதாக புத்த மதத்தின் பிரிவுகளை தேரவாதம், மாகாஜான…
-
கானல்தேசம்
Safeer Hafiz நொயல் நடேசனின் எழுத்துகள் எதையும் இதுவரை நான் படித்ததில்லை. அவர் கடைசியாக எழுதிய நாவலே நான் படித்த அவரின் முதலாவது நாவல். கானல் தேசம். படித்து முடிந்த பின் விமர்சனமொன்றை எழுத வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் தொடங்கினேன். ஆனால், இப்படியொரு நாவலுக்கு விமர்சனம் எழுத எனக்கு இன்னும் இலக்கிய முதிர்ச்சி தேவை. அதனால், விமர்சனமாக அல்லாமல், நாவலைப் படித்த எனது அனுபவங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதே பொருத்தம். நானூறு பக்க நாவலொன்றை இரண்டே நாட்களில்…
-
கலைஞர் ஏ. ரகுநாதன் மறைந்தார்
அஞ்சலிக்குறிப்பு: ஈழத்து தமிழ்த்திரைப்படங்களின் வளர்ச்சியின் ஊடாக ஒரு நினைவுப்பகிர்வு முருகபூபதி இலங்கையின் மூத்த தமிழ் நாடக, திரைப்படக்கலைஞர் ஏ.ரகுநாதன் பிரான்ஸில் மறைந்தார் என்ற அதிர்ச்சி தரும் செய்தி வந்தது.சமீபகாலமாக உலகெங்கும் அச்சுறுத்திவரும் கண்ணுக்கு புலப்படாத எதிரி, எங்கள் தேசத்தின் கலைஞனையும் புலத்தில் காவுகொண்டுவிட்டது. இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு முற்பகுதியில் பாரிஸ் சென்றபோது, அங்கிருக்கும் நண்பர் எழுத்தாளர் ‘ ஓசை ‘ மனோகரனுடன் ரகுநாதனைப் பார்க்கச்சென்றேன். பாரிஸிலும் வைரஸின் தாக்கம் உக்கிரமடைந்தபோது, அங்கிருக்கும் கலை, இலக்கிய…