Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • நாம் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல – 2.

    சாவகச்சேரி சாள்ஸ் முகாமுக்கு வந்த அடுத்த நாள் என்னிடம் இருந்த உடமைகள் எல்லாம் புலிகளினால் பறிமுதல் செய்யப்பட்டன. நான் கைது செய்யப்படும் போது என்னிடம் 1 பவுண் மோதிரம் ஒன்றும் பணமாக ரூபா எண்ணாயிரத்து முன்னூறும் இருந்தது. அத்துடன் எனது தேசிய அடையாள அட்டையும் இருந்தது. இவை எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன. இம்முகாமில் இருந்த சுமார் ஆயிரம் கைதிகளில் பலருக்கு பொக்கிளிப்பான் நோய் கண்டிருந்தது. அவர்களை முகாமின் பின் கோடியில் அமைந்திருந்த ஓலைக் கொட்டிலில் காவல் வைப்பார்கள்.…

    noelnadesan

    05/06/2020
    Uncategorized
  • நாம் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல – 1.

    சமரன் 1990 இன் ஆரம்பம், இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்படப் போகும் அறிகுறிகள் தென்படத் தொடங்கியது. காட்டுக்குள் இருந்த கொடிய மிருகங்கள் மெல்ல மெல்ல நாட்டுக்குள் ஊடுருவத் தொடங்கிய காலம். மனித நேயம் மீண்டும் மழுங்கடிக்கப்பட்டது. அடுத்து சில நாட்களில் தமக்கு விழப்போகும் அடிமை விலங்கைப்பற்றி உணரமுடியாத வட-கிழக்கு மக்களும் யாழ்ப்பாண பத்திரிகைகளும் புலிகளின் வரவை ஒரு வகையில் வரவேற்றனர். இந்நிலையில்தான் மாகாண அரசை ஆதரித்த தமிழ் மக்கள் மீது புலிகளின் பழிவாங்கல்…

    noelnadesan

    04/06/2020
    Uncategorized
  • வண்ணாத்திக்குளம்;நூலக தகனம்

    காலை நேரத்துடன் எழுந்து விட்டேன் என்று சொல்வதை விட நித்திரை கொள்ளவில்லை என்பதே பொருத்தமானது. அம்மா தந்த கோப்பியைக் குடித்து விட்டு கொக்குவில் ஸ்ரேசனில் ரயில் ஏறி விட்டேன். மதவாச்சி ரயில் நிலையத்தில் எனக்காக காமினி மோட்டார் சைக்கிளில் எதிர்பார்த்துக் கொண்டுஇருந்தான். இருவருமாக விடுதிக்கு சென்று விட்டு அங்கிருந்து பதவியா சென்றோம். மனதில் பல நினைவுகள் ஆக்கிரமித்தபடியால் காமினியிடம் சைக்கிள் ஓட்டும் பொறுப்பை விட்டு விட்டேன். கெப்பிற்றிகொல்லாவ வரை எதுவும் பேசவில்லை. எனது மௌனம் காமினிக்குப் பொறுக்கவில்லை.…

    noelnadesan

    03/06/2020
    Uncategorized
  • நாம் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல..

    மன்றாட்டம் ஓ கடவுளேஉடலின் பிரயர்த்தனம் உயிரைக் கெஞ்சிப் பற்றிக்கொள்வது.இந்த மனமோதாங்கொணா வேதனையை விடச்சாகலாமெனத் துடிக்கிறது.பரந்த பூமியில்தர்மம் நீதி நியாயங்கள் யாவும்கண்களை மூடிக் கொண்டன.உலகம் முழுக்கப் பெயரை ஒட்டிக் கொண்டமனித உரிமை அமைப்புக்களோசெவிகளைப் பொத்திக் கொண்டனர்.மக்களென்று எஞ்சியவர்கள்வாய்களைப் பொத்திக் கொண்டனர்.யாவருமாக கேள்வியற்று வதைக்கும்பூரண சுதந்திரத்தை தாரை வார்த்து விட்டதன் பின்னால்ஆண்டவரே,மன்றாடுகிறோம்கதியற்றசித்திரவதைக் கைதிகள் நாம்எமக்கு மரணத்தைத் தாரும். இந்தப் புத்தகத்தை வாசித்து மூடுகையில் மனசாட்சியைக் கழற்றி வைத்துவிடாத ஒரு சராசரி மனிதனின் மனதில் எங்கள் சமுதாயத்தில் மனிதாபிமானம் எவ்வளவு இழிநிலை…

    noelnadesan

    03/06/2020
    Uncategorized
  • இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின்நாவல்களின் ஆய்வு – டாக்டர் த . பிரியா

    இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு – டாக்டர் த . பிரியா நடேசன் போரின் விளைவால் புலம் பெயர்ந்து சென்ற எழுத்தாளர்களின் வரிசையில் இலங்கைத் தமிழர்களாகப் பலர் உண்டு . அதில் ஏற்கனவே எழுத்தாளராகப் புலம் பெயர்ந்தவர்களும், புலம் பெயர்ந்த பின்பு எழுத்தாளர்களானவர்களும் அடக்கம். இவர்களில் ஒற்றைக் கை விரல்களில் எண்ணக்கூடியவர்களே புலம்பெயர்ந்த இலக்கியம் என்று சிந்தித்துப் படைப்பவர்கள். மற்றையோர் கண்டங்கள் கடந்திருந்து , கால் நூற்றாண்டுகள் மேல் பாரிஸ் , லண்டன் , ரொரண்ரோ…

    noelnadesan

    02/06/2020
    Uncategorized
  • வண்ணாத்திக்குளம்; நாச்சிமார்கோயில் எரிப்பு

    பதிவுத்திருமணத்தை சனிக்கிழமை மதவாச்சியில் நடத்துவதென்று நிச்சயம் செய்தபடியால் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் சென்றேன். யாழ்தேவியில் கூட்டம் அதிகமில்லாதபடியால் மூலை ஆசனம் கிடைத்தது. கண்ணை மூடிக்கொண்டு சித்திராவை நினைத்தேன். மனதை நினைவுகள் சுகமாக வருடின. யாழ்தேவி வவனியாவில் நின்றபோது சிறிது கூட்டம் ஏறினாலும் எனது கனவுகள் கலைக்கப்படவில்லை. ஏழு மணியளவில் சிறிது பசியெடுத்ததும் எனது கனவுகளை நிறுத்திவிட்டு நாளை நடப்பதை யோசிப்பது என முடிவு செய்தேன். அம்மாவையாவது மதவாச்சிக்கு கூட்டிக் கொண்டு வர வேணும். அப்பு…

    noelnadesan

    02/06/2020
    Uncategorized
  • முள்ளுள்ள புதர்களின் மத்தியில்; அத்தியாயம் 11

    Terrance Anthonipillai வழக்கமாக எப்பொழதும் சந்தோஷமாகவும் கலகலப்பாகவும் இருக்கும் எனது 8 வயது மகள் அன்று நான் மதிய உணவுக்காக இரண்டு மணியளவில் வீடு சென்ற போது அவளின் செந்தளிப்பான அவளின் முகத்தில் கவலை படர்ந்திருப்பதைக்கண்டு ஆச்சரியமடைந்தேன். ‘என்ன குட்டி ஒரு மாதிரியாக இருக்கிறாய்’ என்று கரிசனையுடன் கேட்டவாறே அவளை வாஞ்சையுடன் தூக்கினேன். உடனே அவள் ‘மாவீரர் நாளுக்கு என்னை புலியாக நடிக்கட்டாம் எனக்கு விருப்பம் இல்லை அப்பா’ என்றாள் என்னைக் கட்டியணைத்தவாறே. எனது குரல் கேட்டு…

    noelnadesan

    02/06/2020
    Uncategorized
  • நம்மிடமிருந்து விடைபெறும் நண்பர் சபேசன்

    நடேசன். 1954 ஜூலை 7ஆம் திகதி பிறந்த சண்முகம் சபேசன், 2020 மே மாதம் 29 ஆம் திகதி காலமானார் என்ற போதிலும், 2009 மே மாதத்தில் முடித்த ஈழத்துக்கான போரினால் மனக்காயமடைந்தவர். அந்த மனக்காயங்கள் , முள்ளிவாய்க்காலில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் வெளிநாட்டில் வாழ்ந்த அவருடன் கடந்த பதினொரு வருடங்களாக வலிதந்துகொண்டே இருந்ததை நன்கு அறிவேன். சபேசனது அந்தத் தீராத வலி அவர் மறையும் வரை ஆறவேயில்லை. அந்தக்காயங்களுடன்தான் அவர் எம்மை விட்டு விடைபெற்றுள்ளார்.…

    noelnadesan

    01/06/2020
    Uncategorized
  • வண்ணாத்திக்குளம்.; வட்டப்பாறை.

    யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததும் என்னுடைய அப்பா அம்மா திருமணத்துக்கு சம்மதித்த செய்தியைச் சித்ராவிடம் சொல்ல வேண்டும் என துடித்தேன். தொடர்ந்து கந்தோரில் வேலை இருந்தது. மதவாச்சி பிரதேசத்து மாடுகளுக்கு மழைகாலம் வரும் முன்பு தடுப்பூசி போட வேண்டுமென்பதால் இரவு பகலாக வேலை செய்ய வேண்டியிருந்தது. மனதுக்குள் திட்டியபடியே வேலையை முடித்துவிட்டு சனிக்கிழமை பதவியா சென்றேன். நான் போகும் போது வாசலில் என்னை எதிர்பார்த்து அவள் காத்து நின்றாள். பூப்போட்ட சட்டையும் அதன் கீழ் பூப்போட்ட துணியும் அணிந்திருந்ததால்…

    noelnadesan

    31/05/2020
    Uncategorized
  • முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்;அத்தியாயம் 10

    மீண்டும் ஓர் கூட்டம். ஆனால் இது சற்றுவித்தியாசமானது. ஜக்கியநாடுகள் சபையின் ‘ஆயுதப் போரட்டத்தில் சிறுவர்கள்’என்றபிரிவின் உலகளாவியதலைவர் திரு. ஓலரா ஒட்டுண்ணு 3 நாள் வன்னிவிஜயத்தின் இறுதியில் வன்னியில் பணிபுரியும் சகல சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களினுடனானஒன்றுகூடல். வன்னியில் புலிகளால் அவருக்கு அமோகவரவேற்ப்பு அளிக்கப்பட்டது. அவர் பங்குபற்றிய சகல கூட்டங்களிலும் புலிகள் கலந்துகொண்டார்கள். ஆனால் நான் குறிப்பிடும் இந்தக்கூட்டத்திற்குபுலிகள் அழைக்கப்படவில்லை. இந்தக்கூட்டத்தில் நான் ஒருவனே இலங்கைப்பிரசை. (வெள்ளாட்டுமந்தையில் கறுப்பாடு!) ஆரம்பத்தில் சிறுவர் பாதுகாப்புநிதிய இங்கிலாந்துப் பிரதிநிதிவன்னியில் சிறுவர்களின் அப்போதைய நிலைமைகளை…

    noelnadesan

    31/05/2020
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 62 63 64 65 66 … 163
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar