-
இருத்தலியலும் எனது நாயும்.
நடேசன். மிருக வைத்தியராக நாற்பது வருடங்கள் வாழ்ந்து இளைப்பாறிய எனக்கு, வியப்புறும் விடயம் நான் பார்த்த மிருகங்களிடம் கண்ட வாழ்வதற்கான ஆசையே. அதை தீவிரமாக, அவற்றின் நடத்தைகள் மூலம் காணமுடிந்தது. வைத்தியராக என்னிடம் வந்தபோது அறிந்ததுடன், என் வீட்டில் வளர்ந்தவற்றிலும் அதை அவதானிக்க முடிந்தது. பல செல்லப்பிராணிகளையும் அவற்றின் உரிமையாளர்களை பற்றியும் எனது வாழும் சுவடுகள் நூலில் எழுதியுள்ளேன். பூனைகள் நோயுற்றதும் தங்களைத் தேற்றிக்கொள்ள ஏதாவது ஒதுக்கமான தனிமையான இடத்தை நாடும். நாய்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக நடந்து…
-
நடேசனின் “உனையே மயல் கொண்டால் “
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் நடேசனின்’ உனையே மயல் கொண்டால்” எல்லோருக்கும் தெரியவேண்டிய ஒரு முக்கிய விடயத்தைச்சொல்லும் நாவல். ‘பைபோலார் டிஸீஸ்- (bipolar dieases-disorder (manic depression) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு மனவியாதியால் துயர் படும் ஒரு பெண்ணையும் அவளைத் திருமணம் செய்து அல்லற்படும் கணவரையும் பின்னிப்பிணைந்த நாவல். மன நலம் பாதிக்கப்பட்ட ஆணோ பெண்ணோ சாதாரண மனிதர்கள் மாதிரி வாழ்க்கை நடத்துவது கடினம். தாம்பத்திய வாழ்வின் முக்கிய அம்சமான ‘பாலியல்’ உறவை மன நலம் பாதிக்கப்பட்டவர்களால் சந்தோசமாக…
-
நூல் அறிமுகம்: தீரதம்:நௌஸாத்
நடேசன் குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டுமென்ற காரணத்தால் நான் எனது மனைவியுடன் இலக்கிய விடயங்கள் பேசுவதில்லை. ஆனால், தொடர்ந்தும் நான் எதனையாவது படித்துவிட்டு, சிரித்தபடியே இருந்தால் “ என்னவென்று…? “ கேட்பாள். அவ்வாறுதான் ஒரு தருணம் மீண்டும் வந்தது, நௌஸாத் எழுதிய தீரதம் படித்துவிட்டும் சிரித்தேன். ‘என்ன விடயம்..? என்று கேட்டபோது, நௌஸாத்தின் கபடப் பறவைகள் கதையைப் பற்றி சுருக்கமாகச் சொன்னேன். இருவரும் சிரித்தோம். இந்தக் கதையில் வரும் ஒரு எழுத்தாளன், தனது புத்தகங்களைத்தான் தனது பொக்கிஷமாகச்…
-
அலாஸ்கா
காலம் காலமாக காதல் சோடிகள் காதலுக்காக உயிர்விடுவது காவியங்களாகியிருக்கிறது. அத்தகைய மரணங்களை ரோமியோ – ஜூலியட்டிலிருந்து அவதானிக்க முடிகிறது. அவை பல நூறு கிலோமீட்டர்கள் ஆழ்கடலையும் நதிகளையும் தாண்டி வந்து, தாம் பிறந்த இடத்தில் முட்டையிட்டுவிட்டு அடுத்தநாள் இறக்கின்றன. இதுவரையும் சமனை உணவுத்தட்டிலும் சான்விச்சிலும் வைத்து உண்ட எனக்குச் சமனின் வாழ்க்கை வட்டம் புதுமையாக இருந்தது. அலாஸ்காவில் உள்ள நதி, குளம், குட்டை போன்ற நன்னீர்த் தேக்கங்களில் முட்டையிலிருந்து வெளிவந்த சமன் மீன்கள், பல உருமாற்றங்களுடாக இளம்…
-
நைல் நதிக்கரையோரம்-நூல் விமர்சனம்-
ஜெயகாந்தன் நடேசனின் நைல்நதிக்கரையோரம்- கைக்கு அடக்கமாக களைத்திருக்கும் போதும் கையில் பிடித்தபடி படுத்திருந்து படிக்கு வசதியான அளவில் வந்திருக்கும் புத்தகம். அதன் உள்ளே பொதிந்திருப்பது எகிப்தின் வியத்தகு வரலாறுகளின் எச்சங்களே! அவர் ஆரம்பத்தில் கூறுவது போல அது வரலாற்று நூல் அல்ல.பயணக் கட்டுரையும் அல்ல. என்று படிப்பவர்களால் ஒதுக்கிவிட முடியாது. பயணத்தின்போது அவரது அவதானங்களை மட்டுமன்றிப் பல சுவையான தகவல்களையும் தந்து அசத்தியிருக்கிறார். எனக்குப் பத்து வயதாக இருக்கும்போது பாடசாலையில் சரித்திர பாடம் கற்பித்த ஆசிரியை பற்றி…
-
நூல் அறிமுகம்- ஏதிலி.
நடேசன். 1945 ஆகஸ்ட் 6 ம் திகதி காலை 8.15 மணிக்கு ஹீரோசிமா மீது அமெரிக்கர்களால் அணுக்குண்டு போடப்படுகிறது. 1946 ஆம் ஆண்டு ஜோன் ஹேசி (John Hersey) இதைப்பற்றி எழுதுவதற்கு நியூயோக்கர் சஞ்சிகையால் யப்பானுக்கு அனுப்பப்படுகிறார். அமெரிக்கா அணுக்குண்டை ஹீரோசிமாவில் போட்ட அன்று காலையில் 8.15 மணியிலிருந்து ஒரு இலட்சம் பேருக்கு மேல் இறக்க , உயிர் தப்பிய ஆறு யப்பானியர்களின் வாழ்வு ஜோன் ஹேசியால் விவரிக்கப்படுகிறது. அந்த விவரிப்பு நியூயோக்கர் சஞ்சிகையில் வேறெந்த விடயங்களுமில்லாது…
-
வன்கூவர் நகரம்
நடேசன் எனது வீட்டில் உள்ள லாபிரடோர் சின்டியும் கனேடியக் கரடிகளும், வன்கூவர் துறைமுகத்தைச் சுற்றியுள்ள கற்பாறைகளில் குடும்பங்களாக குளிர்காய்ந்துகொண்டிருந்த சீல்களும் உறவினர்களாக இருக்கவேண்டும் என்ற கணிப்பு, கனடாவிற்கு போன பின்பே மிருக வைத்தியனாகிய எனக்குத் தெரிந்தது . வன்கூவரின் துறைமுகம் சார்ந்த பகுதிகளை ஒரு மோட்டார் வள்ளத்தில் சுற்றிப்பார்த்தபோது, அங்கே கடலுக்குள் பெரிய கப்பல்கள் தரித்து நின்றதை அவதானித்தேன். கரையோரப் பாறைகளில் அமைதியாக கூட்டம் கூட்டமாகச் சீல்கள் படுத்து உறங்கின . அந்தச் சீல்களைப் பார்த்தபோது அவற்றில்…
-
வண்ணாத்திக்குளம்
இராஜேஸ் பாலா டாக்டர் நடேசன் எழுதிய ‘ வண்ணாத்திக்குளம் நாவலைப்படித்ததும், நீண்ட காலமாகத் தொடரும் அனல் வெயிலிலிருந்து காப்பாற்ற குளிர்ந்த நீர்வீழ்ச்சி தலையிற் கொட்டிய புத்துணர்வு வந்தது. இங்கு குறிப்பிடப்பட்ட அனற் காற்று லண்டனில் கொதிக்கும் வெயிலை முன்படுத்தி எழுதப்பட்டதல்ல. கடந்த சில வருடங்களாக இலக்கியம் என்ற பெயரிலும், ஊடகக் கருத்துக்கள் என்ற பெயரிலும் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியாகும் விடயங்களைப் பற்றிய தாக்கத்தின் வெளிப்பாடுதான் இந்த அனல் வெயில் உவமேயம். இன்றைய புலம் பெயர்ந்த பல இலக்கியங்களைப்…
-
வண்ணாத்திக்குளம்;அந்நியமாகுதல்
ஓடும் தளத்தை விட்டு விமானம் மேலே எழுந்தது.. . மேலே, மேலே வானத்தில் ஏறியது. அதன் பறப்பு தொடர்ந்தது. நான் வாழ்ந்த, பிறந்த மண்ணில் இருந்து பறக்க துடிக்கிறேன்… எழுவைதீவு, நயினாதீவு, யாழ்ப்பாணம், பேராதனை, மதவாச்சி, பதவியா என்ற இந்த இடங்கள் கனவில் வந்து போன இடங்களா? இந்த விமானம் என்னை எங்கு கொண்டு செல்கிறது.? பூகோள படத்தில் மட்டும் பார்த்த இடங்கள். இனி எனக்கு சொந்த பூமியாகுமா? என் பாதங்கள் அணைத்து மகிழ்ந்த அந்த இனிய…
-
ரொக்கி மலை எக்ஸ்பிரஸ்-கனடா
எங்களது பஸ்பயணம் பல முக்கிய மலைசார் நகரங்களில் தரித்து இறுதியில் Banff என்ற நகரில் (அட்பேட்டா மாநிலம்) முடியும். அங்கிருந்து இரண்டு பகல் ரொக்கி மலை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து மீண்டும் வான்கூவர் சேருவது எமது திட்டம். இந்த மேற்குப் பகுதி பற்றி கனடிய பயணத்தில் எழுதுவதற்கு அதிகமில்லை. வட அமெரிக்காவில், அலாஸ்காவில் இருந்து தென் அமெரிக்காவின் அண்டாட்டிக் முனைவரை செல்லும் இந்த கண்டங்களின் மோதலால் வட அமெரிக்காவில் ரொக்கி மலையும் தென் அமெரிக்காவின் அன்டீஸ் மலைத்தொடரும்…