-
அலைந்து திரியும் ஆவிகள்
( சிறுகதை )நடேசன் ஒரு எழுத்தாளனாக இருப்பவன் தன்னைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிக்கவும் மற்றவர்கள் கதைகளைக் கேட்கவும் வேண்டும். ஒரு விதத்தில் பூக்களை வாங்கி மாலையாக்கும் பூக்காரியின் தொழில் போன்றதுதான் கதையாக்கமும். அப்படியான ஒரு கதையை உங்களிடம் சொல்லப் போகிறேன். கடந்த வருடம் அவுஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்குத் தனியாகச் சென்றேன். ஹோட்டலில் தங்கி, ஏன் தேவையில்லாமல் அதிக பணத்தை செலவழிக்கவேண்டும் என நினைத்து சென்னையில் உள்ள என் நண்பனிடம் பேசியபோது, அவன், தனது நண்பனது மாடிக்கட்டிடம் ஒன்றுள்ளது.…
-
உங்கள் பாவங்களை கழுவ கடைசி சந்தர்ப்பம்
( 2009ல் எழுதி அஸ்திரேலியா உதயம் பத்திரிகையில் வெளியாகியது) நடேசன் இலங்கையில் இருந்து வரும் செய்திகள் தமிழர் பலருக்கு அதிர்ச்சியையும் துக்கத்தையும் கொடுப்பவையாக இருப்பவை. இதன்காரணத்தால் இப்படி விளைவுகளுக்கு யார் மேலாவது பழியை போடவேண்டும் என தேடும் போது பலருக்கு இலங்கையில் தற்போது அரசியல் நடத்தும் மகிந்த இராஜபக்ச அரசாங்கம் கண்முன்பு தெரியும். அதேபோல் சிலர் விடுதலைப்புலிகளின் அரசியல் விவேகமற்ற இராணுவ ரீதியான போக்கு இதற்கு பொறுப்பு என சொல்வார்கள். கடந்த முப்பது வருட அழிவுகளுக்கும் உயிர்…
-
நாவல்:இமயத்தின் கோவேறு கழுதைகள்
நடேசன் இருட்டறையில் பல வருடங்கள் பாதுகாக்கப்பட்ட வைன் நாக்கில் மட்டுமல்ல, சுவை நரம்புகள் அற்று அறியமுடியாத அடித்தொண்டையிலும் சுவைக்கும். அதுபோல் பலகாலமாக எனது அலமாரியில் இருந்து பின் பெட்டிகளில் புகுந்து ஒளித்திருந்த நாவல் இமயத்தின் கோவேறு கழுதைகள். 25 வருடங்களுக்கு முன்பாக அவர் எழுதியது என்றபோது ஆச்சரியமாக இருந்தது. அதேவேளையில் அக்காலத்தில் வாசித்திருந்தால் சில மணிநேரத்தில் வாசித்துவிட்டு வைத்திருப்பேன். தற்போது வாசிப்பதற்கு ஒரு கிழமை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். நல்ல இலக்கிய வாசிப்பும் கலவி மாதிரி. நான்…
-
பஷீர் சேகுதாவூத்
முருகபூபதி – மெல்பன் – அவுஸ்திரேலியா தோழர் பஷீர் சேகுதாவூத் அவர்களின் எழுத்துக்களையும் கருத்துக்களையும் அவ்வப்போது படித்து வருகின்றேன். அவருடைய சிந்தனைகளில் மிளிரும் இன நல்லிணக்கம் எவ்வாறு உருவாகுதல் வேண்டும் , இஸ்லாமிய மக்கள் குறித்த சந்தேகங்கள் எவ்வாறு களையப்படல்வேண்டும், தேசத்தின் அபிவிருத்தியில் அனைத்து இனமக்களையும் எவ்வாறு இணைத்துக்கொள்ளவேண்டும் முதலான எண்ணங்கள் என்னை பெரிதும் கவர்ந்தவை. அவரை சந்தித்து உரையாடல்வேண்டும் என்ற எண்ணம் எனது மனதில் நீண்டகாலம் நீடித்திருந்தது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் (…
-
Racialized bodies in bio-medical settings
By Rajes BalasubramaniamMA Medical Anthropology 1994 The increasing power of bio-medicine has been very little time for a holistic approach in treating people. The development of bio-medicine and the doctors’ relationship with his patients is always the relationship of a master and servant, as medical language, technology investigations and practices are often alien to the…
-
ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது!
– நடேசன்- “”ஜனற், உனது தாயார் இந்த ஓய்வு இல்லத்திற்கு இடம் பெயர்ந்து வந்தபோது உனது மனநிலை எப்படி இருந்தது””? “”எனது மனத்தில் ஓர் ஆறுதல் உணர்வு ஏற்பட்டது. நான் வேலையில் இருந்து களைப்பாக வீடு வந்ததும் அம்மாவிடம் பேசவேண்டும். நாள் முழுவதும் தனியே இருந்த அம்மா நான் வந்ததும் என்னுடன் பேசுவதற்கு வருவார். நான் மனமும் உடலும் களைத்த நிலையில் சாவகாசமாக உரையாட முடியாது, நான் வந்தவுடன் எனக்காக அம்மா கஸ்டப்பட்டு சமைக்க வேண்டும். தான்…
-
அஞ்சலிக்குறிப்பு: Dr இராஜநாயகம் இராஜேந்திரா.
தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம் முருகபூபதி மெல்பனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக என்னுடனும் மற்றும் அனைவருடனும் சிரித்த முகத்துடனும் பண்பான இயல்புகளுடனும் உறவாடிய அன்பர் இராஜநாயகம் இராஜேந்திரா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரை, இறுதியாக கடந்த ஆண்டில் இங்கு நடைபெற்ற நடன ஆசிரியை திருமதி அகிலா விக்னேஸ்வரனின் நடனப்பள்ளியின் ( Narthana Sorubalaya Classical Dance – NSCD ) மாணவர்களின் வருடாந்த நடன ஆற்றுகையின்போது…
-
இருத்தலியலும் எனது நாயும்.
நடேசன். மிருக வைத்தியராக நாற்பது வருடங்கள் வாழ்ந்து இளைப்பாறிய எனக்கு, வியப்புறும் விடயம் நான் பார்த்த மிருகங்களிடம் கண்ட வாழ்வதற்கான ஆசையே. அதை தீவிரமாக, அவற்றின் நடத்தைகள் மூலம் காணமுடிந்தது. வைத்தியராக என்னிடம் வந்தபோது அறிந்ததுடன், என் வீட்டில் வளர்ந்தவற்றிலும் அதை அவதானிக்க முடிந்தது. பல செல்லப்பிராணிகளையும் அவற்றின் உரிமையாளர்களை பற்றியும் எனது வாழும் சுவடுகள் நூலில் எழுதியுள்ளேன். பூனைகள் நோயுற்றதும் தங்களைத் தேற்றிக்கொள்ள ஏதாவது ஒதுக்கமான தனிமையான இடத்தை நாடும். நாய்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக நடந்து…
-
நடேசனின் “உனையே மயல் கொண்டால் “
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் நடேசனின்’ உனையே மயல் கொண்டால்” எல்லோருக்கும் தெரியவேண்டிய ஒரு முக்கிய விடயத்தைச்சொல்லும் நாவல். ‘பைபோலார் டிஸீஸ்- (bipolar dieases-disorder (manic depression) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு மனவியாதியால் துயர் படும் ஒரு பெண்ணையும் அவளைத் திருமணம் செய்து அல்லற்படும் கணவரையும் பின்னிப்பிணைந்த நாவல். மன நலம் பாதிக்கப்பட்ட ஆணோ பெண்ணோ சாதாரண மனிதர்கள் மாதிரி வாழ்க்கை நடத்துவது கடினம். தாம்பத்திய வாழ்வின் முக்கிய அம்சமான ‘பாலியல்’ உறவை மன நலம் பாதிக்கப்பட்டவர்களால் சந்தோசமாக…
-
நூல் அறிமுகம்: தீரதம்:நௌஸாத்
நடேசன் குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டுமென்ற காரணத்தால் நான் எனது மனைவியுடன் இலக்கிய விடயங்கள் பேசுவதில்லை. ஆனால், தொடர்ந்தும் நான் எதனையாவது படித்துவிட்டு, சிரித்தபடியே இருந்தால் “ என்னவென்று…? “ கேட்பாள். அவ்வாறுதான் ஒரு தருணம் மீண்டும் வந்தது, நௌஸாத் எழுதிய தீரதம் படித்துவிட்டும் சிரித்தேன். ‘என்ன விடயம்..? என்று கேட்டபோது, நௌஸாத்தின் கபடப் பறவைகள் கதையைப் பற்றி சுருக்கமாகச் சொன்னேன். இருவரும் சிரித்தோம். இந்தக் கதையில் வரும் ஒரு எழுத்தாளன், தனது புத்தகங்களைத்தான் தனது பொக்கிஷமாகச்…