-
அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழாவில் இன்று !
தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை !! முருகபூபதி ஒரு ஊரில் ஒரு தேநீர் தயாரித்து விற்பவன் இருந்தான். ஒருநாள் அந்த ஊரில் பிரபலமான ஒரு மல்யுத்தவீரன் அவன் கடைக்கு வந்து தேநீர்கேட்டிருக்கிறான். அந்தத்தேநீர் தயாரிப்பவன் அன்று அந்த மல்யுத்தவீரனுக்கு தேநீர் தயாரிக்க சற்று காலதாமதமாகிவிட்டது. அதனால் கோபமுற்ற அந்த மல்யுத்த வீரன், “ எனக்கு உனது தேநீர் வேண்டாம். என்னை காத்திருக்கவைத்து அவமதித்துவிட்டாய். அதனால் நாளை நீ என்னுடன் மல்யுத்தப்போட்டிக்கு வரவேண்டும். உனக்கு நாளை ஒரு…
-
விழித்திருப்பவனின் இரவு
படித்தோம் சொல்கின்றோம்: முருகபூபதி தமிழ் இலக்கிய உலகில் மிகவும் பிரபல்யமான படைப்பாளி எஸ். ராமகிருஷ்ணன், குறிப்பிடத்தகுந்த சில நாவல்கள், பல சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள் எழுதியவர். சஞ்சாரம் என்னும் நாவலுக்கு 2018 இல் இந்திய சாகித்திய அகடமி விருது பெற்றவர். இந்திய கதா விருது, கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது உட்பட பல விருதுகள் பெற்றிருக்கும் ராமகிருஷ்ணன், பாபா, பீமா, சண்டக்கோழி, உன்னாலே உன்னாலே முதலான திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியவர். இவற்றில் உன்னாலே உன்னாலே திரைப்படம் அவுஸ்திரேலியா மெல்பனில் படமாக்கப்பட்டபோது,…
-
நேற்றைய மனிதர்கள்:
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதி மதிப்பீடு நடேசன் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பெண் எழுத்தாளராகவும் தமிழ் எழுத்தாளர்களில் வித்தியாசமானவராகவும் அறியப்பட்டவர். புலம்பெயர்ந்த தனது புற, அக அனுபவங்களையும், மற்றவர்களின் அனுபவங்களையும் உள்வாங்கி எழுதுபவர். அவரது அரை நூற்றாண்டுகளுக்கு மேலான இங்கிலாந்து வாழ்வுடன், அங்குள்ள தமிழர்கள் , தமிழர்கள் அல்லாதவர்களது, கலாச்சாரம், பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி, அவற்றைத் தனது கதைகளில் வெளிக்கொணர்ந்துள்ளார். மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் செல்லும் திசையை அறிய அவரது எழுத்துகள், திசைக்கருவியாக…
-
Jai Bhim
Jai Bhim (Prime Video) : Hard hitting take on caste & class oppression By Neeraj Nanda MELBOURNE, 6 November 2021: Irula, are a Dravidian Tribal group living in Tamil Nadu, Kerala, and Karnataka. Irular means “dark people” in Tamil and Malayalam, from the root word irul, meaning “darkness.” Edgar Thurston in his 1909 research speculated…
-
மூன்று நாட்கள் தமிழ் எழுத்தாளர் விழா !
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வு !! இம்மாதம் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பம் !!! முருகபூபதி அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கிய முயற்சிகளை மதிப்பீடு செய்யும்போது அவற்றுக்கான ஊற்றுக்கண் திறந்து மூன்று தசாப்தங்களுக்கு மேலாகியிருப்பதையும் அவதானிக்கமுடிகிறது. தமது தாயகத்தில் கலை, இலக்கிய, ஊடகத்துறைகளில் ஈடுபட்டவர்கள் புகலிடம் நாடி இங்கு வந்த பின்னரும் உள்ளார்ந்த ஆற்றல்கள் வற்றிப்போகாமல் இயங்கியமையால் தமிழ் கலை , இலக்கிய படைப்புலகத்தில் அவுஸ்திரேலியாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்ததாக விளங்குகிறது. அவுஸ்திரேலியாவில் …
-
21 கரையில் மோதும் நினைவலைகள்
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஓரே உடையில் மூன்று கிழமை. நடேசன் நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் முதல் இரண்டு வருடங்கள் பல்கலைக்கழகத்திற்கு ஏற்ப நடப்பதுவே முக்கியமான விடயமாக இருந்தது. தமிழில் படித்துவிட்டுப் போன எனக்கு ஆங்கிலத்தில் படிப்பது இலகுவாக இருக்கவில்லை. நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு எட்டாம் வகுப்பில் செல்லும்வரை ஆங்கிலம் அறியவில்லை. சிங்களத்தில், ஆங்கிலத்தைக் கடு என்பார்கள் ( அதன் கடுமையைக் கருதி ) ஆனால், வேறு வழியில்லை. உணவும் பிரச்சனையாக இருந்தது. இதுவரையில்…
-
ராஜம் கிருஷ்ணன் ( 1925-2014 )
ஒக்டோபர் 20 – நினைவு தினம் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்ற ஆளுமை ! முருகபூபதி இலங்கையில் பாரதி நூற்றாண்டு விழாக்கள் நடைபெற்ற 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வருகை தந்து கொழும்பு – யாழ்ப்பாணம் உட்பட பல பாகங்களிலும் உரையாற்றியவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். அவர் மறைந்து இன்றுடன் ( ஒக்டோபர் 20 ) ஏழு வருடங்களாகிவிட்டன. 2012 ஆம் வருடம் தமிழகம் சென்று ராஜம்கிருஷ்ணனை அவர் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை – பொரூர் இராமச்சந்திரா…
-
Giving up cigarettes for a dog
Pamela would always come to the hospital dressed in the same cigarette-smelling clothes. Her entry always amused the members of staff of the veterinary hospital, from receptionists at the front desk to nurses and veterinarians who are supposed to treat people with empathy and courtesy. I noticed nurses and other veterinarians covering their noses and…
-
20 கரையில் மோதும் நினைவலைகள்:மெல்பனில் உதயம்.
நடேசன் மெல்பனில் உதயம் பத்திரிகையை நடத்தும்போது, அதற்கான விளம்பரம் மற்றும் விநியோக வேலைகளை கவனிப்பதற்காக மதிய நேரங்களில் எனது கிளினிக்கில் இருந்து மதிய உணவுக்குச் செல்வதாகச் சொல்லி மறைந்துவிடுவேன். சிலர் அவசர சிகிச்சைக்காக நோயுற்ற தமது வளர்ப்பு பிராணிகளைக் கொண்டு வருவார்கள். நான் அப்போது அங்கில்லாதமையால் என்னை மனதுக்குள் திட்டியபடியே எனது நேர்ஸ்கள் அவர்களை வேறு கிளினிக்குகளுக்கு அனுப்புவார்கள். நான் கடமையில் இல்லை என்று அச்சமயம் அவர்களிடம் சொல்வது எனது நேர்ஸ்களுக்கு பிடிக்காது. ஆனால், அதனை நேரடியாக…
-
ஏன் மொழிபெயர்ப்புகள் வேண்டும்?
மொழிபெயர்ப்பு ஏன் என்பது பல மொழி பேசும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களாகிய எமக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. இங்கு நான் குறிப்பிடுவது இலக்கிய மொழி பெயர்ப்பாகும். மற்றைய மொழிகளிலிருந்து ஏன் இலக்கியத்தை மொழி பெயர்க்கவேண்டும்? அதேபோல் நமது இலக்கியங்கள்தான் ஏன் மற்றைய மொழிகளில் வரவேண்டுமென்பதற்கான சில காரணங்களைப் பார்ப்போம் . 1)மொழி என்பது கலாச்சாரம், பண்பாடுகளை வைத்துப் பாதுகாக்கும் ஒரு களஞ்சியம் . மொழியை அறிந்தால் மட்டுமே கலாச்சாரத்தை அறியமுடியும். புரட்சிக்கு முன்பான ரஸ்சிய, பிரான்சிய கலாச்சாரங்கள் புரிய மொழி தெரியவேண்டும் அதேபோல் கிரிக்க கலாச்சாரத்தை நாம்…