-
ஹாங்கிங் ரொக். விக்டோரியா
நடேசன் – நடேசன் ஒரு சமூகத்தின் வணக்கத்தலமொன்றை உல்லாசப்பயண சுற்றுலா இடமாக மாற்றுவது இக்காலத்தில் அரிது. நடந்தால் உலகம் முழுவதும் கண்டிக்கும். மனித உரிமைக்கு எதிரான விடயமென ஜெனிவாவில் தீர்மானம் போடுவார்கள். 19 ஆம் நூற்றாண்டில் அவுஸ்திரேலிய காலனி ஆட்சியாளர்களுக்கு அந்தப் பிரச்சினையில்லை. இலகுவாகச் செய்ய முடிந்தது. மெல்பனில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் ஹாங்கிங் ரொக்ஸ் ( Hanging Rocks) எனப்படும் இடம், 26000 வருடகாலமாக அவுஸ்திரேலிய ஆதிவாசிகளால் வணக்கத்துக்குரிய இடமாக இருந்தது. அவர்களது…
-
சத்தியம் மீறியபோது – சிறுகதை- திறனாய்வு
சத்தியம் மீறியபோது என்ற V S கணநாதனது சிறுகதை, தொகுப்பில் உள்ள பிரதான கதை மட்டுமல்ல. அது அது ஒரு நெடுங்கதை என்பதுடன் அதுவே கதைத்தொகுப்பின் பிரதான கதையாக உள்ளது . இந்தக்கதை உண்மைச் சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்ட கதையாக இருந்தாலும் அந்தக்கதை எழுதப்பட்ட விதத்தில் நான் கவரப்பட்டேன். முக்கியமாகக் கதைசொல்லியான பாட்டியின் பாத்திரம் முழுமையானதாக அமைந்திருக்கிறது. சிறுகதை மட்டுமல்ல, நாவல் எழுதுவதற்குமே மொழி அதிக அளவு தேவையில்லை . ஜப்பானிய மொழியில் பல சித்திர நாவல்கள்…
-
எழுத்தாளர் இராஜேஸ்வரி சிறுகதைகளுடாக பெண்ணிய வெளிப்பாடு
நம்மவர் நிகழ்வு எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைகளுடாக பெண்ணிய வெளிப்பாட்டை எடுத்துப் பேசுவதே நமது நிகழ்வின் நோக்கம். பல நாடுகளில் பெண்ணியம் என்பது கல்வித்துறை மற்றும் சமூக வரலாற்றின் ஒரு பகுதியாகி விட்டது. அதன் விளைவை நமது சகோதரிகள், பெண் குழந்தைகள் அனுபவிக்கிறார்கள். பல நாடுகளில் அரசியல் கட்சிகள், பெரிய நிறுவனங்கள் பெண்களுக்காக முக்கிய இடங்களை ஒதுக்கியுள்ளார்கள். இவை மரத்தில் தானாக இருந்து உதிரும் கனிகளாக விழவில்லை. பலர் உயிர், மற்றும் உழைப்பைக் கொடுத்தபின் விளைந்த அறுவடையைத்தான்…
-
புதுவையின் ரத்த புஷ்பங்கள்
ரத்த புஷ்பங்கள்-ஒரு விமர்சனம் புதுவை இரத்தினதுரையின் மூன்றாவது கவிதை நூலாக ‘இரத்த புஷ்பங்கள்’ வெளிவந்துள்ளது. ஒரு தோழனின் காதல் கடிதம், வானம் சிவக்கிறது ஆகியவை முன்னர் வெளிவந்த அவரது கவிதை நூல்கள். விருப்பான சொற்களில் கோஷம் எழுப்புவதே இவரது கவித்துவப் பாணி. இத்தகைய’கோஷ நடையை’ ஒட்டிய கவிதைகளே இரத்த புஷ்பங்களிலும் காணப்படுகின்றன. இவற்றுட் பல இடதுசாரி அரசியல் சார்பான கோஷங்களாகும். இவரது அதி தீவிர இடதுசாரிக் கோஷங்கள், இவருக்கு முற்போக்கு கவிஞர் என்ற புகழைப் பெற்றுக் கொடுத்தன.…
-
நண்பன் ராமதாஸ் மறைவு
எழுவைதீவு ஆதார வைத்தியசாலையைக் கட்டித் தந்த பொறியியலாளரான நண்பன் ராமதாஸ் இளமையில் உதிர்ந்து விட்டான். பல்கலைக்கழகம் பின்பு இந்தியா எனத் தொடர்ந்து பழகிய நட்பு, சில காலத்தின் முன்பாக அவனுடன் பேசியது ஒரு ஆறுதல். அவனது நினைவுகள் என்றும் என் மனத்தில் நிரந்தரமானது. குடும்பத்தினருக்கு எனது இரங்கல்.
-
My Guilt and Punishment
Short story by Noel Nadesan It was my lunchtime. I was seated next to my favorite window in the ‘Red Back’ pub in north Melbourne. The pub is situated along Elizabeth Street, just and Royal Women’s Hospital. Usually, I long for that table next to the window facing Elizabeth Street when I pay a…
-
புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் ஊற்றுக்கண்
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ! கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து இங்கிலாந்து வரையில் அயராது இயங்கும் பெண்ணிய ஆளுமை !! முருகபூபதி இயற்கை எழில் கொஞ்சிய கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து வல்லரசு இங்கிலாந்து வரையில் பயணித்த பெண்ணிய ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்படைப்பு இலக்கியத்திலும் , பெண்ணிய மனிதஉரிமை செயற்பாட்டிலும் ஆவணப்படத்துறையிலும் மனித நேயப்பணிகளிலும் அயராது பங்காற்றியவர் அவரது வாழ்வும் பணிகளும் குறிப்பிடத்தகுந்தன. விதந்து போற்றுதலுக்குரியன. அத்துடன் எதிர்வினைகளை எதிர்கொண்டு, அவதூறுகளை துச்சமாக்கிய புகலிட இலக்கிய முன்னோடி. பெண்கள் எப்பொழுதும் வீட்டுக்குள் இருந்து…
-
கானல் தேசம் – வாசிப்பு அனுபவம்.
தாமரைச்செல்வி.. – அரிசோனா Dr. நடேசன் அவர்களுடைய கானல் தேசம் என்ற புதினம் 1980 களின் இறுதியில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்ற காலத்தில் ஆரம்பமாகி 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்திற்கு பிறகு முடிவடைகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கைப் பிரச்சனையை பல ஆண்டுகளாக ஒரே நோக்கில் பார்த்திருந்தோம். இலங்கையின் முப்பதாண்டு கால ஆயுத போராட்டம் தனது மறுபக்கத்தை சில சூழ்நிலைகளில் காட்டியிருந்தாலும் அதைப் பற்றிய பெரும் மீளாய்வுகள் 2009 க்கு பின்னரே நடக்கின்றன. உண்மை சம்பவங்களை…
-
ஓவியர் (அமரர்) கார்த்திகேசு தம்பையா செல்வத்துரை
வாழ்வும் பணிகளும் – காணொளி மெய்நிகரில் வெளியீடு அவுஸ்திரேலியா மெல்பனில் 1998 ஆம் ஆண்டு மறைந்த பிரபல ஓவியர் கார்த்திகேசு தம்பையா செல்வத்துரை அவர்களின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் காணொளி வெளியீடு எதிர்வரும் 05 ஆம் திகதி ( 05-12-2021 ) ஞாயிற்றுக்கிழமை மெய்நிகரில் சம்பிரதாயபூர்வமாக வெளியிடப்படவிருக்கிறது. அவுஸ்திரேலியா கன்பராவில் இயங்கும் தமிழ்க்களஞ்சியம் ( Tamil Trove ) அமைப்பினால் காலமும் கணங்களும் தொடரின் முதல் அங்கமாக இந்த ஆவணக்காணொளி வெளியீடு அமைகின்றது. சிறந்த புகைப்படக்கலைஞருமான…
-
எழுத்தாளர் எஸ்.பொ. நினைவுதினம்.
இன்று நவம்பர் 26 ஈழத்தின் எழுத்தாளர் எஸ்.பொ. நினைவுதினம் நனவிடை தோய்தல் குறிப்புகள் ! முருகபூபதி இலங்கையின் படைப்பாளி எஸ்.பொ. யாழ்ப்பாணம் நல்லூரில் 1932 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 04 ஆம் திகதி பிறந்தார். அவுஸ்திரேலியாவில் சிட்னியில் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மறைந்தார். இன்று அவரது நினைவு தினம் ! எஸ்.பொ. குறித்த நினைவுகளை இங்கு நனவிடை தோய்தலாக பதிவுசெய்கின்றேன். நனவிடை தோய்தல் என்ற சொற்பதத்தையும்…